Wednesday, May 1, 2024

இயேசுவுக்கு நமது அன்பை எப்படிக் காட்டப் போகிறோம்?

இயேசுவுக்கு நமது அன்பை எப்படிக் காட்டப் போகிறோம்?

அன்பு செய்வதும், அன்பு செய்யப்பட ஆசைப்படுவதும் அன்பின் இயல்பு.

By nature Love loves and wants to be loved.

இயேசு அன்பு மயமான கடவுள். ஆகவே அவர் நம்மை நேசிக்கிறார், நம்மால் நேசிக்கப்பட ஆசைப்படவும் செய்கிறார்.

 ஒன்றும் இல்லாமையிலிருந்து 
நம்மைப் படைத்ததன் மூலமும்,

நாம் பாவம் செய்தபோது

 மனிதனாகப் பிறந்து,

 வேதனைகள் நிறைந்த பாடுகள் பட்டு, 

சிலுவையில் அறையப்பட்டு மரித்து  

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ததன் மூலமும் 

அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார்

நாம் அவரை அன்பு செய்வதாகச் சொல்கிறோம்.

அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம்?

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார், தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட முக்கியமான பண்பு கொண்டது அன்பு.

நம்மாலும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

பிறந்த நாம் வாழ ஆசைப்படுவதே நம்மீது நாம் கொண்டுள்ள அன்பினால் தான்

ஒரு தாய் தன் குழந்தை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதே அதன் மீது அவள் கொண்டுள்ள அன்பினால் தான். 

பசித்தவுடன் குழந்தை அழுவதே தன்மீது கொண்டுள்ள அன்பினால் தான்.

இரண்டு நண்பர்கள் காலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

நடைக் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.

இறைவன் நமக்குத் தந்த இரண்டு கட்டளைகளைப் பற்றி தான் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.

நண்பகல் 12 மணி. நல்ல வெயில்.

இருவரும் ஒரு மரத்து நிழலில் அமர்ந்தார்கள்.

ஒருவன் தன் பையிலிருந்த பொட்டலத்தை வெளியே எடுத்தான்.

பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

அடுத்தவனிடம் பையும் இல்லை, பொட்டலமும் இல்லை.

சாப்பிட்டவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டவனின் சிந்தனையில் இயேசுவின் போதனையைப் பற்றிய செய்தி இருந்தது,

ஆனால் போதனை இல்லை.  இருந்திருந்தால் அது செயலில் வெளிப்பட்டிருக்கும்.

பைபிள் இறைவனின் சிந்தனை, சொல், செயலின் வெளிப்பாடு.

இறைவனின் சிந்தனையில் அன்பு இருக்கிறது,

சொல்லில் அன்பு இருக்கிறது,

செயலில் அன்பு இருக்கிறது,

நற்செய்தி வெறும் செய்தி அல்ல, நற்செய்தி.

"இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." - செய்தி.

"இறைமகன் இயேசு நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்துக் கொண்டு வருகிறார்." - நற்செய்தி

வித்தியாசம்?

தேர்தலைப் பற்றிய செய்தியால் நமது ஆன்மீக மீட்புக்கு எந்த பயனும் இல்லை.

அது அறிதலை (Knowledge) வளர்க்கிறது, அவ்வளவு தான்.

ஆனால் இயேசுவின் பராமரிப்பை உணர்ந்து,

அந்த உணர்வு நமது விசுவாசம் உறுதி பெறவும்,

நாம் இயேசுவுக்காக மட்டும் வாழ உதவிகரமாக இருக்குமானால் அது நற்செய்தி.

ஆனால் நமது விசுவாச வாழ்வுக்கு அது உதவிகரமாக இருக்கா விட்டால் அதுவும் வெறும் செய்தியே.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ சமயத்தை நிறுவினார் என்று நாத்திகனுக்கும் தெரியும்.

அவனுக்கு அது ஒரு செய்தி.

நமக்கு அது நற்செய்தி.


உலகமெங்கும் சென்று அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்கும்படி இயேசு தனது சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார்.

நற்செய்தியை அறிந்த அனைவரும் அதன்படி வாழ்ந்து மீட்புப் பெற வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

சீடர்கள் இயேசு சொன்ன படியே செய்தார்கள்.

அவர்களுடைய வாரிசுகளும் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் நற்செய்தியைக் கேட்கிறோம்.

 நாமும் பள்ளிக்கூடத்தில் பாடம் கேட்பது போல கோவிலில் குருவானவருடைய பிரசங்கத்தைக் கேட்கிறோம்.

பள்ளிக்கூடத்தில் பாடம் கேட்பது பரிட்சை எழுதுவதற்கு.

கோவிலில் பிரசங்கம் கேட்பது வாழ்வதற்கு.

நற்செய்தியை ஏற்றுக் கொள்கிறோம்.

வாழ்கிறோமா?

வாழ்ந்தால்,

உலகில் ஏற்ற தாழ்வு இருக்காது.
இருப்போர் இல்லாதாரோடு பகிர்ந்து கொள்வர்.

உலகில் யாருக்கும் பகைவர்களே இருக்க மாட்டார்கள்.

எல்லோருடைய பாவங்களும் மன்னிக்கப் பட்டு அனைவரும் பரிசுத்தர்களாய் வாழ்வர்.

எல்லோருள்ளும் இறைவன் வாழ்வது போல எல்லோரும் இறைவனுள் வாழ்வோம்.

மண்ணகமே விண்ணகமாய் மாறி விடும்.

இயேசுவின் நற்செய்தியை வாழ்ந்து

இயேசுவுக்கு நமது அன்பை  காட்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment