Thursday, September 19, 2024

"எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். (லூக்கா நற்செய்தி 8:16)

"எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர். 
(லூக்கா நற்செய்தி 8:16)

மணம் வீசுவது மலர்.

அதன் மணத்துக்காகத்தான் மக்கள் அதை விரும்புகிறார்கள்.

மங்கையர் மலரைப் பறித்து கூந்தலில் சூடுவர்,

 கூடைக்குள் வைக்க மாட்டார்கள்.

ஒளியைத் தருவது விளக்கு.

விளக்கை ஏற்றி விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்,

மரக்காலுக்குள் வைக்க மாட்டார்கள்.

விளக்குத் தண்டின் மேல் வைத்தால் வீடு முழுவதும் வெளிச்சமாக இருக்கும்.

வீட்டில் வாழும் அனைவரும் பயன் பெறுவர்.

மரக்காலுக்குள் வைத்தால் அங்கு மட்டும் தான் வெளிச்சமாக இருக்கும்.

யாருக்கும் பயன்படாது.

நாம் உலகின் ஒளியாக இருக்கிறோம்.

ஒரு இடத்தில் மலர் இருக்கிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதன்‌ நறுமணமே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

ஒரு இடத்தில் விளக்கு இருக்கிறது என்று யாரும்@
 சொல்ல வேண்டியதில்லை.

அதன் ஒளியே அதைத் தெரிவித்து விடும்.

கடவுள் இருக்கிறார் என்பதை அவர் படைத்த பிரபஞ்சமே அறிவித்துக் கொண்டிருக்கிறது.

நாம் இருக்கிறோம் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வது எப்படி?

கடவுள் ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு திறமையோடுதான் படைத்திருக்கிறார்.

சிலரை பல திறமைகளோடு படைத்திருக்கிறார்.

திறமைகள் நாம் அவற்றைப் பயன்படுத்துவதற்கு,

பூட்டி வைப்பதற்கல்ல.

அவர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் போது மற்றவர்கள் அவர்களை அறிந்து கொள்வார்கள்.

திறைமைகள் உள்ளவர்கள் அவற்றை இறைவனின் அதிமிக மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும்.

பேச்சுத் திறமை உள்ளவர்கள் இறைவனின் நற்செய்தியை வாய் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்த வேண்டும்.

எழுத்தாற்றல் உள்ளவர்கள் இறைவனின் நற்செய்தியை எழுத்து மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்த வேண்டும்.

தங்கள் திறமைகளை நற்செய்தியின் வழியில் வாழ வேண்டும்.

அவர்கள் வாழ்க்கை நற்செய்தியைப் பிரதிபலிக்க வேண்டும்.

அவர்களின் வாழ்க்கை வழியாக நற்செய்தி அறிவிக்கப்படும்.

அவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

ஒளி இருக்கும் இடத்தில் இருள் இருக்காது.

ஆண்டவரின் அருள் ஒளி இருக்கும் இடத்தில் பாவ இருள் இருக்காது.

ஆண்டவர் அருள் ஒளி மயமானவர்.

நாம் அவரது ஒளியைப் பிரதிபலிப்போம்.

உலகில் பாவ இருள் நீங்க நம்மால் ஆனதைச் செய்வோம்.

ஆண்டவரின் ஒளியை நாம் பிரநிபலித்தால் 

நம்மைச் சுற்றியுள்ளோர் அவ்வொளி வெளிச்சத்தில் எது பாவம் எது புண்ணியம் என்று கண்டுணர்ந்து, 

புண்ணிய வாழ்வு வாழ்வார்கள்.

ஒளியின் மக்களாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment