Wednesday, March 3, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*16(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*16
(தொடர்ச்சி)


"கொஞ்சம் முன்னால என்ன சொன்னீங்க?"

"'புனித வெள்ளி இல்லையென்றால் ஈஸ்டர் ஞாயிறுமில்லை'

என்றுதானே சொன்னேன்!"

"ஆமா. முடிவிலிருந்து ஆரம்பிப்பதற்காகத் கேட்டேன்."


", புரியவில்லை."

" இப்போ புரியும்.

*பொறி வாயில் ஐந்தவித்தான்*

என்ற சொற்றொடரை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?"

",இதுதான் ஆரம்ப பள்ளியில் படிக்கிற பையனுக்கே தெரியுமே.

திருக்குறள் முதல் 10 இறைவணக்கக் குறள்களில் 6வது குறள்."

"பொருள் கூறுங்கள்."


", திருக்குறளுக்கு பல பேர் விளக்கவுரை எழுதி இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவர், பெயர் ஞாபகம் இல்லை ,கூறிய விளக்கத்தை கூறுகிறேன்.

பொறிவாயில் = சிலுவைப் பொறி வழியாக,

ஐந்து = தன் ஐந்து புலன்களையும்.

அவித்தான் = பலியாக்கிய இறைவன் இயேசு கிறிஸ்து.

சரியா."

"நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இயேசு தன்னை முழுவதுமாகத்தானே பலியாக்கினார்.

ஏன் ஐந்து புலன்களை பலியாக்கினார் என்று குறள் ஆசிரியர் கூறுகிறார்?"


",காரணம் இருக்கிறது. பாவம் செய்தவன் மனிதன். எவற்றின் வழியாக பாவம் மனிதனின் ஆன்மாவுக்குள் நுழைந்தது?"

"ஏவாள் பார்த்தாள், கண்களால்

கேட்டாள், காதுகளால்
'
 பறித்தாள், கைகளால்

நுகர்ந்தாள், மூக்கினால்

 ருசித்தாள், வாயினால்.

விலக்கப்பட்ட கனியை உண்ண தனது ஐம்புலன்களையும் பயன்படுத்தி மனித குலத்தின் முதல் பாவத்தை செய்தாள்.

இந்த உடல் அனுபவிப்பதற்காக ஆன்மா பாவம் செய்தது."


",ஆக ஐந்து புலன்களின் வழியாக பாவம் உள்ளே நுழைந்தது.

இயேசு மனிதர் செய்த பாவங்களுக்காக தன்னையே பலியாக்க வேண்டுமென்றால் 

முதலில் ஐந்து புலன்களையும்தானே பலியாக்க வேண்டும்!

ஆகவே தான் இயேசு தனது ஐந்து புலன்களையும் அவித்தார், அதாவது பலியாக்கினார்.

நமது பாவங்களுக்காக தனது ஐம்புலன்களையும் சிலுவை மரத்தில் பலியாக்கிய 

இறை இயேசுவின் உண்மையான ஒழுக்க நெறிப்படி வாழ்வோரே நிலைவாழ்வை அடைவர்."

" ஏவாள் மட்டுமா, அவளது வயிற்றில் பிறந்த அனைத்து மனுக்குலமே ஐம்புலன்களால் தான் பாவம் செய்கிறது.

இயேசு நமக்காக தனது ஐம்புலன்களையும் பலியாகினார்.

அந்த பலியின் முழு பலன்களையும் நாம் அடைய வேண்டுமென்றால் நமது ஐம்புலன்களையும் நாம் பலியாக்க வேண்டுமே!"


", புனிதர்கள் அதைத்தான் செய்தார்கள்.

நாம் குறைந்தபட்சம் அடக்கியாவது வைத்திருக்க வேண்டுமே!"

." நாம் ஐம்புலன்களையும் அடக்கி வைத்தால் நமக்குள் பாவம் நுழையாதே!

ஒவ்வொருவரும் அவரவர் ஐம்புலன்களை அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பரிசுத்த ஆவியானவர் நமக்கு தன்னடக்கம் (Self control) என்ற கனியை தந்திருக்கிறார்.

எண்ணுவது நமது மனதுதான். ஆனால் அதற்கான விசயங்கள் நமது ஐம்புலன்களின் வழியேதான் உள்ளே நுழைகின்றன.

கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து அளிப்பதாக எண்ணிக் கொண்டு TVயிலும், நமது phoneலும் அசிங்கமான காட்சிகளைப் பார்த்து இரசித்தால்,

நமது மனது குப்பைத் தொட்டி மாதிரி ஆகிவிடும்.

அங்கு உற்பத்தியாகும் எண்ணங்களும், வெளிவரும் சொற்களும், செயல்களும் குப்பையாகவே இருக்கும்.


ஐம்புலன்களையும் கெடுக்கக் கூடியவை உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன.

வீட்டிலும், வெளியிலும் நமது ஐம்புலன்களையும் அடக்கி வைத்திருக்க வேண்டும்."

"indecent ஆக dress பண்ணிக் கொண்டு கோவிலுக்கு
 வருபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"


"சாத்தானின் ஏஜெண்டுகள் என்று சொன்னால் தப்பாக நினைப்பார்கள்.

ஆகவே அப்படிச் சொல்லவில்லை.

மற்றவர்கள்கள் கண்கள் கெடக் காரணமாக இருப்பவர்களை நினைத்தால் பின்வரும் வசனம் ஞாபகத்துக்கு வருகிறது.

"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்."
(மாற்கு 9:42)

ஞாபகத்துக்கு வருவதோடு நிறுத்தி கொள்ள வேண்டியதுதான்.

 இதைப்போய் அவர்களிடம் சொன்னால்:

"உடை அவரவர் சொந்த விஷயம் சார். உங்களது கண்ணுக்கு கஷ்டமாக இருந்தால் கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள்."

 என்று சட்டம் பேசுவார்கள்."

"பிற நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் காரன் கூட,

" We believe in the rule of law."
என்றுதான் சொன்னான்.

என்ன rule ஓ என்ன law ஓ!"


", லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குகிறவன் கூட 

"லஞ்சத்தை ஒழிப்போம்"

 என்று சொல்லிக் கொண்டுதான் கொடுக்கிறான்!!" 

"நாம் அடக்க வேண்டிய மிக முக்கியமான உறுப்பு நமது வாய்தான் என்கிறேன்."


",உண்மைதான் நமது கண்ணை அடக்காவிட்டால் நாம் மட்டும்தான் கெட்டுப்போவோம்.

 ஆனால் நமது வாயை அடக்கா விட்டால் நம்மை சுற்றி உள்ளவர்களும் கெட்டுப் போவார்கள்!

தேர்தல் கூட்டங்களுக்கு போய் பாருங்கள். 

பொய் பொய்யாய் பேசிக்கொண்டிருக்கும் தலைவர்களையும்,

 அவர்களை பேச்சுக்களை மெய் மெய்யாய் நம்பிக் கொண்டிருக்கும் மக்களையும் பார்க்கும்போது

 நமக்கு பாவமாக இருக்கிறது!"

"நமது வாய் மற்றவர்களைக் கெடுப்பது போல, நம்மை எப்படி கெடுக்கிறது தெரியுமா?"

", கண்டதையெல்லாம் அளவே இல்லாமல் சாப்பிட்டு

 நமது உடலை நாமே எடுத்துக் கொள்கிறோமே இதைவிட கொடுமை எங்காவது உண்டா?"


"உடலை மட்டுமா? போசனப் பிரியம் தலையாய பாவங்களில் ஒன்று.

உடலோடு ஆன்மாவும் கெடுகிறது."

",தன்னடக்கம் ஐம்புலன் அடக்கத்தை மட்டுமல்ல, ஆன்மாவின் அடக்கத்தையும் குறிக்கும்."

"எப்படி?"

",சிலருக்கு உலகம் முழுவதும் அடக்கி ஆளக்கூடிய சக்தி இருக்கும், ஆனால் தன்னைத் தானே அடக்குவதற்கு உரிய சக்தி இருக்காது.

 தனது சிந்தனைகளையும் ஆசைகளையும் அடக்கி தன்னையே ஆள்பவன் தான் உண்மையான மனிதன்.

சாத்தான் ஏமாற்றியது இருக்கட்டும்,

 ஏவாள் தனக்குள் ஏற்பட்ட ஆசையை அடக்க வில்லையே. அதனால் தானே மனுக்குலம் முழுவதும் பாவத்தில் விழுந்தது!


அவள் தன் ஆசையை அடக்கியிருந்தால் சாத்தானால் என்ன செய்திருக்க முடியும்?

ஏமாந்து போயிருக்கும்!

சுயத்தை வெல்பவன் தான் உண்மையான வீரன்.

லூசிபெர் எப்படி சாத்தான் ஆனான்?

தன்னுள் தோன்றிய தற்பெருமையை ஆரம்பத்திலேயே அடக்கியிருந்தானென்றால் இப்பொழுது விண்ணக சேனைகளின் தலைவனாக இருந்திருப்பான்!"


"நாமும் அநேக நேரங்களில் 
தற்பெருமையால் தானே கெடுகிறோம்.

எப்போது தற்பெருமைக்கு இடம் கொடுக்கிறோமோ அப்போது நாம் எல்லோரையும் விட கீழே விழுந்து விட்டோம் என்று அர்த்தம்.

தாழ்ச்சியாய் இருப்பவன் தவறுகளைத் திருத்தி ஆன்மீக வாழ்வில் வளர்வான்.

 தற்பெருமை உள்ளவன் தன்னிடம் உள்ள தவறுகளை ஏற்றுக் கொள்ளவே மாட்டான். பிறகு எப்படி திருந்த முடியும்? எப்படி வளர முடியும்?"

",தன்னிடம் உள்ள நோயை ஏற்றுக் கொள்பவன் தான் மருத்துவரிடம் தன்னைக் காண்பிப்பான் சுகம் அடைவான்.

ஏற்றுக் கொள்ளாதவன் அதிலேயே மடிவான்.

தற்பெருமையை மட்டுமல்ல, தன்னிடம் எழும் 
ஆசாபாசங்களையும் அடக்கி வைத்திருக்க வேண்டும்.

ஆசைகள் தோன்றுவது இயல்பு.

ஆனால் எந்த ஆசையை வளர்க்க வேண்டும்,

 எந்த ஆசையை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர் குப்பைத்தொட்டியில் அமர்ந்து கொண்டே மாடமாளிகைகள் பற்றி கனவு காண்பார்களாம்.

தங்களால் என்ன முடியும், எவ்வளவு முடியும் என்று அறிந்தவர்கள் முடியாததைப் பற்றி கனவுகண்டு நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.

 முடிந்ததைச் செய்து முன்னேறுவார்கள்.
 
'தான்' என்ற எண்ணம் (Ego) யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களிடம் உள்ள திறமைகளை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். மற்றவர்கள் தரும் உண்மையான புத்திமதியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றத்தைக் காண முடியாது.

அநேக தலைவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் அவர்களேதான்.

யார் தனது Egoவை அழிக்கிறானோ அவன்தான் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பான்.

ஆன்மீக வாழ்வில் Egoவே இருக்கக் கூடாது.

முதலில் இறைவன் முன் தான் ஒன்றும் இல்லாதவன் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி ஏற்றுக் கொள்பவன்தான் தான் முற்றிலும் இறைவனையே சார்ந்து இருப்பதை உணர்வான்.

அப்படி உணர்பவன் இறைவன் கையில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டு 

அவர் காட்டும் வழியில் மட்டும் நடப்பான், தனியாக அல்ல இறைவனோடு.

ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆன்மீக வழிகாட்டியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் அவர் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.

புனிதர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறி அதுதான்."

 .(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment