Wednesday, March 20, 2024

"அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். "(மாற்கு நற்செய்தி 14:14)

"அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். "
(மாற்கு நற்செய்தி 14:14)


 இயேசு , தம் சீடருள் இருவரிடம்,

 "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். 


அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?" என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள். 


அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்." 

என்று கூறினார்.

இயேசு ஏற்கனவே தான் தனது சீடர்களுடன் இறுதி இராவுணவு அருந்த வேண்டிய வீட்டை ஏற்பாடு செய்து விட்டார்.

அது ஜான் மார்க்கின் வீடு.

அதை முதலிலேயே தனது சீடர்களிடம் கூறவில்லை.

யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பது பற்றிப் பேச யூத மதக் குருக்களிடம் போவான் என்பது அவருக்குத் தெரியும்.

அவன் அவர்களிடம் போகுமுன் வீட்டைப் பற்றிய விபரம் அவனுக்குத் தெரியக்கூடாது.

தான் கெத்சமனித் தோட்டத்தில் தான் கைது செய்யப்பட வேண்டுமேன்று இயேசு தீர்மானித்து விட்டார்.

ஆகவே தான் இன்னார் வீட்டுக்கு என்று சொல்லாமல்

 வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைப் பற்றிய விவரங்களை மட்டும் இரண்டு சீடர்களிடம் சொல்லி அனுப்புகிறார்.

"சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். "

இயேசு கூறிய படி வீட்டின் மேல்மாடியில் ஒரு பெரிய அறை தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருந்தது. 

அது John Mark ன் வீடு.

யார் இந்த John Mark?

1.புனித சின்னப்பரோடும், பர்னபாவோடும் நற்செய்திப் பயணங்களில் பங்கேற்றவர்.
(Acts 12:25)

2. மாற்கு நற்செய்தியை எழுதியவர்.

3. இயேசு கைது செய்யப்பட்டபோது எதிரிகளின் கையிலிருந்து தப்பிக்க துணியை விட்டு விட்டு ஆடையன்றித் தப்பி ஓடியவர்!
(மாற்கு.14:51,52)

4. ஜான் மார்க்கின் தாயார் பெயர் மரியா.

(இராயப்பர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர். )
(திருத்தூதர் பணிகள் 12:12)


இயேசு சீடர்களோடு இறுதி இராவுணவு அருந்திய ஜான் மார்க்கின் இல்லத்தில் தங்கித்தான்

இயேசு விண்ணெய்திய பின் சீடர்கள் அன்னை மரியாளுடன்

பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கி வரும் வரை

இடைவிடாது செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அங்கு வைத்து தான் பரிசுத்த ஆவி அவர்கள் மீது இறங்கி வந்தார்.

அதாவது கத்தோலிக்கத் திருச்சபை அங்குதான் பிறந்தது.

அந்த வீடுதான் ஆதிக் கிறிஸ்தவர்களின் செப இல்லமாகப் பயன் பட்டது.

ஒரு வான தூதரின் உதவியுடன் சிறையை விட்டு வெளியே வந்த இராயப்பர் மற்றவர்கள் செபித்துக் கொண்டிருந்த இந்த வீட்டுக்குத் தான் வந்தார்.

இயேசு தனது இவ்வுலக வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நித்திய காலமாகத் திட்டமிட்டிருக்கிறார்.

தான் எப்போது‌ கைது செய்யப்பட வேண்டுமென்று திட்டமிட்டாரோ அப்போது தான் கைது செய்யப்பட்டார்.

அவரது பொது வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அவரது விரோதிகள் அவரைப் பிடிக்க முயன்றனர்.

அவர் தன்னையே கையளிக்கும் வரை அவர்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கெத்சமனித் தோட்டத்தில் அவரே அவர்களிடம் கையளித்தார்.


 "யாரைத் தேடுகிறீர்கள்?" என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள். 


இயேசு அவர்களைப் பார்த்து, "'நான்தான் ' என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்" என்றார். 
(அரு. 18:7,8)

"நான்தான் நீங்கள் தேடும் இயேசு."
என்று தன்னையே கையளித்தார்.

அவரால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கும் என்று அவருக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நமது வாழ்வைப் பற்றி நமக்குத் தெரியாதது எல்லாம் அவருக்குத் தெரியும்.

ஆகவே நம்மைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நம்மை அவர் கையில் ஒப்படைத்து விட்டு அவர் சொற்படி நடந்தால் போதும்.

நாம் நிலை வாழ்வுக்குள் நுழைவோம்.

 உலகில் வாழும் போது இயேசுவின் உள்ளத்தில் வாழ்வோம்.

உலகை விட்டுச் சென்ற பின்பும் அங்கேயே நித்திய காலமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment