Monday, August 23, 2021

"நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." (அரு. 6:68)

"நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன." (அரு. 6:68)

இயேசு திவ்விய நற்கருணையை பற்றி,

அதாவது 

தனது உடலையும் இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறவன் என்றென்றும் வாழ்வான் என்பது பற்றி,

மக்களிடம் சொன்னபோது அவருடைய சீடருள் பலர் அவரது வார்த்தைகளை நம்ப மறுத்து அவரை விட்டு போய்விட்டார்கள்.

இயேசு பன்னிருவரை நோக்கி,

 "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? என்றார்.

அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் 
போவோம்? 

முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

நீரே கடவுளின் பரிசுத்தர்: 

இதை நாங்கள் விசுவசிக்கிறோம்:

 இதை நாங்கள் அறிவோம்"


இராயப்பருடைய கூற்றில்தான் நமது விசுவாச வாழ்வின் அடிப்படை உள்ளது.

கடவுள் நமது கண்டுபிடிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டவர்.

உதாரணத்திற்கு ஒரு குழந்தையை எடுத்துக்கொள்வோம்.

 பிறந்த நேரத்திலிருந்து தனக்கு பாலூட்டி பராமரிப்பவளை குழந்தை தாயாக ஏற்றுக்கொள்கிறது.

 அதற்கு விஞ்ஞானபூர்வமாக தாய் என்றால் யார் என்று தெரியாது.

 தாயை ஏற்றுக் கொண்டபின் அவள் காண்பிக்கும் ஆளை தந்தை என்று ஏற்றுக் கொள்கிறது.

 அவர் எப்படி தந்தை என்று அதற்கு அறிவியல்பூர்வமாக எதுவும் தெரியாது.

இரண்டு நபர்களை தாயும், தந்தையுமாக குழந்தையை ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன?  

அதன் நம்பும் தன்மை.

இந்த நம்பும் தன்மையைத்தான் ஆன்மீகத்தில் விசுவாசம் என்கிறோம்.

இயேசுவின் வார்த்தைகளை நாம் உன்மை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்

முதலில் அவரைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர் உண்மையை மட்டுமே சொல்வார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த இரு ஏற்றுக்கொள்ளல்களும் இல்லாதவர்களால் இயேசுவின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. ஆகவே அவரை விட்டு போய்விட்டார்கள்.

ஆனால் பன்னிருவரும் இவற்றில் உறுதியாக இருந்ததால் அவரை விட்டு போகவில்லை.

 இயேசுவை இறை மகன் என்று உறுதியாக ஏற்றுக்கொண்டதால்,

அவரது வார்த்தைகளை உறுதியாக  நம்பினார்கள்.

இயேசு சொன்னதன் முழுமையான பொருள்  அவர்களுக்கு அவரது பாடுகளுக்கு முந்திய இரவு உணவின் போது  புரிந்திருக்கும்.

 அப்பத்தையும் தன் உடலாகவும், ரசத்தை தனது இரத்தமாகவும் மாற்றிய உண்மை விசுவாச அடிப்படையில் புரிந்திருக்கும்.

 அந்த விசுவாச சத்தியத்தை உலகமெங்கும் உள்ள மக்களுக்கு அறிவித்தார்கள். 
இன்று நாமும் விசுவசிக்கிறோம்.

அன்னை மரியின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசுதான்,

30 ஆண்டுகள் தச்சு வேலை புரிந்து வாழ்ந்த அதே இயேசுதான்,

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்த அதே இயேசுதான்,

நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு சிலுவையில் மரித்து, மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த  
அதே இயேசுதான்,

அதே உடலோடும், ஆன்மாவோடும் அப்ப ரச குணங்களில் திவ்ய நற்கருணையில் இருக்கிறார் 

என்று உறுதியாக விசுவசிக்கிறோம்.


உறுதியாக விசுவசிக்கிறோம் என்று சொல்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே 
உறுதியாக விசுவசிக்கிறோமா,

அல்லது சொல்ல மட்டும் செய்கிறோமா?

எப்படிக் கண்டுபிடிப்பது?

இரவு 11 மணி. வீட்டிலே மின்விளக்கு எரிகிறதா என்று  கண்டுபிடிப்பது எப்படி?

இரவில் வீட்டில் வெளிச்சமாக இருந்தால் மின்விளக்கு எரிகிறது. இருட்டாக இருந்தால் மின்விளக்கு எரியவில்லை.

இதே Technique தான் திவ்ய நற்கருணை சார்ந்த விசுவாச விசயத்திலும்.

திவ்ய நற்கருணையில் மெய்யாகவே இருக்கிறார் என்று விசுவசிப்பவன் 

இயேசுவை பார்க்க வேண்டும், அவரை உட்கொள்ள வேண்டும்

என்ற ஆசையால் சதா துடிப்பான்.

  உண்மையான ஆசையோடு தினமும் திருப்பலி காண செல்வான்.

உண்மையான ஆசையோடு, பழக்க தோசத்தினால் அல்ல.

திருப்பலியில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொள்வான்.

குருவோடு மனதால் இணைந்து
திருப்பலி ஒப்புக்கொடுப்பான்.

பாவமில்லாத பரிசுத்தமான இதயத்தோடு நற்கருணை உட்கொள்வான்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து தன்னுடைய ஆன்மாவை பரிசுத்தமாக வைத்துக் கொள்வான்.

நற்கருணையின் வழியே இறைவன் இயேசுவையே உணவாக உட்கொள்வதால்,

இயேசு அவன் நாவில் இருக்கும்போது 

மரியாளின்  மடியில் இயேசு பாலன் இருந்தபோது அன்னை எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருப்பாரோ

 அவ்வளவு மகிழ்ச்சியாக அவனும் இருப்பான்.

நற்கருணை வாங்கியபின் ஒரு வினாடி கூட வீணாக்காமல் இயேசுவோடு உரையாடுவான்.

 அவனுள் வந்தமைக்கு நன்றி கூறுவதோடு  தனக்காக மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் மன்றாடுவோம்,

 குறிப்பாக அவனுக்கு தீமை செய்தவர்கள் வாழ்வில் சிறக்க செபிபான்.

அவனது மனதை நோகச் செய்தவர்களை மனதார மன்னிப்பதாக  இயேசுவிடமே
கூறுவான்.

அன்றைய நாளில் அவன் செய்யவிருக்கும் நல்ல காரியங்களை இயேசுவிடமே கூறி அவருடைய உதவியை நாடுவான்.

அன்றைய நாள் முழுவதும் இயேசுவின் சன்னிதானத்தில்தான் வாழ்வான்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரை சந்திக்க வருவான்.

நற்கருணையின் முன்னால் செல்லும்போதெல்லாம் முழந்தாள் படியிட்டு இறைவனுக்குரிய ஆராதனையைச் செலுத்துவான்.

 தலையை மட்டும் தாழ்த்துவது .மனிதனுக்கு உரிய மரியாதை. 

இறைவன் முன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்க வேண்டும்,

தினமும் இயேசுவை நேரிலேயே சந்தித்து செபிப்பதால் அவனது வாழ்நாள் முழுவதும் இயேசுவின் போதனைப்படி தான் நடப்பான்.

இயேசுவின் மன்னிக்கும் குணம் அவனிடமும் இருக்கும்.

  இயேசுவின் விருப்பப்படியே அயலானுக்கு உதவி செய்து வாழ்வான். 

அவனது ஆன்மீக வாழ்வில் முன்னேற்றமே

  நற்கருணை மீது அவனுக்குள்ள விசுவாசத்தை வெளிப்படையாக காட்டும்.

ஒருவனது விசுவாச வாழ்வின் தன்மையே அவனது விசுவாசத்தில் ஆழத்திற்கு அடையாளம்.

தினமும் திருப்பலிக்கு சென்று திவ்ய நன்மை வாங்கினாலும் வாழ்க்கை ஏனோ தானோ என்றிருந்திருந்தால்  விசுவாசம் வாயளவில்தான் என்று அர்த்தம். 

நற்கருணை நாதரை வாழ்நாளெல்லாம் உடன் அழைத்துச் செல்வோம்.

அவருக்காகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment