Thursday, May 2, 2024

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."(அரு.15:10)

"நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."
(அரு.15:10)

பரிசுத்த தம திரித்துவத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவைப் போல 

நமக்கும் இயேசுவுக்கும் உறவு இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

இயேசு தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி அவரது அன்பில் நிலைத்திருப்பது போல

நாம் இயேசுவின் சித்தத்தை நிறைவேற்றி அவரது அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

இறைவன் நித்திய காலமும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

நாம் இயேசுவின் சித்தத்தை, அதாவது தந்தையின் சித்தத்தை நிறைவேற்றி வாழ்ந்தால் நாமும் 
நிறைவான மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

"என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்."(15:11)

நாம் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும்.

அவரது கட்டளைகள் இனிமையானவை.

"எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி.

நீ உன்னை நேசிப்பது போல உன் அயலானை நேசி."

அன்பு செய்வதை விட இனிமையான செயல் வேறெதுவும் இல்லை.

Nothing is sweeter than love.

கரும்பு தின்னக் கூலியா என்பார்கள்.

ஆனால் இயேசு கரும்பு தின்னக் கூலி தருகிறார்.

நாம் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றும் போது நமது வாழ்வில் மகிழ்ச்சி பொங்குகிறது.

மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்ய விரும்புவது மனித இயல்பு.

மகிழ்ச்சி தரும் செயல்களைத் தேடி அலைய வேண்டாம்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அன்பு நமது உள்ளத்தில் தானே இருக்கிறது.

அதைப் பயன்படுத்தினால் போதுமே!

மகிழ்ச்சி மட்டுமல்ல, இறைவனின் அன்பில் நிலைத்திருக்கும் பாக்கியமே நாம் அன்பு செய்வதின் விளைவு தானே.

நாம் நமது பிறனை இறைவனுக்காக அன்பு செய்யும் போதும் நாம் இறையனாபில் நிலைத்திருக்கிறோம்.

அன்பு செய்வது எப்படி?

Obedience = Love.

Obedience to the Commandments of God is equal to loving God.

இறைவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதும், இறைவனை அன்பு செய்வதும் ஒன்று தான்.

ஏனெனில் "அன்பு செய்" என்பது தான் கடவுளின் கட்டளை.

நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கடவுளின் கட்டளை இருக்கிறது.

தூங்குவதில், மூச்சு விடுவதில், உடுப்பதில், உண்பதில் எல்லாம் கட்டளை இருக்கிறதா?

பத்துக் கட்டளைகளில் இவற்றைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே!

"உன்னை நீ நேசிப்பது போல உனது அயலானையும் நேசி." என்பது இறைவனின் கட்டளை.

"உன்னை நேசி, அதேபோல் உன் அயலானையும் நேசி" என்பது இக்கட்டளையின் விளக்கம்.

கடவுள் தன்னைத் தானே நேசிக்கிறார்.

அந்த நேசம்தான் பரிசுத்த ஆவி,
அன்பின் கடவுள்.

தாய்த் திருச்சபையை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வழி நடத்துபவர் பரிசுத்த ஆவிதான்.

கடவுள் நம்மை அவரது சாயலில் படைத்திருக்கிறார்.

ஆகவே கடவுள் தன்னைத் தானே நேசிப்பது போல நாம் நம்மை நேசிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதால்தான் உயிர் வாழ்வதற்காக மூச்சு விடுகிறோம், உண்கிறோம், குடிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதால்தான் நமக்கு நாமே உடை வாங்கிக் கொடுக்கிறோம்.

நமது உடலுக்கு கேடு தரக்கூடிய உண்டால் நமது உடலுக்கு விரோதமாக குற்றம் செய்கிறோம்.

அதனால் ஏற்படும் உடல் நலக்குறைவு அதற்கான தண்டனை.

மானத்தைக் காக்க உடுக்க வேண்டிய உடையை மானங்கெட்ட விதமாய் உடுத்தால் நமது உடலுக்கு விரோதமாக குற்றம் செய்கிறோம்.

மது அருந்துதல் உடலுக்கு கேடு விளைவிப்பதால் மது அருந்துபவர்கள் உடலுக்கு விரோதமாக குற்றம் செய்கிறார்கள்.

ஆகவே நமது நடை, உடை, பாவனை அனைத்திலும் கடவுள் விருப்பப்படி நடப்போம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் இறைவன் கட்டளைப் படி நடப்போம்.

அவருடைய அன்பில் நிலைத்திருப்போம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment