Tuesday, June 22, 2021

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)

"நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" (மத்.8:13)

இயேசு நூற்றுவர்தலைவனின் 
விசுவாசத்தைப் பாராட்டி அவனது
 ஊழியனைக் குணமாக்கினார்.

இயேசு எப்போதும் வியாதியுற்றோரை அவரே குணமாக்கினாலும்,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றுதான் சொல்வார்.  

நமது ஆன்மிக வாழ்வில் அடிப்படை விசுவாசம்தான்.

நம்மில் அநேகர் விசுவாசம் என்றால் விசுவாச சத்தியங்களை உண்மை என்று ஏற்றுக்கொள்வது மட்டும்தான் என்று நினைக்கிறோம்.

இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டாலே நமக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று நினைக்கிறோம்.

ஏற்றுக்கொள்வது ஆரம்பம்தான்.

Trainக்கு ticket எடுத்தால் மட்டும் போதாது. அதில் பயணித்தால்தான் செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்.

Ticket எடுத்துவிட்டு Station னிலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்?

முதலில் விசுவசிக்க வேண்டும். தொடர்ந்து விசுவாசத்தை வாழவேண்டும்.

உலகியலில் நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் உயிர் நம்மோடு இருக்க வேண்டும்.

உயிரோடு நாம் ஐக்கியமாகா விட்டால் உயிர் வாழ முடியாது. 

 ஆன்மீக வாழ்வின் உயிரே நமது விசுவாசம்தான்.

இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன்,

நமது உயிர் நம்மோடு ஐக்கியமாக இருப்பது போல,

இயேசுவும் நம்மோடு நாமாக ஐக்கியமாகிவிட வேண்டும்.

நமது உயிர் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதுபோல 

நமது ஆன்மீக வாழ்வை இயேசு ஒருவரே இயக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசுவின் எண்ணங்களே நமது எண்ணங்கள் ஆக மாற வேண்டும்.

அவையே நமது சொற்களாகவும், செயல்களாகவும் மாற வேண்டும்.

இப்போது வாழ்வது நாம் அல்ல, இயேசுவே.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் நூற்றுக்கு நூறு இயேசுவாக மாறினால்தான் 

நாம் இயேசுவை விசுவசிக்கிறோம் என்று அர்த்தம்.

"கேளுங்கள், தரப்படும்" என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

இயேசுவின் இந்த கூற்றை விசுவாச அடிப்படையில் நாம் ஏற்றுக்கொண்டால், 

நாம் கேட்டது கிடைத்துவிட்டது என்பதில் நூற்றுக்கு நூறு உறுதியாக இருப்போம்.

இயேசுவே நம்மை உயிராக இருந்து இயக்குகிறார் என்பது உண்மையானால் இயேசு விரும்புபவற்றையே நாமும் விரும்புவோம்.

இயேசு தனது விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பாரா?

இயேசுவின் விருப்பத்தை நாம் நிறைவேற்றும்போது நமது விருப்பம் நிறைவேறி விட்டதாக தானே பொருள்!

நடைமுறை வாழ்க்கைக்கு வருவோம்.

பள்ளிக்கூட படிப்பு முடிந்தவுடன் ஒரு வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறோம்.

நாம் விண்ணப்பித்துள்ள வேலை நமக்கு கிடைக்க வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டுகிறோம்.

அந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் இயேசுவின் விருப்பமாகவும் இருந்தால் அந்த வேலை உறுதியாக நமக்கு கிடைக்கும்.

Suppose, நாம் விண்ணப்பித்துள்ள வேலை கிடைக்காவிட்டால் அது இயேசுவின் விருப்பமல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கு விருப்பம் இல்லாதது என்று தெரிந்தவுடன் நாமும் அதன்மீது நமக்குள்ள விருப்பத்தை விட்டுவிட வேண்டும்.

"இயேசுவே உமது விருப்பப்படியே ஆகட்டும்" என்று பொறுப்பை முழுவதும் அவர் கையில் ஒப்படைத்து விட்டால்  அவர் விருப்பம் நம்மில் உறுதியாக நிறைவேறும்.

ஆனால் அனேக சமயங்களில் நமது பிரச்சனை

நாம் விரும்புவதை இயேசுவும் விரும்ப வேண்டும் என்று ஆசைப்படுவது தான்.

அந்த ஆசை நம்மில் இருப்பதால்தான் நமது ஆசை நிறைவேறாத போது நமக்கு இயேசுவின் மேல் நம்பிக்கை குறைகிறது. 

இயேசு விரும்புவதை மட்டுமே நாம் விரும்ப வேண்டும்,

 அவர் விரும்பாததை நாமும் விரும்பக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருந்தால்

நாம் கேட்டது  கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் நாம் மகிழ்ச்சியாகவே இருப்போம்.

கிடைத்தாலும் இயேசுவுக்கு நன்றி கூறுவோம்,

 கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்,

 அதாவது என்ன நடந்தாலும் நன்றி கூறுவோம்.

"நம்புங்கள், செபியுங்கள், 
நல்லது நடக்கும்" என்று ஒரு பாடல் வரி உண்டு.

விசுவாசத்தோடு நாம் இயேசுவை கேட்கும்போது 

அதன் விளைவாக கிடைப்பது எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

விசுவாச வாழ்வு என்பது ஒரு அர்ப்பண வாழ்வு.

அதாவது இயேசுவின் கையில் நம்மை முழுவதும் அர்ப்பணித்துவிட்டு, அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே வாழ்வது.

"இதோ ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும்"

 என்ற அன்னை மரியாளின் வார்த்தைகள் தான் நமது வாழ்வின் வழிகாட்டும் வார்த்தைகளாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால்

நாம்விசுவசித்தபடியே நமக்கு ஆகும்.

விண்ணகத் தந்தையை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டபின்

 அவர்மீது எந்த அளவிற்கு அவரை விசுவசிக்க வேண்டும் என்பதற்கு பின்வரும் கதை உதவி செய்யும்.

ஐம்பதுகளில் மாணவ பருவத்தில் ஏதோ ஒரு வார பத்திரிகையில் வாசித்த சிறுகதை.

ஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வாழ்ந்து வந்தார்கள். மகன் இளம் வயது Sub-inspector.

தந்தை தேடப்பட்டு வரும் ஒரு கொலைக் குற்றவாளி. அவரை தேடும் பொறுப்பு மகனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தந்தை கொலை செய்துவிட்டு தப்பித்து போனபோது மகன் கைக்குழந்தை.

தாய் குழந்தையை வளர்த்து ஆளாக்கி Sub-inspector ஆக்கி இருக்கிறார்.

அவள் எதிர்பாராத விதமாக தந்தையை தேடும்  பொறுப்பை அரசு  மகனிடம் ஒப்படைத்திருக்கிறது.

ஆனால் தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும்.  
Sub-inspectorன் தாய் வீட்டுத் தோட்டத்தில் ஒரு ஒதுக்குப்புறமாக ஒரு ஆண்மகனோடு பேசிக்கொண்டிருப்பதை தற்செயலாக பார்க்கிறார்.

அவர் நேர்மையாக இருக்க விரும்பியதால்  தான் பார்த்ததை தாயிடமிருந்து மறைக்க விரும்பவில்லை.

"அம்மா, எத்தனை நாட்களாக இந்த பழக்கம்?"

"எந்த பழக்கம்?"

"இரவு நேரத்தில் மறைந்து நின்று பேசுவது! யார் அவன்?"

"அப்படியானால் நீ என்னை நம்பவில்லை!"

"நான் Sub-inspector. சந்தேகம் வராவிட்டால் குற்றவாளியை பிடிக்க முடியாது."

"நான்   குற்றவாளியா?

   உனது அப்பா நம்மை விட்டு போகும்போது நீ கைக்குழந்தை.

நீ என் பிள்ளை என்று எனக்குத் தெரியும். ஏனெனில் உன்னை பெற்று வளர்த்தவள் நான்.

 ஆனால் நான் உனது தாய் என்று நான் சொன்னதால்தான் உனக்கு தெரியும். நீ நான் சொன்னதை நம்பினாய். ஆனால் இப்பொழுது தெரிகிறது உண்மையில் உனக்கு  என்மேல் நம்பிக்கை இல்லை என்று.''

"நீங்கள் எனது தாய் என்று நம்புகிறேன். அதனால்தான் நீங்கள் நல்லவராக  இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் இன்று இரவு எனக்கு சந்தேகம் வந்துவிட்டது."

"Shut up. உனக்கு ஆரம்பம் முதல் என் மேல் நம்பிக்கை இருந்திருந்தால் உனக்கு என்மேல் சந்தேகம் வந்திருக்காது.

 நான் பேசிக் கொண்டிருந்தது உனது தந்தையிடம்தான் என்பது புரிந்திருக்கும். 

நீயும் உடனே வந்து அவரை கைது செய்திருப்பாய். ஆனால் நீ எனது ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட்டு விட்டாய்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இரவு நீ எங்களைப் பார்த்ததை அவரும் பார்த்திருக்கிறார். 

ஆகவே இதற்குமேல் தான் மறைந்திருப்பது நல்லதல்ல என்று எண்ணி உன்னிடம் சரணடைய தீர்மானித்து எனது அறையில்தான்  காத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஒரு உண்மையை சொல்லுகிறேன். அதை கேட்டு விட்டு போய் அவரை கைது செய்.

உண்மையில் கொலை செய்தது நான். தவறான எண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனை என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கொலை செய்தேன்.

ஆனால் ஒரு குழந்தையை ஒழுங்காக வளர்ப்பதற்கு ஒரு தாயால்தான் முடியும் என்று எண்ணி கொலைப் பழியை தன் மேலே போட்டுக்கொண்டார்.

 ஆனாலும் என்னை பிரிந்து இருக்க முடியாததால் போலீஸிலிருந்து தப்பித்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நீ இன்றுதான் அவரைப் பார்த்தாய். ஆனால் நாங்கள் பலமுறை சந்தித்து பேசியிருக்கிறோம்.

  இன்றுதான் அவரை பார்த்து விட்டாய். இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை.  அவரது முகத்தை நீ பார்த்ததில்லை. ஆனால் அரசு உன்னிடம் தந்திருக்கும் அவரது புகைப்படத்தை வைத்து அவர்தான் என்பதை உறுதி செய்து கொள்.

நீ கைது செய்ய வேண்டியது அவரை மட்டுமல்ல, உண்மையான கொலையாளியான என்னையும் சேர்த்துதான்.
வா என்னுடைய அறைக்கு."

அங்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து மகன் அழுததாகக் கூறி சிறுகதையை முடித்துவிட்டார் ஆசிரியர்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment