Saturday, September 14, 2024

" ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.". (லூக்கா நற்செய்தி 7:47)

"ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றர்."
(லூக்கா நற்செய்தி 7:47)
 

ஒரு பரிசேயரின் அழைப்பை ஏற்று  இயேசு அங்கு சென்று அவரோடு  பந்தியில் அமர்ந்தார். 


அப்போது பாவியான பெண் ஒருவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழ் ஒன்றை எடுத்து வந்து,

தனது பாவங்களுக்காக வருந்தி அழுது,


இயேசுவின் காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, 

தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு,

 அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 

 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, 

"இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; 

இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே நினைத்துக் கொண்டார். 

அவன் நினைப்பை அறிந்த இயேசு அவரைப் பார்த்து,

"இருவர் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தனர்.

 ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமும் வாங்கியிருந்தனர்

 அவர்களால் கடனைத் தீர்க்க முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். 

இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?" என்று கேட்டார். 

 சீமோன் மறுமொழியாக, "யாருக்கு அதிகக் கடன்  தள்ளுபடி செய்யப்பட்டதோ  அவர்தான் என்று நினைக்கிறேன்" என்றார். 

இயேசு அவரிடம், 

 "இவர் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். 

குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார். 

அன்பு குறித்தும், பாவமன்னிப்பு குறித்தும் இயேசு கூறிய வார்த்தைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பாவ மன்னிப்புப் பெற வேண்டுமானால் பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டும்.

இறைவன் மீது அன்பு உள்ளவர்கள் தான் மனம் வருந்துவர்.

ஆக, அன்பு செய்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படும்.

முழுமையாக அன்பு செய்பவர்கள் மன்னிப்பின் பயனை முழுமையாக அனுபவிப்பர்.
(இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார்.)

குறைவாக அன்பு செய்வோர் குறைவாக அனுபவிப்பர்.
(குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்")

ஒரு ஒப்புமை இதைப் புரிந்து கொள்ள உதவும்.

திருமண விருந்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவுதான் பரிமாறப்படும்.

நல்ல பசியுள்ளோர் அதை மிகவும் அனுபவித்து வயிறாரச் சாப்பிடுவர்.

பசி இல்லாதவர்களும் சாப்பிடுவார்கள், ரசித்துச் சாப்பிட மாட்டார்கள்.

முழுமையான அன்பு உள்ளவர்கள் பாவ மன்னிப்பின் பயனை முழுமையாக அனுபவிப்பார்கள்.

குறைவான அன்பு உள்ளவர்கள் 
பயனை குறைவாக அனுபவிப்பார்கள்.

God's forgiveness is freely offered and equally available to all, but our ability to receive and respond to it can vary greatly depending upon the amount of our love.

இரண்டு பேர் ஒரே மாதிரியான சாவான பாவம் செய்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சாவான பாவம் மோட்சத்துக்குத் தடைக்கல்.

இருவரும் பாவத்துக்கு மனஸ்தாபப் பட்டு, நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்கிறார்கள்.

இருவருடைய பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன.

தடைக்கல் நீங்குகிறது.

உடனே இறந்தால் மோட்சம் உறுதி.

ஆனாலும்,

இருவரும் ஒரே மாதிரியாக அன்பு செய்யவில்லை.

ஒருவர் அடுத்தவரைவிட அதிகமாக அன்பு செய்கிறார்.

பரிசுத்த நிலையில் 


அதிகமாக அன்பு செய்பவருடைய ஆன்மா 

குறைவாக அன்பு செய்பவருடைய ஆன்மாவை விட 

அதிக பரிசுத்தமாக இருக்கும்.

விளைவு?

இருவருடைய ஆன்மாக்களும் உத்தரிக்கிற தலத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

அதிகமாக அன்பு செய்பவருடைய ஆன்மா உத்தரிக்கிற தலத்தை சீக்கிரம் கடந்து விடும்.

குறைவாக அன்பு செய்பவருடைய ஆன்மா உத்தரிக்கிற தலத்தைக் கடக்க காலம் கொஞ்சம் அதிகமாகும்.

ஆனாலும் இருவருக்கும் மோட்சம் உறுதி.

பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு இயேசுவின் கால்களில் விழுந்து அழுத பாவி நமக்கு ஒரு முன்மாதிரிகை.

நாமும் இயேசுவின் கால்களில் விழுந்து அழுது நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்போம்.

மன்னிப்பு உறுதி.

அன்பு செய்வோம்.

அதிகமாக அன்பு செய்வோம்.

விரைவாக விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்.

 .

No comments:

Post a Comment