Thursday, July 11, 2024

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."(மத்தேயு.10:16)

"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்."
(மத்தேயு.10:16)

இயேசு தனது சீடர்களைப் பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருக்கும்படி அறிவுரை கூறுகிறார்.

புறாக்களைப் போல இருக்கச் சொல்வது புரிகிறது,

ஆனால் பாம்புகளைப் போல.....
எப்படி?

தியானிக்க வேண்டிய வார்த்தைகள்.

எனது 36 கால ஆசிரிய அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய உண்மை

கற்றுத் தேறிய மாணவர்களை விட தோல்வி அடைந்த  மாணவர்கள் அதிக புத்திசாலிகள் என்பதுதான்.

பிறகு ஏன் தோல்வி அடைந்தார்கள்?

வெற்றி பெற்றவர்கள் தங்கள் புத்தியைப் படிக்கப் பயன்படுத்தினார்கள்.

தோல்வி அடைந்தவர்கள் தங்கள் புத்தியை ஆசிரியரை ஏமாற்றப் பயன்படுத்தினார்கள்.

இறைவன் நமது முதல் பெற்றோரைத் தனது சாயலில் தான் படைத்தார்.

அவரால் படைக்கப்பட்ட லூசிபர்தான் சாத்தானாக மாறினான்.

லூசிபர் புத்திசாலி தான். ஆனால் அவன் புத்தியைப் பாவம் செய்யப் பயப்படுபடுத்தினான், சாத்தானாக மாறினான்.

அதே புத்தியை நமது முதல் பெற்றோரை ஏமாற்றப் பயன் படுத்தினான்.

சாத்தான் தனது புத்தியைத் தந்திரமாகப் பயன்படுத்தி ஏவாளை ஏமாற்றினான்.

ஏவாள் தனது புத்தியை ஏமாறாதிருக்கப் பயன்படுத்தி யிருக்க வேண்டும்.

ஏமாறாதிருக்கப் பயன் படுத்தியிருந்தால் மனுக்குலம் பிழைத்திருக்கும்.

இப்போது பாம்பு முன்மதி உள்ளது.

அது தன் முன்மதியைத் தன் இரையைப் பிடிக்கப் பிடிக்கப் பயன்படுத்துகிறது.

நாம் நமது முன்மதியை இறையைப் பிடிக்கப் படுத்த வேண்டும்.

பாம்புக்கு இரைப்பற்று இருக்கிறது.

நமக்கு இறைப்பற்று இருக்க வேண்டும்.

பாம்பு இரைக்காகவே வாழ்கிறது. இரை தேடுவது தான் அதன் முக்கிய வேலை.

நாம் இறைவனுக்காகவே வாழ வேண்டும், நமது வாழ்வின் நோக்கம்மே இறைவனைத் தேடுவது தான்.

இரைத் தேடலுக்காக அதனிடம் இருக்கும் முன்மதிப் பண்புகள்:
 
எச்சரிக்கை, திருட்டுத்தனம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்தல், பொறுமை, தன்னைக் காத்துக் கொள்தல்.

இந்தப் பண்புகளை அது எப்படிப் பயன்படுத்துகிறது, நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

எச்சரிக்கை:

பாம்பு இறை தேடப் போகும் போது தனக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது.

 தானே ஆபத்துக்கு இரையாகி விட்டால் தனக்கு இரை தேடிப் பயனில்லை.

நாமும் இறைவனைத் தேடும்போது ஆன்மீக 
சுயபாதுகாப்புக்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இறைவனைத் தேடும்போது மட்டுமல்ல இறைவனை மற்றவர்களுக்கு அறிவிக்கும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? கடவுள் நம்மைக் காப்பாற்ற மாட்டாரா?

கட்டாயம் காப்பாற்றுவார். ஆனால் அவர் கொடுத்துள்ள சுய புத்தியைப் பயன்படுத்த வேண்டுமல்லவா!

அன்று சுய புத்தியைப் பயன்படுத்தாததால்தான் ஏவாள் சாத்தானின் வலையில் விழுந்தாள்.

அன்று ஏவாளை ஏமாற்றிய அதே சாத்தான் இன்றும் நம்மை ஏமாற்றுவதற்காக

 யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போல உலகெங்கும் சுற்றித் திரிகிறது.

"உன்னை ஏமாற்றப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு நம்மை ஏமாற்றாது.

அது நம்மை ஏமாற்றுவதற்காகத் தந்திரமாகப் பயன்படுத்தும் ஆயுதம் "தற்பெருமை."

நாம் கடவுளை தேடும் போதும், அவரை அன்பு செய்யும் போதும், அவருடைய கட்டளைப்படி நமது அயலானை நேசிக்கும் போதும், நமது அயலானுக்கு நம்மாலான உதவிகள் செய்யும்போதும் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு தாழ்ச்சி.

இறைவனுக்குரிய காரியங்களை செய்யும்போது இறைவனது மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

சுய மகிமைக்காகச் செய்தால் அது இறைவன் முன் பலன் அற்றதாகப் போய்விடும்.

அன்னை மரியாள் இறைமகனை மனுமகனாக உலகுக்குக் கொடுத்தது மிகப் பெரிய செயல்.

அதை அடிமைக்குரிய தாழ்ச்சியோடு செய்தாள்.

நாம் இறைப் பணிக்காக நன்கொடை கொடுக்கும் போது அது காணிக்கை.

தற்பெருமையோடு நன்கொடை கொடுத்தால் அது காணிக்கை அல்ல.

பிறருக்கு உதவி செய்யும் போது தற்பெருமை கொள்ளக்கூடாது. 

தற்பெருமை நமக்கும் இறைவனுக்கும் இடையே நின்று இறைப்பயன் நமக்குக் கிடைக்காதவாறு செய்து விடும்.

இறைவனுக்காக வாழ வேண்டிய நாம் தற்பெருமை மூலம் சாத்தானின் வலையில் விழாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


திருட்டுத்தனம்:

திருட்டுத்தனம் என்றால் அசிங்கமாகத் தெரிகிறது.

பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் எடுப்பது திருட்டு.

ஹாஸ்டல் மாணவர்களில் சிலர் வார்டனுக்குத் தெரியாமல் சினிமாவுக்குப் போய்விட்டு இரவில் திருட்டுத்தனமாக, அதாவது யாருக்கும் தெரியாமல், ஹாஸ்டலுக்குள் நுழைவார்கள்.

பாம்பு யாருக்கும் தெரியாமல் ஊர்ந்து செல்லும்.

யாரும் பார்த்தால் அடித்துக் கொன்று விடுவார்கள்.

அதற்காக திருட்டுத் தனமாக யாருக்கும் தெரியாமல் படுத்துக் கிடக்கும்.

இரை வந்தால் பிடித்துக் கொள்ளும்.

இறையறிவிக்கும்‌ பணிக்கு பாம்பின் இந்த குணம் எதற்கு?

பாம்பு மொழியில் திருட்டுத்தனம்

நம் மொழியில் இரகசியம்.
இறையறிவிக்கும்‌ பணியில் இரகசியம் எதற்கு?

சுவாமியார் இரகசியமாகப் பிரசங்கம் வைக்க வேண்டுமா?

விவேகத்தோடு செயல்பட வேண்டும்.

எல்லோரும் அறியும்படி செய்ய வேண்டியதை அப்படியே செய்ய வேண்டும்.

இரகசியமாகச் செய்ய வேண்டியதை அப்படியே செய்ய வேண்டும்.

ஒரு இந்து நண்பர் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்.

வீட்டில் உள்ளவர்கள் விட மாட்டார்கள்.

அவர் இரகசியமாக ஞானோபதேசம் கற்று, இரகசியமாக ஞானஸ்நானம் பெறுகிறார்.

சுயமாக நிற்க வேண்டிய காலம் வரும்போது பெற்றோருக்குத் தெரிவிக்கிறார்.

எந்தக் காரியமாக இருந்தாலும் இரகசியமாகச் செய்ய வேண்டியதை இரகசியமாகத்தான் செய்ய வேண்டும்.

இரகசியமாக வைத்திருக்க வேண்டியதை இரகசியமாகத்தான் வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு பாவ சங்கீர்த்தனம்.

பாவ சங்கீர்த்தன இரகசியத்தைக் காப்பாற்ற உயிரையே தியாகம் செய்த குருக்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு கேரளாவில் வாழ்ந்த Fr. பெனடிக்ட் ஓனாம்குளம்.

 The Syro-Malabar Catholic priest 
Fr. Benedict Onamkulam 

மரணதண்டனை விதிக்கப்பட்டும் அவர் பாவ சங்கீர்த்தன இரகசியத்தை வெளியிடவில்லை.

https://www.ucanews.com/story-archive/?post_name=/2000/11/28/catholic-priest-found-innocent-of-murder-charges-34-years-later&post_id=17313

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment