Thursday, August 19, 2021

"ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்." (மத்.22:5)

."ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்." (மத்.22:5)


"ஏங்க, விண்ணரசுன்னா என்னங்க?"

",, தெரியாம கேட்கிறியா? அல்லது நேரப் போக்கிற்காகக் கேட்கிறியா?"

"நான் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நேரம் போய்விடும் . 

நான் இப்பொழுது உங்களிடம் கேட்டதே இன்றைய நற்செய்தி 
 வாசகத்தை தியானிப்பதற்கு மட்டுமே."

",தியானிப்பதற்கு.மட்டுமா? வாழ்வதற்காக இல்லையா?"

"நீங்கள் சொல்வது சாப்பாடு கேட்டால் சாப்பிடுவதற்காக இல்லையா? என்று கேட்பது போல் இருக்கிறது. தியானிப்பதே வாழ்வதற்காகதான்.

இப்போ சொல்லுங்க. விண்ணரசு என்றால் என்ன?"

",சுருக்கமாகச் சொல்வதானால் உடலைச் சார்ந்த அரசு   உலக  அரசு. 

ஆன்மாவைச் சார்ந்த அரசு விண்ணரசு."

"ஆன்மாவும் உடலும் சேர்ந்து தானே இந்த உலகில் வாழ்கிறோம்.

இதை ஏன் உடலைச் சார்ந்த அரசு என்கிறீர்கள்?"

  ",நமது உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது.   நமது உடல்  இவ்வுலக வாழ்வின் இறுதியில் மண்ணுக்கே திரும்பிவிடும். ஆகவேதான்   உடலை உலகை சார்ந்த அரசு என்கிறேன்.

கடவுள் முதலில் மண்ணைப் படைத்தார்.

 பிறகு மண்ணிலிருந்து ஆதாம் ஏவையின் உடலை உருவாக்கினார்.

ஆன்மாவை நேரடியாகப் படைத்து அவர்களின் உடலோடு சேர்த்தார். 

நமது உடல் நமது முதல் பெற்றோரின் வாரிசு.

நமது ஆன்மா கடவுளால் நேரடியாக படைக்கப்பட்டது.

அது கடவுளைப் போலவே ஆவி.
கடவுள் வாழும் விண்ணகத்தில் கடவுளோடு வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது.

கடவுளின் சாயலிலே படைக்கப்பட்டது.

ஆகவேதான் அதை விண்ணகத்தைச் சார்ந்தது என்றேன். 

நமது ஆன்மா உடலோடு சேர்ந்து உலகில் வாழ்ந்தாலும் நமது வாழ்வின் இறுதியில் நமது உடலை மண்ணில் விட்டுவிட்டு விண்ணை பார்த்து பறந்துவிடும்.

கடவுள் வாழும் விண்ணைச். சேர்ந்த அரசுதான் விண்ணரசு. 

விளக்கம் போதுமா.?" 

"இயேசு ஏன்  விண்ணரசைத் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பிடுகிறார்? " 

",விண்ணரசின் ஒவ்வொரு தன்மையையும் ஒவ்வொரு உவமை மூலம் இயேசு விளங்க வைக்கிறார்.

இதை விளக்கும் முன் சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முழுமையாக விண்ணரசில் நாம் வாழப்போவது நமது இவ்வுலக மரணத்திற்குப் பின் தான்.

 ஆயினும் முழுமையான விண்ணரசில் வாழ்வதற்காக நம்மை நாமே இவ்வுலகத்தில் தயாரிக்க வேண்டும்.

 அதற்காகத்தான் நாம் அழைக்க பட்டிருக்கிறோம்.

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 
(லூக் 17:21)

 ஒருவகையில் விண்ணரசை இவ்வுலகிலேயே வாழ ஆரம்பிக்க வேண்டும்.

 இதற்காக நமக்கு இயேசு அழைப்பு விடுக்கிறார்.

  அவருடைய அழைப்பை ஏற்று இறையரசை இவ்வுலகிலேயே வாழ ஆரம்பிக்க வேண்டும்.

 இவ்வுலகில் இறையரசை வாழ்வது என்பது இறைவன் நமக்கு அதற்காக தந்துள்ள சட்டங்களின்படி வாழ்வது.

இயேசுவால் நிறுவப்பட்ட  கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்கு முறைகளின்படி நாம் வாழும்போது இவ்வுலகில் இறையரசில் வாழ ஆரம்பிக்கிறோம்.

இவ்வுலகிலேயே நாம் இறையரசில் வாழ அழைக்கப்பட்டிருக்கும் அழைப்பை பற்றியதுதான் நாம் இன்று நற்செய்தியில் வாசித்த வாசகம்.
 
இறையரசை ஒரு  அரசன் அளிக்கும் திருமண விருந்துக்கு ஒப்பிடுகிறார்.

இறையரசில் வாழ நம்மை அழைப்பவர் விண்ணுலக அரசர், நம் ஆண்டவர் இயேசு.

திருமண விருந்தாகிய விண்ணரசுக்கு நாம் யாவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அழைப்பை ஏற்று நாம் விருந்துக்கு செல்கிறோமா என்பதை விளக்குவது தான் இயேசு கூறும் உவமை.

அழைக்கப்பட்டிருப்பவர்களுள் ஒருவன் தன் தோட்டத்திற்குப் போக வேண்டியிருப்பதாக சாக்குப்போக்கு சொல்லுகிறான்.

வேறொருவன் வியாபாரத்துக்குப் போக வேண்டியிருப்பதாக சாக்குப்போக்கு சொல்லுகிறான்.

இவர்கள் இருவருக்கும் திருமண விருந்துக்கு போக இஷ்டமில்லை ஆகவே சாக்குப் போக்கு சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.

அதாவது விண்ணரசில் வாழ்வதற்கு அழைக்கப் பட்டிருந்தும் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

நம்மில்  அநேகர் அந்த இருவரைப்போலவே செயல்படுகிறோம்.

நமது நிலை பற்றி சிந்திப்பதற்கு இயேசு இந்த உவமையைக் கூறியுள்ளார்."

"நாம் ஏற்கனவே இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபையில் தானே இருக்கிறோம்.

 பிறகு எதற்கு இன்னொரு அழைப்பு?"

",வீட்டில் அம்மா சாப்பிட கூப்பிடுகிறார்கள்.

 நான் வீட்டில் தானே இருக்கிறேன், என்னை ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்று கேட்பாயா?"

"கேட்க மாட்டேன். கூப்பிட்ட உடனே செல்வேன் " 

",அதே போல் தான் இங்கேயும்.

 கத்தோலிக்க திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது.

 அதன் ஒழுங்கு முறைமைகளின் படி வாழ வேண்டும்.

 தேவ திரவிய அனுமானங்களை ஒழுங்காகப் பெற வேண்டும்.

 மற்றவர்களுக்கு இறை அன்புடன் உதவி செய்து வாழ வேண்டும்.

 நமக்கு எதிராக குற்றங்கள் செய்தவர்களை தாராளமாக மன்னிக்க வேண்டும்.

 நாம் செய்த பாவங்களுக்கு தினமும் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பத்துக் கட்டளைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் .ஒழுங்காக அனுசரிக்க வேண்டும்.

 இந்த ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கும்படி தான் நாம் அழைக்கப்படுகிறோம். 

நான் திருச்சபையில் தானே இருக்கிறேன்.

 எனக்கு எதற்காக அழைப்பு என்று கேட்கக் கூடாது.

நம்மை அழைக்க இயேசு நேரடியாக வரமாட்டார்.

தனது பிரதிநிதிகள் மூலம் அழைப்பார்.

நம்மைப் பொறுத்த மட்டில் இயேசுவின் பிரதிநிதி பங்கு குருவானவர்.

அவர் ' பங்கினுடைய நிர்வாகி அல்ல, 

அவர் நமது ஆன்மீகத் தந்தை, 

பாவ நோய் நீக்கும் ஆன்மீக மருத்துவர்,

 விண்நோக்கிய நமது பயணத்தில் நம்மை வழியில் நடத்துபவர்,

நமக்காக பலி ஒப்புக் கொடுப்பவர்,

பலிப் பொருளாகிய இயேசுவை நமக்கு ஆன்மீக உணவாகத் தருபவர் ,

அவர் மூலமாகத்தான்  நமக்கு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

குருவின் உருவில் வாழும் இயேசுவின் அழைப்பை ஏற்று வாழ்கிறோமா,

அல்லது நமது இஷ்டப்படி வாழ்கிறோமா?

சிந்திக்க அழைக்கப்படுகிறோம்."

     சில சாக்குபோக்குகள்.

"ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வந்தது மாதிரி தெரியல?"

"மறுநாள் அரசுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை டியூஷனுக்கு போனேன்."

                   ***

"திருப்பலியின்போது கோவிலுக்குள் உட்கார்ந்தால் என்ன?"

"மனுசனுக்கு 1000 வேலைகள் இருக்கும் அடிக்கடி பிசினஸ் சம்பந்தமா phone Calls வரும்.
ஓயாம வெளியே ஓடி வர முடியுமா?"

                        ***

"பாவ சங்கீர்த்தனம்?"

"அதுக்கெல்லாம் நேரமில்லை."
 
                       ***

"ஏங்க, வாங்க, இரவு ஜெபம் சொல்வோம்."

"களைப்பாய் இருக்கு. படுக்கப் 
போறேன். இன்றைக்கு மட்டும் நீயும் மகனும் சொல்லுங்க."

"டேய், ஜெபம் சொல்ல வாரீயா?"
"என்னுடைய வீட்டுப் பாடத்தை நீங்க எழுதுவீங்களா?"
 
                       ***

"டேய், பூசைக்கு கிளம்பு."
"நீ,ங்க போயிட்டு வாங்க. நான்
on line ல பார்க்கப் போகிறேன்."
(கொரோனா செய்த கேடு!)

                      ***

"ஏன் யாருமே ஞானோபதேச வகுப்புக்கு  வரவில்லை?"

"நாளைக்கு பரீட்சையாம், சாமி."


நாட்ல சாக்குப் போக்குகளுக்கு மட்டும்  பஞ்சமே இல்லை!

சாக்குப் போக்கு சொல்லாமல் இறை வார்த்தையைக் கேட்போம்.

இறை அரசுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment