Saturday, March 27, 2021

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்"(அரு.17:21)

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்"
(அரு.17:21)


இயேசு தன்னையே தன் தந்தைக்கு தன் சிலுவைப் பலி வழியாக ஒப்புக்கொடுத்ததற்கு முந்திய நாள் அவர் தந்தையிடம் செபித்த செபம்:

"நம்மைப் போல நமது பிள்ளைகளும் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்."

நமது ஒற்றுமைதான் நாம் நம்மை படைத்த பரிசுத்த தமதிரித்துவத்தின் சாயல் என்பதற்கான வெளியரங்க அடையாளம்.

நமது முதல் பெற்றோர் எப்போது ஒற்றுமையாக இருக்க வேண்டுமோ அப்போது ஒற்றுமையாக இல்லை.

 பாவம் செய்வதில் ஒற்றுமையாக இருந்தார்கள்.

ஆனால் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல்  ஒற்றுமையை மறந்து ஒருவர் மேல் ஒருவர் பழியைப் போட்டார்கள்.‌ 

நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் விரும்புகிறார்?

தந்தை மகனுள்ளும், மகன் தந்தையுள்ளும் இருப்பது போல்
நாமும் ஒன்றாய் இருக்க வேண்டும்.

தந்தையும் மகனும் ஒரே கடவுள்.

நம் ஒவ்வொருவருள்ளும் ஒரே விசுவாசம் இருப்பதால் நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஒரே இனம். கிறிஸ்தவ இனம்.

கிறிஸ்தவர்கள் ஒரே விசுவாசத்தின் அடிப்படையில் சிந்தித்து, பேசி, செயல்பட்டால் எல்லோரிடமும் ஒற்றுமை உணர்வு இருக்கும்.

சிந்தனை, சொல், செயலில் மாறுபட்டால் அது ஒற்றுமையையும் பாதிக்கும்.

ஒரு சிறிய ஒப்புமை: (Analogy)

உறுப்புக்கள் பல, உடல் ஒன்று.

உடல் தெருவழியே நடந்து போய்க்கொண்டிருக்கிறது.

கண்கள் பார்க்கின்றன,
 காதுகள் கேட்கின்றன,
 மூக்கு நுகர்கிறது,
கால்கள் நடக்கின்றன,
உடல் போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு பத்தடி தூரத்தில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது.

அதை கண்கள் பார்க்கின்றன.

அதை எடுக்க கைகளுக்கு உத்தரவு கொடுக்கின்றன.

கைகள் கால்களை நோட்டை நோக்கி நடக்க சொல்கின்றன.

கால்கள் கீழ்ப்படியப் போகும் வினாடியில் கண்கள் எதிரே 50 அடி தூரத்தில் ஒரு புலி வருவதை பார்க்கின்றன.

மூளை சொல்கிறது,
"ஐநூறு ரூபாய் நோட்டு முக்கியமல்ல. புலியிடமிருந்து தப்பிப்பதே முக்கியம்."

இப்போது கால்களும் கைகளும் என்ன செய்ய வேண்டும்?

ரூபாய் நோட்டை எடுக்கும் முயற்சியில் உடல் புலிக்குப் பலியாக வேண்டுமா?

அல்லது ரூபாய் நோட்டை தியாகம் செய்துவிட்டு தப்பித்து ஓட வேண்டுமா?

மூளை சொல்வதைக் கேட்டால் உடல் தப்பித்து ஓடும். உறுப்புக்கள் ஒற்றுமையாக இருக்கும்.

உறுப்புகளிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் உடல் புலிக்கு உணவாகும்.

எதற்காக இந்த ஒப்புமை?

இதேபோன்று ஒரு இக்கட்டான சூழ்நிலை தமிழ்நாட்டு கிறிஸ்தவ இனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 6, தமிழ் நாடு சட்ட மன்றத்
தேர்தல்.


கிறிஸ்தவ சமயத்தை அழித்தே தீருவோம் என்று கூக்குரல் இடும் ஒரு கும்பல் புலிபோல் தமிழ்நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

"நாம் எல்லோரும் தமிழர்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்." என்று ஒரு கட்சி களம் இறங்கியிருக்கிறது.

இப்பொழுது கேள்வி:

நாம் கிறிஸ்தவத்தை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள புலியிடமிருந்து தப்பிக்க வேண்டுமா?

அல்லது "நாம் தமிழர்" என்பதை நிரூபிக்கும் முயற்சியில் புலியிடம் அகப்பட்டு சாக வேண்டுமா?

இப்போது ஒரு கேள்வி எழும்.

நாம் முதலில் தமிழர்கள்,
 அடுத்து கிறிஸ்தவர்களா?

அல்லது

முதலில் கிறிஸ்தவர்கள், அடுத்து தமிழர்களா?

"சமயத்தால் கிறிஸ்தவன், மொழியால் தமிழன்,"

 என்று சொல்லி தப்பிக்கக் கூடாது.

முதலில் கிறிஸ்தவனா?
 தமிழனா?

நம்மை படைத்தவர் கடவுள்.

நம்மைக் கடவுள் படைத்தது தமிழ்நாட்டில்.

கடவுளால் படைக்கப்பட்டதால் நாம் கடவுளின் பிள்ளைகள்.

தமிழ்நாட்டில் படைக்கப்பட்டதால் தமிழர்கள்.

அவர் நம்மை இங்கிலாந்தில் படைத்திருந்தால் ஆங்கிலேயராக இருந்திருப்போம்.

நாம் எந்த நாட்டவர் என்று தீர்மானிப்பது நாம் அல்ல,
 கடவுள் தான்.

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் விண்ணகத்தில் கடவுளோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வது,

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

நாம் புறப்பட்ட இடமும் போய் சேர வேண்டிய இடமும் கடவுள் மட்டுமே.

பயணிக்க வேண்டிய இடம் மட்டும் தான் தமிழ்நாடு.

நாம் முதலில் தேட வேண்டியது விண்ணக சாம்ராஜ்யத்தை. மண்ணக சாம்ராஜ்யத்தை அல்ல.

நம்மைப் படைத்தவரின் கண்ணோக்கில் நாம் முதலில் கிறிஸ்தவர்கள்,
அப்புறம்தான் தமிழர்கள்.

இது ஆன்மீக கண்ணோக்கு.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?"
(மத்.16:26)

இயேசுவின் கண்ணோக்கில் எது முக்கியம் என்று நமக்குத் தெரியும்.

இந்த அடிப்படையில் வரவிருக்கும் தமிழ்நாட்டு தேர்தலை கிறிஸ்தவர்கள் கணிக்கும்போது 

யார் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட 

யார் ஜெயிக்க கூடாது என்பதுதான் முக்கியம்.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி ஜெயித்து விடக்கூடாது.

அது ஜெயித்துவிட்டால் கிறிஸ்தவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

ஒரே நாடு, ஒரே மதம் அடிப்படையில் கிறிஸ்தவத்தை முற்றிலும் அழிப்பதுதான் அவர்களது நோக்கம்.

அது ஜெயிக்க கூடாது என்றால் அதற்கு நேர் எதிராக இருக்கும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

நமது கிறிஸ்தவ ஓட்டுக்கள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டுமே போடப்படவேண்டும் என்று தமிழ்நாடு ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

வேறு எந்த கட்சிக்கு நாம் ஓட்டு போட்டாலும் நமது ஓட்டுக்கள் சிதறுவதால் ஜெயிக்க கூடாத கூட்டணி ஜெயித்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

ஆயர் பேரவையின் ஆலோசனைப் படி நடக்க வேண்டியது அவர்களின் வழிநடத்துதலின் கீழ் உள்ள கத்தோலிக்கர்களின் கடமை.

ஆனால் சில குருக்கள் திரு. சீமான் அவர்களின்‌ தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்கள்.

இது தலைமையை மீறிய அறிவுரை.

நாம் தமிழர் கட்சி நல்ல கட்சியா, கெட்ட கட்சியா என்பது அல்ல நமது பிரச்சனை.

அது நல்ல கட்சியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் அதற்கு நாம் வாக்களித்தால் நம்முடைய ஓட்டுக்கள் சிதறுவதால் 

ஜெயிக்கக்கூடாத கூட்டணி ஜெயித்துவிட நாம் காரணமாக இருந்து விடுவோம்.

நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டவர்கள் ஆவோம்.

இந்த சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒற்றுமை உள்ளவர்கள்,

 அவர்களுடைய ஆயர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள்,

 திருச்சபையின் கட்டளைகளை மதிப்பவர்கள் என்று உலகத்திற்கு உணர்த்துவதற்காக மட்டுமல்ல,

 எதிரிகளின் கையிலிருந்து கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்காக 

 எல்லா கிறிஸ்தவர்களும் ஒட்டுமொத்தமாக, ஒற்றுமையாக தமிழக ஆயர் பேரவையின் ஆலோசனைப்படி தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம்.

கிறிஸ்தவத்தை அழிக்கத் தேடுகிறவர்களின்‌ கையிலிருந்து
அதைப் பாதுகாப்போம்.

கத்தோலிக்க திருச்சபை நமது தாய்.

நமது தாயை எதிரிகளின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காக 

 தமிழக ஆயர் பேரவையின் ஆலோசனைப்படி தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment