Monday, December 19, 2022

வீரமுள்ள தாய்.(தொடர்ச்சி)

வீரமுள்ள தாய்.
(தொடர்ச்சி)

",மனிதர்களுடைய பாவங்களுக்காக கஷ்டங்கள் பட்டு மரிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறீர்கள்.

மகன் கஷ்டப்படுவதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  

ஆகையினால் தான் சொல்கிறேன் உங்களுடைய வாழ்க்கை வியாகுல உணர்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

நீங்கள் ஒரு வியாகுலத்தாய்.

மனிதர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக வியாகுலங்களை அனுபவிக்கப் போகும் தாய்.

அம்மா, நீங்கள் பெற்றெடுத்திருப்பது கடவுள் என்று நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன்.

உங்கள் வயிற்றில் உருவானது கடவுள் என்று உங்களிடம் சொன்னது யார்?

சந்தேகப்பட்டு இக்கேள்வியை கேட்கவில்லை. விவரங்களை தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன்."

"கடவுளின் தூதர் எனக்குத் தோன்றி,

"உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். 

அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

 அவர் மேன்மை மிக்கவராயிருப்பார்.

 உன்னதரின் மகன் எனப்படுவார். 

பரிசுத்த ஆவி உம்மீது வருவார்.

 உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும்.

 ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்."

என்று சொன்னார்.

நானும் அவர் சொன்னதை விசுவசித்து ஏற்றுக்கொண்டேன்."


",ஆக நமது ஆன்மீக வாழ்வு விசுவசித்து ஏற்றுக் கொள்வதில் தான் தொடங்குகிறது."

"விசுவசித்து ஏற்றுக் கொண்டதை செயல்படுத்தும் போது தான் அது ஆன்மீக வாழ்வாக மாறுகிறது.

ஒரு அடிமை எவ்வாறு அவனது தலைவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்லாமல்,

அவர் சொன்னபடி செய்கிறானோ,

அவ்வாறே, நானும் என் மகன் வழி காட்டுகிறபடி அப்படியே நடக்கிறேன்.

எனது கணவர் எனது உண்மையான துணைவராக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

கடவுளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது தான் உண்மையாக விசுவாச வாழ்வு."

'', அம்மா, இங்கே பாருங்கள், ஆடுகள். 

தெய்வக் குழந்தையைப் பார்க்க ஆடுகள் வந்து கொண்டிருக்கின்றன.

தாத்தா, இங்கே பாருங்கள். ஆடுகள் எப்படிக் குழந்தையை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்று பாருங்கள்!

இதோ ஆடு மேய்ப்பவர்களும் வந்து விட்டார்கள்."

"அம்மா, "இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள்.

 இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்"

என்று வான தூதர்கள் மூலம் செய்தி கிடைத்தது.

அவரைப் பார்த்து ஆராதிக்க வேண்டும் என்று இடையர்களாகிய நாங்கள் வந்திருக்கிறோம். 

வாருங்கள் குழந்தையின் முன் முழங்கால்படியிட்டு அவரை ஆராதிப்போம்."

"அம்மா, இதோ ஆட்டின் பால்.

பால் குழந்தைக்குத் தான். ஆனால் அது உங்கள் மூலமாகத்தான் செல்ல வேண்டும். தாய் மூலம் செல்லும் எதையும் மகன் ஏற்றுக்கொள்வார்.

ஆகவே நீங்கள் பாலை குடியுங்கள் அம்மா"

"மக்கள் சொல்வதைத் தாய் மறுப்பாளா? தாருங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் விருப்பப்படி அது என் மூலம் என் மகனிடமே சென்று சேரும்."

"அம்மா பேறுகாலத்திற்காக தங்குவதற்கு வேறு நல்ல இடம் கிடைக்கவில்லையா?"

"கடவுள் கொடுத்த இடம் எந்த இடமாக இருந்தாலும் அது நல்ல இடம்தான்."

"கடவுள் வேறு இடத்தைக் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?"

"நான் ஆண்டவருடைய அடிமை. அவர் எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்."

"அம்மா, கடவுள் அனுப்பிதான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

குழந்தையை ஆராதித்து விட்டு,

 இங்கேயே விட்டு சென்றால் கடவுள் மேல் நாங்கள் கொண்ட அன்புக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

ஆகவே எங்களோடு வாருங்கள்.

வீட்டில் உங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கும்."

",அம்மா, இவர்கள் சொல்வதும் சரிதான். தாத்தாவும் நீங்களும் குழந்தையும் இவர்களோடு அவர்கள் காட்டும் வீட்டுக்கு செல்லுங்கள்."

"யார் இந்த பையன்? உங்களை அம்மா என்கிறான். உங்கள் கணவரைத் தாத்தா என்கிறான்."

"அண்ணாச்சி "யார் நீ?" என்று என்னிடம் கேளுங்கள். சொல்கிறேன்."

"யாரப்பா நீ?"

"நான் ஒரு பையன். வயது பத்து. மாட்டுத் தொழுவம் நான் இரவில் தங்கும் இடம்."

"உன் பெயர்?"

"இதுவரை என்னை யாரும் பேர் சொல்லிக் கூப்பிட்டதில்ல. 

எனக்கு பெயர் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது."

"அனாதை போலிருக்கிறது."

"அவன் அனாதை இல்லை. ஆண்டவருடைய பிள்ளை.

நாங்கள் உங்களோடு உங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்றால் அவனும் நம்மோடு வர வேண்டும்." 

"அம்மா, அவனை அனாதை என்று சொன்னதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

 இனிமேல் அவன் எங்களது சகோதரன். 

அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள் தான்."

",அம்மா, கடவுளை ஏற்றுக் கொள்கிற அனைவரும் அவரின் தாயை தங்கள் தாயாக ஏற்றுக் கொள்கிறார்கள், பார்த்தீர்களா?

நீங்கள்தான் உண்மையான தாய்.

அம்மா, அதோ பாருங்கள். இடையர்குடி பெண்களும் வருகிறார்கள்."

"அது எப்படித் தம்பி உனக்கு தெரியும்?"

",உங்களை தொடர்ந்து வருபவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?

இவர்கள் குழந்தையின் மேல் முத்த மழை பொழிவதைப் பார்த்தால் பெத்லகேம் நகரே தண்ணீருக்குள் மூழ்கிவிடும் போல் இருக்கிறது."

"நாங்கள் குழந்தையை எடுத்துக் கொள்கிறோம். அம்மாவும் அப்பாவும் எங்களுடைய வாருங்கள்."

",அம்மாவை பார்த்ததும் அனைவருக்கும் கடவுளின் மேல் பாசம் வந்துவிட்டது."

"தம்பி, அது அப்படி அல்ல.
கடவுளைப் பார்த்ததும் அவரது அம்மாவின் மேல் எல்லோருக்கும் பாசம் வந்துவிட்டது. அதுதான் உண்மை."

", அம்மா, அம்மா குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த அம்மா ஓடுகிறார்கள்.

வாருங்கள் எல்லோரும் அவர்கள் பின்னாலே போவோம்.

மகன் இருக்கும் இடம் தாய் இருக்கும் இடம்.

தாய் இருக்கும் இடம் மக்கள் அனைவரும் இருக்கும் இடம்.

தாயைப் பின்பற்றி மகனிடம் போவோம்.

அனைவரும் வாருங்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment