Saturday, December 31, 2022

இறைவனின் அன்னை மரியாளின் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக.

இறைவனின் அன்னை மரியாளின் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக.


''தாத்தா, எல்லோரும் புத்தாண்டு தின வாழ்த்துக்கள் என்று சொல்லும்போது நீங்கள் மட்டும் 

'இறைவனின் அன்னை மரியாளின் தின வாழ்த்துக்கள் அனைவருக்,கும் உரித்தாகுக.'

என்று சொல்கின்றீர்களே. 

என்ன காரணம்?'''

"'புத்தாண்டு என்பது ஒரு கற்பனை.

மரியாள் இறைவனுக்கும் அனைவருக்கும் தாய் என்பது உண்மை.

நான் உண்மையின் அடிப்படையில் வாழ்த்துகிறேன்."

"புத்தாண்டு என்பது ஒரு கற்பனையா? புரியவில்லை."

"'நாள், வாரம், மாதம் ஆண்டு என்பவை நாம் நமது வரலாற்றை எளிதாக புரிந்து கொள்வதற்காக நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட கற்பனை கருத்துக்கள். (Concepts)

இவற்றை நமது கண்களால் பார்க்க முடியாது.

2022ஆம் ஆண்டை எனக்கு காண்பி பார்ப்போம்?

மனிதர்களில் ஒவ்வொரு இனத்தவரும் ஒருவகையான ஆண்டு கணக்கு வைத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, தை முதல் நாள் தமிழனுக்குப் புத்தாண்டு.

Gregorian calendar படி இன்றைய தினத்தை புத்தாண்டாக அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்."

"அதென்ன Gregorian calendar?"

"'பாப்பரசர் 13ஆம் கிரகோரி 1582 ஆம் ஆண்டு உருவாக்கித் தந்த காலண்டர்.

இதைப் பற்றி விவரமாக அறிய விரும்பினால்

https://en.m.wikipedia.org/wiki/Gregorian_calendar

என்ற link உதவியுடன் பார்த்துத் தெரிந்துகொள்.

நானே சொல்ல ஆரம்பித்தால் இந்த ஆண்டு முழுவதும் நீ இந்த இடத்தை விட்டு ஆசைய முடியாது."

"சரி, நான் போய் பார்த்துக் கொள்கிறேன்.

அன்னை மரியாள் இறைவனின் தாய் என்பது எனக்கு தெரியும்.

நம் எல்லோரையும் எப்போது பெற்றாள் என்பதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்."

"'அன்னை மரியாள் பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இறைமகன் இயேசுவை மனிதனாக பெற்றெடுத்தாள்.

இது உடல் ரீதியான பேறு.

கன்னி மரியாளின் வயிற்றில் சர்வ வல்லவ கடவுளாகிய இறைமகன் மனு உரு எடுத்து,

 பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் குழந்தையாக வளர்ந்து,

 பத்தாவது மாதம் உலகில் பிறந்தார்.

மரியாள் இயேசுவைக் கருவுற்ற போதும் கன்னி.

இயேசு பிறக்கும்போதும் கன்னி.

இயேசு  பிறந்த பிறகும் கன்னி.

இயேசுவின் பிறப்பால் அன்னை மரியாளின் கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படவில்லை.

"எப்படி மரியாளின் கன்னிமைக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இயேசு பிறந்தார்?

ஒளி கண்ணாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல்

கண்ணாடியின் ஒரு புறம் இருந்து மறுபுறம் செல்கிறதோ

அதேபோல இயேசுவும் மரியாளின் வயிற்றிலிருந்து

 அவளுடைய கன்னிமைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் உலகிற்கு வந்தார்.

By his power as God, 

the Savior passed through the closed womb of the Virgin Mary as light passing through glass, 

as thought proceeding from intellect.

 He did no harm to the physical integrity of our Lady’s virginal cloister, but rather consecrated it!  

பிரசவ வேதனை இல்லாமல் பிள்ளையைப் பெற்றெடுத்த ஒரே பெண் அன்னை மரியாள் மட்டுமே.

சரியாக 33 ஆண்டுகள் கழித்து

 இயேசு தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக் கொடுப்பதற்காக சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது

 சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த அன்னை மரியாள் 

நம் அனைவரையும் ஆன்மீக ரீதியாக தனது பிள்ளைகளாக பெற்றெடுத்தாள்.

இயேசு தன் அன்னையைப் பார்த்து அருளப்பரைக் காண்பித்து,

 "அம்மா, இதோ! உம் மகன்"

என்று சொன்னபோது,

அருளப்பரை மட்டுமல்ல, தனது சீடரகளாகிய நம் அனைவரையும் அன்னை மரியாளுக்குப் பிள்ளைகளாகக் கொடுத்தார்.

மாட்டுத் தொழுவத்தில் இயேசுவை மகனாக பெற்ற மரியாள்,

சிலுவை அடியில் நம் அனைவரையும் பிள்ளைகளாக பெற்றாள்.

நமது பிறப்பு ஆன்மீக ரீதியான பிறப்பு.

எப்படி ஒரு தாய் ஒரு குழந்தையை பெறும் போது அதை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாளோ,

அதேபோல, நமது அன்னை மரியாளும் ஆன்மீக ரீதியாக நம்மைப் பெற்ற போது 

நாம் மீட்புப் பெற நமக்கு உதவுவது 
 சம்பந்தமான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாள்.

நமது மீட்பர் இயேசு மட்டும்தான்.

அன்னை மரியாள் நமது மீட்பரை பெற்று தந்ததோடு,

இயேசுவால் மீட்கப்பட சகல உதவிகளையும் நமக்கு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

தன் மகனிடம் நமக்காக வேண்டி கொள்வதில் மூலம் 

நமது ஆன்மீக வளர்ச்சிக்கான அருள் வரங்களை தன் மகனிடமிருந்து நமக்கு பெற்று தருகிறாள்.

தனது பிள்ளைகளாகிய நமக்கு தாய்க்குரிய சகல கடமைகளையும் அன்னை மரியாள் தொடர்ந்து செய்து வருகின்றாள்.

புனித அருளப்பர் அன்னை மரியாளை தனது தாயாக தனது வீட்டில் ஏற்றுக்கொண்டது போல,

நாமும் நமது உள்ளமாகிய வீட்டில் மரியாளை நமது தாயாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தாயின் அருகில் அமர்ந்து அடிக்கடி அவளோடு பேச வேண்டும்.

நாம் செபமாலை சொல்லும்போதெல்லாம் நமது தாயோடு நாம் பேசுகிறோம்.

மங்கள வார்த்தை செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும் 

அன்னையை வாழ்த்துவதோடு,

'பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்' 

என்று அன்னையிடம் கேட்கிறோம்.

அன்னையும் ஒவ்வொரு வினாடியும் நமக்காக தனது மகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாள்.

இயேசு தாய் சொல்லை கேட்கும் பிள்ளை.

கானாவூர் திருமணத்தில் தன் தாய் சொல்லைத் தட்டாமல் தண்ணீரை இரசம் ஆக்கிய இயேசு,  

இப்போதும் தன் தாய் சொல்லைத் தட்டாமல் நாம் படும் 
துன்பங்களை எல்லாம் நித்திய காலம் நாம் அனுபவிக்க போகும் பேரின்பமாக மாற்றித் தருவார்.

அவரது அருளால் தண்ணீர் திராட்சை ரசமானது போல,

நமது துன்பம் அனைத்தும் பேரின்பமாக மாறும்.

இது உறுதி.

இயேசு தாயின் வழியே நம்மிடம் வந்தார்.

நாமும் அதே தாயின் வழியே அவரிடம் செல்ல வேண்டும்.

அவர் தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்தது போல நாமும் நமது தாயின் சொல்லைத் தட்டாமல் வாழ வேண்டும்."

"தாத்தா நமது தாயைப் பற்றி யாராவது தப்பும் தவறுமாக பேசினால் நம்மால் சும்மா இருக்க முடியுமா?

நம்மை விட்டு பிரிந்து சென்ற சகோதரர்கள் நம் தாயைப் பற்றி தப்பு தப்பாக பேசுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார்களே. அவர்களை என்ன செய்ய?"

"'அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்.

அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யும்படி நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.

நாமும் அப்படியே செய்வோம்.

சிலுவை அடியில் பிறந்தவர்கள் நாம்.

நமது வாழ்வில் சிலுவைகள் கட்டாயம் வரத்தான் செய்யும். 

அவற்றை நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய இறைவனை வேண்டி ஒப்புக் கொடுப்போம்.

வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அன்னை மரியின் அன்பாக வாழ்த்துக்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment