Saturday, March 30, 2024

இயேசு உயிர்த்தார், நாமும் உயிர்ப்போம்.

இயேசு உயிர்த்தார்,
 நாமும் உயிர்ப்போம்.


உடலைவிட்டு ஆன்மா பிரிவது மரணம்.

உடலோடு ஆன்மா இணைவது?

மரணத்தின் போது மட்டும் தான் ஆன்மா உடலை விட்டுப் பிரியும்.

ஆனால் மூன்று சந்தர்ப்பங்களில் ஆன்மா உடலோடு. இணையலாம்.

1. கணவனும் மனைவியும் சேர்ந்து உடலை உருவாக்கும் போது கடவுளால் படைக்கப்பட்ட ஆன்மா உடலோடு இணையும் போது தாயின் வயிற்றில் குழந்தை உற்பவிக்கிறது.

முதல் சந்தர்ப்பம் உற்பவம்.

2.இலாசருக்கு உடல் நலம் இல்லை என்று இயேசுவுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் இயேசு வருமுன் அவனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து விட்டது.

இயேசு வந்து அவனுக்கு உயிர் கொடுக்கிறார்.

இப்போது அவனுடைய ஆன்மா அவனுடைய உடலோடு இணைகிறது,

அதாவது அவன் உயிர் பெறுகிறான்.

இறந்தவனுடைய ஆன்மா கடவுள் செய்யும் புதுமையால் உடலோடு இணைவது இரண்டாவது சந்தர்ப்பம்.

3. இயேசு வெள்ளிக்கிழமை மாலை இறக்கிறார்.

மரித்த மூன்றாம் நாள் இயேசுவின் ஆன்மா அவருடைய உடலோடு இணைகிறது, 

அவர் உயிர்க்கிறார்.

இறந்த இலாசர் உயிர் பெற்றான்

இயேசு உயிர்த்தார்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

உயிர் பெற்ற இலாசர் இப்போது இல்லை.

அவன் திரும்பவும் இறந்தான்.

ஆனால் 

இயேசு இப்போதும் இருக்கிறார், எப்போதும் இருப்பார், மோட்சத்தில்.

ஏன் உயிர்த்த இயேசுவால் திரும்ப இறக்க முடியாது?

ஆன்மா ஒரு ஆவி. (Spirit) ஒரு முறை படைக்கப்பட்ட பின் அதற்கு மரணம் கிடையாது.

ஆனால் நமது உடல் ஒரு சடப்பொருள். சடப்பொருளுக்கு அழிவு உண்டு.

அதனால் தான் நாம் இறந்தவுடன் நமது உடல் மண்ணுக்குத் திரும்பி விடுகிறது.

மரித்த இயேசு உயிர்த்தபோது அவரது உடல் ஆவிக்குரிய தன்மையைப் பெற்று விட்டது.

His physical body became a spiritual body.

ஆவிக்குரிய தன்மையைப் பெற்று விட்ட உடலால் திரும்ப மரிக்க முடியாது.

Spiritual body cannot die.

அதனால் தான் உயிர்த்த இயேசு இன்னும் மோட்சத்தில் உயிரோடு இருக்கிறார்.

இப்போது உலகில் உயிர் வாழும் நாமும் ஒரு நாள் மரிப்போம்.

உலக முடிவில் நாமும் உயிர்ப்போம்.

அதற்குப் பிறகு நமது  Spiritual body யோடு மோட்சத்தில் என்றென்றும் வாழ்வோம்.

இயேசு உயிர்த்ததுக்கும் நாம் உயிர்க்கப் போவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

இருக்கிறது.

இயேசு சொந்த வல்லமையால் உயிர்த்தார்.

நாம் இயேசுவின் வல்லமையால் உயிர்ப்போம் .

அவரின்றி நமது ஒரு அணுவும் அசையாது.

நமது physical body க்கும், 
Spiritual body க்கும்
 என்ன வித்தியாசம்?

physical body சடப் பொருள். இடத்துக்கும், நேரத்துக்கும் உட்பட்டது.

Spiritual body இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டது.

அது வாழப்போகும் மோட்சம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

physical body உலகில் இடத்தை அடைத்துக் கொள்ளும்.

ஒரு உடல் இருக்கும் இடத்தில் இன்னொரு உடல் இருக்க முடியாது.

அது இடம் விட்டு இடம் பயணிக்கலாம்.

ஆனால் Spiritual body இருக்க இடம் தேவையில்லை.

அது இடம் விட்டு இடம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அது எங்கே இருக்க விரும்புகிறதோ அங்கே இருக்கும், ஆன்மாவைப் போல.

அன்னை மரியாள் தனது மாற்றம் அடைந்த உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் இருக்கிறாள்.

ஆகவே அவள் ஒரே நேரத்தில் விரும்புகிற இடத்தில் இருக்கலாம்,

உலகின் எந்த திசையிலிருந்து அவளை அழைத்தாலும் அவள் அங்கே இருப்பாள்.

மற்ற புனிதர்களின் ஆன்மாக்கள் மட்டுமே மோட்சத்தில் உள்ளன.

மற்ற புனிதர்கள் எப்படி தங்கள் ஆன்மாவோடு நினைத்த இடத்தில் இருக்கிறார்களோ 

அதேபோல் அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு நினைத்த இடத்தில் இருப்பாள்.

ஒரே நேரத்தில் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கானோர் அவளை நோக்கி வேண்டினாலும் 

அத்தனை பேர் வேண்டுதலையும் அவள் கேட்பாள்.

மோட்சம் நேரத்திற்கு அப்பாற்பட்டது.

அங்கு உலகில் இருப்பது போல நேற்று, இன்று, நாளை கிடையாது.

நாம் நாளை செய்யவிருக்கும் வேண்டுதல் இன்றே கடவுளுக்குத் தெரியும்.

நாம் நேர்மையாளர்களாக இருந்தால் நமது செபம் எப்போதும் கேட்கப்படும்.

நமது கணக்குப்படி கடந்த காலத்தில் இறந்தவர்களுக்காக இன்று கூட நாம் செபிக்கலாம்.

நமக்கு தான் கடந்த காலம்.

இறந்தவர்களுக்குக் காலம் கிடையாது.

இப்போது நமக்கு உடல் தரப்பட்டிருப்பது நமது ஆன்மாவுக்கு ஆன்மீக காரியங்களில் உதவுவதற்காகத்தான்.

நமது உயிர்ப்பின்போது ஆன்மீக உடலாக மாறவிருக்கும் நமது உடலைப் பாவ மாசின்றி காப்போம்.

உடல் ரீதியான சிற்றின்பத்தை ஒறுப்போம்.

நாம் நிலையான பேரின்ப வாழ்வுக்காகப் படைக்கப் பட்டவர்கள்.

நிலை வாழ்வை நோக்கமாகக் கொண்டு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment