Saturday, May 4, 2024

உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."(அரு.15:18)

" "உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்கு முன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."
(அரு.15:18)

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள்.

சோம்பேறிகள் சோம்பேறிகளுடன் தான் இருக்க விரும்புவார்கள்.

குடிகாரர்கள் குடிகாரர் கூட்டத்தையே விரும்புவார்கள்.

ஒருவன் இருக்க விரும்பும் கூட்டத்தின் தன்மையை வைத்தே அவன் தன்மையைக் கணித்து விடலாம்.

கெட்டவனுக்கு நல்லவனைக் கண்டால் பிடிக்காது.

சாத்தானைச் சார்ந்தனுக்கு இறைவனைச் சார்ந்தனைக் கண்டால் பிடிக்காது.

உலகத்துக்கு ஆன்மீகத்தைப் பிடிக்காது.

 உலகத்துக்கு இயேசுவைப் பிடிக்காது.

உலகைச் சார்ந்தவர்களுக்கு இயேசுவைச் சார்ந்தவர்களைப் பிடிக்காது.

ஆகவே தான் இயேசு தன் சீடர்களிடம் சொல்கிறார்,

"உலகு உங்களை வெறுக்கிறதென்றால் 

அது உங்களை வெறுக்கு முன்னே

 என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்."

உலகைச் சார்ந்த பரிசேயர்களால் இயேசுவுக்கு என்ன நேர்ந்தது என்று நமக்குத் தெரியும்.

அதுவே அவருடைய சீடர்களுக்கும் நேரும்.


"நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். 

நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். 

நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. 

எனவே உலகு உங்களை வெறுக்கிறது."
(15:19)

"எனக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்.

என்னைத் துன்பப் படுத்திக் கொன்றது போல உங்களையும்
துன்பப் படுத்திக் கொல்வார்கள்."

சீடர்கள் நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது இயேசுவை விரும்பாதவர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

அருளப்பரும் வியாகப்பரும் இயேசுவை நோக்கி, 

"நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். 

 நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார். 

அவர்கள் இயலும் என்றார்கள்.

வியாகப்பர் சீடர்களில் முதலில் வேதசாட்சியாக மரித்தார் .

அவரது ஆசை நிறைவேறியது.

இயேசுவுக்கும் உலகத்துக்குமான யுத்தம் இன்றும் தொடர்கிறது.

நாம் இயேசுவைச் சார்ந்தவர்கள்.

இயேசுவுக்கு நேர்ந்தது அவருடைய சீடர்களுக்கு நேர்ந்தது போல நமக்கும் நேர வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே மணிப்பூரில் ஆரம்பித்து விட்டது.

இன்று இந்தியாவில் நடப்பது இயேசுவுக்கும் உலகத்துக்குமான போர்.

நாம் இயேசுவின் பக்கம்.

போரின் முடிவு எப்படி இருக்கும் என்று இம்மாத இறுதியில் தெரியும்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment