Wednesday, January 6, 2021

அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான்."


"அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான்."




"Brother, உங்களை பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன்."

"என்ன விஷயமோ?"

"ஒன்றுமில்லை......"

"ஒன்றும் இல்லாதது ஒரு விஷயமா?"

"சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையே பிடித்துக் கொள்கிறீர்கள்.

இயேசுவுக்கு கடவுளாகிய மட்டும் தாய் இல்லை,

 மனிதனாகிய மட்டும் தந்தைஇல்லை.

என்று நீங்கள் கூறியது ஞாபகத்தில் இருக்கிறதா?"

"ஆமா. இயேசுவுக்கு தேவ சுபாவத்தில் தாய் இல்லை, மனித சுபாவத்தில் தந்தை இல்லை.

அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

என் நண்பனுக்கு, 

அவன் கிறிஸ்தவன் அல்ல,

 அவனுக்கு தான் பிரச்சனை."

"அவன் கிறிஸ்தவன் அல்ல என்கிறீர்கள்.

நான் கூறியது நமது விசுவாச சத்தியம்,

 கிறிஸ்தவன் அல்லாதவனுக்கு நமது சத்தியத்தால் என்ன பிரச்சனை?"

"அவன்

'அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். '

என்ற பைபிள் வசனத்தை எடுத்துக்கொண்டு 

'இயேசுவுக்கு தந்தை பரிசுத்த ஆவி' என்கிறான்.

 அவனுக்கு நான் என்ன பதில் சொல்லி விளக்கம் கொடுக்க?"

"உங்களுக்கு விளக்கம் தெரியுமா,
 தெரியாதா?"

"தெரியாது."

"அப்போ, உங்களுக்குதான் பிரச்சனை.

கிறிஸ்தவராக இருந்துகொண்டு இதற்கான விளக்கம் தெரியாது இருப்பது உங்களது பிரச்சனை. சரி, பரவாயில்லை விளக்கத்தைப் பார்ப்போம்.

மரியாள் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

அவளுடைய கன்னிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இறை மகன் அவளது உதரத்தில் மனு உரு எடுத்தார்.

மனு உரு எடுத்தது யார்?"

"இறைமகன்."

"இறைமகன் என்றால்?"

"பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆளாகிய மகன்."

"அவர் யார்?"

"கடவுள்."

"அதாவது......"

"நம் எல்லோரையும் படைத்த சர்வ வல்லப கடவுள்."

"அதாவது,......"

"உலகத்தையும் அதில் வாழும் நம்மையும் ஒன்றுமில்லாமையில் இருந்து படைத்த கடவுள்."


"ஒன்றுமில்லாமல் இருந்து நம்மை உருவாக்கிய கடவுளுக்கு தான் மறு உரு எடுப்பது கஷ்டமான காரியமா?"

"ஹலோ' நான்கஷ்டமான காரியம்னு சொன்னேனா? நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் என்னவெல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் கேட்டது பரிசுத்த ஆவியை பற்றி."

"பரிசுத்த ஆவி கடவுள்தானே."

"நான் இல்லை என்று சொன்னேனா?"


"ஹலோ! கேள்விக்குப் பதில் சொல்லுங்க."

"ஆமா, பரிசுத்த ஆவி கடவுள்தான்."

"மனுவுரு எடுத்த இறைமகன்?"

"அவரும் கடவுள்தான்.''

"இறைமகனது தந்தை?" 

"அவரும் கடவுள்தான் "

"மொத்தம் எத்தனை கடவுள்கள்?"

"ஒரே கடவுள்."

"மனு உரு எடுத்தது?"

"நீங்கள் குழப்புகிறீர்கள்."

"குழப்பவில்லை, விளக்குகிறேன்.
உங்களுடைய கேள்விக்கு உங்களிடமிருந்து தான் பதில் வரவழைக்க வேண்டும்.

 ஏனெனில் உங்களுக்கு பதில் தெரியும்."

"இப்போ புரிகிறது."

"என்ன புரிகிறது?"

"தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்களும் ஒரே கடவுள் தான்.

மனு உருவெடுத்தது மகன் கடவுள். கடவுளை பிரிக்க முடியாது.

ஆட்கள் தனித்தனி. மனுவுரு எடுத்தது தந்தை அல்ல. பரிசுத்த ஆவியும் அல்ல.

மகன்தான் மனுவுரு எடுத்தார்.

மனுவுரு எடுத்த இறைமகன் மனுவுரு எடுக்காத தந்தையோடும் பரிசுத்த ஆவியோடும் சேர்ந்து ஒரே கடவுள் தான்.

ஆகவே மனு ஒரு எடுத்தவர் ஒரே கடவுள் தான்.

ஒரே கடவுளின் வல்லமையால் தான் ஒரே கடவுளாகிய இறைமகன் மனுவுரு எடுத்தார்.


ஆகவே பரிசுத்த ஆவியால் என்று சொன்னாலும் அது ஒரே கடவுளைத்தான் குறிக்கும்.

  புரிந்து கொண்டேனா?"

"இப்போ உங்களிடம் கேள்வி கேட்ட நபருக்கு என்ன பதில் சொல்வீர்கள்?"

"ஒரு பெண்ணுக்கு ஆணின் உதவியால் பிறந்த குழந்தைக்கு மட்டும்தான் தந்தை இருக்க முடியும்.

இயேசு கடவுள், அவரே அவரது வல்லமையால் அவர் படைத்த பெண்ணின் வயிற்றில் மனுவுரு எடுத்து பிறந்தார். 

இயேசு மனுவுரு எடுத்ததால் மரியாளின் கன்னிமைக்கு எந்த பங்கமும் இல்லை.

மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசுவுக்கு மனித சுபாவத்தில் தந்தை இல்லை."

"ஏன் பரிசுத்த ஆவியால் என்று எழுதியுள்ளது என்று கேட்பானே!"

"கேட்பான்.பரிசுத்த ஆவி அன்பின் கடவுள், 

மனுக்குலம் மீது கடவுள் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே கடவுள் மனிதன் ஆனார். 

ஆகவே பரிசுத்த ஆவியால் என்று எழுதியுள்ளது.

 ஆனாலும் கடவுள் தன் வல்லமையால் மனுவுரு எடுத்தார்.

தமதிரித்துவம் பற்றி சொன்னாள் அவனுக்குப் புரியாது."

"நீங்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
மனுவுரு எடுத்தது இறைமகன்தான்.

மற்றபடி மனுக்குலத்தோடு உள்ள
இறைஉறவில் சம்பத்தப்படுவது மூன்று ஆட்களாக வாழும் தமதிரித்துவ தேவன்தான்.

"Three Persons of the Blessed Trinity act as one single Principle when it comes to all divine acts ad extra (i.e., all divine acts "toward the outside" or in relation to creation."

நமது ஞானஸ்நானத்தின்போதும், உறுதிப்பூசுதலின் போதும் நம்மீது இறங்கி வருவது பரிசுத்த ஆவி மட்டுமல்ல பரிசுத்த தமதிரித்துவம் என்பதை நினைவில் கொள்வோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நம்மை வழி நடத்தி கொண்டிருப்பதும் பரிசுத்த தமதிரித்துவம் தான்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment