Friday, September 20, 2024

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 8:21)

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 8:21)

நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையான வசனம்.

அனைவருக்கும் ஒரே தந்தை,
நமது விண்ணகத் தந்தை.

 அனைவரும் ஒரே குடும்பம்.
ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபை.

திருச்சபையின் தலைவர் இயேசு.

இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்கள் அனைவரும் இயேசுவின் தாயும் சகோதர, சகோதரிகளும். 

இயேசுவின் தாய் அன்னை மரியாளா, அல்லது, நாமா?

கபிரியேல் தூதர் மூலம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி செயல்பட்டவள் இயேசுவின் தாய் மரியாள்.

அவருடைய நற்செய்தியைக் கேட்டு அதன்படி வாழ்கின்றவர்களைத் தனது தாய்க்குச் சமமாக நினைக்கிறார் இயேசு.

மரியாளின் மகனாகிய இயேசு தன்னைப் பின்பற்றுகிற அனைவரும் தன் தாயைப் போலவே வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

இயேசு நமது மகனாக வாழ ஆசைப் படுகிறார்.

வேறு வார்த்தைகளில், நாம் அவரைப் பெற்றெடுத்த தாய் மரியாளைப் போல பரிசுத்தர்களாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அதனால்தான் "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்கள் என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்கிறார். 

இயேசு, மரி, சூசை மட்டுமல்ல, 
நாம் அனைவருமே திருக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே திருக்குடும்பம்.

கத்தோலிக்கர் அனைவரும் இறைவார்த்தைக்குக் கட்டுப் பட்டவர்கள்.

தாயும் பிள்ளையுமாகப் பழக வேண்டியவர்கள்.

இறை வார்த்தையின்படி நடப்பவர்களை இயேசு தனது தாய் என்கிறார்.

ஆகவே கத்தோலிக்கக் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளில் இயேசுவைக் காண வேண்டும்.

பிள்ளைகளும் தங்களில் 
இயேசுவைக் காண வேண்டும்.

இந்தக் கண்ணோக்கில் அனைவரும் பழகினால் நமது குடும்பங்களில் அன்பும், சமாதானமும் பொங்கிவடியும்.

எல்லோருமே தங்களில் கிறிஸ்துவைக் கண்டு,

கிறிஸ்துவாக, 

அருள் நிறைந்த அன்னை மரியாளின் பிள்ளைகளாக 

வாழ ஆரம்பித்தால்தான் நாம் கிறிஸ்தர்கள்.

கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும்?

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதையே வாழ்வாகக் கொண்ட இயேசுவாக,

உலகப் பொருட்கள் மீது பற்றின்றி வாழ்ந்த இயேசுவாக,

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்த இயேசுவாக,

அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை மன்னித்த இயேசுவாக,

நண்பர்களின் மீட்புக்காகத் தன் உயிரையே கொடுத்த இயேசுவாக,

அன்னை மரியாள் மீது அளவற்ற பற்று கொண்ட இயேசுவாக

நாம் வாழ வேண்டும்.

இயேசு நம்மில் தனது தாயைப் பார்க்க‌ விரும்புவதால்

நாம் அன்னை மரியாளைப் போல ஆண்டவரின் அடிமைகளாக 

அவரது சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக வாழ்வோம்.

புனித அந்தோனியார் அப்படி வாழ்ந்ததால்தான் குழந்தை இயேசு அவரைத் தன் தாயாகப் பாவித்து அவர் கையில் வந்து அமர்ந்தார்.

நமது கையிலும் குழந்தை இயேசு அமர்ந்திருப்பதாக நினைத்துக் கொள்வோம்.

அவர் மனம் மகிழ 
தாய் மரியாளைப் போல  நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment