Tuesday, September 29, 2020

வசன வாதி VS விசுவாசி.

http://lrdselvam.blogspot.com/2020/09/vs.html


வசன வாதி  VS விசுவாசி
---------------------------------------------------------

அதென்ன வசனவாதி, விசுவாசி?

பேசியவரை நம்புவதைவிட அவர் பேசிய வசனத்தை நம்புபவர் வசன வாதி.
                     
வசனத்தைவிட அதைச் சொன்னவரை  நம்புபவர் விசுவாசி.

                       **
வசனத்தின் அடிப்படையில் பேசியவரை மதிப்பிடுபவர் வசனவாதி,

பேசியவரின் அடிப்படையில் வசனத்தை மதிப்பிடுபவர் விசுவாசி.


இங்கு நாம் வசனம் என்று சொல்வது இறைவாக்கு. (பைபிள்)

இறைவாக்குக்கு சரியான பொருள் காணவேண்டுமானால்,

முதலில் அந்தவாக்கைச் சொன்ன இறைவனைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

We must know God well before Interpreting His Word.

வசன வாதி சொல்வான்,

" தன் வசனத்தின் மூலம் தான் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார்.

வசனத்தை வாசிக்கு முன் எப்படி இறைவனைப் பற்றி நன்கு அறிய முடியும்?"

இதற்குப் பதில் கூறுமுன் ஒரு அடிப்படை உண்மையை முதலில்
புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு  ஆள் ஒரு பையனைப் பார்த்து கோபமாகக் கத்துகிறார்,

"Get out and get lost. திரும்பி வந்த 
கொன்னுப்புடுவேன்."

அவர் சொன்ன வார்த்தைகள் பயங்கரமாக தெரிகின்றன அல்லவா.

உண்மையில் அவை எப்படிப்பட்டவை என்பதை அறிந்துகொள்ள முதலில் சொன்னவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேற்படி வசனத்தை நான் வகுப்பில் பல முறை பயன்படுத்தி இருக்கிறேன்.

நான் ஒரு ஆசிரியர்.

ஆசிரியர் மாணவனைப் பார்த்து பேசுவதற்கும், அவனோடு சம்பந்தம் இல்லாதவர் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனது வார்த்தைக்கு மாணவனின் reaction எப்படி இருந்தது என்பதை கவனித்தால் வார்த்தைகளின் உண்மையான பொருள் புரியும்.

மாணவனுக்கு நான் யார் என்பது தெரியும்.

 எனது ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள் என்று அவனுக்கும் தெரியும்.

 யார் யாரிடம் எப்படிப் பேசினால் என்ன விளைவு ஏற்படும் என்று ஆசிரியருக்கும் தெரியும்.

எல்லா ஆசிரியர்களும் Child psychology படித்துவிட்டுதான் வேலைக்கு வருவார்கள்.

"Get out and get lost. திரும்பி வந்த 
கொன்னுப்புடுவேன்,"

என்று சொன்னதும்,

 அவன் 

" சார் சார் மன்னிச்சுடுங்க சார்.

 இனிமேல் ஒழுங்காக இருப்பேன் சார்.

 சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவேன், சார்.

 வீட்டுப் பாடங்களைப் படித்து விட்டு வருவேன் சார்.

 இனி அப்படி வராவிட்டால் என்னை வெளியே அனுப்புங்கள் சார்."

" வராதவனை எப்படில வெளியே அனுப்ப முடியும்?"

வகுப்பில் சிரிப்பு.

" சரி, சரி. இனிமேலாவது ஒழுங்காக நட. போய் இடத்தில உட்கார்."

ஆசிரியரது வார்த்தைகள் கடினமாக இருக்கலாம்.

 ஆனால் அவை மாணவனின் நலன் கருதியே சொல்லப்படுகின்றன.

 அவர் திட்டும் போது அவரது வார்த்தைகளுக்கு அகராதி அர்த்தம் (Dictionary meaning) கொடுக்கக் கூடாது.

ஆசிரியர் திட்டும் போதே  திட்டுவது ஆசிரியர் என்று மாணவனுக்குத் தெரியும்.

மாணவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்தான் என்று மாணவனுக்குத் தெரியும்.

தெரிந்திருக்காவிட்டால் தன் வெற்றிக்காக தன்னை அவரிடம் ஒப்படைத்திருக்க மாட்டான்.

இந்த அடிப்படையில்தான் மாணவன் ஆசிரியரின் கூற்றுக்குப் பொருள் கொடுக்க வேண்டும்.

பைபிள் எழுதப்படுவதற்கு முன்பேயே மக்களிடம் இறை நம்பிக்கை இருக்கிறது.

நாத்திகம் தோன்றுவதற்கு முன்பேயே மக்களிடம் இறை நம்பிக்கை இருக்கிறது.

உலகில் தோன்றிய எல்லா சமையங்களுமே இறைவன் அன்பு உள்ளவர் என்றே போதிக்கின்றன.

கிறிஸ்தவ சமயத்தில் பிறந்து வளர்ந்த நமக்கு பைபிளை கையில் எடுக்கும் முன்பே கடவுள் நம் மீது அன்பு உள்ளவர் என்று தெரியும்.

நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனு உரு எடுத்தார் என்றும், அதற்காகவே பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார் எனவும்,

இதை எல்லாம் நம் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே செய்தார் எனவும்

பைபிளை கையில் எடுக்கும் முன்பே  நமக்குத் தெரியும்.

கடவுள் அன்பு மயமானவர் விசுவாச உணர்வோடு பைபிளைக் கையில் எடுக்கும் நாம்

அந்த அடிப்படையில்தான் நாம் வாசிக்கும் வசனங்களுக்கு விளக்கம்  காணவேண்டும்.

பைபிள் வசனங்களுக்கு அகராதி அர்த்தம் கொடுத்தால்

அவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இறைவனைப் பற்றி நினைக்க நேரிடும்.

உதாரணத்திற்கு ஒரு வசனம்:


"என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்." 
 (யாத்.20:5)
.
இந்த வசனத்தை வாசித்து விட்டு அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே  பொருள் கொண்டால்

இறைவன் நமது பெற்றோர் செய்த பாவத்திற்காக 

பாவம் செய்யாத நம்மையும், 

நம் பிள்ளைகளையும் தண்டிப்பார் என்று தோன்றவில்லை?  

கடவுள் அன்பு மயமானவர் என்று நமக்குத் தெரியும். 

God is Love.

அன்பிற்குள் அன்போடு ஒத்து வராத எந்த பண்பும் இருக்க முடியாது.

இரக்கம், பரிவு, மன்னிப்பு ஆகிய பண்புகள் அன்போடு சம்பந்தம் உள்ளவை. அவை அன்போடு இருக்கும். 

அன்பைப் போலவே அவையும் அளவில்லாதவை.

இறை அன்பிற்குள் கோபம், உணர்ச்சி வசப்படுதல், தண்டிக்கும் மனப்பான்மை ஆகியவை இருக்க முடியாது.

இறைவன் அன்பு செய்பவர், வெறுப்பவர் அல்ல.

சாந்தமுள்ளவர், கோபப்படுபவர் அல்ல.

மன்னிப்வர், தண்டிப்பவர் அல்ல.

ஆனால் இறை வசனம் அப்படிச் சொல்கிறதே.

பைபிளை வாசித்து ஒழுங்காகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சில அடிப்படை உண்மைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 



கடவுள் காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டவர்.

God is beyond time and space

நாம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள்.

நம்மால் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட விசயங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும், அப்பாற்பட்ட விசயங்களை புரிந்து கொள்ள முடியாது.

கடவுள் அளவு கடந்தவர், நாம் அளவுள்ளவர்கள்.

அளவு கடந்த விசயங்களை அளவுள்ள நம்மால் புரிந்துகொள்ள இயலாது.

கடவுள் உருவம் அற்றவர். நாம் உருவம்  உள்ளவர்கள்.

கடவுள் மாறாதவர், நாம் மாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.

கடவுள் வலி, துன்பம், உணர்ச்சிவசப்படுதல் (emotions) ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்.

நாம் அவற்றுக்கு உட்பட்டவர்கள்.

அளவுள்ள நம்மை படைத்த அளவு இல்லாத கடவுள் நம்மை நன்கு புரிந்து கொள்கிறார்.

ஆனால் அளவு உள்ள நம்மால் அளவற்ற கடவுளை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது..

நம்மால் கால வரையறைக்கு உட்பட்ட 

நமது உணர்ச்சிகளுக்கு உட்பட்ட

 நமது அனுபவங்களுக்கு உட்பட்ட விஷயங்களை மட்டும்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பைபிள் இறைவனின் தூண்டுதலால் (inspiration) எழுதப்பட்டது. 

தூண்டியது கடவுள், எழுதியது மனிதர்.

இறைவாக்கினர் மனதில் கடவுள் அவருடைய செய்தியை தூண்டுகிறார்.

God inspires His message in the minds of the prophets.

இறைவன் உருவமற்றவர் அதேபோல் அவரது  செய்தியும் உருவமற்றது.

உருவம் உள்ளதைத்தான் மனித மனதால் புரிந்துகொள்ள முடியும்.

ஆகவே இறைவனது செய்தியை உணர்ந்த இறைவாக்கினர் 

அதை மனிதருக்குக் கொடுக்கு முன் அதற்கு மனிதரால் புரிந்து கொள்ளக்கூடிய உருவத்தைக் கொடுத்து 

செய்தி அவர்களுக்குச்  சென்று அடையும் வகையில் அவர்கள் பேசிய மொழியிலேயே அவர்களுக்கு அளித்தார்கள்.

கடவுளுக்கு உருவம் கிடையாது.

உருவம் உள்ளவர் பேசி கேட்டு தான் மக்களுக்கு அனுபவம்.

ஆகவே கடவுளுக்கு நமது உருவத்தையும் கொடுத்தார்கள்.
(anthropomorphism)

நமது உணர்ச்சிகளையும் கொடுத்தார்கள்.
(Anthropopathism)

இது ஒரு இலக்கிய யுக்தி.
(Literary technique.)

(தொடரும்) 

லூர்து செல்வம்

No comments:

Post a Comment