Wednesday, September 23, 2020

"யார்ட்ட idea கேட்டுவிட்டு குழந்தை இயேசுவுக்கு கோவில் கட்டினீங்க?"வீடியோ ஞானவான் கேட்கிறார்.

"யார்ட்ட idea கேட்டுவிட்டு குழந்தை இயேசுவுக்கு கோவில் கட்டினீங்க?"
வீடியோ ஞானவான் கேட்கிறார்.
---------------------------------------------------------

கோவிலில் பத்தாம் திருவிழா.

காலை எட்டுமணிக்கு Bishop தலைமையில திருப்பலி.

கோவிலுக்குள் மட்டுமல்ல,   கோவிலை ஒட்டிய தெருக்களிலும் பயங்கரக் கூட்டம்.

தெருக்களில் உள்ள கூட்டத்தினரை குஷிப் படுத்துவதற்கென்று ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருந்தது.


நான் திருப்பலி காண்பதற்காக தெருவிலுள்ள கூட்டத்திற்குள் நுழைந்து, நெளிந்து சென்று கொண்டிருந்தேன்.

ஒரு இடத்தில் கூட்டம் வட்டமாக நின்று எதையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

நான் பார்க்காமல் போயிருக்க வேண்டும்.

ஆனால் கூட்டத்திற்குள் தலையை விட்டு என்ன நடக்கிறது என்று பார்த்தேன். ஒரு  சிறு பையன் Super ஆ வித்தை அடித்துக் கொண்டிருந்தான்.

நின்று ரசித்துக் கொண்டிருந்தேன்.

அப்புறம் ஒரு சிறுபையன் கயிற்றின் மேல் நடந்து கொண்டிருந்தான்.

அதையும் பார்த்து இரசித்தேன்.

அவன் இறங்கியபின்தான் திருப்பலி ஞாபகம் வந்தது.

திரும்பி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கோவில் வாசலை நெருங்கும்போது
Speaker ரிலிருந்து குரல் வந்தது,

" சென்று வாருங்கள், பூசை முடிந்தது!"

கொரோனாவின்  வருகைக்குப் பின் திருப்பலி காண்பதற்காக youtube ற்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது.

அங்கும் இப்படித்தான் திருப்பலியைத் தேடித் கொண்டிருக்கும்போது

பல வித்தைக் காரர்களும், களைக் கூத்தாடிகளும் குறுக்கே  பாய்வார்கள், video வடிவில்.

அப்படிப் பாய்ந்த video ஒன்றில் ஞானவான் ஒருவர் இராயப்பருக்குரிய அதிகாரத்
தொனியில்  பேசிக் கொண்டிருந்தார்.

"குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டி,

குழந்தை இயேசுவை வழிபட்டால்,

குழந்தை இயேசு நமக்குச் செய்வார் என்ற idea வை யார் கொடுத்தது?"

Leave letter கொடுக்காமல் ஒரு மாணவன் Leave எடுத்திருந்தால்,

" யார்ட்ட கேட்ல லீவ் எடுத்த" என்று மாணவனிடம் கேட்க ஆசிரியருக்கு அதிகாரம் இருக்கிறது.

" யார்ட்ட சொல்லிவிட்டு சினிமாவுக்குப் போன?" என்று மகனிடம் கேட்க அப்பாவுக்கு அதிகாரம் இருக்கிறது.

சம்பந்தமே இல்லாத ஒருவர் நம்மிடம் வந்து,

"யார்ட்ட idea கேட்டுவிட்டு கோவில் கட்டினீங்க?"

என்று எந்த அதிகாரத்தோடு கேட்கிறார்?

எனக்குப் புரியவில்லை.

அவருக்குப் பதில் சொல்வது எனது நோக்கம் அல்ல.

சொன்னாலும் புரியமாட்டார்.

நம்மவர்களோடு பேச நமக்கு அதிகாரம் தேவை இல்லை, உறவு ஒன்றே போதும்.

அந்த வீடியோ ஞானி கேட்கிறார்,

"குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டிய நீங்க

வாலிப இயேசுவுக்கும் கட்டியிருக்கணுமா இல்லையா? அதை ஏன் கட்டல ?"

என்ன புத்திசாலித்தனமான கேள்வி!

இந்தக் கேள்வியை விட  அதிபுத்திசாலித்தனமான  statement ஒன்றையும் கொடுத்திருக்கிறார்:

இயேசுவின் பொதுவாழ்வு ஆரம்பிக்கிறதற்கு முன்னால் உள்ள

குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டும்போது

கர்த்தருடையை வசனத்தை மீறி இஸ்டம் போல்
செயல்படுகிரோமாம்!

குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டக்கூடாது என்று சொல்லுகிற வசனத்தை இனிமேல்தான் பைபிளில் தேடிப்பார்க்க வேண்டும்!

இயேசு தன் பெற்றோருக்கு    30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வாழ்ந்த பின்புதான் அவரது பொதுவாழ்வு ஆரம்பித்தது.

அவரது மீட்புப் பணி எப்போது ஆரம்பித்தது?

ஒரு வேலையை செய்ய திட்டமிடும் போதே அந்த வேலை ஆரம்பித்து விட்டது.

அப்படிப் பார்த்தால் இயேசுவின் மீட்புப் பணி நித்திய காலத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது.

அவர் செய்தது எல்லாம் அவரது நித்திய திட்டப்படி தான்.
(Eternal plan)

பூமியில் மனிதனாய் அவதரித்தது

" இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது."

என்று

இறைமகனுக்கு  மனுவுரு  கொடுக்க மரியாள் சம்மதித்த வினாடியில்.

அவரது நித்திய திட்டப்படி மனுவுரு எடுத்த வினாடியிலேயே  உலகில்  அவரது பணி ஆரம்பித்துவிட்டது.

அவர் கருத்தரித்த நாளிலிருந்து விண்ணகம் ஏகும் வரை ஒவ்வொரு வினாடியையும் நாம் விழாவாகக் கொண்டாடலாம்.

விழாவாகக் கொண்டாடுவது ஆடிப்பாடி மகிழ்வதற்காக அல்ல,

இயேசுவைப் பற்றி தியானிக்கவும்,

தியானத்தின் மூலம் ஆண்டவரின் அருள்வரங்களை அபரிமிதமாகப் பெற்று

விண்ணகப் பயணத்தில் வீறுநடை போடுவதற்காகத்தான்.

ஜெபமாலை சொல்லும்போது அதைத்தான் செய்கிறோம்.

153 மணி ஜெபமாலை சொல்லும்போது ஆண்டவரது இவ்வுலக வாழ்க்கை முழுவதையும் தியானித்துவிடுவோம். 

ஆலயங்கள் கட்டுவது எதற்காக?

இறைவனை வழிபடத்தானே.

தாயின் வயிற்றில் இருந்த போதும்,

பிறந்த குழந்தையாய் இருந்த போதும்,

வளர்ந்து பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த போதும்.

பொது வாழ்வில் ஈடுபட்ட போதும்,

எப்போதுமே இயேசு இறைவன் தானே.

அப்படியிருக்க இறைவன் குழந்தை இயேசுவை வழிபட ஆலயம் கட்டுவதில் என்ன தவறு?

குழந்தை இயேசுவை வழிபடுவதால் இயேசு இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று அர்த்தம் அல்ல.

ஒவ்வொரு ஜெபமாலை சொல்லும்போதும்

" கர்த்தர் பிறந்ததைத் தியானிப்போமாக" என்று சொல்கிறோம்.

சர்வலோகத்தையும் படைத்த கடவுள்,

உலகத்திலுள்ள அனைத்து இடங்களும் சொந்தமாய் இருக்க,

தான் மனிதனாய்ப் பிறப்பதற்கு வசதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்காமல்,

'ஒரு மாட்டுத்தொழுவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம்,

நமக்கு எளிமையின் மகிமையைப் போதிப்பதைத் தியானிக்கிறோம்.

தனது உலக வருகையை முதலில் தெரிவிக்க ஏழை ஆயர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம்,

அவர் ஏழைகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைத் தியானிக்கிறோம்.

முதல் கிறிஸ்மஸ் செய்தியாக

*பூமியில் நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம் உண்டாகுக*

என்ற வாழ்த்தை முதல் கிறிஸ்மஸ் செய்தியாக வானவர் மூலம் தந்ததைத் தியானிக்கிறோம்.

" எளிய மனதோர் பேறுபெற்றோர்"

என்று தனது பொதுவாழ்வின் போது தரவிருக்கும் தன் போதனையைத்

தன் பிறப்பின் போதே சாதனையாக்கிய மாண்பைத் தியானிக்கிறோம்.

இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதும்,

அவரை மாதாவும் சூசையப்பரும் எகிப்திற்கு எடுத்துச் சென்றதும் இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே.

கோவிலில்
ஏழைகளே காணிக்கையாக கொடுக்கக்கூடிய இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளை

மாதாவும், சூசையப்பரும் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.

இங்கேயும் இயேசுவின் எளிமை ஒளிவீசுகிறது.

எகிப்துக்குச் சென்ற நிகழ்ச்சி மாதாவும், சூசையப்பரும் இறைவனின் கட்டளைக்கு

எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்படிந்ததை நமக்கு சுட்டிக் காண்பிக்கிறது.

இயேசுவின் எளிமையையும், கீழ்ப்படிதலையும் நாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற பாடம் பற்றியும் தியானிக்கிறோம்.

குழந்தை இயேசுவுக்கு ஆலயம் கட்டியதன் மூலம்,

இயேசுவின் குழந்தைப் பருவப் போதனையை நாம் ஏற்றுக் கொண்டு,

அதன்படி நடப்போம் என்ற நமது உறுதிப்பாட்டை வெளிப்படையாகக் காண்பிக்கிறோம்.

எதற்கெடுத்தாலும் "பைபிளில் இருக்கிறதா?" என்று கேட்பவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில்:

"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20)

என்ற வாக்குறுதியின்படி இயேசு இன்றும், ஒவ்வொரு வினாடியும், திருச்சபையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

"எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்"
(மத். 16.19)

என்ற வாக்குறுதியின்படி

இயேசு திருச்சபையின் நிர்வாகத்தில்

இராயப்பருக்கும், அவரது வாரிசுளுக்கும் சர்வ அதிகாரம் கொடுத்திருக்கிறார்.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் திருச்சபை பைபிளுக்கு உருவம் கொடுத்தது.

எந்தெந்த நூல்கள் பைபிளில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானித்தது திருச்சபைதான்.

ஆகவே, எதையாவது ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்

அது திருச்சபையின் போதனையில் இருக்கிறதா என்பதை மட்டும் நாம் பார்த்தால் போதும்.

அது இயேசுவின் போதனைப்படி இருக்கிறதா என்பதை திருச்சபை பார்த்துக் கொள்ளும்.

டாக்டரின் கவனிப்பில் இருப்பவன் டாக்டர் கொடுக்கும் மருந்தைச் சாப்பிட வேண்டும்.

அந்த மருந்து சரியானதுதானா என்பதைப் பார்க்க வேண்டியது டாக்டர்.

ஒவ்வொரு முறையும் டாக்டர் மருந்து தரும்போது,

" இது மருத்துவ விதிகளின்படி இருக்கிறதா?"

என்று நோயாளி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தால் அவனுக்கு டாக்டர் மேல் நம்பிகை இல்லை என்று அர்த்தம்.

"உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."
(மத்.16: 18)

இராயப்பரைத் தலைவராகக் கொண்ட திருச்சபையின் போதனையில் தவறுகள் நுழைய முடியாது என்பதற்கு இயேசுவின் வாக்கே சான்று.

இராயப்பர் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்யலாம்.

ஆனால் இயேசுவின் போதனையை மக்களுக்கு
எடுத்துரைக்கும் போது அவர் தவறாதபடி

அவருள் இருந்து வழிநடத்தும்  இயேசுவே பார்த்துக் கொள்கிறார்.

இயேசுவின் உறுதிமொழி இராயப்பருடைய வாரிசுகளுக்கும் பொருந்தும்.

இயேசுவை நம்புவோர் அவரது வார்த்தைகளையும் நம்ப வேண்டும்.

ஆகவே எதற்கெடுத்தாலும் ''பைபிளில் இருக்கிறதா?" என்று கேட்பதை விட்டுவிட்டு

"திருச்சபையின் போதனையில் இருக்கிறதா?"

என்பதை மட்டும் கவனித்து திருச்சபையில் போதனை  வழி நடப்போம்.

திருச்சபையின்  வழி நடப்பது கிறிஸ்துவின் வழி நடப்பது தான்.

" உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான்.

உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான்.

என்னைப் புறக்கணிப்பவனோ என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறான்."
(லூக்.10:16)

குழந்தை இயேசு ஆலயம் தாய்த் திருச்சபையால்தான் கட்டப்பட்டிருக்கிறது,  

இறை வழிபாட்டிற்காக.

தாய் திருச்சபையின் சொல் இயேசுவின் சொல்.

தாய் திருச்சபையின் செயல் இயேசுவின் செயல்.

திருச்சபையின் வழி நடப்போம்,

நிலை வாழ்வை உரிமையாக்குவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment