Wednesday, August 14, 2024

" மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.". (லூக்கா நற்செய்தி 1:41)

"மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்."
(லூக்கா நற்செய்தி 1:41)

அன்னை மரியாளும் எலிசபெத்தும் உறவினர்கள்.

தூய ஆவியின் வல்லமையால் இறைமகனை மனுமகனாகக் கருத்தரித்த மரியாள்

அவளுடைய உறவினரான எலிசபெத்தும் முதிய வயதில் கருத்தரித்திருப்பதை கபிரியேல் தூதர் மூலம் கேள்விப்பட்டு

அவளைக் கண்டு அவளை வாழ்த்துவதற்காகவும், அவளுக்குப் பணி புரிவதற்காகவும் அவள் வாழும் மலை நாட்டு ஊருக்கு நடந்து செல்கிறாள்.

அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார். 

இருவருமே தூய ஆவியால் நிறப்பப் பட்டுள்ளனர்.

இருவரும் சந்திக்கும் போது

மரியாளின் வயிற்றிலிருந்த குழந்தை இயேசுவும்,

எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை அருளப்பரும் சந்திக்கிறார்கள்.

இந்த சந்திப்பின் போது ஒரு அற்புதமான நிகழ்வு நடை பெறுகிறது.

தூய ஆவியின் வல்லமையால் அருளப்பர் சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.

குழந்தை அருளப்பர் அந்த மகிழ்ச்சியால் துள்ளுகிறார்.   

 (Infant John leaped in her womb out of joy.)

சென்மப் பாவ மாசின்றி அன்னையின் வயிற்றில் உற்பவித்தவள் மரியாள் மட்டுமே.

அருளப்பர் சென்மப் பாவத்தோடு உற்பவித்தார்.

ஆனால் தாயின் வயிற்றில் இருக்கும் போதே தூய ஆவியால் அது மன்னிக்கப்பட்டு

சென்மப் பாவம் இல்லாமல் பிறந்தார்.

பாவ மாசின்றி உற்பவித்து, பாவ மாசின்றி அருள்
நிறைந்தவளாய் வாழ்ந்தவள் மரியாள் மட்டுமே.

கடவுளின் தாய்க்கு கடவுளால் வழங்கப்பட்ட விசேச வரம் இது.

இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் சுவிசேச அருளப்பர் மரியாளைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டார்.

அருளப்பரின் இல்லத்தில் அவள் 14 ஆண்டுகள் வாழ்ந்தாள்.

அவள் மரணம் அடைந்த போது அவளுக்கு வயது 60.

அவள் மரணப் படுக்கையில் இருக்கும் போது அனைத்து அப்போஸ்தலர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

இந்தியாவில் நற்செய்திப் பணி செய்து கொண்டிருந்த தோமையாரைத் தவிர அனைவரும் வந்து விட்டார்கள்.

அவர்கள் முன்னிலையில் மரணம் அடைந்த மரியாள் அவர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டாள்.

தோமையார் மூன்று நாட்கள் கழித்து தான் வந்தார்.

"நான் வரும் முன் ஏன் அடக்கம் செய்தீர்கள்?"

என்று வினவியவர்,

"நான் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும். கல்லறையைத் திறங்கள்." என்று கட்டாயப் படுத்தினார்.

வேறு வழியின்றி கல்லறையைத் திறந்தார்கள்.

அங்கே அவரது உடல் இல்லை.

"மகனைப் போலவே தாயும் ஆன்ம சரீரத்தோடு மோட்சத்தில் இருக்கிறாள்." என் முடிவு செய்தார்கள்.

மகன் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தினார்.
(Jesus ascended into Heaven.)

மரியாள் மரித்தவுடன் அவளது ஆன்மா விண்ணகம் சென்றது.

உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இறை வல்லமையால் அவள் உடல் அழியாமல்‌ விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு ஆன்மாவோடு இணைக்கப்பட்டது.

(Her body was "assumed" into heaven to be reunited with her soul, instead of going through the natural process of physical decay upon death.)

இயேசு சொந்த வல்லமையால் விண்ணகம் எய்தினார். (ascended)

மரியாள் இறை வல்லமையால் எடுத்துக் கொள்ளப்பட்டாள். (was "assumed")

அன்று முதல் அன்னை மரியாளின் விண்ணேற்பு விழாவாகத் திருச்சபையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்தாலும் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் தான் அதை விசுவாசப் பிரமாணமாக அறிவித்தார்.
(Dogma of Faith)

நாம் எல்லோரும் மரிப்போம்.

உலகத்தின் இறுதி நாளில் உயிரோடு எழுப்பப்பட்டு

ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம்.

ஆனால் அதுவரை நமது உடல் அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கியிருக்கும்.

ஆனால் மரியாளின் உடல் அழிவைச் சந்திக்காமலேயே ஆன்மாவோடு சேர்த்துக் கொள்ளப் பட்டது.

இது கடவுளின் தாய் என்ற முறையில் அவளுக்கு அளிக்கப்பட்ட விசேச வரம்.

இவ்வுலகில் நமது உடல் சடப் பொருள். (Matter)

விண்ணகம் செல்லும் போது ஆன்மீக உடலாக மாறும்.
(Spiritual body)

உலகம் இடத்துக்கும், நேரத்துக்கும் உட்பட்டது. (Space and time)

விண்ணகத்தில் இடம் இல்லை.
ஆகவே நமது உடல் ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழும்.


'மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு."
(1 கொரிந்தியர் 15:44)

நமது அன்னையின் விண்ணேற்பு விழாவைக் கொண்டாடும் போது நமது எதிர் கால விண்ணக வாழ்வுக்காக இப்போதே ஆன்மீக ரீதியாகத் தயாரிப்போம்.

நாம் விழா கொண்டாடுவதன் நோக்கமே அதுதான்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment