Tuesday, September 24, 2024

" என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. (மாற்கு நற்செய்தி 9:42)

"என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. 
(மாற்கு நற்செய்தி 9:42)


பிறரன்புச் செயல்களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்காக இயேசு,


"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." என்றார்.

நமது அன்புச் செயல்‌ எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதற்காக நமக்கு விண்ணகத்தில் நித்திய பேரின்பம் சன்மானமாகக் கிடைக்கும் 

அதற்கு மாறாக பிறருக்கு துர்மாதிரிகையாய் இருந்து பிறர் விண்ணக வாழ்வை இழப்பதற்கு காரணமாக இருப்பவர்களின் விளைவு எதிர் மாறாக இருக்கும்.

இதை‌ நமக்கு உணர்த்துவதற்காக இயேசு,

 "என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது."

நமது அயலான் மீட்படைய நாம் காரணமாக இருக்க வேண்டும்.

ஆனால் பிறர் மீட்பை இழக்க நாம் எந்த விதத்திலும் காரணமாக இருந்து விடக்கூடாது.

நாம் முன்னுதாரணமாக நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் நம்மைப் பார்ப்பவர்களுக்கும் நம்மைப் போல் வாழ உள் உந்துதல் ஏற்படும்.

ஒவ்வொருவரும் இயேசுவாக வாழ வேண்டும்.

நாம் எதிர்மறையாக வாழ்ந்து விடக்கூடாது என்பதற்கு அழுத்தம் கொடுக்கவே இயேசு 

" உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். 

உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். 

 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்." என்று கூறுகிறார்.

பள்ளிக்கூடம் செல்லும் மாணவனுக்கு அவனது அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.

எதற்கு?

பள்ளிக்கூடம் போக.

அவன் பள்ளிக்கூடம் போகாமல் சைக்கிளில் சினிமாவுக்குப் போனால் அவனுடைய அப்பா என்ன செய்வார்?

சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு,

"பள்ளிக்கூடத்துக்கு நடந்து போ." என்பார்.

அதைத்தான் ஆண்டவரும் சொல்கிறார்.

நமக்குக் கை எதற்குத் தரப்பட்டுள்ளது?

இறைவனைக் கும்பிடவும்,

இல்லாதவர்களுக்கு அள்ளிக் கொடுக்கவும்.


அதை விடுத்து விட்டு‌ களவு செய்யவும், அயலானை அடிக்கவும் பயன்படுத்தினால் கைகளைத் கடவுள் என்ன சொல்வார்?

"கைகளைப் பாவம் செய்யப் படுத்தாதே" என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காக 

"உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்." ‌‌ என்கிறார்.

நமக்குக் கடவுள் ஐம்புலன்களைத் தந்திருப்பது அவற்றைக் கொண்டு இறைவனுக்குச் சேவை செய்ய, பாவம் செய்ய அல்ல.

நாம் நமது ஐம்புலன்களால் செய்தப் பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான் 

இயேசு தனது ஐம்புலன்களையும் சிலுவையில் பலியாக்கினார்.

"பொறிவாயில் ஐந்தவித்தான்" வழி நின்று நாம் நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனுக்காக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment