Saturday, December 10, 2022

பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு.



பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு.

",பேரப்புள்ள பேப்பரும் கையுமா வருவது மாதிரி தெரியுது."

"ஆமா. Question paper. "

",Question paper ஆ? எனக்குப் பரீட்சை வைக்க போகிறாயா?"

"போகவில்லை, வருகிறேன். நற்செய்தியாளர்களில் இருவர் மட்டுமே இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதியிருக்கிறார்கள்.

லூக்காஸ் எழுதாத சில விபரங்களை மத்தேயு எழுதியிருக்கிறார்.

அது குறித்து சில விளக்கங்களை அறிய வினாக்கள் எழுதி வைத்திருக்கிறேன்.

வினாக்களை கேட்கட்டுமா?" 

",கேட்காதே என்று சொன்னால் நீ கேட்கவா போகிறாய்? சரி, கேள்"

"மாதாவும் சூசையப்பரும் பாலன் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டு

 கலிலேயாவில் உள்ள தம் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.'

என்று லூக்காஸ் எழுதியிருக்கிறார்.

ஆனால் மத்தேயு திரு குடும்பம் எகிப்துக்கு சென்று திரும்பிய பின் தான் நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள் என்று எழுதியிருக்கிறார்.

இது குறித்து கொஞ்சம் விளக்கவும்."

", மத்தேயு,  "ஏரோது அரசன்காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்திருக்க, 

இதோ! ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து யெருசலேமுக்கு வந்து....."

என்று எழுதுகிறார்.

அதாவது பெத்லெகேமில் இயேசு பிறந்ததைக் கூறும் அவர் அதை ஒட்டிய மற்ற விபரங்களை கூறவில்லை.

ஆனால் லூக்காஸ்

மாதாவும், சூசையப்பரும் நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றதிலிருந்து

பெத்லகேமில்  மகனைப் பெற்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியது, 

வான தூதர்கள் வாழ்த்தியது, 

இடையர்கள் வந்து ஆராதித்தது,

 இயேசுவுக்கு பெயரிட்டது, கோவிலுக்கு எடுத்துச் சென்று அவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது,

உட்பட பல விவரங்களை எழுதி இருக்கிறார்.

ஆனால் அவர் கீழ்த்திசை ஞானிகள் வந்தது குறித்து எதுவும் எழுதவில்லை.

கீழ்த்திசை ஞானிகள் வந்தது குறித்து   லூக்காஸ் எதுவும் எழுதாததுதான் உனது கேள்விக்கு காரணம்.

திருக்குடும்பம் எகிப்திலிருந்து திரும்பிய பின் தான் நாசரேத்துக்கு சென்றார்கள்."

"தாத்தா, இயேசு மாட்டுத் தொழுவத்தில் தானே பிறந்தார்?"

", ஆமா."

"ஆனால், விண்மீன் அவர்களை ஒரு வீட்டிற்கு அல்லவா அழைத்து சென்றிருக்கிறது.

"வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர்." 

என்று தானே மத்தேயு நற்செய்தி கூறுகிறது."

",,பேரப் பிள்ளை, கொஞ்சம் சிந்தித்துப் பார்.

அவரை பார்க்க வந்த இடையர்களுக்கு அவர் மெசியா என்பது தெரியும்.

மெசியாவை பார்த்தோம் என்று தங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்களா?"

"கட்டாயம் சொல்லியிருப்பார்கள். பெண்களும் இயேசுவை பார்க்க சென்றிருப்பார்கள்.

அன்னை மரியாளின் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொஞ்சி இருப்பார்கள்.

அப்படியே விட்டுவிட்டு வந்திருக்க மாட்டார்கள்.

சாதாரண குழந்தையாக இருந்தால் கூட நிச்சயமாக மாட்டுத்தொழுவத்திலிருந்து அதை அதன் பெற்றோரோடு தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றிருப்பார்கள்.

அவரோ மெசியா, கடவுள். உலகின் மீட்பர்.

இதைத் தெரிந்தபின் கட்டாயம் திருக் குடும்பத்தை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றிருப்பார்கள்.

அதன் பின் திருக் குடும்பம் அங்கே தான் தங்கியிருந்திருக்கும்.

அங்கு தான் விண்மீனும் வந்திருக்கும்.

ஞானிகள் அங்கு தான் குழந்தையை பார்த்து ஆராதித்திருப்பார்கள்."

",நீயே கேள்வி கேட்டு நீயே பதிலையும் சொல்லிவிட்டாய்.

இப்போது இந்த கேள்விக்கு பதில் சொல்.

திருக்குடும்பம் இடையர்கள் வீட்டிற்கு வந்து எத்தனை நாட்கள் கழித்து ஞானிகள் வந்திருப்பார்கள்?"

"தாத்தா, ஏரோது  ஞானிகளிடம் கருத்தாய்க் கேட்டறிந்த காலத்தின்படி 

பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.

ஆகவே இரண்டு வருடங்களுக்கு உட்பட்டு எப்போது வேண்டுமானாலும் வந்திருக்கலாம். 

ஞானிகள் வந்து விட்டு போனபின் வான தூதரின் சொற்படி திருக் குடும்பம் எகிப்துக்குக் கிளம்பியிருக்கும்.

சரியா?"

", Super சரி.


"ஏரோது குழந்தை இயேசுவை கொல்வதற்காகத் திட்டமிட்டான் என்பதர்காதத்தானே மாதாவும் சூசையப்பரும் அவரை எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் போனார்கள்.

இயேசு கடவுள். அவரை கொல்ல நினைத்த ஏரோதுவை அவர் கொன்றிருக்கலாமே,

எதற்காக எகிப்துக்கு தப்பித்துப் போக வேண்டும்."

",இயேசு மனிதனாக பிறந்தது பாடுகள் பட்டு மரிப்பதற்காகத்தான்.

அதற்காக அவரே குறித்த நேரத்தில் தான் அது நடக்கும்.

அந்த நேரம் வரும் வரை  அவரைக் கொல்ல அவர் யாரையும் அனுமதிக்க மாட்டார்.

சர்வ வல்லமை வாய்ந்த கடவுள் பாவம் தவிர மற்ற எல்லா  மனித பலகீனங்களையும் ஏற்றுக் கொண்டுதான் மனிதனாகப் பிறந்தார். 

அவருக்குரிய நேரம் வரும் முன் ஏரோது அவரை கொன்று விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர் எகிப்துக்குச் சென்றார்.

சில வரலாற்று ஆசிரியர்கள் ஏரோது எசாயுவின் ( Esau) வம்சத்தில் பிறந்தவன் என்று கூறுகிறார்கள்.

இயேசு எசாயுவின் தம்பியாகிய யாக்கோபின் வம்சத்தில் பிறந்தவர்.

அப்படியானால்  ஏரோது இயேசுவுக்கு அண்ணன்.

யாருக்கும் சங்கடம் வரவழைக்காத இயேசு

  சகோதர உறவு உள்ளவனுக்கு  வரவழைப்பாரா?

ஆகவேதான் அவரே எகிப்துக்குச் சென்று விட்டார்."

"பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு எவ்வளவு தூரம்?"

'', சுமார் 300 மைல்கள்"

"தாத்தா அவ்வளவு தூரம் நடந்தா போக வேண்டும்?"

'',மாதாவும் குழந்தை இயேசுவும் கழுதை மேல் உட்கார்ந்து கொள்வார்கள்.

கழுதையின் வேகத்திற்கு சூசையப்பர் நடக்க வேண்டும்."

"அதை நினைக்கும் போது என் உடல் நடுங்குகிறது. 

இயேசு தனது பாடுகளில் தன் அன்னையையும் வளர்ப்புத் தந்தையையும் பங்கெடுக்க வைத்து விட்டார்."

",ஹலோ, நம்மையும் தான். நாமும் நமது சிலுவையை சுமந்து கொண்டு தான் இயேசுவின் பின்னால் போக வேண்டும்.

நாசரேத்தில் இருந்து பெத்லகேமக்கு சூசையப்பர் தொன்னூறு மைல் நடந்தார்.

பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு 300 மைல் நடந்தார்."

"அப்படியானால் திரும்பும் போது 390 மைல் நடக்க வேண்டுமே!

நடந்து போகும்போது குறிப்பிடத்தக்க ஏதாவது நிகழ்ச்சி நடந்ததா?''

"முதல் நாள் இரவில் தங்குவதற்காக ஒரு குகைக்குள் நுழைந்தார்கள்.

நுழைந்த சில நிமிடங்களில் குகை வாயில் முழுவதையும் பத்துக் கால் பூச்சிகள் நூலாம் படையால் அடைத்து விட்டன.

சிறிது நேரத்தில் குழந்தை இயேசுவை கொல்வதற்காக திரிந்து கொண்டிருந்த படைவீரர்கள் அங்கு வந்தார்கள்.

ஒரு படை வீரன் சொன்னான்,

" இந்தக் குகைக்குள் இயேசு தன் பெற்றோரோடு ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்.

உள்ளே நுழைந்து தேடுவோமா?"

ஆனால் இன்னொருவன் சொன்னான்,

"குகை வாயிலை பாருங்கள். நூலாம் படையைப் பார்த்தால் மாதக்கணக்காக யாரும் உள்ளே நுழைந்திருக்க முடியாது.

வாருங்கள் போவோம்."

என்று சொல்லி, திரும்பிப் போய் விட்டார்கள்."

"பத்து கால் பூச்சிகள் கூட தங்களை படைத்தவருக்கு நன்றி கூறும் விதமாகத்தான் குகை வாயிலை அடைத்திருக்கின்றன.

அவற்றிற்கு உள்ள நன்றி உணர்வு மனிதர்களிடம்   இல்லையே!"

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment