Sunday, September 20, 2020

"விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்."(1கொரி.15:44)

"விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்."
(1கொரி.15:44)
-----------------------------------------------------------

காலத்திற்கு (Time)  உட்பட்டது மண்ணுலகம்.

காலத்திற்கு அப்பாற்பட்டது விண்ணுலகம்.

காலத்திற்கு  துவக்கமும், முடிவும் உண்டு.

காலத்திற்கு அப்பாற்பட்ட நித்தியத்திற்கு (eternity) துவக்கமும், முடிவும் இல்லை.

மண்ணுலகம் சடப்பொருள்.
விண்ணுலகம் வாழ்க்கை நிலை.

மனிதனின் உடல் சடப்பொருள்.  ஆன்மா ஆவி.

மண்ணுலகில் வாழும் மனிதனின் வாழ்வின் நோக்கம், இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வது அல்ல.

நிரந்தரமான விண்ணுலக வாழ்க்கை நிலையை அடைவதுதான்.

இவ்வுலகில் நமது வாழ்வு முடிவுக்கு வரும்போது ஆவியாகிய ஆன்மா,

 சடமாகிய உடலை பூமியில் விட்டுவிட்டு , 

விண்ணுலகிற்குச்  சென்றுவிடுகிறது.

காலத்தை விட்டுவிட்டு நித்தியத்திற்குள் சென்று விடுகிறது.

பூமியில் விடப்பட்ட உடல் மண்ணோடு  மண்ணாகி விடுகிறது.

விண்ணுலகிற்காகப் படைக்கப்பட்டது மனிதன், ஆன்மாவும், உடலும் சேர்ந்து படைக்கப்பட்ட மனிதன்.

நமது மரணத்தின்போது ஆன்மா மட்டும் விண்ணுலகிற்குச் சென்றுவிடுகிறது.

மண்ணிற்குள் சென்று மண்ணாகி விட்ட உடல்  உலகின் இறுதி நாளில் 

ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலாய்
உயிர்த்தெழுந்து

விண்ணகத்திலுள்ள ஆன்மாவுடன் சேர்ந்து கொள்கிறது.


'ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலாய்'
என்றால் என்ன?

இயேசு மனிதனாய்ப் பிறக்கும்போது
' முழுவதும் மனிதனாய்ப்' (fully man) பிறந்தார்.

அதாவது அவரது உடல் நமது உடலைப் போலவே சடப்பொருளாகத்தான் இருந்தது.

நம்மைப் போலதான் உண்டார், உறங்கினார், பேசினார், நடந்தார், வேதனைகள் அனுபவித்தார், அழுதார், மரித்தார்.

மரித்த பின் நமது உடலைப் போல் அவருடைய உடலும் கல்லறையில் அடக்கம்  செய்யப்பட்டது.

அடக்கம் பண்ணப் படும்போது அவருடைய உடல் மனித உயிர்கொண்ட உடலாய் இருந்தது.

 உயிர்த்தெழும்போது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலுடன் (spiritual body) உயிர்த்தார்.

உலக முடிவில் நமது உடலும்     ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலாக மாறி ( spiritual body) உயிர்க்கும்.

இப்போது நம்மிடம் உள்ள சடப்பொருள் உடல் (material body) விண்ணகத்திற்குள் நுழைய முடியாது. 

"ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது: "
(1 கொரி. 15:50)

நாம் உயிர்த்த பின் ஆவியான ஆன்ம சரீரத்தோடு (spiritual soul and body) விண்ணகத்தில் வாழ்வோம்.

"விண்ணைச் சார்ந்த இவர் (இயேசு) எப்படியோ, அப்படியோ விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்."
(1 கொரி. 15:48)


"மண்ணைச் சார்ந்தவனின் சாயலைத் தாங்கியிருந்தது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம்."
1 கொரி. 15:49)

பூமியில் வாழும் போது மண்ணைச் சார்ந்தவனின்,

 அதாவது, உடலைப் பொறுத்தமட்டில் ஆதாமின் சாயலைத் தாங்கியிருக்கிறோம்.

விண்ணில் வாழும் போது விண்ணைச் சார்ந்தவரின், 

அதாவது, இயேசுவின் சாயலைத் தாங்கியிருப்போம்.


விண்ணகம் சென்றபின்   உலகைச் சார்ந்த தேவைகள் எதுவும் இருக்காது.

ஆன்மாவிற்கு உரிய அன்பு, அருள், பேரின்பம் யாவும் நிறைவாய் இருக்கும்.

எல்லோருக்கும் ஒரே அளவு இருக்குமா?

வண்டியில் தண்ணீர் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

யார் வேண்டுமானாலும்,
 எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

பெரிய பாத்திரம்  கொண்டுவருவோர் அது நிறைய தண்ணீர் பிடிப்பார்கள்.

சிறிய பாத்திரம்  கொண்டுவருவோர் அது நிறைய தண்ணீர் பிடிப்பார்கள்.

ஒரு தம்ளர் மட்டும் 
கொண்டுவருவோர் அது நிறைய தண்ணீர் பிடிப்பார்கள்.

எல்லோரும் ஒரே அளவு தண்ணீர் கொண்டு போக மாட்டார்கள்.

 ஆனால் அவரவர் கொண்டுவந்த பாத்திரத்தில் நிறைய தண்ணீர் கொண்டு போவார்கள்,

 தண்ணீர் அதிகம் வேண்டுமென்றால், பெரிய பாத்திரமாக கொண்டு போக வேண்டும்.

விண்ணகத்தில் நாம் அனுபவிக்க போகும் பேரின்பத்தின் அளவை

பூமியில் நாம் வாழும் ஆன்மீக வாழ்க்கையே தீர்மானிக்கும்.

நமது ஜெப, தவ, தியான வாழ்வின் தன்மை (quality), 

 நாம் செய்யும் நற்செயல்களின் தன்மை,

 நமது அர்ப்பணவாழ்வின் தன்மை போன்றவற்றிற்கு ஏற்பதான் 

நமது விண்ணக வாழ்வின் பேரின்பத்தின் அளவு இருக்கும்.

ஆனாலும் நிறைவாய் இருக்கும்.

நம்மை விண்ணுலக பேரின்பத்தைப் பெறப்போகும் பாத்திரங்களாக கற்பனை செய்து கொள்வோம்.

நமது ஆன்மீக வாழ்வின் தரத்துக்கு ஏற்ப நமது  Size இருக்கும்..

நாம் இவ்வுலகின் வாழும் பரிசுத்தமான வாழ்க்கையாலும், நற்செயல்களாலும் நமது   Size ஐ பெரியதாக்கிக்கொள்ள வேண்டும்.

நிறைய  நற்செயல்கள் செய்பவர்கள் பெரிய Size ஆக இருப்பர்.

குறைவாக  நற்செயல்கள் செய்பவர்கள் சின்ன Size ஆக இருப்பர்.

ஒரே ஒரு சிறு நற்செயல் மட்டும் செய்பவர் ஒரு தம்ளர் Size ல இருப்பார்.

தம்ளர் Size ல இருப்பவருக்கு  மற்றவர்களை விட குறைந்த அளவு பேரின்பம் கிடைத்தாலும்,

அது தம்ளர் அளவு நிறைவாகவே இருக்கும்.

ஆகவே எல்லோருமே நிறைவாய் பேரின்பத்தை அனுபவிப்போம்.

 பூமியில் வாழும் போது துன்பத்தைக் கண்டு பயப்படுகிறோம்.

 வந்த துன்பம் விரைவில் நீங்கும்படி இறைவனை வேண்டுகிறோம்.

அரசு நம் ஒவ்வொருவருக்கும் பின் தேதியிட்ட, 

 Cheque ஒன்றைக் கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்வோமா?

உறுதியாக வேண்டாம் என்று சொல்ல மாட்டோம்.

 ஏனெனில் குறிப்பிட்ட தேதியன்று 

Cheque ல் குறிப்பிட்ட தொகையைப்

  பெற்றுக்கொள்ளலாம் அல்லவா.

 யாராவது இலவசமாக அரசாங்கம் தருவதை வேண்டாம் என்று சொல்வார்களா?

நாம் இவ்வுலகில் அனுபவிக்கும் துன்பங்கள் விண்ணுலகில் நாம் அனுபவிக்கப் போகும் பேரின்பத்திற்கான  Cheque,

நமக்கு வரும் துபைங்களை ஆண்டவர் சுமந்த சிலுவையாகக் கருதி,

 அவற்றை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, 

ஆண்டவருக்காக அவற்றை அனுபவித்து, 

ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தால்

நமது Cheque ல் விண்ணகப் பேரின்பத்திற்கான அளவு தொகை ஏறிவிடும்.

துன்பங்களின் அளவு கூட கூட பேரின்பத்திற்கான அளவு தொகையும் கூடிக்கொண்டே போகும்.

விண்ணகம் செல்லும்போதும், இந்த 
Cheque ஐ பேரின்பமாக மாற்றிக் கொள்வோம்.

வரும் துன்பத்தை வேண்டாமென்று  ஆண்டவரிடம் கேட்டால், அது

"ஆண்டவரே, பேரின்ப Cheque ஒன்றும் வேண்டாம். எனக்குக் குறைந்த அளவு பேரின்பமே போதும்."

என்று சொல்வதற்குச் சமம்.



ஆன்ம சரீரத்தோடு இருந்தாலும் ஆவியின் தன்மையில் சம்மனசுக்களைப் போல இருப்போம்.
 
முடிவில்லாத காலம் இறைவனை நேசிப்பதும், 

அவரது நேசத்தை முழுமையாக அனுபவிப்பதும், 

இறைவனை ஆராதிப்பதும், புகழ்வதும் மட்டுமே 

நமது வேலை.

உலகில் வாழும்போது இறைவனை விசுவசிக்கிறோம்.

ஆனால் விண்ணுலகில் விசுவாசம் இருக்காது.

ஏனெனில் இறைவனை முகத்துக்கு முகம் (face to face) பார்ப்போம்.

உலகில் வாழும்போது இறைவனை நம்புகிறோம்.

ஆனால் விண்ணுலகில் நம்பிக்கை இருக்காது.

ஏனெனில் எவையெல்லாம் இறைவன் தருவார் என்று நம்புகிறோமோ

அவையெல்லாம் நமக்குத் கிடைத்துவிடும்.

விண்ணுலகில் இப்போது ஆன்ம சரீரத்தோடு இருப்பவர்கள் இயேசுவும், மாதாவும் மட்டும்தான்.

விண்ணுலகில்  ஆன்ம சரீரத்தோடு இருப்பதற்கும்,

மண்ணுலகில்  ஆன்ம சரீரத்தோடு இருப்பதற்கும்  

என்ன வித்தியாசம்?

மண்ணுலகில் நமது உடல் சடப் பொருளாய் இருக்கிறது.

விண்ணுலகில் இயேசுவும், மாதாவும் ஆவியாய் இருக்கிறார்கள்.
(with spiritual body and spiritual soul)

மண்ணுலகில் நம்மால் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்.

நம்மால் ஒரு நேரத்தில் அப்போது நமது தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டும்தான் பேச முடியும்.

ஆனால்,

இயேசுவும், மாதாவும், இன்னும் உடலோடு இணையாத மற்ற புனிதர்களும்  நாம் நினைக்கிற நேரத்தில், நினைக்கிற இடத்தில் இருப்பார்கள்.

அதனால்தான் உலகில் எந்தப் பகுதியில் இருந்து யார் கூப்பிட்டாலும் அவர்கள் கேட்பார்கள்.


உலகின் அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் கூப்பிட்டாலும் அவர்கள் கேட்பார்கள்.

விண்ணுலகில் நேரமும் (time) கிடையாது, இடமும் (Space)  கிடையாது.

 ஆகவேதான் 

"நாம் நினைக்கிற நேரத்தில் நினைக்கிற இடத்தில் ".

என்று சொன்னேன்.

நமக்கு நேரம் உண்டு, ஆனால் அது நம்மைக் கடந்து போய்க் கொண்டே இருக்கும்.

போன நேரம் திரும்பி வராது.

நாளைய நேரத்தை நாம் சந்திப்பது உறுதி இல்லை.

நாம் இருக்கிற நேரத்தை வீணாக்கினால், வீணாகப்போவது நேரமல்ல, நாம் தான்.

ஆகவே, இருக்கிற நேரத்தை நன்கு பயன்படுத்தி,

பேரின்பம் நிறைந்த நித்தியத்திற்குள் செல்ல நம்மை நாமே தயாரிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment