Monday, December 26, 2022

இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25?

இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25?

"தாத்தா, மன்னிக்கவும்."

"'மன்னிக்கவா? என்ன தப்பு செய்த?"

"தப்பு ஒண்ணும் செய்யல தாத்தா. கேள்வி ஒன்று கேட்க வேண்டும். கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னால் கேட்க வேண்டிய கேள்வியை அது முடிந்தது கேட்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டேன்."

"'இப்பவும் கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னால்தான் கேட்டிருக்கிறாய்.

2023ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னால். சரி, கேள்."

"வரலாற்றை கி.மு, கி.பி என்று இரண்டு பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கி.மு வில் நடந்ததாக கூறுவோம்.

பிறந்த பின்னால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கி.பி யில் நடந்ததாக கூறுவோம்.

கிறிஸ்து பிறந்தது கி.மு விலா,
கி.பி யிலா?"

"'கிறிஸ்து கி.மு விலும் பிறக்கவில்லை, கி.பி யிலும் பிறக்கவில்லை. 
கிறிஸ்து பிறந்த ஆண்டில் தான் பிறந்தார்."

"அது எனக்கும் தெரியும், தாத்தா.

கிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25என்று கூறுகிறீர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் தான் ஆரம்பிக்கும்.

கிறிஸ்து கி.மு.25 ல்பிறந்திருக்க முடியாது, ஏனெனில் அது அவர் பிறந்த ஆண்டுக்கு முந்திய தேதி.

ஜனவரி முதல் தேதியில் தான் கிறிஸ்து பிறந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் வரலாற்றை கி.மு, கி.பி என பிரிக்க முடியும்.

நாம் ஏன் கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் 25ல் கொண்டாடுகிறோம்."

"'நீ கேட்பதில் பொருள் இருக்கிறது.

ஆனால் நாம் கொண்டாடுவது கிறிஸ்து பிறந்த ஆண்டை அல்ல,

 கிறிஸ்துவின் பிறப்பைத்தான் கொண்டாடுகிறோம்."

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"'நீ பள்ளிக்கூடத்துக்கு போகும்போது கீழே விழுந்து காலில் பயங்கரமான காயம் ஏற்பட்டு விட்டது.

காயத்திற்கு மருந்து போட டாக்டரிடம் போகிறாய்.

டாக்டர் நீ விழுந்த நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? காயத்துக்கு முக்கியம் கொடுப்பாரா?

 நீ விழுந்த நேரத்திற்கு மருந்து கொடுப்பாரா?

 விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கொடுப்பாரா?"

"இது என்ன தாத்தா கேள்வி?
நேரத்தை டாக்டரிடம் காண்பிக்க முடியாது. காயத்தைத் தான் காண்பிக்க முடியும்.

 அதைப் பார்த்து தான் மருந்து  கொடுப்பார்."

"'இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்று என்று சொல்லும் போது அவர் பிறந்த நேரத்தைச் சொல்கிறோம்.  .

மரியாளின் வயிற்றில் உற்பவித்தார், பிறந்தார் ஆகியவையே நமது மீட்புக்காக நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்கள்.

இயேசு சீடர்களை என்ன சொல்லி உலகெங்கும் அனுப்பினார்?"

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்.

என்று சொல்லி அனுப்பினார்."

",பெந்தேகோஸ்தே திருநாள் அன்று சீடர்கள் என்ன சொல்லி தங்கள் நற்செய்தி அறிவிப்பை ஆரம்பித்தார்கள்?"

"மக்களுக்கு நற்செய்தி அறிவித்ததையும், 

 அவரை யூதர்கள் பாடுகள் படுத்திக் கொன்றதையும்,

இயேசு உயிர்த்ததையும் சொல்லி ஆரம்பித்தார்கள்."

"'இப்போ கவனி .

  இயேசு அறிவித்த நற்செய்தி,
 பட்ட பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவை பற்றியே நற்செய்தி அறிவித்தவர்கள் அதிகம் போதித்தார்கள்.

நற்செய்தி நூல்கள் எழுதிய நால்வரில் இருவர் அவரது பிறப்பைப் பற்றி எழுதவே இல்லை.

எழுதிய இருவரும் அவர் பிறந்த ஆண்டு, தேதி பற்றி எழுதவில்லை."

"அப்படியானால் இயேசு எப்போது பிறந்தார் என்பது தெரியவில்லையா"

"'எழுதவில்லை என்று தான் சொன்னேன்.

நற்செய்தி போதிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் ரோமையை ஆண்ட மன்னர்கள் திருச்சபையை அழிப்பது என்று கங்கணம் கட்டி செயல் புரிந்து கொண்டிருந்தார்கள்.

நற்செய்தியை அறிவித்தவர்கள் கிறிஸ்துவுக்காக வேத சாட்சிகளாக மரித்தார்கள்.

ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர்கள் அரசுக்கு தெரியாமல் குகைகளில் ஒழிந்து தான் கிறிஸ்துவை வழிபட்டார்கள்.  

மறைவிடங்களில் தான் திருப்பலி நிறைவேற்றினார்கள்.

கோவில்கள் கட்டவோ, விழாக்கள் கொண்டாடவோ அவர்களால் முடியவில்லை."

"தாத்தா ஒருவர் 300 பக்கங்களில் ஒரு புத்தகம் எழுதினாராம்.

 முன்னுரை மட்டும் 299 பக்கங்கள் எழுதினாராம்.

நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கிறது.

நான் கேட்ட கேள்விக்கு பதில் எப்போது வரும்?"

'"நீ சொல்வது "ஒரு நாள் குழந்தை பெறுவதற்கு குழந்தையை 10 மாதங்கள் சுமந்தாளாம்" என்று சொல்வது போல் இருக்கிறது.

இயேசுவே வெள்ளிக்கிழமை பாடுகள் பட்டு மரிப்பதற்கு 33 ஆண்டுகள் காத்திருந்தார்."

"சரி, சொல்லுங்கள்." 

"'கான்ஸ்டன்டைன் மன்னன் காலத்தில் கிறிஸ்தவத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

பிற மதத்தவர்களும் (Pagans) கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்தார்கள்.

திருச்சபையில் சேர்வதற்கு முன் சூரிய கடவுளை வணங்கி வந்தார்கள்.

சூரிய கடவுள் பிறந்த நாளாக (Birth day of the Unconquered Sun.)” டிசம்பர் 25ஆம் தேதி அவர்கள் விழா எடுப்பது வழக்கம்.

கிறிஸ்தவர்களாக மாறியபின் சூரிய கடவுளை வழிபடுவதை விட்டு விட்டார்கள்.

இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டார்கள்.

சூரிய கடவுள் பிறந்த நாளாகக் கொண்டாடிய டிசம்பர் 25ஆம் தேதியை

 தாங்கள் ஏற்றுக்கொண்ட இயேசுவின் பிறந்தநாளாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.

பிற மதத்தவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதும்,

அவர்களது பழைய தெய்வத்துக்கு விழா எடுத்த நாளை கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடியதும்   

இயேசுவின் நற்செய்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொண்ட பின்பு  அவர்தான்   உண்மையான கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.

உன்னை போல அவர்கள் கி.மு கி.பி என்றெல்லாம் பார்க்கவில்லை.

கிறிஸ்து தங்களுக்காகப் பிறந்தார்,
'
 கிறிஸ்து தங்களுக்காக நற்செய்தி அறிவித்தார் 

கிறிஸ்து தங்களுக்காகப் பாடுகள்கள் பட்டார்,

கிறிஸ்து தங்களுக்காக மரித்தார்,

கிறிஸ்து தங்களுக்காக உயிர்த்தார்

என்பதை ஏற்றுக் கொண்டு 

தங்களது பழைய சமயத்தை கைவிட்டு கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இப்போது நாம் கிறிஸ்து பிறந்த நாளைக்
கொண்டாடவில்லை,

இயேசு மெசியாவாக, அதாவது,
 நமது மீட்பராக பிறந்ததை கொண்டாடுகிறோம்.

We celebrate the birth of our Saviour,
not his birthday.

சர்வ லோகத்திற்கும் சொந்தக்காரரான கடவுள் ஒன்றுமில்லாத ஏழையாகப் பிறந்தார், 

நமக்காக, நமது மீட்புக்காகப் பிறந்தார்.  

நாம் ஏழைகளுக்கு உதவும் போது ஏழையாய் பிறந்த இயேசு பாலனுக்கே உதவுகிறோம்.

 பாவம் இல்லாமல் பரிசுத்தராய் வாழ்ந்தால் இயேசு தருகின்ற 
மீட்பைப் பெறுவோம்.

இவைதான் நாம் தியானித்து நடைமுறைப்படுத்த வேண்டிய
கிறிஸ்மஸ் நற்செய்தி.

பிறந்த தேதியை தியானிக்க வேண்டிய அவசியம் இல்லை." 

" மனம் திரும்பிய பிற மதத்தினர் கொண்டாடிய தேதியை கத்தோலிக்க திருச்சபை ஏன் ஏற்றுக் கொண்டது?"

"'தேதியில் பிரச்சனை ஒன்றும் இல்லை. 

நற்செய்தி அறிவிப்பதின் நோக்கமே அதைக் கேட்போர் மனம் திரும்பி நம்மிடம் வரவேண்டும் என்பது தானே.

நற்செய்தியை ஏற்று 
மனம் திரும்பி 
விசுவசித்து 
ஞானஸ்தானம் பெறுவோர் 
மீட்பு அடைவர் என்றுதான் இயேசு சொல்லியிருக்கிறார்.

மனம் திரும்பி இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களை திருச்சபை  ஏற்றுக்கொண்டது.

ஆகவே இயேசு பிறந்த தேதியைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு

மீட்பு பெறுவதற்கான வாழ்க்கையை வாழ்வோம்.

இயேசுவை வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment