Wednesday, March 31, 2021

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" (மத்.26:39)

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" 
(மத்.26:39)‍‌‍‍

இயேசு தன் பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு,

அப்போஸ்தலர்களுக்குத் தன் உடலையும் , இரத்தத்தையும் இரவு உணவாக அளித்த பின்பு,

தன்னுடைய எதிரிகளிடம் தன்னையே பலியிட ஒப்படைப்பதற்காக கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வருகிறார்.


 சீடர்களிடம், "நான் அங்கே சென்று செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி,

இராயப்பரையும் செபெதேயுவின் மக்கள் இருவரையும் தம்மோடு அழைத்துச் செல்கிறார். 

"என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. 

இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்"


என்று கூறிவிட்டு


சற்று அப்பால்போய், குப்புறவிழுந்து, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று

செபிக்கிறார். 

இயேசுவின் இந்த ஜெபத்தை கேட்டவுடன் நமக்குள் ஒரு கேள்வி எழும். 

அவர் சர்வ வல்லமையும் ஞானமும் உள்ள கடவுள்.

எப்பெப்போ யார் யாருக்கு என்னென்ன நடக்கும் என்று அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

தான் செய்ய வேண்டியதை நித்திய காலமாகவே திட்டமிட்டு தான் செய்கிறார்.

 தனது திட்டத்துக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்.

மனிதனாக பிறக்க வேண்டும்,

 பாடுகள் பட வேண்டும், 

 சிலுவையில் மரணம் அடையவேண்டும் 

மூன்றாவது நாள் உயிர்க்க வேண்டும்,


என்பது அவரது நித்திய கால திட்டம்.

தனது பொது வாழ்க்கையின் போது தனது பாடுகளைப் பற்றியும், உயிர்ப்பை பற்றியும் 

தனது அப்போஸ்தலர்களுக்கு அடிக்கடி கூறியிருக்கிறார்.


ஒரு முறை இராயப்பர் அவரிடம் பாடுகள் படவேண்டாம் என்று கூறியபோது அவர்
 இராயப்பரை நோக்கி, 

"போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று கூறியிருக்கிறார்.

அதே இயேசு இப்போது தன்னையே எதிரிகளிடம் கையளிப்பதற்கு முன்பு,

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்."

என்று ஜெபிக்கக் காரணம் என்ன?

இயேசு பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய இறை மகன்.

அவர் மனித உரு எடுப்பதற்கு முன்னால் 

அவர் ஒரே ஆள் (தேவ ஆள்)

அவருக்கு ஒரே சுபாவம் (தேவ சுபாவம்)

ஆனால் பாடுபட்டு மரிப்பதற்காகவே அவர் மனித உரு எடுத்தபிறகு

 
அவர் ஒரே ஆள் (தேவ ஆள்), 
ஆனால் இரண்டு சுபாவங்கள்

தேவ சுபாவம் 

மனித சுபாவம்.

இயேசு முழுமையாகவே கடவுள்,
(Fully God)

 முழுமையாகவே மனிதன்.
(Fully Man)

மனித சுபாவத்தில் பாவம் தவிர மற்ற எல்லா மனித தன்மைகளும் அவரிடம் இருந்தன. ஆகவேதான் அவர் முழுமையாக மனிதன்.

நம்முடைய பலவீனங்களையும் (Weaknesses) அவனர் ஏற்றுக்கொண்டார்.

பயம் நம்முடைய முக்கியமான பலவீனம்.

நாம் துன்பங்களைக் நினைத்து பயப்படுவது போலவே 

அவரும் தான் படவிருக்கும் பாடுகளை நினைத்து பயப்பட்டார்.

நாம் எப்படி துன்பங்கள் வேண்டாம் என்று இறைவனிடம் வேண்டுகின்றோமோ

அதேபோல் தான் அவரும் முடிந்தால் தன் பாடுகளை 
நீக்கும்படி தந்தையிடம் வேண்டுகிறார்.

தான் உண்மையாகவே, பாவம் தவிர, மற்ற எல்லா விதமான பலவீனங்களையும் உடைய

 முழு மனிதன் என்பதை நமக்கு காண்பிப்பதற்காகத்தான் இத்தகைய பயத்தை ஏற்றுக்கொண்டார்.

பயம் அவருடைய மனித சுபாவத்துக்கு இயல்பானது.

நாமும் துன்பங்களை கண்டு பயப்பட்டாலும், இறைவனுக்கு சித்தமானால் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நமக்கு செயல் மூலம்  போதிப்பதற்காகவே,

"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" 

என்றும் வேண்டினார்.

இங்கு ஒரு முக்கியமான இறையியல் உண்மையை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள், இருந்தாலும் அவர் ஒரே ஆள்தான், தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள், தேவ ஆள்.

ஆகவே அவர் தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுள்தான்.

மூன்று ஆட்களுக்கும் ஒரே சித்தம்தான்.

தந்தையின் சித்தமே மகனின் சித்தம்.

தந்தையின்   விருப்பமே மகனின் விருப்பம்.

"உமது விருப்பப்படி" என்றாலும்  "எனது விருப்பப்படி" என்றாலும் ஒன்றுதான்.

இந்த செபம் அவர் தானாகவே ஏற்றுக்கொண்ட மனித பலவீனத்தின் வெளிப்பாடு.

 தான் உண்மையிலேயே மனிதன் என்ற இறையியல் உண்மையை நமக்கு வெளிப்படுத்துவதற்காக அவராகவே ஏற்றுக்கொண்ட மனித பலவீனத்தின் வெளிப்பாடு.

 பலவீனம் உள்ள மனிதன் செய்த பாவத்திற்கு பலவீனம் உள்ள மனிதன் தானே பரிகாரம் செய்ய வேண்டும்!

அதற்காகவே அவராகவே ஏற்றுக் கொண்ட மனித பலவீனத்தின் வெளிப்பாடு.

எப்படி மனித வலியையும், வேதனையையும், மரணத்தையும் ஏற்றுக் கொண்டாரோ,

 அதே போல் தான் மனித பயத்தையும்
 ஏற்றுக் கொண்டார். 

இது அவர் நம்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு.

இயேசுவின் ஒவ்வொரு செயலும், சொல்லும் நமக்கு ஒரு நற்செய்தியை போதிப்பதாகத்தான் இருக்கும்.

இந்த செபத்திலிருந்து நாம் அறியவேண்டிய நற்செய்தி:

1. சர்வவல்லவராகிய கடவுள் 
நம் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக நம்மை அவர் நிலைக்கு உயர்த்துவதற்காக நம் நிலைக்கு இறங்கி வந்து

பாவம் தவிர

 நமது மற்ற பலவீனங்களை எல்லாம் தனது பலவீனங்களாகவே ஏற்றுக்கொண்டார்.

2. நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் நாம் இறைவனது சித்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு போதிப்பதற்காக தான்

அவர் "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" 

எந்து ஜெபித்தார்.

3. நமது பலவீனங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும் என்பதை நமக்கு காண்பிப்பதற்காகத்தான்

 நமது பலவீனத்தை தன் பலவீனமாக ஏற்றுக் கொண்டார்.

நமது பலவீனங்களை அவர் அறிவதால்தான் நம் மீது அளவற்ற இரக்கம் கொண்டுள்ளார்.

4."கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.


ஆனால், தம்மையே வெறுமையாக்கி,

 அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். 

மனித உருவில் தோன்றி,
தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, 

அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."
(பிலிப்.2:6,7,8)

என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகள் நம் மட்டில் இறைவன் கொண்டுள்ள மட்டில்லா அன்பை உணர்த்தும்.

மாம்பழத்தை சாப்பிட்டால் அதன் இனிப்பு ருசியை சுவைத்து தான் ஆகவேண்டும்.

பாகற்காயைச் சாப்பிட்டால் அதன் கசப்பு ருசியை சுவைத்து தான் ஆகவேண்டும்.

மிளகாயைச் சாப்பிட்டால் அதன் உறைப்பு ருசியை சுவைத்து தான் ஆகவேண்டும்.

கடவுளை ஏற்றுக் கொண்டால் அவரது சித்தத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளும் ஒருவன் அவரது சித்தத்தை ஏற்று நிறைவேற்றாவிட்டால் கடவுள் இருக்கிறார் என்று ஏற்று என்ன பயன்?

ஆகவே,

"இறைவா, என் சித்தம் அல்ல,

 உமது சித்தமே என்னில் நிறைவேறட்டும்."

 என்ற சிறு செபமே நமது ஒரே செபமாக இருக்கட்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, March 30, 2021

பாதாளம் நோக்கி ஒரு பவனி.

‌பாதாளம் நோக்கி ஒரு பவனி.


"அண்ணே! இன்று புனித வெள்ளி தானே!"

",ஆமா, அதிலென்ன சந்தேகம்?"

"ஆண்டவர் சிலுவையில் மரித்த நாள் தானே!"

",அதிலென்ன சந்தேகம்?"‌

"அப்படியானால் நமக்கு இது துக்கப் பண்டிகை தானே!"

",ஆமாப்பா ஆமா. ஒரே விஷயத்தை எதற்காக திரும்பத் திரும்ப கேட்கிறாய்?

உனக்கு என்ன வந்தது?"

"நாம் இங்கே நமது துக்கத்தைக் காட்டும் வகையில் 

ஒருசந்தியிலிருந்து, 

சுத்த போசனம் அனுசரித்து,

 சிலுவைப் பாதையில் ஆண்டவரது பாடுகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அதோ பாருங்கள். விண்ணில் ஒரு மகிழ்ச்சிகரமான பவனி!

இவ்வளவு மகிழ்ச்சிகரமான பவனியை என் வாழ்நாளில் ஒரு போதும் பார்த்ததில்லை,

கற்பனையில் கூட பார்த்தது இல்லை."

", கோடிக்கணக்கான சம்மனசுக்கள்
மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு முன்னால் செல்ல,

கடைசியில் மிக்கேல் அதிதூதரோடு ஆண்டவர்!

ஒரு பெரிய போரில் வெற்றி அடைந்த மகிழ்ச்சி மிக்கேல் அதிதூதருக்கு! 

ஆண்டவருடைய முகத்தைப்பார்!
அளவுகடந்த மகிழ்ச்சியால் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது!"

"பவனி பாதாளத்தை நோக்கிப் போவதுபோல் தெரிகிறது. வாருங்கள் நாமும் பின் தொடர்வோம்" 

", அதோ பார். லூசிபெர் தலைமையில் ஒரு கூட்டம் ஆண்டவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.."

"லூசிபெருடைய கையில் ஏதோ இருக்கிறது! பத்திரம் மாதிரி தெரிகிறது.

கூர்ந்து பாருங்கள். என்ன செய்கிறான் என்று பார்ப்போம்."

", லூசிபெர் கூனிக் குறுகி நின்று கொண்டு கையில் வைத்திருப்பதை மிக்கேல் அதிதூதரிடம் கொடுக்கிறான். 

அவர் அதை வாங்கி ஆண்டவரிடம் கொடுக்கிறார்.

இப்போது பார், லூசிபெரையும் அவன் .கூட்டத்தையும் காணவில்லை.

லூசிபெர் கொடுத்தது என்னவாக இருக்கும்?"
.
"நமது முதல் பெற்றோர் பாவம் செய்த போது அவன் கையில் விழுந்த மனுக்குலத்தை 

ஆண்டவர் அவன் கையிலிருந்து மீட்டதற்கான அடையாளமாக இருக்கும்."

",அப்படித்தான் இருக்கும். இதோ பார். பவனி தொடர்கிறது."

"ஆண்டவர் பவனியாக எங்கே போகிறார்?"

",ஆண்டவர் தன் இரத்தத்தையும், உயிரையும் விலையாகக் கொடுத்து மனுக்குலத்தை சாத்தானின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டிருக்கிறார்.

மீட்புக்காக பாதாளத்தில் காத்துக் கொண்டிருக்கும் பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களை மோட்சத்திற்கு அழைத்துவர வானவர் படை சூழ மகிமையின் ஆண்டவர் செல்கிறார்!

நமக்கு உலகில் ஆண்டவர் மரித்த துக்க தினம்.

ஆனால் பாதாளத்தில் இன்று மகிழ்ச்சி தினம்.

அதோ பார். பழைய ஏற்பாட்டு ஆன்மாக்கள் மீட்பரின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ விண்ணவர் பவனி அவர்களை நெருங்கிவிட்டது.

எல்லா ஆன்மாக்களும் மீட்பரின் வருகையைக் கண்டு மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கிறார்கள்.

சம்மனசுக்களின் மகிழ்ச்சிக் கீதம் விண்ணைப் பிளக்கிறது!

ஆண்டவர் எல்லா ஆன்மாக்களையும் இருகரம் விரித்து வரவேற்கிறார்."

"முதலில் வருவது யாராக இருக்கும்?"

",ஆபேலாக இருக்கும். அவன்தானே எல்லாரையும் விட அதிகமான காலம் காத்துக் கொண்டிருக்கிறவன்!

மனுக்குலத்திலேயே முதலில் இறந்தவன் அவன்தானே!

எல்லா ஆன்மாக்களும் வந்து விட்டார்கள்.

அதோ பார். ஒருவர் ஆண்டவரைத் தழுவி முத்தமழை பொழிகிறார்!"

"சூசையப்பர்! தான் வளர்த்த மகனின் மடியிலேயே உயிரை விட்டவர்!

அந்த மகனாலேயே மீட்கப்பட்டவர்!

அவர் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!"

"இருக்காதா பின்னே.

தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இயேசுவை வளர்ப்பதற்காகவே அர்ப்பணித்தவர் ஆயிற்றே!" 

பவனி திரும்புகிறது.

பாதாளத்திலிருந்து பவனி விண்ணகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 மீட்கப்பட்ட அனைத்து ஆன்மாக்களும் வானவர்களோடு மகிழ்ச்சி கீதத்தில் கலந்து கொள்கிறார்கள்!


"அதோ பாருங்கள், விண்ணக வாயில் திறந்துவிட்டது.

பவனி மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறது.

அங்கே பார், தந்தை இறைவனின் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!

இயேசு நேராக தந்தையிடம் செல்கிறார்.

லூசிபெரிடமிருந்து பெற்ற மீட்புப் பத்திரத்தை தந்தையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்.

தந்தை மகனை அரவணைத்துக் கொள்கிறார்.

உள்ளே நுழைந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப் படுகின்றார்கள்!

இனி அவர்களுக்கு என்ன கவலை?

நித்திய காலமும் ஆண்டவரோடு தான்!"

", ஹலோ, தம்பி, எழுந்திரு. இன்னுமா தூக்கம்!!"

"அண்ணே, காட்சி எப்படி?"

",என்னடா காட்சி எப்படி? கனவு கினவு கண்டியா?"

"கனவா? இருவரும் சேர்ந்துதான் அண்ணே பார்த்தோம், விண்ணவர் பவனியை!"

",என்னது? விண்ணவர் பவனியையா?"

"ஆண்டவர் இறந்தவுடனே

 பாதாளத்திற்குச் சென்று

 அங்கு அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களை அழைத்துக்கொண்டு

 பவனியாக விண்ணகம் சென்ற காட்சியை இருவரும் சேர்ந்து தானே பார்த்தோம்!"

",கோவிலில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது.

 எழுந்தவுடன் கோவிலுக்கு வா என்று சொல்லிவிட்டுத்தானே நான் சென்றேன்.

 நீ வருவாய் வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

 இங்கு காட்சி கண்டு கொண்டு இருக்கிறாய்!

சரி, எழுந்து புறப்படு. கோவிலுக்குப் போவோம்."

"அண்ணே, நாம் எப்போது   விண்ணகத்திற்குப்  பவனியாகப் போவோம்?"

", விண்ணகத்திற்குப் போக ஆசையாக இருக்கிறதா?''

"ஆமாண்ணே!" 

"நமக்கு சிலுவைப் பாதைதான் விண்ணகத்திற்கு ஒரே வழி!"

"சிலுவைப் பாதையின் இறுதியில் ஆண்டவர் மரணம் அடைந்து விடுவாரே! நானும் அதேபோல் மரணம் அடைய வேண்டுமா?"

",ஆண்டவர் தனது சிலுவை மரணத்தின் மூலம் மரணத்தையும்,  அதற்கான பயத்தையும் வென்று விட்டாரே!"

"எப்படி?"

", மரணத்தை விண்ணகத்தின் நுழைவு வாசலாக மாற்றி விட்டாரே!"

"இப்போதுதான் புரிகிறது கெத்சமனி தோட்டத்தில் ஏன் சிலுவை மரணத்தை நினைத்து பயப்பட்டார் என்று.

அந்த பயத்தையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தந்தைக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டார்!

இனி மரணத்தை நினைத்து பயப்பட 
மாட்டேன்!

விசுவாசப் பிரமாணத்தில் வருகின்ற 'பாதாளங்கங்களில் இறங்கி' என்ற சொற்றொடரைத் தியானிக்கும் போது தான் பவனி காட்சியை கண்டேன்.

இனி துணிந்து ஆண்டவரின்
 மரணத்தைப் பற்றி தியானிப்பேன்!

வாருங்கள், போவோம் சிலுவைப் பாதைக்கு!

லூர்து செல்வம்.

பெரிய வியாழன்.

        பெரிய வியாழன்.


"அண்ணே! ஒரு சின்ன சந்தேகம்."

"ஏண்டா, உனக்கு பெரிய சந்தேகமே வராதா?"

"வருமே. பெரிய சந்தேகமாக கேட்கட்டுமா?"

"கேள், கேள். பதில் தெரிந்தால் சொல்லப்போகிறேன், தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்ல போகிறேன். நீ கேளு."

"புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமையை
 ஏன் பெரிய வியாழன் என்று சொல்கிறோம்?"‍‍‍‍

"ஏன் இந்த வாரத்தை புனித வாரம் என்று சொல்கிறோமோ அதே காரணத்திற்காகத்தான்.

 வருடத்தின் எல்லாம் வாரங்களும் புனிதமானவைதான்.

 ஆனாலும் இந்த வாரத்தை மற்ற வாரங்களிலிருந்து பிரித்துக் காட்டவே அவ்வாறு சொல்கிறோம்.

கிறிஸ்துவின் வாழ்வு உச்சகட்ட (Climax) நிகழ்வுகளான 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்துதல்,

அப்போஸ்தலர்களுக்கு குருப்பட்டம் கொடுத்தல்,

இறைவனே மனிதர்களின் பாதங்களைக் கழுவுதல்,

கிறிஸ்துவின் பாடுகள்,

மரணம்,

உயிர்ப்பு

ஆகியவை சார்ந்த விழாக்கள் இந்த வாரம் வருவதால் இதை புனித வாரம் என்கிறோம்.

இந்த வியாழன் இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்திய நாளாக
 இருப்பதாலும்,

 அப்போஸ்தலர்களுக்கு குருப் பட்டம் கொடுத்த நாளாக இருப்பதாலும்

 ஆண்டின் மற்ற வியாழக்கிழமைகளிலிருந்து இதை  பிரித்துக் காட்ட பெரிய வியாழன் என்கிறோம்''

"இயேசு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அப்போஸ்தலர்களுக்கு குருப்பட்டம் கொடுத்தார்?"

''இயேசு "இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல்."

என்ற வார்த்தைகளின் மூலம் அப்பத்தை அவரது உடலாக மாற்றினார்.

'இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."

என்ற வார்த்தைகளின் மூலம் திராட்சை ரசத்தை அவரது இரத்தமாக மாற்றினார்.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் " 

என்ற வார்த்தைகள் மூலம் அதே அதிகாரத்தை தனது அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தார்."

"நினைவாகத்தானே செய்யச் சொன்னார்.

அப்பமும் இரசமும் என் உடலாகவும் இரத்தமாகவும் மாறும் என்று சொல்லவில்லையே என்று சில பிரிந்த சகோதரர்கள் கூறுகிறார்கள்.

அவர்களுக்கு திவ்ய நற்கருணையில் நம்பிக்கை இல்லை.''
 

", இயேசு சொன்னது என்னிடமோ உன்னிடமும் அல்ல.

அப்போஸ்தலர்களிடம். அவர்கள் இயேசு சொன்னதை எப்படி புரிந்து கொண்டார்களோ அதுதான் உண்மையான புரிதல்.

இயேசு சொன்ன அதே வசீகர வார்த்தைகளை பயன்படுத்திதான் அப்போஸ்தலர்கள் திவ்ய பலி பூசை நிறைவேற்றினார்கள்.

திவ்ய பலி பூசைக்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை "அப்பம் பிட்குதல்."

நமது திருச்சபை அப்போஸ்தலிக்க திருச்சபை.

அதாவது அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் திருச்சபை.

இயேசு எந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அப்பத்தைத் தன் உடலாகவும் ரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றினாரோ

அதே வார்த்தைகளைப் பயன்படுத்திதான் அப்போஸ்தலர்களும், அவர்கள் வழிவந்த குருக்களும் 

அதே நிகழ்வை நிகழ்த்துகிறார்கள்.

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்:"
(அரு.13:20)

அப்போஸ்தலர்கள் செய்வதை ஏற்றுக் கொள்பவர்கள் இயேசுவையே ஏற்றுக்கொள்கிறார்கள்.

 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்,"
(மாற்று.16:15,16)

திருப்பலியை பற்றி அப்போஸ்தலர்கள் நமக்கு தந்ததும் நற்செய்திதான். அதை விசுவசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

விசுவசிக்க மனது இல்லாதவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்கு இஷ்டம்போல் பொருள் கொடுத்து தங்கள் இஷ்டம் போல் வாழ்வார்கள்.

அப்போஸ்தலர்களின் வழி வந்த நற்செய்தியை விசுவசிப்பவர்கள் இயேசுவையே விசுவசிக்கிறார்கள்."

" புரிகிறது."

", என்ன புரிகிறது?"

"திருப்பலியின் போது அப்பமும் ரகமும் உண்மையாகவே இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன."


", இயேசு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தியதன் முக்கியமான நோக்கம் தனது உடலையும் இரத்தத்தையும் நமக்கு ஆன்மீக உணவாக தருவதற்காகத்தான்.

திரு விருந்தின்போது நாம் உண்மையிலேயே இயேசுவின் உடலையும் இரத்தத்தையும்
உண்கிறோம்.

அதாவது இயேசுவையே உண்கிறோம்."

"எதற்காக இயேசு அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவினார்?"

",அப்போஸ்தலர்களுக்குத் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தைப் போதிப்பதற்காக.

செயல் மூலம் போதித்தார்.

தாழ்ச்சி உள்ளவர்கள்தான் மற்றவர்களுக்கு சேவை செய்வார்கள்.

மற்றவர்களுக்கு சேவை செய்பவர்கள் இறைவனுக்கே சேவை செய்கிறார்கள். ‌‌"

"இயேசுவையே உணவாக உண்டு அவருக்கும், அவர் பெயரால் அவரால் படைக்கப்பட்ட அனைவருக்கும் சேவை செய்வோம்."

லூர்து செல்வம்

Sunday, March 28, 2021

இவர்களுக்குமா பாராட்டுக்கள்?

இவர்களுக்குமா பாராட்டுக்கள்?


1.சாத்தான்:
இறைமகன் மனுவுரு எடுத்து நம்மோடு தங்க முதல் முதல் உதவி செய்தவன் சாத்தான் தான்.

அவன் ஏவாளைச் சோதித்திருக்காவிட்டால் இறைமகன் மனிதனாக வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

இயேசுவை யூதர்களிடம் காட்டிக் கொடுக்கும் வழி யூதாஸைத் தூண்டியவனே அவன்தான்.

அவன் ஒரு முட்டாள். அறிவிலி.

மனிதர் மீட்புப் பெறுவதையோ விண்ணகம் செல்வதையோ விரும்பாதவன் அவன்.

இயேசு மனிதர் மீட்பு பெறுவதற்காகவும்,

 அவர்களை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவும்தான் சிலுவையில் பலியானார்.

உண்மையிலேயே அவனுக்கு மூளை இருந்திருந்தால் இயேசுவின் நோக்கம் அவனுக்கு புரிந்திருக்கும்.

புரிந்திருந்தால் அவரை கொல்லும்படி யூத மதகுருக்களை ஏவி இருக்கவும் மாட்டான். 

அவரைக் காட்டிக்கொடுக்கும்படி யூதாசை தூண்டியிருக்கவும் மாட்டான்.

இயேசுவைக் கொன்று நமக்கு மீட்பு பெற்றுத்தந்த சாத்தானின் முட்டாள் தனத்திற்கு பாராட்டுக்கள்!

 

2.யூதாஸ்: உண்மையிலேயே இயேசுவை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் யூதாசுக்கு இல்லை.

இருந்திருந்தால் அவருக்குதீர்ப்பு கிடைத்தவுடன் சந்தோஷப்பட்டிருப்பான்.

ஆனால் அவன் மாசில்லாத இரத்தத்தை காட்டிக் கொடுத்ததற்காக மனம் வருந்தினான்.

முப்பது வெள்ளிக் காசை வீசி எறிந்தான்.

நான்டுகொண்டு செத்தான்.

 ஏழ்மையின் அரசரைக் காட்டிக்கொடுத்து நாம் மீட்புப் பெற உதவிய யூதாசின் பண ஆசைக்கு பாராட்டுக்கள்!

3: இயேசு பொதுவாழ்வில் நுழைந்ததிலிருந்து இயேசு நமக்காக சிலுவையில் பலியாக காத்துக் கொண்டிருந்தவர்கள் யூதமத குருக்கள்.

இயேசு பலியாக காத்துக் கொண்டிருந்தார்.

யூதமத குருக்கள் அவரை ஒழிக்க என்று நினைத்துக்கொண்டு பலியாக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் மீது அவர்களுக்கு இருந்த பொறாமைதான் அதற்கு காரணம்.
அவர்களுடைய பொறாமைக்கும் நமது பாராட்டுக்கள்!

4. வேத சாட்சிகளின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பார்கள்.

ஆதித் திருச்சபையின் கிறிஸ்தவர்கள் சிந்திய இரத்தம்தான் உலகில் திருச்சபை வேகமாக வளர உதவியது.

அவர்களது ரத்தத்தைச் சிந்தி திருச்சபை வளர உதவிய ரோமையை ஆண்ட கொடுங்கோலர்களுக்கு நமது பாராட்டுக்கள்!

5.நமது இன்றைய எதிரிகள்:

"உங்கள் எதிரிகளை நேசியுங்கள். உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்."

 என்ற இயேசுவின் அறிவுரையை பின்பற்ற நமக்கு உதவுபவர்கள் நம்மைப் பகைப்பவர்கள்தான்.

நம்மை அழிக்க நினைப்பவர்கள் நிலைவாழ்வு பெற அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை.

நம்மை அதாவது கிறிஸ்தவத்தை அழித்தே தீருவோம் என்ற உறுதியோடு ஒரு கும்பல் நாட்டில் உலவிக் கொண்டிருக்கிறது.

 அவர்கள் நமக்கு இரண்டு விதத்தில் உதவி செய்கிறார்கள்.

 முதலாவது நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மால் வாழ முடியும் என்ற உண்மையை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

 இரண்டாவது அவர்களுக்காக நாம் கடவுளிடம் மன்றாட வேண்டும் என்ற ஆசையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பகைவர்களை நேசியுங்கள் என்ற கிறிஸ்தவின் ஆசையை நிறைவேற்ற நமக்கு உதவிக் கொண்டிருக்கும் 
அவர்களுக்கும் பாராட்டுக்கள்!


ஒவ்வொருவரும் அவரவர் கடந்த கால வாழ்வில் நடந்த அவர்களுக்கு பிடிக்காத நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தால் இன்று அவற்றிற்காக இறைவனுக்கு நன்றி கூறத் தோன்றும்.

ஏனென்றால் ஒவ்வொரு வேண்டாத நிகழ்ச்சியும் நமக்கு ஏதாவது ஒரு நன்மையை விளைவிக்கத் தான் நடந்திருக்கும்.

எனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

அப்பொழுது ஆவுடையானூர் R.C நடுநிலைப்பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.

P.U.C தேர்வு எழுத D.E.O வின் அனுமதியைப் பெற வேண்டும்.

எனது தலைமை ஆசிரியரும் அதே முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதற்காக விண்ணப்ப படிவத்தில் நாங்கள் இருவரும் தென்காசி உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் கையெழுத்து பெற்று விட்டு

 அங்கிருந்து D.E.O வின் கையெழுத்தைப் பெற திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்தில் ஏறுவதற்காக 

தென்காசி பேருந்து நிலையத்தில் Exit gate வழியே உள்ளே நுழைகிறோம்.

நாங்கள் நுழைந்து கொண்டு இருக்கும்போது திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து நகர்ந்து Exit gateக்கு வந்துவிட்டது.

அதை நிறுத்துவதற்காக இருவருமே கை அசைத்தோம்.

'ஆனால் அது நில்லாமலே போய் விட்டது.

"பார்த்தீங்களா, சார், driver கொழுப்ப?  

இருவரும் கை அசைத்தும் நிறுத்தாமல் போகிறான்."


"போகட்டும் போகட்டும். என்ன அவசரமோ? 

அடுத்த பேருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில்."

ஒரு மணி நேரம் காத்திருந்து அடுத்த பேருந்தில் ஏறி பயணிக்கிறோம்.

ஆலங்குளத்தைத் தாண்டி சென்றபோது நாங்கள் கண்ட காட்சி எங்களுக்கு அதிர்ச்சியளித்தது.

எங்களை விட்டு விட்டு போன பேருந்து புளியமரம் ஒன்றில் மோதி Accident ஆகி நின்றது.

Driver sideல ஒரு ஆறு பேருக்கு கால் கை முறிவு.

சிலருக்கு காயம்.

அவர்கள் மருத்துவமனையில்.

"பார்த்தீங்களா, சார், driverக்கு கொழுப்பு இல்லை சார்.

நம்மை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பேருந்தில் ஏற்றாமல் விட்டுவிட்டு வந்து இருக்கிறான். கடவுளுக்கு நன்றி கூறுவோம்."

"நம்மை ஏற்றாமல் வந்தவனுக்கும் நன்றி கூறுவோம்."


எங்களுக்கு அடுத்த வீட்டில் டாக்டர் ஒருவர் இருந்தார். ஒரு சகாய மாதா பக்தர். எனது நண்பர். தாமஸ் ஜான்
அவர் பெயர்.

"Good evening, Doctor."

"Good evening. உட்காருங்கள்."

"மாதா படத்தை சட்டைப்பையில் தான் வைத்திருப்பீர்கள். இப்பொழுது கையில் வைத்து இருக்கிறீர்கள்?"

"அம்மாவுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறேன்."

"என்ன விசயம்?"

"இன்று காலையில் எனக்கு விருப்பம் இல்லாத செயல் ஒன்றை நடத்தி என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஒரு பத்து மணி அளவில் சுரண்டையிலிருந்து பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன்.

 பின்னால் வழக்கம்போல வாசலுக்கு எதிர்த்த இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

வழியில் ஒரு ஆள் பஸ்ஸில் ஏறினார்.

"டாக்டர், கொஞ்சம் எழுந்து முன்னால் வந்து உட்கார முடியுமா?"

"ஏன்? நான்தான் ஏற்கனவே உட்கார்ந்திருக்கிறேனே?"

"நீங்கள் எந்த ஊருக்கு போகவேண்டும்?"

"இது தேவையற்ற கேள்வி. நான் எந்த ஊருக்குப் போனால் உங்களுக்கு என்ன?''

".பரவாயில்லை. கொஞ்சம் முன்னால் வாருங்கள். உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்."

எனக்கு கோபம் வந்தது. எழக்கூடாது என்று எண்ணினேன்.

ஆனாலும் ஏதோ ஒரு எண்ணம் எழு என்றது.

எழுந்து முன்னால் போய் அவருடனே உட்கார்ந்துவிட்டேன்.

குருங்காவனத்தைத் தாண்டி பஸ் வந்து கொண்டிருந்தது.

Driver கட்டுப்பாட்டையும் மீறி பஸ் இடது பக்கம் சாய்ந்து விட்டது. 

நான் ஆட்களோடு ஆளாக உள்ளே மாட்டிக் கொண்டேன்.

வாசல் தரைப்பக்கம். அதன் வழியே வெளியேற முடியாது.

பஸ்ஸில் முன்புற பின்புற கண்ணாடிகளை உடைத்து எங்களை ஒவ்வொருவராக வெளியே எடுத்தார்கள்.

ஒரு சில சிராய்ப்புகள் தான். வேறு பெரிய காயம் ஒன்றும் ஏற்படவில்லை. மாதா அதிசயமான விதமாய் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள்."

"எப்படி?"

"நான் முதலில் இருந்த இருக்கை வாசல் பக்கம்.

என்னை முன்னால் அழைத்திருக்காவிட்டால் பஸ் சாயும்போது முதலில் வெளியே விழுந்திருப்பேன்.


என் மேலே பஸ் விழுந்திருக்கும் நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது."

"அப்புறம்?''

என் பையில் எப்போதும் மாதா படம் இருக்கும்.

இன்றும் இருந்தது.

மாதா தான் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்.

மாதாவுக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறேன்."

"உங்களை முன்னால் அழைத்த ஆளுக்கு நன்றி கூறினீர்களா?"

"கூறாமல் இருந்திருப்பேனா?

என்னை காப்பாற்ற மாதா அவரைத் தானே பயன்படுத்தி இருக்கிறார்!"

"கடவுளுடைய வழிமுறைகள் அதிசயமானவை."

ஒவ்வொருவர் வாழ்விலும் இதேமாதிரி சிறுசிறு நிகழ்வுகள் நடந்திருக்கும்.

அவற்றை நினைத்துப் பார்த்து இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்

Saturday, March 27, 2021

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்"(அரு.17:21)

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்"
(அரு.17:21)


இயேசு தன்னையே தன் தந்தைக்கு தன் சிலுவைப் பலி வழியாக ஒப்புக்கொடுத்ததற்கு முந்திய நாள் அவர் தந்தையிடம் செபித்த செபம்:

"நம்மைப் போல நமது பிள்ளைகளும் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்."

நமது ஒற்றுமைதான் நாம் நம்மை படைத்த பரிசுத்த தமதிரித்துவத்தின் சாயல் என்பதற்கான வெளியரங்க அடையாளம்.

நமது முதல் பெற்றோர் எப்போது ஒற்றுமையாக இருக்க வேண்டுமோ அப்போது ஒற்றுமையாக இல்லை.

 பாவம் செய்வதில் ஒற்றுமையாக இருந்தார்கள்.

ஆனால் செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல்  ஒற்றுமையை மறந்து ஒருவர் மேல் ஒருவர் பழியைப் போட்டார்கள்.‌ 

நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் விரும்புகிறார்?

தந்தை மகனுள்ளும், மகன் தந்தையுள்ளும் இருப்பது போல்
நாமும் ஒன்றாய் இருக்க வேண்டும்.

தந்தையும் மகனும் ஒரே கடவுள்.

நம் ஒவ்வொருவருள்ளும் ஒரே விசுவாசம் இருப்பதால் நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் ஒரே இனம். கிறிஸ்தவ இனம்.

கிறிஸ்தவர்கள் ஒரே விசுவாசத்தின் அடிப்படையில் சிந்தித்து, பேசி, செயல்பட்டால் எல்லோரிடமும் ஒற்றுமை உணர்வு இருக்கும்.

சிந்தனை, சொல், செயலில் மாறுபட்டால் அது ஒற்றுமையையும் பாதிக்கும்.

ஒரு சிறிய ஒப்புமை: (Analogy)

உறுப்புக்கள் பல, உடல் ஒன்று.

உடல் தெருவழியே நடந்து போய்க்கொண்டிருக்கிறது.

கண்கள் பார்க்கின்றன,
 காதுகள் கேட்கின்றன,
 மூக்கு நுகர்கிறது,
கால்கள் நடக்கின்றன,
உடல் போய்க்கொண்டிருக்கிறது.

ஒரு பத்தடி தூரத்தில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது.

அதை கண்கள் பார்க்கின்றன.

அதை எடுக்க கைகளுக்கு உத்தரவு கொடுக்கின்றன.

கைகள் கால்களை நோட்டை நோக்கி நடக்க சொல்கின்றன.

கால்கள் கீழ்ப்படியப் போகும் வினாடியில் கண்கள் எதிரே 50 அடி தூரத்தில் ஒரு புலி வருவதை பார்க்கின்றன.

மூளை சொல்கிறது,
"ஐநூறு ரூபாய் நோட்டு முக்கியமல்ல. புலியிடமிருந்து தப்பிப்பதே முக்கியம்."

இப்போது கால்களும் கைகளும் என்ன செய்ய வேண்டும்?

ரூபாய் நோட்டை எடுக்கும் முயற்சியில் உடல் புலிக்குப் பலியாக வேண்டுமா?

அல்லது ரூபாய் நோட்டை தியாகம் செய்துவிட்டு தப்பித்து ஓட வேண்டுமா?

மூளை சொல்வதைக் கேட்டால் உடல் தப்பித்து ஓடும். உறுப்புக்கள் ஒற்றுமையாக இருக்கும்.

உறுப்புகளிடம் ஒற்றுமை இல்லாவிட்டால் உடல் புலிக்கு உணவாகும்.

எதற்காக இந்த ஒப்புமை?

இதேபோன்று ஒரு இக்கட்டான சூழ்நிலை தமிழ்நாட்டு கிறிஸ்தவ இனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 6, தமிழ் நாடு சட்ட மன்றத்
தேர்தல்.


கிறிஸ்தவ சமயத்தை அழித்தே தீருவோம் என்று கூக்குரல் இடும் ஒரு கும்பல் புலிபோல் தமிழ்நாட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

"நாம் எல்லோரும் தமிழர்கள். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்." என்று ஒரு கட்சி களம் இறங்கியிருக்கிறது.

இப்பொழுது கேள்வி:

நாம் கிறிஸ்தவத்தை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள புலியிடமிருந்து தப்பிக்க வேண்டுமா?

அல்லது "நாம் தமிழர்" என்பதை நிரூபிக்கும் முயற்சியில் புலியிடம் அகப்பட்டு சாக வேண்டுமா?

இப்போது ஒரு கேள்வி எழும்.

நாம் முதலில் தமிழர்கள்,
 அடுத்து கிறிஸ்தவர்களா?

அல்லது

முதலில் கிறிஸ்தவர்கள், அடுத்து தமிழர்களா?

"சமயத்தால் கிறிஸ்தவன், மொழியால் தமிழன்,"

 என்று சொல்லி தப்பிக்கக் கூடாது.

முதலில் கிறிஸ்தவனா?
 தமிழனா?

நம்மை படைத்தவர் கடவுள்.

நம்மைக் கடவுள் படைத்தது தமிழ்நாட்டில்.

கடவுளால் படைக்கப்பட்டதால் நாம் கடவுளின் பிள்ளைகள்.

தமிழ்நாட்டில் படைக்கப்பட்டதால் தமிழர்கள்.

அவர் நம்மை இங்கிலாந்தில் படைத்திருந்தால் ஆங்கிலேயராக இருந்திருப்போம்.

நாம் எந்த நாட்டவர் என்று தீர்மானிப்பது நாம் அல்ல,
 கடவுள் தான்.

நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் விண்ணகத்தில் கடவுளோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வது,

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

நாம் புறப்பட்ட இடமும் போய் சேர வேண்டிய இடமும் கடவுள் மட்டுமே.

பயணிக்க வேண்டிய இடம் மட்டும் தான் தமிழ்நாடு.

நாம் முதலில் தேட வேண்டியது விண்ணக சாம்ராஜ்யத்தை. மண்ணக சாம்ராஜ்யத்தை அல்ல.

நம்மைப் படைத்தவரின் கண்ணோக்கில் நாம் முதலில் கிறிஸ்தவர்கள்,
அப்புறம்தான் தமிழர்கள்.

இது ஆன்மீக கண்ணோக்கு.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?"
(மத்.16:26)

இயேசுவின் கண்ணோக்கில் எது முக்கியம் என்று நமக்குத் தெரியும்.

இந்த அடிப்படையில் வரவிருக்கும் தமிழ்நாட்டு தேர்தலை கிறிஸ்தவர்கள் கணிக்கும்போது 

யார் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட 

யார் ஜெயிக்க கூடாது என்பதுதான் முக்கியம்.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி ஜெயித்து விடக்கூடாது.

அது ஜெயித்துவிட்டால் கிறிஸ்தவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

ஒரே நாடு, ஒரே மதம் அடிப்படையில் கிறிஸ்தவத்தை முற்றிலும் அழிப்பதுதான் அவர்களது நோக்கம்.

அது ஜெயிக்க கூடாது என்றால் அதற்கு நேர் எதிராக இருக்கும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

நமது கிறிஸ்தவ ஓட்டுக்கள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மட்டுமே போடப்படவேண்டும் என்று தமிழ்நாடு ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

வேறு எந்த கட்சிக்கு நாம் ஓட்டு போட்டாலும் நமது ஓட்டுக்கள் சிதறுவதால் ஜெயிக்க கூடாத கூட்டணி ஜெயித்து விட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

ஆயர் பேரவையின் ஆலோசனைப் படி நடக்க வேண்டியது அவர்களின் வழிநடத்துதலின் கீழ் உள்ள கத்தோலிக்கர்களின் கடமை.

ஆனால் சில குருக்கள் திரு. சீமான் அவர்களின்‌ தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு கிறிஸ்தவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்கள்.

இது தலைமையை மீறிய அறிவுரை.

நாம் தமிழர் கட்சி நல்ல கட்சியா, கெட்ட கட்சியா என்பது அல்ல நமது பிரச்சனை.

அது நல்ல கட்சியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் அதற்கு நாம் வாக்களித்தால் நம்முடைய ஓட்டுக்கள் சிதறுவதால் 

ஜெயிக்கக்கூடாத கூட்டணி ஜெயித்துவிட நாம் காரணமாக இருந்து விடுவோம்.

நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டவர்கள் ஆவோம்.

இந்த சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒற்றுமை உள்ளவர்கள்,

 அவர்களுடைய ஆயர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள்,

 திருச்சபையின் கட்டளைகளை மதிப்பவர்கள் என்று உலகத்திற்கு உணர்த்துவதற்காக மட்டுமல்ல,

 எதிரிகளின் கையிலிருந்து கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்காக 

 எல்லா கிறிஸ்தவர்களும் ஒட்டுமொத்தமாக, ஒற்றுமையாக தமிழக ஆயர் பேரவையின் ஆலோசனைப்படி தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம்.

கிறிஸ்தவத்தை அழிக்கத் தேடுகிறவர்களின்‌ கையிலிருந்து
அதைப் பாதுகாப்போம்.

கத்தோலிக்க திருச்சபை நமது தாய்.

நமது தாயை எதிரிகளின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காக 

 தமிழக ஆயர் பேரவையின் ஆலோசனைப்படி தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம்.

லூர்து செல்வம்.

Friday, March 26, 2021

வாருங்கள், இறைமகனை இறைத்தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்.

வாருங்கள், 
இறைமகனை இறைத்தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்.



இயேசு சீடருள் இருவரை அழைத்து,

"எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழையும்போது இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று யாராவது உங்களைக் கேட்டால், அவரிடம், "இது ஆண்டவருக்குத் தேவை" என்று கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்

அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட்டு, இயேசுவை ஏறச் செய்தனர்.

அவர் செல்லும்போது வழியில் தங்கள் போர்வைகளை விரித்தனர்.

சீடர் கூட்டமும் 

மறுநாள் திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டமும் 

கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய், " தாங்கள் கண்ட புதுமைகள் அனைத்தையும்பற்றி மகிழ்ச்சியோடு, உரத்த குரலில்,

கழுதையின் மேல் அமர்ந்திருந்த இயேசுவை

கையில் குருத்தோலைகளுடன் புகழ்பாடி

"ஆண்டவர் பெயரால் அரசராக வருகிறவர் வாழி!

 வானகத்தில் அமைதியும் உன்னதங்களில் மகிமையும் உண்டாகுக!"  

 ஓசான்னா! 

ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! 
 
இஸ்ராயேலின் அரசர் வாழி! "

 என்று ஆர்ப்பரித்துச் சென்றனர். 

 ஆனால் இதை எதற்காக செய்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது.

இறைவனுக்கு பலி கொடுப்பதற்காக ஆடு வளர்ப்போர்
 
பலி கொடுக்கும் நாளில்
 அதை அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இன்னும் ஓரிரு நாட்களில் மக்களுக்காக பலியாகப்போகும் செம்மறி இயேசுதான். 

தான் பலியாக கொல்லப்பட போவதை பல முறை அவருடைய அப்போஸ்தலர்களுக்குச் சொல்லியிருந்தும் அவர்களால் அதைச் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.

மக்களும் இயேசு அவர்களுக்காக செய்த பல புதுமைகளை எண்ணியே அவரை புகழ்ந்து கொண்டு போனார்களே தவிர

 தங்களை பாவத்திலிருந்து மீட்க தன்னையே பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறார் என்ற உண்மையை அறியாதிருந்தார்கள்.

மற்ற நாட்களில் பரிசேயரும்
சதுசேயரும் அவரை கொல்வதற்காக அவரைச் சுற்றி சுற்றி வந்தபோது 

தனது நேரம் இன்னும் வரவில்லை என்பதற்காக அவர்களிடம் இயேசு அகப்படவே இல்லை.

ஆனால் இப்போது இயேசு தன்னையே அவர்களிடம் ஒப்படைக்கப் போகிறார்.

ஒப்படைப்பதற்காகத்தான் இந்த பலி ஊர்வலம்.

இந்த ஊர்வலத்தை இயேசு தானே ஏற்பாடு செய்து நடத்துகிறார்.

ஊர்வலத்திற்காக கழுதையைக் கொண்டுவரச் சொன்னவர் இயேசு தான்.

மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

அவரைப் பலியிடப் போகின்ற பரிசேயர்களுக்கும் 

அவரைப் பலியிடப் போகின்றோம்
என்ற உண்மை தெரியாது.

அவரை ஒழிக்கப் போவதாகத்தான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இயேசு தனது தந்தையிடம் கூறியதுபோல அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்தார்கள்.

ஒருவகையில் மீட்பு பணியில் அவர்கள் இயேசுவுக்கு உதவியிருக்கிறார்கள்.

எப்படி நமது முதல் பெற்றோரின் பாவம் கடவுளை மனித ஒரு எடுக்க உதவியதோ

அதேபோல இவர்கள் செய்த பாவம் மனிதகுலம் மீட்புப் பெற உதவியது.

அப்படி செய்ததால் அவர்கள் செய்தது புண்ணியம் ஆகிவிடாது, பாவமே.

ஆனால் தீமையில் இருந்தும் கடவுளால் நன்மையை வரவழைக்க முடியும் என்ற அவருடைய வல்லமையை இது காட்டுகிறது.

இன்றும்கூட இறைவன் உலகில் தீமையை அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்தியாவிலிருந்து கிறிஸ்தவத்தையே ஒழித்து விட வேண்டுமென்று ஒரு கும்பல் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது இன்றைய தீமை.

இயேசு நினைத்தால் தீமையை நடக்கவே விடாமல் தடுக்கவும் முடியும்,

 தீமை செய்தவர்களை அழிக்கவும் முடியும்.

ஆனாலும் நடைபெறும் தீமையை இயேசு மிகவும் பொறுமையாக 
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்றைய தீமையிலிருந்து அவர் என்ன நன்மையை வரவழைக்கப் போகிறார் என்பது நாம் விண்ணகம் சென்ற பிறகுதான் நமக்குத் தெரியும்.

குருத்தோலை பவனியைத் தியானிக்கும் போது நமக்கு மற்றொரு உண்மையும் புரியவரும்.

குருத்தோலை பவனியில் அவரைப் புகழ்ந்து பாடிச் சென்றவர்களில் ஒருவர்கூட 

பிலாத்து இயேசுவுக்கு மரணத் தீர்வையிட்ட இடத்தில் இருந்ததாக தெரியவில்லை.

பவனியின்போது
"இஸ்ராயேலின் அரசர் வாழி!"
என்று வாழ்த்தினார்கள்.

ஆனால் பிலாத்துவின் விசாரணையின்போது இருந்த
தலைமைக்குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்!'' என்று கத்தினர். 

அதை எதிர்த்து ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை.

இயேசுவை மறுதலிப்பதற்காக வாயைத் திறந்த இராயப்பர் கூட 

அவரைக் காப்பாற்றுவதற்காக வாயை திறக்கவே இல்லை.

அன்னை மரியாளுக்கு இயேசுவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது நன்கு தெரியும்.

தனது மீட்புத் திட்டத்தைப் பற்றி இயேசு தன் தாயிடம் கட்டாயம் கூறியிருப்பார்.

 மனுக்குலத்தின் மீட்பிற்காக அவள் தன் அன்பு மகனையே பலியாக ஒப்புக்கொடுத்தாள்.

மீட்புப் பணியில் தன் மகனோடு இணைந்து செயல் புரிந்தாள்.

அதற்காகத்தானே அவரைப் பத்து மாதம் சுமந்து, பெற்று, வளர்த்தாள்.

மீட்டவர் இயேசு மட்டும் தான், மரியாள் அல்ல.

 ஆனாலும் மீட்புப்பணியில் இறைவனின் அடிமையாக மரியாள் செயல்பட்டாள்.

இயேசுவின் காலத்தில் இயேசுவின்பால் நன்றியோடு வாழ்ந்தவர்கள் பாவிகள்.

குருத்தோலை பவனி அன்று அவரை புகழ்ந்தவர்கள் இயேசுவால் மன்னிக்கப்பட்ட பாவிகள்.

இயேசுவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று பெருமையோடு வாழ்ந்த 
பரிசேயரும், சதுசேயரும்.

நாம் யார் பக்கம்?

சிந்தித்துப் பார்ப்போம்.

நாம் அனைவரும் பாவிகள் என்று நமக்கு தெரியும்.

 நம்மை தேடித்தான் இறைமகன் மனுமகன் ஆனார் என்றும்

 நமக்காகத்தான் பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார் என்றும் நமக்கு தெரியும்.

அன்னை மரியாள் எப்படி தன் மகனின் மீட்புப் பணியில் அவருக்கு உதவிகரமாய் இருந்தாளோ 

அதேபோல் நாமும் இருக்க வேண்டுமென்று மரியாளும் மைந்தனும் எதிர்பார்க்கிறார்கள்.

நாமோ பாவிகள், நம்மால் எப்படி இயேசுவுக்கு உதவ முடியும்?

மரியாள் எவ்வாறு சிலுவைப் பாதையில் நடந்து, இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தபோது,  அவரைப் பரம தந்தைக்கு அகில உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தாளோ,

அதேபோல நாமும் நமது செபத்தின் மூலம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

"பரம தந்தையே,

எங்கள் பாவங்களுக்கு பரிகாரமாக தன்னையே சிலுவையில் பலியாக்கிய உமது அன்புத் திருமகன் இயேசு கிறிஸ்துவை 

நாங்கள் எங்கள் பாவங்களுக்கும் அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

அவர் தன்னையே ஒப்புக் கொடுத்தது போலவும்,

 அன்னை மரியாள் தன் அன்பு மகனை ஒப்புக் கொடுத்தது போலவும், 

ஒவ்வொரு நாளும் எங்கள் குருக்கள் திருப்பலியில் அவரை ஒப்புக் கொடுப்பது போலவும்,

 நாங்களும் எங்களால் இயன்ற வகையில் எங்களது செபத்தின் மூலம் உமது திருமகனை எங்களது பாவங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்."

நாம் சாதாரணமானவர்களாக இருக்கலாம்.

 ஆனால் நாம் ஒப்புக்கொடுக்கும் பலி சர்வ வல்லமையுள்ள இறைமகன் இயேசு,

இறை தந்தையின் ஏக குமாரன்.

ஒவ்வொரு முறை ஒப்புக்கொடுக்கும் போதும் இயேசு பட்ட பாடுகளின் பலன்கள் நம் மீதும் அகில உலகின் மீதும் இறங்கும்.

இயேசு தனது இரத்தத்தை எல்லாம் சிந்தி சம்பாதித்த பலன்களை எல்லாம் நாம் ரத்தம் சிந்தாமலேயே ஒரு நிமிட ஜெபத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அந்த ஒரு நிமிடமும் நம்மை நாமே சிலுவையில் தொங்கும் இயேசுவுடன் ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு முறை ஒப்புக்கொடுக்க ஒரு நிமிடமே ஆகும்.

ஒவ்வொரு நாளும் எப்பொழுதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பலியை ஒப்புக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


பாடுகளின் பலன்கள் நம்மீது மழைபோல் பெய்து கொண்டே இருக்கும்.

பலியாகத்தானே இறைமகன் மனுவுரு எடுத்தார்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நாமே அவரைத் தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுப்போம்.

அதோடு  நம்மையும் ஒப்புக் கொடுப்போம்.

நமது சிந்தனை, சொல், செயல் உட்பட நமது வாழ்க்கை முழுவதையும்  நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, March 25, 2021

பெரிய வெள்ளிக் கிழமை இல்லாவிட்டால், உயிர்ப்பு ஞாயிறு இல்லை.

பெரிய வெள்ளிக் கிழமை இல்லாவிட்டால், உயிர்ப்பு ஞாயிறு இல்லை.


""மனுமகன் பாடுகள் பல படவும்.

 மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு,

 கொலையுண்டு

 மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" 
(லூக். 9:22)


இறைமகன் மனிதனாகப் பிறந்ததே பாடுகள் படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாள் உயிர்க்கவும்

இதன் மூலம் மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்கவும்தான்.

நோக்கம்: மனித குல மீட்பு.
வழிமுறை : பாடுகள், மரணம், உயிர்ப்பு.

உயிர்ப்பு மகிமை என்றால்,
மரணம் மகிமைக்கான வழி.

"நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை."
(அரு.14:6)

நாம் மீட்பு அடைந்து விண்ணகத் தந்தை இடம் செல்ல வேண்டுமென்றால் இயேசு ஒருவரே வழி.

மீட்புப் பெற வேண்டுமென்றால், '

இயேசுவைப் போல பாடுகள் படவேண்டும்.

இயேசுவைப் போல மரணம் அடைய வேண்டும்.

இயேசுவைப் போல உயிர்க்க வேண்டும்.

ஆரம்ப பள்ளியில் வாய்ப்பாடு படிப்பது நமது மனப்பாட சக்தியை வளர்த்து கொள்வதற்காக அல்ல.

மேல் வகுப்புகளில் கணக்கு பயிலும்போது அவற்றை பயன்படுத்துவதற்காக தான் வாய்ப்பாடு படிக்கிறோம்.

கணக்கு செய்யும்போது அவற்றை பயன்படுத்தாவிட்டால் அவற்றைப்
படித்தும் பயனில்லை.

தினமும் பைபிள் வசனங்களை வாசிப்பது வாசிப்பு பயிற்சிக்காக அல்ல, வாழ்க்கையில் பயன்படுவதாக.

பைபிளில் நாம் வாசித்தது போல நமது வாழ்க்கையில் ஏதாவது நடைபெற்றது என்றால் அதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலையில் மூழ்கக் கூடாது.

இயேசு ஏழ்மையில் பிறந்தார்.

நமது வாழ்வில் ஏழ்மை இருந்தால் இயேசு தேர்ந்தெடுத்த வாழ்வு நமக்கும் கிடைத்திருக்கிறதே என்று நாம் பெருமைப்பட வேண்டும்.

இயேசு நற்செய்தி அறிவித்த பொது வாழ்வின் போது எல்லோரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாவிகளும் நோயுற்றவர்களும் அவரை ஏற்றுக்கொண்டார்கள். 

ஆனால் தங்களையே பரிசுத்தவான்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த

 பரிசேயரும், சதுசேயரும் அவரை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல

 அவரை கொல்வதற்கு நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாம் நமது கடமைகளை ஒழுங்காக செய்தாலும் நம்மை நம்மோடு இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்,

நம்மைப் பற்றி குறை சொல்லிக்கொண்டே இருந்தால்

நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்,

 ஏனெனில் இயேசுவின் அனுபவத்தை நாமும் பெற நமக்கு கொடுத்து வைத்திருக்கிறது. 

நமது வாழ்க்கையில் துன்பங்கள் வரும் பொழுது நாம் பாக்கியவான்கள், ஏனெனில் இயேசுவும் துன்பப்படுவதற்காகவே பிறந்தார்.

நாம் மற்றவர்களிடம் அவமானப் பட நேர்ந்தால்,

"இயேசுவே உமக்கு நேர்ந்தது போலவே எனக்கும் நேர்வதற்காக நான் உனக்கு நன்றி சொல்கிறேன்.

நீர் கடைப்பிடித்த பொறுமையை எனக்கும் தாரும் " 

என்று நன்றி ஜெபம் சொல்ல வேண்டுமே தவிர அவமானங்களுக்காக முணுமுணுக்கக் கூடாது.

மற்றவர்கள் நம்மேல் சிலுவையை சுமத்தும் போது நாம் இயேசுவின் சீடர்களாக இருக்கப் பெற்ற பாக்கியத்திற்காக இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.


"கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை"

 என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

கூழ் குடிப்பவர்களுக்கு மீசை இருந்தால் கூழ் குடிக்கும்போது கூழ் அதில் ஒட்டவே செய்யும்.

"துன்பப் படவும் கூடாது, இயேசுவின் சீடனாகவும் இருக்க வேண்டும்"
 என்பது நடைபெற முடியாத ஆசை.

இயேசுவைப்போல் நாம் இறுதிநாளில் உயிர்க்க வேண்டுமென்றால்

இயேசுவைப்போல் நாமும் துன்பத்தையும், மரணத்தையும் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் கிறிஸ்தவர்கள் என்றும் விசுவாசிகள் என்றும் நம்மையே அழைத்துக் கொள்ளும் நாம் 

துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோம்,

 மரணத்தை நினைத்தாலே பயப்படுகிறோம்.

விண்ணக வாழ்வைத் தேடாதவர்கள் துன்பத்தைக் கண்டும் மரணத்தை கண்டும் பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.

"விண்ணக வாழ்வு வேண்டும், ஆனால் மண்ணகத்தில் துன்பப் படக்கூடாது,"

என்று நினைப்பது,

"வெற்றி வேண்டும், ஆனால் பந்தயத்தில் கலந்து கொள்ள கூடாது"

என்று நினைப்பதற்குச் சமம்.

பெரிய வெள்ளிக்கிழமையன்று இயேசு மரணம் அடைந்ததால்தான்,

 மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தார்.

மரணம் அடைந்ததால்தான் உயிர்த்தார்.

"மரணமின்றி உயிர்ப்பு இல்லை"

என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மரணத்தை நினைத்து பயப்பட மாட்டார்கள்.

நோய்நொடிகள் வரும்போதும் மற்ற துன்பங்கள் வரும் போதும் அவற்றை நீக்க இறைவனிடம் வேண்டுவது தவறா?

நிச்சயமாக தவறு இல்லை. அதற்கும் இயேசுவே தனது ஜெபத்தில் முன்மாதிரிகை காண்பித்திருக்கிறார் கெத்சமனே தோட்டத்தில்

 இயேசு தந்தையிடம் 

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.


நாமும் துன்பங்கள் நீங்க தந்தையிடம் பிள்ளைகள் என்ற உரிமையோடு ஜெபிக்கலாம்.

 ஆனால் துன்பப்பட வேண்டும் என்பது தந்தையின் விருப்பமானால் அதை அவருக்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாமும், "தந்தையே, உமக்கு விருப்பமானால் எனக்கு இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை தாரும்.

 விருப்பம் இல்லாவிட்டால் துன்பத்தை உமக்காக தாங்கக்கூடிய சக்தியை தாரும்." என்று வேண்டுவோம்.

இறைவன் சித்தத்திற்கு பணிந்திருப்போம்.

எந்த காரணத்தை முன்னிட்டும் துன்பத்தை கண்டும், மரணத்தை நினைத்தும் பயப்படக்கூடாது.

தனது பொது வாழ்வின் போது எத்தனையோ பேருக்கு நோயிலிருந்து இயேசு விடுதலை கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவரை வளர்த்த தந்தையாகிய சூசையப்பருக்கு வாத நோய் வந்தபோது அவருக்கு இயேசு குணம் அளிக்கவில்லை.

இயேசுவின் மடியிலேயே சூசையப்பர் உயிரை விட்டார்.

அவரை நல்ல மரணத்தின் பாதுகாவலராக திருச்சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

விண்ணுலகம் செல்லும் பாதை மலர் தூவப்பட்ட மெத்தை அல்ல.

முட்கள் நிறைந்த பாதை.

இயேசு கல்வாரி மலைக்கு சிலுவையை சுமந்து சென்ற பாதையைப் போல் கரடு முரடான பாதை.

விண்ணக பாதை சிலுவைப்பாதை. மரணம் விண்ணகத்தின் நுழைவு வாசல்.

 இதை ஏற்று சிலுவைப்பாதை வழிநடந்து, மரணம் வழியே நித்திய பேரின்ப வாழ்விற்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 24, 2021

உள்ளும், புறமும்

உள்ளும், புறமும்



ஹலோ சார்,
"மண்ணகத்திலிருந்து விண்ணகத்துக்கு நமது பிரயாண நேரம் zero second தானே!"
சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம்?"

"பிரயாண நேரம் one second னா
 என்ன அர்த்தம்?"

"ஒரு நொடியில் போய்விடலாம் என்று அர்த்தம்."

",பிரயாண நேரம் zero secondனா?"


"போக நேரமே ஆகாது'' என்று அர்த்தம்.

", உங்களுக்குத்தான் அர்த்தம் தெரிந்திருக்கிறதே, என்னிடம் ஏன் கேட்டீர்கள்?''

"நான் அந்த அர்த்தத்தைக் கேட்கவில்லை. நேரமே ஆகாதுன்னா என்ன அர்த்தம் என்று கேட்டேன்."

",மண்ணகத்துக்கும்
  விண்ணகத்துக்கும் தூர இடைவெளியே இல்லை என்று அர்த்தம்.

மண்ணகத்தில் தூரமும் இருக்கிறது நேரமும் இருக்கிறது.

இரண்டு இடங்களுக்கு இடையில் 100 கிலோமீட்டர் தூரம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இதற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் பிரயாண நேரம் ஒரு மணி.

200 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் பிரயாண நேரம் அரை மணி.

விண்ணகத்தில்
 இடங்களும் இல்லை.
 தூரமும் இல்லை. 
பிரயாண நேரமும் இல்லை.
பிரயாணமே இல்லை.

மண்ணகத்தில் காலை 5 மணி மூன்று நிமிடம் 3 வினாடிக்கு உடலைவிட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் 

நமது கணக்குப்படி அதே நேரத்தில் அது விண்ணகத்தில் இருக்கும்."

"விண்ணக கணக்குப்படி?"

",விண்ணகத்தில் இந்த மாதிரி கணக்கு எதுவும் இல்லை.

ஆத்மா உலகத்தை விட்ட  நேரத்தில்   நித்தியத்திற்குள் புகுந்துவிடும்.

விண்ணகத்தில் நமக்கு இருப்பது போல இடம், தூரம், நேரம் எதுவுமே கிடையாது."

"விண்ணகம் எங்கே இருக்கிறது?"

", இப்போது தான் சொன்னேன் விண்ணகத்தில் இடம் கிடையாது என்று.

 நீங்கள் எங்கே இருக்கிறது என்று கேட்கிற கேள்வியே தப்பு."

''மேலே இருக்கிறது என்று கையை மேல்நோக்கி தூக்கி காண்பிக்கிறார்கள்!"

",அமெரிக்கா காரனிடம் கேட்டால் நாம் காண்பிப்பதற்கு நேர் எதிர்த் திசையை காண்பிப்பான்!

நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சடப்பொருள். நமது ஆன்மா ஆவி. நமது உடலை நாம் பார்க்கலாம், ஆனால் ஆன்மாவை பார்க்க முடியாது.

நமது உடலில் எந்த இடத்தில் ஆன்மா இருக்கிறது என்று கூற முடியுமா?

ஆன்மா உடலை இயக்கிக் கொண்டு இருக்கிறது.

உடல் இயக்கம் இருக்கும் மட்டும் ஆன்மா உடலோடு இருப்பதாக பொருள்.

உடல் இயக்கம் நின்றுவிட்டால் ஆன்மா உடலைப் பிரிந்து விட்டது என்று அர்த்தம்.

உடலைவிட்டு பிரிந்த அதேநேரம் அது விண்ணில் இருக்கும்.

உடல் மட்டும் மண்ணில் இருக்கும்."

"விண்ணகம் ஒரு இடம் அல்ல. அப்படியானால் அது என்ன?"

", அது ஒரு வாழ்க்கை நிலை. 
State of life. 
இறைவனோடு இணைந்த ஒரு பேரின்ப நிலை."

"நாம் உடலைவிட்டு பிரிந்த பின்பும் வாழக்கூடிய ஆன்மாவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட 

ஆன்மா பிரிந்தவுடன் மண்ணாகக்கூடியய நம்முடைய உடலுக்கு தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

தினமும் காலையில் குளித்து உடலை சுத்தம் செய்கிறோம்.

 பகலில் அழுக்குப் படும் போதெல்லாம் கைகளையும் கால்களையும் கழுவுகிறோம்.

 வாசனை திரவியங்களால் உடலை மணப்படுத்துகிறோம்.

ருசியான உணவை வயிறு கேட்கும்போதும் கொடுக்கிறோம்.
கேட்காதபோதும் கொடுக்கிறோம்.

விதவிதமான ஆடைகளால் உடலை அலங்கரிக்கிறோம்.

ஆனால் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிற
 ஆன்மாவைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

உடல் அழுக்கை கவனமாக கழுவுவது போல ஆன்மாவில் படும் பாவ அழுக்கை கழுவ வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

ஆன்ம அழுக்கை‌ அழுக்காகவே நினைப்பதில்லை.

 உடலில் ஒரு சிறு நோய் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை பார்க்கிறோம்.

 ஆனால் ஆன்மாவில் பாவ நோய் முற்றி விட்டாலும் அதை குணமாக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

மொத்தத்தில் நாம் மண்ணாய் போகப் போகிற உடலுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."

'', திருமண வீட்டிற்கு விழாவிற்காக சென்றிருக்கிறீர்களா?"

"சென்றிருக்கிறேன். அங்கும் இதே நிலைதான்!''

",எதே நிலை?"

"திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதை நடத்துவதற்காக செலவழிக்கும் ஆடம்பர செலவுகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

திருமண மண்டபம்,
 மேடை அலங்காரம், 
வெளி அலங்காரம்,
சாப்பாடு வகைகள் 
ஆடை வகைகள், 
ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மணமக்களின் நல்வாழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை."

", அதே போல் தான் நமது வெளியரங்க வாழ்வின்
ஆடம்பரங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை

 நமது ஆன்மீக வாழ்வுக்குக் கொடுப்பதில்லை.

இது தவக்காலம். தவம் செய்யும் காலம்.

தவம் செய்ய வேண்டியது ஆன்மாவா? உடலா?"

"ஆன்மா என்று தான் நினைக்கிறேன். ஆனால் உடலும் அதில் கலந்து கொள்ள வேண்டுமே."

", சாப்பிட தேவையானது எது என்று கேட்டால் உணவு என்று தான் சொல்ல வேண்டும். பிளேட்டு, மேஜை, நாற்காலி என்று சொல்லக்கூடாது.

தவம் செய்ய வேண்டியது ஆன்மா மட்டும் தான். அது உடலை பயன்படுத்திக்கொள்கிறது. அவ்வளவுதான்.

எப்படி காலையில் எழுந்து வேலைக்கு புறப்படும்முன் 

பல்லை தேய்த்து வாயைச் சுத்தமாக்கி,

 குளித்து உடலை சுத்தமாக்கி,

 அப்புறமாக சாப்பிட்டு,

 ஆடை உடுத்தி 

புறப்படுகிறோமோ,

அதேபோல எந்த ஆன்மீகப் பணியாக இருந்தாலும் முதலில்

 நமது ஆன்மாவை சுத்தம் செய்து விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும்.

ஆன்மாவை சுத்தம் செய்யாமல்,

 அதில் இருக்கும் சாவான பாவ அழுக்கை பற்றி கவலைப்படாமல், 

பாவ நிலையில்,

அதாவது இறை உறவு இல்லாத நிலையில்,

என்ன ஆன்மீகப் பணி ஆற்றினாலும்
 அதனால் எந்த பயனும் இல்லை.

தவக்காலத்தில் தினமும் காலையில் திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.

திருவிருந்தில் கலந்து கொள்கிறோம்.

சிலுவைப் பாதை செய்கிறோம்.

நோன்பு இருக்கிறோம். 

சுத்த போசனம் அனுசரிக்கிறோம்.

பிறருக்கு உதவி செய்கிறோம்.

 ஏழைகளுக்கு தர்மம் கொடுக்கிறோம்.

எல்லா செயல்களும் ஆன்மீகப் பலனுள்ள நல்ல செயல்களாக மாற வேண்டும் என்றால் 

முதலில் ஆன்மா 
பாவமாசின்றி இருக்க வேண்டும்.

பாவம் இருந்தால் முதலில் பாவசங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும்.

சாவான பாவ நிலையில் என்ன செய்தாலும் பயன் ஒன்றும் இல்லை!

30 நாள் விடுமுறையில் ஒருநாள் கூட பல் தேய்க்காமலும் 
குளிக்காமலும் 

கால் கை கழுவாமலும்   

 முப்பது நாளும் இருந்துவிட்டு

 31 ஆவது நாள் அப்படியே அதே நிலையில் 

புதிய டிரஸ் அணிந்துகொண்டு வெளியே சென்றால் நம் அருகில் யாரும் வர மாட்டார்கள்.

 வந்தவர்களும் ஓடிவிடுவார்கள்.

இதேபோல ஆன்மாவை வைத்துக்கொண்டு கோவில் சென்றால் நம்மைப் பார்த்தவுடன் சம்மனசுகள் ஓடிவிடுவார்கள்!

இயேசு மூக்கை பொத்திக் கொண்டுதான் நம் அருகே வருவார்!

ஆகவே தவக்காலத்தில் மட்டுமல்ல

 எந்த காலத்திலும் ஆன்மீக வாழ்வு வாழ ஆசைப்படுவோர் 

தங்களது ஆன்மா பாவமாசின்றி இருக்கிறதா 

என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவசங்கீர்த்தனம் செய்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்,

 கொடுப்பவர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.

சமையலறை busy யாக இல்லாவிட்டால், 

சாப்பாட்டறை Empty!

லூர்து செல்வம்.



.

Tuesday, March 23, 2021

"அருள் நிறைந்தவளே வாழ்க,"(லூக். 1:28)

"அருள் நிறைந்தவளே வாழ்க,"
(லூக். 1:28)


"ஹலோ சார்! ஒரு சின்ன சந்தேகம். கபிரியேல் தூதர் அன்னை மரியாளை,

"அருள் நிறைந்தவளே வாழ்க,"
என்று வாழ்த்தினாரா?

,“அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"
என்று வாழ்த்தினாரா?''


",கபிரியேல் கடவுளின் தூதர். அவருக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருக்கும்.

ஆனால் நிச்சயமாக மரியாளுக்குத் தமிழ் தெரியாது.

ஆகவே தமிழில் வாழ்த்தியிருக்க மாட்டார். மாதாவுக்குத் தெரிந்த மொழியில்தான் வாழ்த்தியிருப்பார்."

"சார், எனது சந்தேகம் மொழி சம்பந்தப் பட்டது அல்ல. பொருள் சம்பந்தப்பட்டது.

மாதா அருள் நிறைந்தவளா? 
அருள் மிகுந்தவளா?"

"நிச்சயமாக அருள் நிறைந்தவள்தான்.

மாதாவிடம் அருளோடு சம்பந்தப் படாத பாவ மாசு சிறிது கூட கிடையாது.

அவள் தாய் வயிற்றில் உற்பவிக்கும்போதே சென்மப்பாவ மாசு இன்றி உற்பவித்தாள்.

 ஆகவே அருள் நிறைந்தவள்தான்.

மிகுந்த என்றால் நிறைந்த என்ற பொருள் வராது.

மிகுந்த என்றால் அதிகமான என்று மட்டுமே பொருள்.

ஒரு பாத்திரம் நிறைய நெல் இருந்தால் அதில் வேறொரு தானியம் இருக்க முடியாது.

முக்கால் பாத்திரம் நெல் இருந்தால் மிகுதியாக உள்ளது. ஆனால் மீதி கால் பாத்திரத்தில் வேறு பொருளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

 மாதாவிடம் அருள் தவிர பாவ மாசு சிறிதேனும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ஆகவே அவள் அருள் நிறைந்தவள்தான்.''

"மாதா பாவமாசற்றவள் என்பதற்கு பைபிள் ஆதாரம் கேட்பவர்களுக்கு என்ன பதில்?"

"அவள் உன் தலையை நசுக்குவாள்: நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார். " (ஆதி. 3:15)

என்ற ஆதியாகமம் வசனமும், 

"அருள் நிறைந்தவளே வாழ்க," என்ற கபிரியேல் தூதரின் வாழ்த்துரையுமே மாதா ஜென்ம பாவமாசற்றவள் என்பதற்கான பைபிள் ஆதாரங்கள்.''

"ஆனால் புதிய மொழிபெயர்ப்பில் நீங்கள் கூறுகிற இரண்டு ஆதாரங்களும் இல்லையே.


3-15.உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

,“அருள்மிகப் பெற்றவரே வாழ்க!"

என்றல்லவா இருக்கின்றன!"

", மொழிபெயர்ப்பு விவகாரத்தில் இறங்கினல் நமது பொன்னான நேரத்தை எல்லாம் அதுவே விழுங்கிவிடும்.

 அதை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது நமது பணி நமது அன்னையைப் பற்றி தியானிப்பது.

இறைமகன் இயேசு பரிசுத்த தம திரித்துவத்தின் 2ஆவது ஆள்.
தேவ ஆள்.

நித்திய காலமாக பரிசுத்தர்.

மனித உரு எடுப்பதற்காக தனது தாயாக நாசரேத் ஊரில் வாழ்ந்த மேரி என்ற கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறார்.

மேரி பிறந்தபின் அவளை தேர்ந்தெடுக்கவில்லை.

தேர்ந்தெடுத்த பின்தான் அவள் உற்பவித்தாள்.

 அவர் நித்தியர்.

 அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நித்திய காலமாக தீர்மானிக்கப்படுபவை.

பரிசுத்தரான அவர் தன்னை பெற்றெடுக்க போகும் தாயும் பரிசுத்தராகவே இருக்க வேண்டும் என்று தீர்மானித்து 

அதன்படி அவளைப் படைத்தார்.

இதற்கு வெளி ஆதாரம் எதுவும் தேவை இல்லை.

மனுவுரு எடுக்கப் போகிறவர் ஒரு பரிசுத்தர் என்ற ஆதாரம் மட்டுமே போதும்.

நாம் தங்க ஒரு வீடு கட்டும்போது எவ்வளவு கவனமாக திட்டம் போடுகிறோம்!

பரிசுத்த சர்வ வல்லவர் தேவன் தனக்கு ஒரு தாயை படைக்கும் போது என்ன திட்டமெல்லாம் போட்டிருப்பார்!

பரிசுத்தரை உற்பவிக்கும் பெண் பரிசுத்தமானவளாகத்தானே இருக்க வேண்டும்!

இதை நம்பாதவர்கள் பரிசுத்த கடவுளையே நம்பாதவர்கள்.

இறைவனே தனக்கு தாயாகப் போகும் பெண்ணை ஜென்ம பாவ மாசு மருவின்றி படைத்தார். 

நாம் மரியன்னையை கடவுளின் தாயாகப் பார்க்கிறோம்.

 ஆகவே நம்மால் அவளை ஒரு சாதாரண பெண்ணாக கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

 அவள் நம்மை போல ஒரு சாதாரண பெண்தான் என்று கூறுபவர்கள் அவளை கடவுளின் தாயாக பார்க்கவில்லை.

பரிசுத்தர் ஒரு பரிசுத்தமான பெண்ணைப் படைத்து அவள் வயிற்றிலேயே மனுவுரு எடுக்கிறார்.

பரிசுத்தரைக் கருத்தரித்த வயிற்றில் பாவமாசுள்ள உயிர் கருத்தரிக்கக் கூடாது என்பதால்தான் 

தன் அன்னை 
முக்காலமும் கன்னியாகவே இருக்க இறைவன் ஏற்பாடு செய்தார். 

இயேசுவின் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தவர்கள் அல்ல.

அன்னை மரியாளின் உடன் பிறந்த சகோதரியும் நசரேத்தூரில்தான் வசித்து வந்தாள்.

அவள் பெயரும் மேரிதான்.

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், 

மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
அரு 19:25

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்தான் யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோரின் தாய்.

இந்த நால்வரையும்தான் இயேசுவின் சகோதரர்கள்(cousins) என்று கூறுகிறோம்.


(Jerome (347-420), 

writing Against Helvidius in defense of perpetual virginity of the mother of Jesus, 

argued that the brothers of Jesus (James, Simon, Jude, and Joses or Joseph) were children of Mary of Clopas, the sister of the mother of Jesus, making them first cousins of Jesus..)

ஆக,

அன்னை மரியாள் பாவ மாசு மரு அற்றவள், ஆகவே அருளால் நிறைந்தவள்.

அவளது வயிற்றில் கருவாகி உருவெடுத்து பிறந்தது இயேசு மட்டும்தான். 

அவள்‌ இயேசுவைக் கருத்தரிக்கும் போதும் பெறும்போதும்

 அவளது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படவில்லை.

 இயேசுவை உற்பவிக்கும் முன்னும் அவள் கன்னி.

 உற்பவிக்கும் போதும் அவள் கன்னி.

 பெறும்போதும் அவள் கன்னி.

 பெற்ற பின்பும் அவள் கன்னி.

 வாழ்நாள் முழுவதும் அவள் கன்னி."

"தன்னைப் படைத்த கடவுளுக்கே தாய் ஆகப் போகிறோம் என்று தெரிந்தவுடனே அவளுடைய மனது எப்படி இருந்திருக்கும்?"


'', கபிரியேல் தூதர் சொன்ன செய்தியை ஏற்றுக் கொண்டவுடன் அன்னைமரியாள் சொன்ன முதல் வார்த்தைகள், 

"இதோ ஆண்டவருடைய அடிமை."

மரியாள் மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்தவள். 

நிறைய விவிலிய அறிவு பெற்றிருப்பாள். 

மெசியா எதற்காக பிறக்கப் போகிறார் என்பது அவளுக்கு நன்கு தெரியும். 

மெசியாவின் பாடுகள் மரணம் பற்றிய தீர்க்கதரிசனங்களை நன்கு அறிந்திருப்பாள்.

தன் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட போகிற
ஒருவருக்குத்தான் நான் தாயாக போகிறோம் என்பது தெரிந்தும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறாள்.

கடவுளுக்கு தாயாவதால் தனக்கு உலக வசதிகள் எதுவும் வராது என்பது அவளுக்குத் தெரியும்.

ஆகவே பிறக்கப்போகும் கடவுளின் பணிக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து விட்டாள்.

நாம் பாவிகள். நாம் செய்த பாவங்களுக்காக பரிகாரமாக துன்பப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.

ஆனால் பாவமாசே இல்லாத இயேசு நாம் செய்த பாவங்களுக்காக துன்பப்பட்டது போலவே 

 நம் அன்னையும் நாம் செய்த பாவங்களுக்காகவே இயேசுவோடு சேர்ந்து துன்பங்களை ஏற்றுக் கொண்டாள்.

வாழ்நாள் முழுவதும் வியாகுல மாதாவாகவே வாழ்ந்தாள்.

உலகத்திற்கு அதிபதியான கடவுள் அவள் வயிற்றில் இருக்கும்போதே அவள் ஏழ்மை நிலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

பெத்லகேமில் நாற்றம் நிறைந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசுவைப் பெற்று தீவனத் தொட்டியில் கிடத்தும் போதும் அவள் அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும்! 

சர்வத்தையும் படைத்த கடவுளுக்கு பிறக்க வசதியான இடம் கிடைக்கவில்லை.

மாட்டுத் தொழுவம் தான் கிடைத்தது.

படுக்க மெத்தை கிடைக்கவில்லை. மாட்டின் தீவனத் தொட்டி தான் கிடைத்தது.

இயேசு சர்வ வல்லப கடவுள் என்று தெரிந்திருந்தும், ஏரோதுவால் கடவுளை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தும்

 இறைவரின் தூதர் சொன்னதற்கு கீழ்ப்படிந்து குழந்தையை எகிப்திற்கு எடுத்து செல்கிறார்.

 பயத்தினால் அல்ல, கீழ்ப்படிதலினால்.

இயேசுவுக்கு 30 வயது ஆகும்வரை அவரை ஏழ்மையில்தான் வளர்க்கிறார்.

இயேசு பாடுகள் படும் பொழுதும், சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கும் போதும், கூடவே இருந்து நமது பாவங்களுக்காக அவரைப் பலியாக ஒப்புக்கொடுக்கிறாள்.

தன் வாழ்நாளில் ஒரு வினாடி கூட தனக்காக வாழவில்லை.

அவள் பிறந்ததும் இயேசுவுக்காக. வளர்ந்ததும் இயேசுவுக்காக.
வாழ்ந்ததும் இயேசுவுக்காக.
அதுதான் முழுமையான அர்ப்பண வாழ்வு.

மாதா வாழ்ந்தது இயேசுவுக்காக.
இயேசு வாழ்ந்தது நமக்காக.
ஆகவே மாதா வாழ்ந்ததும் நமக்காக.

இன்று விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் நமக்காக தன் மகனிடம் பரிந்து பேசுவதற்காக.

அருள்நிறைந்த அன்னையை பின்பற்றி நாமும் இயேசுவுக்காக வாழ்வோம்.

அன்னையை வாழ்த்துவோம்.

அருள்நிறைந்த மரியே வாழ்க!

நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்: 

'அருள்மிகப் பெற்றவரே' அல்ல.

அருள் நிறைந்தவளே.

Hail Mary full of grace!

Ave Maria, gratia plena!

லூர்து செல்வம்.

Monday, March 22, 2021

"நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்." (அரு.8:31)

"நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்." (அரு.8:31)


"சுவாமி, மோட்சத்துக்கு போகிறதுக்கு ஏதாவது குறுக்கு வழி இருக்கா?"

." இருக்கே. The shortest cut route."

." சுவாமி, சொல்லுங்க."

"நீங்க ஞானஸ்நானம் பெறும்போது கொடுத்த வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றுங்க, போதும்.
மோட்சம் உறுதி."

"என் சார்பாக என்னுடைய ஞானப் பெற்றோர்தான் வாக்குறுதி கொடுத்தார்களாம். அவங்க நிறைவேற்றினால் போதுமல்லவா?"

." அவங்க நிறைவேற்றினால் அவங்க மோட்சத்துக்குப் போவாங்க.
நீங்க எங்க போகப்போறீங்க?"

"சுவாமி, ஞானப் பெற்றோராக இருப்பவர்கள் பிள்ளைக்கு விபரம் தெரிந்தவுடன் ஞானஸ்நானத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

 ஆனால் இப்போது ஞான பெற்றோர் பிள்ளைக்கு ஒரு புது டிரஸ் எடுத்து, 

அதோடு ஒரு போட்டோவும் 

எடுத்து விட்டால் தங்கள் பணி முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள்."

"Dress ஐ விட, photo தான் முக்கியம்!"

"உண்மைதான், சுவாமி. நீங்களும் இந்த விவரத்தை அப்பப்போ பிரசங்கங்களில் மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்."

"எதை, photo தான் முக்கியம் என்பதையா?"

"சுவாமி, இல்லை. ஞானப் பெற்றோரின் கடமைகளை.

ஞானஸ்நான வாக்குறுதிகளை வேறு எப்படி நிறைவேற்றலாம்?"

"அன்பு செய்யுங்கள். எல்லோரையும் அன்பு செய்யுங்கள்.
எல்லா வாக்குறுதிகளும் அதற்குள் அடங்கிவிடும்.''

"உறவினர் மேல், நண்பர்கள் மீது அன்பு இயல்பாக வரும்.

எல்லோர் மீதும், குறிப்பாக நம்மை வெறுப்பவர் மீது அன்பு எப்படி வரும்?

அதற்கு எதாவது short cut route இருக்கறதா?"

" இருக்கிறதே! யாரையும் வெறுக்காதீர்கள்."

"நேசிப்பது எப்படி என்று கேட்டால் வெறுக்காதீர்கள் என்கிறீர்கள்?"

"ஞானஸ்நானத்தில் நீங்கள் கொடுத்த முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?"

"தெரியவிய."

"பசாசை விட்டு விடுகிறேன்.
அதன் கிரியைகளையும், ஆரவாரங்களையும் 
விட்டு விடுகிறேன் ."
.
"அதாவது இறைவனை நேசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலில் சாத்தானையும் பாவங்களையும் விட்டுவிட வேண்டும்.


அதேபோல நேசிக்க வேண்டுமென்றால் மனதில் வெறுப்பு உணர்வு இருக்கக் கூடாது. சரியா?"

"வீட்டை அலங்காரம் செய்யவேண்டும் என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?"

"வேண்டாதவற்றை அப்புறப்படுத்த வேண்டும்."

",அதேபோல்தான் கடவுளை நேசிக்க வேண்டுமென்றால் முதலில் பாவத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

பிறரை நேசிக்க வேண்டுமென்றால் அவர்கள் மீது வெறுப்புணர்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்."

"ஆனால், சுவாமி, அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு இருக்காது.

வெறுப்பு இல்லாத இடத்தில் அன்பு இருக்கவேண்டிய அவசியமில்லையே."

",வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்காதே!

கடவுளால் யாரையும் வெறுக்கவே முடியாது. ஆகையினால்தான் அவரால் அவரை வெறுப்பவர்களையும் அவரால் நேசிக்க முடிகிறது.

அவருக்கு அன்பு  இயல்பு.
முழுமையான அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு கோபம் போன்ற எதிர்மறை குணங்கள் இருக்க முடியாது.

It is impossible for God to hate anybody,"

"இயேசு

கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.


 15 அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார். நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து, பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
(அரு2:15)

இயேசுவின் செயலில் கோபம் இல்லையா?"


",இல்லை. தந்தையின் இல்லத்தின் மீது அவருக்கு இருந்த அன்பின் வெளிப்பாடு தான் அவரது வார்த்தைகளும், செயலும்.

குற்றம் செய்த பிள்ளைகளை திருத்துவதற்காக கண்டிப்பது கோபம் இல்லை.

நான் குறிப்பிட்ட கோபம் தலையான பாவங்களுள் ஒன்று.

கோபம் பழி வாங்கத் துடிக்கும். 

 கடவுளால் கோபப்படவும் முடியாது, பழிவாங்கவும் முடியாது.

அவரால் பாவம் செய்ய முடியாது.

யார் மீதும் வெறுப்பு இல்லாவிட்டால் யாருக்கும் தீங்கு எதுவும் செய்ய மாட்டோம்.
 
இயேசுவின் விருப்பப்படி நன்மை செய்ய ஆரம்பிப்போம்.

நன்மை செய்ய ஆரம்பிப்பிக்கும் போது இயல்பாகவே அன்பு உள்ளே வந்துவிடும்."


"மனிதருக்கு உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் நல்லது செய்ய ஆரம்பிப்போம் ஆனால் அதில் நிலைத்து நிற்க மாட்டோம்."


",நாம் இறைவனின் இயேசுவின் சீடராக இருக்க வேண்டும் என்றால் அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அதில் நிலைத்திருக்க வேண்டும்.


அன்பு செய்ய வேண்டும் என்பது இயேசுவின் போதனை.

 இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். 

ஆனால் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு அன்பு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அன்பில் நிலைத்து இருப்பவர்கள்தான் இயேசுவின் சீடர்கள் ஆக முடியும்."

"காலையில் தியானம் செய்தால் ஒரு நாள் அன்பில் நிலைத்திருக்கலாம்."

",.போதுமே. நாட்கள் மொத்தமாக வருவதில்லை.

 ஒவ்வொரு நாளாக தான்.

 வரும் ஒவ்வொரு நாளும் நிலைத்திருந்தாலேபோதுமே. வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கலாமே!

ஒவ்வொரு நாளும் காலையில் இறைவாக்கை வாசிக்கிறோம். ஒரு கால் மணி நேரம் தியானிக்கிறோம்.

 தியானத்தை மட்டும் வாழ்ந்தால் போதுமே!

அடுத்த நாள் ஒரு இறை வாக்கு, அடுத்த மணி நேரம் தியானிக்கிறோம்.

அடுத்த நாள் மட்டும் வாழ்கிறோம்.

இப்படியே தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வாழ்கிறோம்.

இதில் கஷ்டம் இருப்பதாக தெரியவில்லையே."

" உண்மைதான். அந்தந்த விநாடியை ஒழுங்காக வாழ்ந்தால் போதும்.

அடுத்த விநாடி ஆண்டவர் அழைத்தாலும் நாம் ரெடி!

ஒவ்வொரு விநாடியும் நிலைத்து நிற்பது தான் முக்கியம்."

", இனி Short Cut route கேட்க மாட்டீங்களே!"

 " இருக்கா?"

",ஏன் இல்லை? 

Live every fraction of a second for God!"

"மண்ணகத்திலிருந்து விண்ணகத்துக்கு நமது பிரயாண நேரம் zero second தானே!"

லூர்து செல்வம்.

Sunday, March 21, 2021

"என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை"(அரு.8:29)

"என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை"
(அரு.8:29)


   யூத குருக்கள் இயேசுவைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்ததால், கூடாரத் திருநாளுக்கு இயேசு மறைவாகவே வந்தார்.

பாதித்திருநாள் முடிந்து, இயேசு கோவிலில் போதிக்க ஆரம்பித்த பின்புதான் இயேசு வந்திருப்பது அவர்களுக்குத் தெரியும்.

விழாவில் இறுதிநாளில் போதித்துவிட்டு, ஒலிவ மலைக்குச் சென்று திரும்பி வந்து, கோவிலில் போதிக்க ஆரம்பித்தார்.

அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைப் பிடிக்கவில்லை.

ஆனாலும் கேள்விகள் கேட்டு அவரைத் தொந்தரவு படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய கேள்விகளுக்கான பதிலில் பரிசுத்த தமதிரித்துவத்தில் அவருக்கும் தந்தைக்குமான உறவு பற்றி இயேசு பேசினார்.

தமதிரித்துவத்தில் ஆட்கள் மூவராயினும் மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்.

தந்தையின் சித்தமே தனது சித்தம் என்பதை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துச் சொன்னார்.

"என்னை நீங்கள் அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."17

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பண்பு என்பதால் அவரைப் பார்த்தவர்கள் தந்தையையும் பார்த்தவர்கள்தான்.


"என்னை அனுப்பியவர் உண்மையானவர்: நான் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துச்சொல்லுகிறேன்."26

"என் தந்தை எனக்குக் கற்பித்ததையே நான் எடுத்துச்சொல்லுகிறேன்"28

''தந்தை நினைப்பதைத்தான் நானும் நினைக்கிறேன் அதையே உங்களுக்கும் சொல்லுகிறேன்" என்று அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கிறார்.


29"என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்: அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை:"

"தந்தை மகனுள் இருக்கிறார், மகன் தந்தையிலுள் இருக்கிறார்."
என்ற தமதிரித்துவ உண்மையை இந்த வசனத்தில் கூறுகிறார்.

தந்தை, மகன், தூய ஆவி ஆட்கள் மூன்று. ஆனால் கடவுள் ஒருவர்.

தந்தை கடவுள்,

மகன் அதே கடவுள்,

தூய ஆவி அதே கடவுள்,

ஆகவே தந்தை இருக்கும் அதே இடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார்.

ஏனெனில் மூவரும் அதே கடவுள்தான்.

நாம் தமதிரித்துவ கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.

நமக்குள்ளும், இறைவனோடும் நமக்குள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் விளக்கும்.

கடவுள் எங்கும் இருப்பதால் நாம் ஒவ்வொருவரும், எல்லோரும் கடவுளுக்கு உள்ளேதான் இருக்கிறோம்.

கடவுளும் நமக்குள் இருக்கிறார்.

தந்தை மகனுள்ளும் மகன் தந்தையுள்ளும் இருப்பது போலவே,

நாம் கடவுளுள்ளும், கடவுள் நம்முள்ளும் இருப்பதால்

நாம் கடவுளின் சாயலைப் பெற்றிருக்கிறோம்.     

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம். தந்தை நினைப்பதையே மகனும் நினைக்கிறார்.  தந்தை விரும்புவதையே மகனும் விரும்புகிறார்.   

நாம் தமதிரித்துவத்தின் சாயலாய் இருப்பதால் தந்தை விரும்புவதையே

 அதாவது மகன் விரும்புவதையே

 நாமும் விரும்ப வேண்டும்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பம். Original.

தந்தை விரும்புவதையே நாமும் விரும்ப வேண்டும் Image

தந்தையும், மகனும் வெவ்வேறு விதமாக விரும்ப முடியாது. Impossible

நாம் தந்தையின் விருப்பத்திற்கு எதிராக விரும்பக் கூடாது. Possible, but should not.

விரும்பினால் இறைவனின். சாயலுக்கு தீங்கு செய்கிறோம்

தந்தையின் விருப்பத்தை அறிந்து அதன்படி நடக்க வேண்டும்.

தந்தையின் விருப்பத்தை அறிவது எப்படி?

1.இறைவனின் கட்டளைகளின் வழியாக.

2. பைபிள் வழியாக.

3. திருச்சபையின் போதனைகள் வழியாக.

4. மனசாட்சியின் வழியாக.

இவற்றுக்கு எதிராக நடந்தால் பாவம் செய்கிறோம்.

நமது வாழ்வில் நாம் செய்யும் எல்லா செயல்களையும், இவை கூறும் ஒழுக்க நெறிகளுக்கு கட்டு பட்டு செய்ய வேண்டும்.

ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது இவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கலாம்.


நாம் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கு வாழ வேண்டும் போன்றவற்றை 

பைபிளும் சொல்லாது திருச்சபையும் சொல்லாது.

எப்படி செய்யவேண்டும் என்பதை மட்டும் அவை சொல்லும்.

நாம் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எங்கு வாழ வேண்டும் போன்றவற்றில் இறைவனின் சித்தத்தை எப்படி அறிவது?

இறைவன் எப்போதும் நம்முள் இருப்பதால் ஜெபத்தின் உதவியோடு அவளது சித்தத்தை அறிய முயற்சி செய்ய வேண்டும்.

உள் தூண்டுதல்கள்(Inspirations) மூலம் அவர் நமக்கு உதவுவார்.

இறைவன் நமக்குத் தந்துள்ள திறமைகளின்(Talents) அடிப்படையிலும், உள் தூண்டுதல்கள் மூலமும் இறைவனது சித்தத்தை அறிந்து கொள்ளலாம். 

 செயல்திட்டத்தை தமதிரித்துவத்தின் பெயரால்ஆரம்பித்து,  

 இறைவனின் வழி நடத்துதலின் படி நாம் செயலில் இறங்க வேண்டும்.

இரண்டு வழிகளில் இறைவன் நம்மை வழிநடத்துவார்.

திட்டத்தை செயல்படுத்த தேவையான சூழ்நிலையை அவரே உருவாக்கிக் கொடுப்பார்.

நாம் தவறு செய்ய நேர்ந்தால் தடைகளை ஏற்படுத்தி, நம்மைச் சரியான பாதையில் திருப்பி விடுவார்.

இறைவனோடு இணைந்து நாம் செயலில் இறங்கும்போது,

நமது திட்டப்படி நடக்கும் செயல்களும் இருக்கும்,

இறைவன் திட்டப்படி நடக்கும் செயல்களும் இருக்கும்.

நமது திட்டப்படி ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் போது,

எதிர்பாராதவிதமாக நமக்கு ஒரு நோய் வருகிறது.

நோய் நமது திட்டப்படி வரவில்லை. அப்படியானால் அது இறைவன் திட்டப்படி வந்திருக்கிறது என்று அர்த்தம்.  

இறைவன் திட்டப்படி வந்திருப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 புனித அந்தோனியார் வேத சாட்சியாக மரிக்க ஆசைப்பட்டு மொரோக்கோவுக்குப் பயணிக்கிறார்.

வழியில் நோய்வாய் படுகிறார்.

அது இறைவனின் திட்டம் என்பதை ஏற்றுக்கொண்டு திரும்புகிறார்.

அந்த திருப்பம்தான் அவரை கோடி அற்புதர் ஆக்கியது.

நமது விருப்பப்படி நடக்காதவை இறைவன் விருப்பப்படி நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டால் அதுவே நமது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

என்ன நடந்தாலும் இறைவன் திட்டப்படி தான் நடக்கிறது என்பதை ஏற்கும்போது,

இறைவன் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்கிறோம்.


இறைவன் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்ளும்போது நம்மிடம் இருக்கும் இறைவனின் சாயலுக்கு மதிப்பு அளிக்கிறோம்.


நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவைப் போலவே 

நமக்கும், நமது அயலானுக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும்.

நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ அவர் மனதில் நாம் இருப்போம்,
 நமது மனதில் அவர் இருப்பார்.

இது நேசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.

நமது மனதில் இருக்கும் இறைவன் நமது நலனை மட்டும் மையமாக வைத்து செயல்படுவது போல

நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நமது மனதில் இருப்பதால் அவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் அவர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்.

கனவில் கூட நமது அயலானுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது.

அயலானுக்கு நன்மையை மட்டும் நினைத்தால்தான் நாம் இறைவனின் சாயலில் இருக்கிறோம்.

யாருக்காவது நாம் தீங்கு நினைத்தால் இறைவனின் சாயலை நாம் இழக்கிறோம்.

இறைவனின் சாயலை இழக்காமல் இறுதிவரை காப்பாற்றுபவர்கள் தான் விண்ணகம் செல்வர்.

இறை அன்புக்கும் பிறர் அன்புக்கும் எதிராக எதுவும் செய்யாதிருந்தால் நம்மிடம் பாவம் இருக்காது.

இறை அன்பிலும், பிறர் அன்பிலும் நாம் வளர்ந்தாள் புண்ணிய வாழ்வில் வளர்கிறோம்.

நம்மிடம் இருக்கும் தமதிரித்துவத்தின் சாயலை பத்திரமாக பேணி காப்போம்.

விண்ணகம் நம்மிடம் இருக்கும். விண்ணகத்தில் நாம் இருப்போம்.


லூர்து செல்வம்.

Saturday, March 20, 2021

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!'(அரு.7:37)

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!'(அரு.7:37)


இயேசு கலிலேயாவில் போதித்துக் கொண்டிருந்த நேரம்.

 யூதேயாவில் கூடாரத் திருநாள் நெருங்கிக்கொண்டு இருந்தது.

 அங்கே அவர் சென்று போதிக்க வேண்டும் என்பது அவருடைய 

சித்தி (அன்னை மரியாளின் உடன்பிறந்த சகோதரி) மக்கள் ஆலோசனை கூறினார்கள்.

யாகப்பன், சூசை, சீமோன், யூதா 
ஆகிய நால்வரில் மூவர் இயேசுவின் சீடர்கள்.

இயேசு அவர்களிடம்

"இத்திருவிழாவிற்கு நீங்கள் போங்கள், நான் வரவில்லை. எனக்குக் குறித்த காலம் இன்னும் நிறைவாகவில்லை"

யூதர்கள் அவரைக் கொல்லத் தேடியதால் யூதேயாவில் அவர்களுக்குத் தெரியும்படி நடமாட விரும்பவில்லை.

இயேசு தனது மரணத்திற்கு
 தான் நித்திய காலமாக குறித்து வைத்திருந்த நேரம் வரும்போது அவராகவே தன்னை யூதர்களிடம் கையளிப்பார்.

அந்த நேரம் இன்னும் வரவில்லை.
ஆகவே கூடாரத் திருநாளுக்கு மறைவாகவே செல்ல இயேசு திட்டமிட்டிருந்தார்.

தன் திட்டப்படி

 அவருடைய சகோதரர்கள் திருவிழாவுக்குப் போனபின், இயேசு வெளிப்படையாகப் போகாமல் 
மறைவாகச் சென்றார்.

பாதித் திருவிழா முடிந்தபின், இயேசு கோயிலுக்குச் சென்று போதிக்கத் தொடங்கினார்.

அவருடைய போதனையைக் கேட்டு அனைவரும் வியப்பு அடைந்தார்கள்.

திருவிழாவின் இறுதியான பெருநாளிலே, 

இயேசு எழுந்துநின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!

 என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!

மறைநூல் கூறுவதுபோல்,

 அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது

"தாகமாயிருக்கிறது"
என்று சொன்னார். 

இங்கு தாகம் என்ற வார்த்தை தண்ணீர் மேலே அவருக்கு இருந்த தாகத்தைக் குறிக்கவில்லை.

 ஆன்மாக்கள்மேல் இருந்த தாகத்தையே குறிக்கிறது.

தனது பாடுகளின் பலனை ஏற்றுக்கொள்ள ஆன்மாக்கள் வேண்டுமே என்ற தாகம்.

சமாரியப் பெண்ணிடம் இயேசு
 "எனக்குத் தண்ணீர் கொடு"

என்று கேட்டபோது அவர் கிணற்று தண்ணீரை குடிக்க கேட்கவில்லை.


கடவுளுடைய கொடை இன்னதென்பதையும், 

" தண்ணீர் கொடு " என்று கேட்டவர்

சாதாரண மனிதர் அல்ல,

மனிதன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழ வேண்டிய 

இறையருள் ஊற்றாகிய 
ஆன்மீக தண்ணீரை தரவல்ல மெசியா என்பதை அவளுக்கு உணர்த்தவுமே அவ்வாறு கேட்டார்.

அவ்வாறேதான் இங்கேயும் 

"தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"

என்று கூறியபோது 

தம்மில் விசுவாசங்கொள்வோர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக்குறித்து, அவர் இவ்வாறு சொன்னார்.

அதாவது 

"பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் மீது தாகமாக உள்ளவர்கள் என்னிடம் வாருங்கள்."

அதாவது, பரிசுத்த ஆவியானவரைத் தருவேன் என்ற பொருளில் கூறினார்.


இயேசு "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வாருங்கள்."

இயேசு குறிப்பிடுவது ஆன்மீக தாகம்.

நம்மிடமும் இயேசு விரும்புகிற தாகம் இருக்க வேண்டும்.

1. உலகில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு ஆள்சேர்ப்பதிலும்,

 தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுபவர்களை சேர்ப்பதிலும் குறியாக இருப்பது நமக்குத் தெரியும்.

நாம் இறை இயேசுவின் விண்ணக கட்சியை சேர்ந்தவர்கள். நற்செய்தியை அறிவிப்பதின் மூலமும்,

முன்மாதிரியான வாழ்க்கையின் மூலமும் 

விண்ணகம் செல்ல ஆன்மாக்களை சேகரிப்பதில் நமக்கு தணியாத தாகம் இருக்க வேண்டும்.

இப்பணியை வெற்றிகரமாக செய்ய வேண்டிய அருள் வரங்களைத் தர இறை இயேசுவிடம் கேட்க வேண்டும்.

2. நல்ல செயல்கள் மூலம் இறை பணியும், பிறர்பணியும் ஆற்றிட   
தாகம் இருக்க வேண்டும்.

இந்த தாகம் தணியாதிருக்க அருள் வரம் வேண்டி இயேசுவிடம் மன்றாட வேண்டும். 

3."என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." என்பது இறைமகனின் வாக்கு.

திவ்விய நற்கருணையை அடிக்கடி வாங்கி நமது ஆன்மாவிற்கு உணவாக ஊட்டிட தணியாத தாகம் இருக்க வேண்டும். 

 தினமும் திருப்பலியிலும், திரு விருந்திலும் பங்கேற்று இத்தாகத்தை அதிகரிக்க வேண்டும்.

இத்தாகம் தணியாதிருக்க இறையருளை வேண்ட வேண்டும்.

4.பிறர் குற்றங்களை மன்னிக்கவும், நமது குற்றங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கவும், தணியாத தாகம் இருக்க வேண்டும்.

5. பரிசுத்த ஆவியானவரின் அருள் வரங்கள் மீது தணியாத தாகம் இருக்க வேண்டும்.

அருள் வரங்களை குடிக்க குடிக்க தாகம் தணியக்கூடாது. 


6. பகைவரை நேசிக்கவும், தீமைக்கு பதில் நன்மை செய்யவும் தணியாத தாகம் இருக்க வேண்டும்.


7.நீதியின்பால் தணியாத பசியும் தாகமும் இருக்க வேண்டும். 

உலக செல்வங்களைப் பொறுத்தமட்டில் போதுமென்ற மனது வேண்டும் என்பார்கள்.

அருள் செல்வத்தை பொறுத்தமட்டில் போதுமென்ற மனமே கூடாது.

ஏனெனில் நாம் நிறைவை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

விண்ணக வாழ்வில் நுழைந்த பின்பு தான் நாம் நிறைவிற்குள் நுழைவோம்.

விண்ணகவாழ்வில் இறைவனோடு இணைந்த பின்பு தான் நமது ஆன்மீக தாகம் தணியும்.

அதுவரை நமது ஆன்மீக வளர்ச்சிக்கான தாகம் தணிய கூடாது.

இவ்வுலகில் நமது ஆன்மீக வளர்ச்சிக்கு  உச்சநிலை (Ceiling) கிடையாது.

தொடர்ந்து நாம் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் இறைவனின் அருள் வரங்களை எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவு பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

பெற்ற அருள் வரங்களால் நமது ஆன்மாவை நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

எவ்வளவு நிரப்பினாலும் இன்னும் இடம் இருக்கும்.

அருள் வரங்களைப் பெற்றுத் தரும் நற்சிந்தனை, நற்சொல், நற்செயல்கள் ஆகியவை நமது இறுதிநாள் வரை தொடர வேண்டும்.

விண்ணகம் சென்ற பின்பு தான் நமது ஆன்மீக வளர்ச்சி பூர்த்தி அடையும்.

அதுவரை இயேசுவின் அருள் உதவியால் வளர்வோம், வளர்ந்து கொண்டே இருப்போம்.

லூர்து செல்வம்.

Friday, March 19, 2021

"சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."(மத்.1:24)

"சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்."
(மத்.1:24)


கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்வதற்கு முன்னால் தன் வயிற்றில் மெசியா மனுவுரு எடுப்பார் என்ற உண்மை தெரியாது.

சூசையப்பருக்கும் தெரியாது.

ஆகவே அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்ததும் அவருக்கு சந்தேகம் வந்தது இயற்கை.

ஆனாலும் நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

  ஆயினும் ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, உண்மையை சொன்னதும் மறுபேச்சின்றி அப்படியே ஏற்றுக்கொண்டார்.

தூதர் சொன்னதையும் ஏற்றுக்கொண்டார்,
 மரியாளையும் ஏற்றுக்கொண்டார்.

 இப்போது ஒரு கேள்வி எழும்.

எப்படி மறைவாக விலக்கிவிடுவது?

 தண்ணீருக்குள் உட்கார்ந்துகொண்டு ரகசியமாக யாருக்கும் தெரியாமல் மூச்சு விட முடியுமா?

நிச்சயமாக முடியாது எனவே மூச்சு குமிழ்கள் (bubbles) காட்டிக் கொடுத்துவிடும்!

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

"நீங்கள் என் மனைவி இல்லை" என்று மரியாளிடம் சொல்லாமலேயே திருமண ஒப்பந்த நிலையிலேயே அவர்களோடு சகோதரனாக வாழ்வது.

ஆனாலும் மரியாளின் வயிற்றில் வளர்வது இறைமகன் என்பது அவருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் 

கபிரியேல் தூதர் அவருக்கு கனவில் தோன்றி உண்மையைச் சொன்னார்.

சூசையப்பரும் தூதர் சொன்னதை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

இறைவனிடமிருந்து வரும் செய்திகளை மறு கேள்வி கேட்காமல் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு சூசையப்பர் ஒரு முன்மாதிரிகை.

பிள்ளையை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு போகச் சொன்னபோதும் சரி,

திரும்ப வரச் சொன்னபோதும் சரி கீழ்ப்படிதலில் தயக்கம் காட்டவில்லை.

சூசையப்பரின் இந்த கீழ்ப்படிதலைத்தான் இன்றைய துறவற சபையினர் ஒரு வார்த்தைப்பாடாக எடுத்துக் கொள்கின்றனர்.

சூசையப்பரின் இந்த கீழ்ப்படிதலை எத்தனையோ முறை பைபிளில் வாசித்திருக்கிறோம், தியானித்திருக்கிறோம்.

 ஆனால் நமது வாழ்வில் ஒரு முறையாவது கடைபிடித்திருக்கிறோமா?

இப்போது சூசையப்பர் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டிலிருந்தாவது அன்றன்றைக்கு நாம் வாசிக்கும் இறைவாக்கை அன்றன்று நமது வாழ்வாக்க கற்றுக்கொள்வோம்.

இறைவாக்கு நம் ஆன்மாவிற்கான
இரைவாக்கு. நம் ஆன்மாவின் உணவு அதுதான்.

ஆன்மாவிற்குள் அது சீரணமானால்தான் ஆன்மா ஆன்மீகத்தில் வளரும்.

இதுவரை எத்தனையோ முறை கோவிலுக்குப் போயிருப்போம்!

 எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகளில் சாமிமாரின் பிரசங்கங்களைக் கேட்டிருப்போம்!

 எத்தனையோ தியானங்களுக்கு போயிருப்போம்!

 இதுவரை கோவிலில் கேட்ட பிரசங்கங்களில் குறைந்தபட்சம் ஒரு புத்திமதியையாவது நமது வாழ்வில் முழுமையாக கடைப்பிடித்திருக்கின்றோமா?

At least போன ஞாயிற்றுக்கிழமை சாமியார் வைத்த பிரசங்கத்தில் ஒரு வரியாவது ஞாபகத்தில் இருக்கிறதா?

நமக்கு நாமே ஒரு சின்ன test வைத்துப் பார்ப்போமே!

ஒரு மார்க் கிடைத்தாலும் pass தான்!

உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முறை மூன்று நாள் தியானம் முடிந்த மறுநாள் 

தியானம் கொடுத்த சுவாமியார் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்:

"மூன்று நாள் தியானத்தையும் பற்றி ஒரே வரியில் யாராவது கூற முடியுமா?"

ஒரு குசும்பன் எழுந்து சொன்னான்,

"சுவாமி, கடவுளிடம் ஆரம்பித்து நரகத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்."

அந்த காலத்தில் ஒவ்வொரு மூன்று நாள் தியானத்திலும் கடைசிப் பிரசங்கம் பாவ சங்கீர்த்தனத்திற்கு மனஸ்தாபப்படுவதற்கு உதவியாக நரகத்தைப் பற்றி இருக்கும்.

இப்போதெல்லாம் நரகத்தைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

பயப்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

அப்போது நரகத்தைப் பற்றிய ஒரு பிரசங்கம் அந்த வருடம் முழுவதும் ஆன்மாவிற்கு உதவியாக இருக்கும்.

வருடம் முழுவதும் ஞாபகத்தில் இருக்கும்.

இப்பொழுது ஒரு மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

"கடவுள் இரக்கமுள்ளவர். நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அவர் கண்டுகொள்ள மாட்டார்.

 கடவுளது இரக்கத்தை தவறாகப் புரிந்து கொண்ட மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆகையினால்தான் பாவசங்கீர்த்தனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

"பாவசங்கீர்த்தனம் செய்தீர்களா?"

"என் பாவங்கள் எல்லாம் கடவுளுக்கு நான் சொல்லாமலே தெரியுமே."

"மன்னிபாவது கேட்கிறீர்களா?"

"எங்களையெல்லாம் மன்னிக்கச் சொல்லி இயேசு தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டாரே!"

"விசுவசித்து ஞானஸ்நானம்
 பெறுபவன் மீட்புப் பெறுவான்,"

"நான் ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன், ஆகவே இரட்சிக்கப்பட்டு விட்டேன்."

இப்படி தப்புத் தப்பாக புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

இயேசு நமது பாவங்களுக்காக தனது மரணத்தின் போது பரிகாரம் செய்து விட்டார்.

நமது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு குருவிடம் சங்கீர்த்தனம் செய்து மன்னிப்பு பெற வேண்டியது நாம் தான்

நாமும் பரிகாரம் செய்ய வேண்டும்.

இதை மக்கள் உணர வேண்டும்.

இறைவன் பல வழிகளில் மூலமாக நம்மோடு பேசுகிறார் திருவிவிலியம் (Bible)

குருவானவர் (Spiritual Father)

நண்பர்கள் (Friends)

இயற்கை (Nature,)

உள் தூண்டுதல் (Inspiration)

ஞான வாசகம் (Spiritual reading)


எதன் மூலம் பேசினாலும் இறைவனது ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

எப்பொழுதும் நமது சிந்தனை, சொல், செயலில் நாம் இறைவனின் சந்நிதானத்தில் இருந்தால் இறைவனின் குரல் தெளிவாக கேட்கும்.

இறைவனின் குரலை கேட்டு அதனை உடனடியாகச் செயல் படுத்துவோம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம்.

கொரோனா அலை அடித்துக் கொண்டிருந்த நேரம்.

 அமெரிக்காவிலிருந்து இந்தியா
வர டிக்கெட் எடுத்தாகிவிட்டது.

கொரோனாக்களின் ஊடே நுழைந்து வர வேண்டியதுபோல ஒரு பய உணர்வு.


அருகில் இருந்த நாற்காலியில் யாரையும் உட்கார விடாதபடி எனது நான்கு வயது பூட்டி தடுத்துக் கொண்டிருந்தாள்.

 ஏன் என்று கேட்டதற்கு, "நாற்காலியில் அந்தோணியார் இருக்கிறார்" என்று பதில் சொன்னாள்.

 கொஞ்சம் பொறுத்து அவளே ஏறி அமர்ந்தாள்.

" நீ மட்டும் எப்படி ஏறி உட்காரலாம்" என்று கேட்டேன்.

 அதற்கு அவள் சொன்ன பதில்,

"நான் நாற்காலியில் உட்காரவில்லை. அந்தோணியார் மடியில் உட்கார்ந்து இருக்கிறேன்."

இது இறைவனின் குரல்.

"இந்தியாவிற்கான பயணத்தின்போது நீ பயப்படாமல் என் மடியில் அமர்ந்து கொள்!"

கொரோனா பயம் இருந்த இடம் தெரியவில்லை.

இறைவனின் மடியில் பயணிக்க ஏன் பயப்பட வேண்டும்?

பயமின்றி  பயணித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

இறைவன் குரல் யார் மூலமாக வேண்டுமானாலும் நமக்கு வரும்.

லூர்து செல்வம்