Sunday, October 25, 2020

"மோட்சத்திற்கே போக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் யார்?"

"மோட்சத்திற்கே போக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் யார்?"

??????????????????????????????!

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

நான் நின்று கொண்டிருந்தேன்.

மாணவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

ஞான உபதேசம் நடந்து கொண்டிருந்தது.

"வழக்கமாக நான் பாடம் நடத்திவிட்டு கேள்விகள் கேட்பேன்.

இன்று நான் கேள்விகள் மட்டும் கேட்கப் போகிறேன். நீங்கள்தான் பாடம் நடத்த வேண்டும்.

புரிகிறதா?"

"புரிகிறது, Sir."

"இரயில் மூலமாக சென்னையிலிருந்து தென்காசிக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்?"

"சுமார் 24 மணி நேரம் ஆகும், Sir."

"Suppose, இரவு 12 மணிக்கு சென்னையில் இரயிலில் ஏறுகிறீர்கள்.

ஏறியவுடன்  தூங்கி விடுகிறீர்கள்.

 காலை நாலு மணிக்கு விழிக்கிறீர்கள்.

ரயில் தென்காசி சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது."

"அது எப்படி சார் முடியும்? நாலே நாலு மணி நேரத்தில் எப்படி தென்காசிக்கு வர முடியும்?"

"இப்போ அது பிரச்சனை இல்லை. வந்துவிட்டது. மகிழ்ச்சி அடைவீர்களா? வருத்தப்படுவீர்களா?"

"இறங்க வேண்டிய இடம் தென்காசி தானே.

பின் ஏன் வருத்தப்பட வேண்டும்? மகிழ்ச்சியோடு இறங்கி வீட்டிற்குச் செல்வோம்."

"அதாவது 24 மணி பயணம் நாலு மணி நேரத்தில் முடிந்துவிட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். அப்படித்தானே?"

"அதில் என்ன சந்தேகம்? முதல் வகுப்பில் admission போட்டவுடனேயே 10 வது வகுப்பு certificate கொடுத்து விட்டால் கூட நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்."

"சொல்லவே சொல்ற, PhD. என்று சொல்லி இருக்கலாம் அல்லவா? "

"அவனுடைய உச்சகட்ட  படிப்பே அவ்வளவுதான் சார்."

"கடவுள் நம்மை ஏன் படைத்தார்? "

"அவரை அறிந்து, நேசித்து, சேவை செய்து, இறுதியில் விண்ணகம் செல்வதற்காக நம்மை படைத்தார்"

"நமது வாழ்க்கையை ஒரு பயணமாக எடுத்துக் கொண்டால் நம்முடைய முதல் station எது?"

"பிறப்பு."

"இறங்க வேண்டிய station எது?"

"விண்ணகம்."

"பிறப்பிலிருந்து விண்ணகம் செல்ல எவ்வளவு காலம் ஆகும்?"

"அது ஆளுக்கு ஆள் மாறுபடும், சார். யாருக்குமே அது தெரியாது, சார்."

"ரயில் பயணத்தின்போது 24 மணி நேர பயணம் நாலு மணி நேரத்தில் முடிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று நீங்கள்தான் சொன்னீர்கள் அல்லவா?"

"ஆமாம், சார்."

"நீங்கள் அறிய, ஒருவர் வாழ்க்கை பயணத்தை எண்பதாவது வயதில் முடித்துக் கொண்டார்.

மற்றொருவர் தனது அறுபதாவது வயதில் முடித்துக் கொண்டார்.

இந்த இருவரில் பயண முடிவில் யார் அதிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்?"

"தெரியலிய, சார்."

"ஏன் தெரியவில்லை?"

"அவர்களிடம்  கேட்கவேண்டிய கேள்வியை எங்களிடம்   கேட்டால் எங்களுக்கு எப்படி தெரியும்?" 

"அதுவும் சரிதான். இப்போது உங்களைப் பற்றியே கேட்கிறேன் மனதில் பட்டதை சொல்ல வேண்டும். 

முதல் பெஞ்சில் முதல் பையன்,  உனது வாழ்க்கை பயணம் நாளையே முடிவதாக இருந்தால்,

 அதாவது,

 நாளையே விண்ணகம் செல்வதாக இருந்தால் 

மகிழ்ச்சி அடைவாயா? வருத்தப்படுவாயா?"

"சார் விண்ணகம் செல்ல மகிழ்ச்சி  அடைவேன்.

ஆனால் அது நாளைக்கே என்று சொல்லும் போது தான்....." 

"சொல்லும் போது தான்?"

".தெரியலையே, சார். 

மற்றவர்களைப் பற்றி கேட்கும்போது துணிந்து சொல்லத் தெரிந்த எனக்கு என்னைப் பற்றி சொல்லத் தெரியலையே சார்."

"உனக்கு விசுவாசம் இருக்கிறதா? இல்லையா?"

" விசுவாசம் இருக்கிறது, ஆனால் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை.

சார், பத்து பைசாவும் பணம்தான்.

10 லட்சம் ரூபாயும் பணம்தான்.

 10 கோடி ரூபாயும் பணம்தான்.

 பத்து பைசா வைத்திருப்பவன்  தன்னை பணக்காரன் என்று சொல்ல முடியுமா?"

"You are correct. Next'"

"சார், கேள்வி?"

"இன்னும் ஐந்து நிமிடத்தில் உன்னுடைய வாழ்க்கை பயணம் முடிந்து விண்ணகத்திற்குப் போகப் போகிறாய். மகிழ்ச்சியா? வருத்தமா?"

"மட்டற்ற மகிழ்ச்சி ஆனால் நீங்கள் யாரும் அழக்கூடாது.

  பாருங்க சார் எல்லா பயலும் சிரிக்கிறான்."

"அவன்தான் சார் அழக் கூடாது என்று சொன்னான்."

"அழக் கூடாது என்றுதான் சொன்னேன். சிரிக்கச் சொல்லவில்லை."

"Last bench, first boy. எதிர்பாராத பயண முடிவு. உன் கருத்து என்ன?" 

"சார்..,  பயண முடிவு எதிர்பாராதது அல்ல.  நேரம் தான் எதிர்பாராதது.

"எதிர்பாராத நேரத்தில் மனுமகன் வருவார், எப்போதும் விழிப்பாய் இருங்கள்"

 என்று ஆண்டவரே சொல்லி இருக்கிறார்.

 ஆகவே எப்போதும் விழிப்பாய் இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியது இல்லை.

எதற்கும், கொரோனாவிற்குக் கூட, அஞ்ச வேண்டியது இல்லை.."

"உனக்கு கொரோனாவை நினைத்தால் பயமாக இருக்கிறதா? மகிழ்ச்சியாக இருக்கிறதா? கவலையாக இருக்கிறதா?"


"உலக ரீதியாக நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.  

விசுவாச அடிப்படையில்,

'என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்'

என்பது வேதவாக்கு.

வேத வாக்கு வெறுமனே வாசிப்பதற்கு மட்டும் அல்ல,

 நமது வாழ்க்கை ஆகுவதற்கே "

"அப்போ உன்னிடம் பயம் இருக்கிறது."

"இல்லை என்று சொன்னால் நான் பொய்யன். நமக்காக பாடுபட்டு மரிப்பதற்கென்றே பிறந்த நம் ஆண்டவரே பாடுகள் ஆரம்பிக்கு முன்பு அதை நினைத்து பயந்தாரே!
நாம் ஆண்டவரைவிடப் பெரியவர்களா?"

"ஆண்டவர் ஏன் பயந்தார்?"

"நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ய தானே ஆண்டவர் மனிதனாகப் பிறந்தார். 

பாவமே செய்ய முடியாத நம் ஆண்டவர் நமது பாவங்களைத்தானே சிலுவையாக சுமந்து கொண்டு பரிகாரம் செய்தார். 

நமது பலகீனத்தால்தானே நாம் பாவங்கள் செய்கிறோம்.

ஆகவே பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும்   ஏற்றுக்கொண்டுதான் மனிதராகப் பிறந்தார்.

துன்பத்தை கண்டு பயப்படுவது மனித பலகீனம்.

எப்படி பாடுகளையும் மரணத்தையும் அவராகவே ஏற்றுக் கொண்டாரோ, அதே போல் தான் மனித பலகீனமாகிய பயத்தையும் அவரே ஏற்றுக் கொண்டார்.

துன்பத்தைக் கண்டு எவ்வளவு பயம் ஏற்பட்டாலும்

 நாம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு பாடம் கற்பிப்பதற்காகவே 

அவர் பயத்தை ஏற்றுக் கொண்டதோடு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார்.

கொரோனாவைக் கண்டு பயந்தாலும், விண்ணகத் தந்தையின் சித்தம் அதுவானால் ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்."

"சார், அப்படியானால் கொரோனாவை உலகத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி   இறைவனிடம் வேண்டுவது தப்பா?"


"சார், தம்பி பைபிளே வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

நம் ஆண்டவரே,

 "தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:"

என்று வேண்டிய பின்னர் தான்,.


 "எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" 

என்று செபித்தார்.

  நாமும் ஆண்டவரைப் பின்பற்றுவோமே!"

"Settled?"

"Yes Sir."

"Second boy  in the third bench."

"Yes, Sir.''

"உனக்கு விண்ணகம் போக ஆசையாய் இருக்கிறதா?"

"அதற்காகத்தானே அழைக்கப்பட்டோம்! ஆசை இல்லாமல் இருக்குமா?"

" நீ விண்ணகத்தை   அதிகம் நேசிக்கிறாயா?

 அல்லது

 இயேசுவை அதிகம் நேசிக்கிறாயா?"

"இரண்டும் ஒன்று தானே, சார். இயேசுவோடு இணைவதுதானே   விண்ணகம்."

"இப்போது  இயேசுவை 
 நேசிக்கிறாயா?"

"நேசிக்கிறேன்."

" Suppose, இயேசு உன்னைப் பார்த்து,

'நீ என்னை நேசிப்பது உண்மையானால் மோட்சத்திற்கு வரக்கூடாது' என்று சொன்னால் என்ன பதில் சொல்வாய்?"

"  உமது சித்தம் எனது பாக்கியம்" என்று சொல்வேன். 

"உண்மையாகவா?"

"உண்மையாக. யாரை நேசிக்கிறோமோ அவர்களுடைய சொற்படி நடப்பது தானே நேசத்தின் குணம்."

"பயப்படாதே இயேசு அப்படிச் சொல்ல மாட்டார்."

"அது எனக்கும் தெரியும்."

"Final question. மோட்சத்திற்கே போக முடியாத ஒருவர் இருக்கிறார். அவர் யார்?"

எல்லோரும்: "கடவுள். அவரால் எங்கேயும் போக முடியாது. ஏனென்றால் அவர் எங்கும் இருக்கிறார்."

லூர்து செல்வம்.
 



No comments:

Post a Comment