Tuesday, March 19, 2024

"இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். "( அரு.8:58)

" இயேசு அவர்களிடம், "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். "
( அரு.8:58)

 51 என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 
(அரு. 8:51)

என்ற இயேசுவின் வார்த்தைகளைப் பரிசேயர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாக இயேசுவுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.


ஆதியாகமத்தில் நமது முதல் பெற்றோரின் பாவத்தைப் பற்றி வாசித்து விட்டு நண்பர் ஒருவர்,

"விலக்கப்பட்ட கனியைத் தின்றால் சாவு வரும் என்று கடவுள் சொன்னார். ஆனால் ஆதாமும் ஏவாளும் சாகவில்லையே, ஏன்" என்று கேட்டார்.

கடவுளின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு உதாரணம்.

கடவுள் குறிப்பிட்டது ஆன்மாவின் மரணத்தை.

ஆன்மாவும் உடலும் சேர்ந்தவன் மனிதன்.

உடலை விட்டு ஆன்மா பிரிவது உலகோர் புரிந்து கொள்ளும் மரணம்.

கடவுள் ஆன்மாவைப் படைத்தபோது தனது அருள் என்னும் உயிரோடு படைத்தார்.

ஆன்மாவுக்கு உயிர் கொடுக்கும் அருளுக்கு தேவ இஸ்டப்பிரசாதம் 
(Sanctifying grace) என்று பெயர்.

ஆன்மா சாவான பாவம் செய்யும் போது இந்த அருளை இழக்கிறது.

அதாவது ஆன்மா மரணிக்கிறது, அதாவது இறைவனுடனான உறவை இழக்கிறது.

பாவம் இறைவனால் மன்னிக்கப் படும்போது ஆன்மா உயிர் பெறுகிறது.

நமது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத் நின்றபோது ஆன்மாவுக்கு உயிர் அளிக்கும் அருளை இழந்தார்கள்.

ஆதியாகமத்தில் வரும் சாவை நண்பர் தவறாகப் புரிந்து கொண்டது போலவே 

இயேசு குறிப்பிட்ட "என்றுமே சாகமாட்டார்கள்" என்ற வார்த்தைகளையும் பரிசேயர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

ஆகையால் தான் யூதர்கள் அவரிடம்,

 "நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. 

ஆபிரகாம் இறந்தார்;

 இறைவாக்கினர்களும் இறந்தார்கள். 

ஆனால் என் வார்த்தையைக் கடைப் பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! "
(அரு. 8:52)

என்று கேட்டார்கள்.

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என் தந்தையின் விருப்பப்படி நடப்பார்கள்,

ஆகவே பாவம் செய்ய மாட்டார்கள்.
ஆன்மீக ரீதியாக வாழ்வார்கள்.

உடல்ரீதியான மரணத்துக்குப் பின்னும் நிலை வாழ்வு வாழ்வார்கள் "

என்ற பொருளில் தான் இயேசு

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்" என்று சொன்னார்.


ஆன்மாவை சாகடிக்கும் பாவத்திலிருந்து ஆன்மாவை மீட்கவே இறை மகன் மனுமகனாகப் பிறந்து பாடுகள் பட்டுச் சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

பாவத்தில் விழாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதையே 

பாடுகளுக்கு முன் மூன்று ஆண்டுகள் நற்செய்தியாக அறிவித்தார்.

இயேசு அறிவித்த நற்செய்தியின் படி வாழ்ந்தால் நாம் பாவத்தில் விழ மாட்டோம்.

" எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" 
( 8:53) என்று பரிசேயர்கள் கேட்டார்கள்.

இயேசு "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான்; இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். 
( 8:58)

தான் அபிரகாமையும் படைத்த கடவுள் என்ற உண்மையை இயேசு கூறினார்.

பரிசேயர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

Their minds were prejudiced against Him.

இப்போது பரிசேயர்களின் மனநிலையைப் பற்றி ஆராய்வது நமது நோக்கம் அல்ல.

நமது மனநிலை எப்படி இருக்கிறது?

நமது ஆன்மா வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறோமா?

வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டால் நாம் இயேசுவின் வார்த்தைகளின் படி நடக்க வேண்டும்.

இயேசுவின் வார்த்தைகளின் படி நடந்தால் நாம் நாம் பாவம் செய்ய மாட்டோம்.

நமது ஆன்மா உயிர் வாழும்.

மனித பலகீனத்தின் காரணமாக பாவத்தில் விழ நேரிட்டால்,

பாவ சங்கீர்த்தனம் மூலமாக பாவ மன்னிப்புப் பெற்று

ஆன்மா உயிர் பெறச் செய்ய வேண்டும்.

நாம் அருளுயிர் உள்ள ஆன்மாவோடு வாழ வேண்டும்,

உடல் ரீதியாக நாம் மரணிக்கும் போதும் நமது ஆன்மா உயிரோடு இருக்க வேண்டும்,

அப்போதுதான் நாம் நிலை வாழ்வுக்குள் நுழைய முடியும்

என்று இயேசு வலியுறுத்துகிறார்.

நாம் ஞானஸ்நானம் பெற்று 
பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாய் வாழ்ந்தால் போதாது,

உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக (கிறிஸ்து+அவர்களாக)
வாழ வேண்டும்.

மற்றவர்கள் நம்மில் கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும்.

"என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே வாழ்வார்கள் "

என்ற இயேசுவின் வார்த்தைகள் நம்மை வழி நடத்த வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment