http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_21.html
"என்ன வேண்டும் ?" 
???????????????????????????????
முந்திய  நாளிலேயே அருளப்பர் இயேசுவை மக்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டார்.
 "இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.
எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் என்னிலும் முன்னிடம் பெற்றவர்: 
என்று நான் சொன்னது இவரைப்பற்றியே:"
மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,
இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். 
அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.
  அவர் கூறியதைக் கேட்ட  சீடர் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, 
"என்ன வேண்டும் ?" 
என்று கேட்டார். 
அவர்கள், 
"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" 
என்று கேட்டனர். 
இயேசு"
"வந்து பாருங்கள்" என்றார்.
'
அவர்கள் வந்து, அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்று அவரோடு தங்கினார்கள்.
   இயேசுவைப் பின்தொடர்ந்து தங்கிய  இருவருள் ஒருவர்
 சீமோன் இராயப்பரின் சகோதரராகிய பெலவேந்திரர்
 அவர்   சீமோனிடம்   சென்று
, "மெசியாவைக் கண்டோம்" என்றார். 
  பின்பு அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார்.
 இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 
 கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.
ஏற்கனவே அருளப்பர் தனது சீடர்களிடம் இயேசுவைப் பற்றி கூறிவிட்டார்.
 ஆகவே அவர்கள்   இயேசுவைப் பின் தொடரும் முன்னே 
அவர் யார் என்று அவர்களுக்கு தெரியும். 
"உலகின் பாவங்களைப் போக்குவதற்காக பலி ஆகப்போகின்றவர்தான்   இயேசு"
 என்று அருளப்பர் இயேசுவே அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.
  அதுவரை அருளப்பரின் சீடர்களாக இருந்தவர்கள் இயேசுவின் சீடர்களாக மாறுவதற்காகவே அவரை பின்தொடர்ந்தனர்.
இது இறை மகனுக்கு நன்கு தெரியும்.
ஆனாலும் எதுவும் தெரியாதவர் போல, 
"என்ன வேண்டும் ?" 
என்று கேட்டார்.
அவர்களும் தாங்கள் வந்ததின் நோக்கத்தை வெளிப்படையாக கூறாமல்,
"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" 
எங்கு கேட்டார்கள்.
இயேசுவும் நேரடியாகப் பதிலைக் கூறாமல்,
"வந்து பாருங்கள்" என்றார்.
அவர்களும் அவரோடு போனது மட்டுமல்ல,
அன்று அவரோடு தங்கினார்கள்.
என்ன வேண்டும் ?" 
நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?
"வந்து பாருங்கள்"
அவரோடு தங்கினார்கள்.
"மெசியாவைக் கண்டோம்" என்றார். 
திடீரென்று இயேசு நம் முன் தோன்றி,
" என்ன வேண்டும்''
 என்று கேட்டால்,  என்ன பதில் சொல்லுவோம்?
ஏற்கனவே ஒரு list வைத்திருப்போம்.
list ஆளுக்கு ஆள் மாறுபடும்.
தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும்.
 நல்ல சம்பளம் உள்ள வேலை கிடைக்கவேண்டும். 
நல்ல பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.
நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்.
நமது விண்ணப்பங்களை ஒன்றன் பக்கம் ஒன்றாக அடுக்கினால் உலகின் பரப்பளவு காணாது அவற்றைக்   கொள்ள!
செவ்வாய் கிரகத்திற்குப்  போய் இடம் பார்க்க வேண்டும்!
ஆனால் பெலவேந்திரருக்கு இருந்த ஆசை முற்றிலும் ஆன்மீகம் சார்ந்தது.
ஆண்டவரைப் பற்றி அறிய வேண்டும்.
அதுவும் அவர் இருக்கும்
 இடத்துக்குப் போய் அறியவேண்டும்.
இயேசுவினுடன் நேரடி அனுபவம் மூலம் அவரை அறிய வேண்டும்.
அதனால்தான் அவர் கேட்கிறார்:
"ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"
நமக்கும் ஞானத்தின் மீது ஆசைதான். ஆனால் அது நம்மிடம் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
 ஆனால்
பெலவேந்திரரோ ஞானத்தை இருக்கும் இடத்திற்குப் போய் பெற விரும்புகிறார்.
ஆண்டவரும் ஒரு படி மேலே போய் தான் தங்கியிருக்கும் இடத்தைச் சொல்லாமல், 
"வந்து பாருங்கள்." என்கிறார்.
காதால் கேட்டு பெறும் அறிவை விட கண்ணால் பெறும் அனுபவம்  வாழ்க்கையில் அதிகம் பயன்பெறும்.
அதனால்தான் உலகினர் Radio வை விட TV.யை அதிகம் விரும்புகின்றனர்.
சீடரும் இயேசுவுடன் சென்று அவர் தங்கிய இடத்தை பார்த்தார்.
ஆண்டவர் பாருங்கள் என்றுதான் சொன்னார்,
ஆனால் பெலவேந்திரரோ
அன்று ஆண்டவரோடு தங்கிவிட்டார். 
தங்கியது மட்டுமல்ல. இயேசுவே மெசியா என்பதையும் அறிந்து கொண்டார்.
அறிந்ததும் மட்டுமல்ல,
தம் சகோதரராகிய சீமோனைக் கண்டுபிடித்து, "மெசியாவைக் கண்டோம்" என்று அறிவித்தார்.
நற்செய்தியாளர் 
''சீமோனிடம் சென்று"
 என்று எழுதவில்லை.
" சீமோனைக் கண்டுபிடித்து" என்று எழுதியிருக்கிறார்.
 நற்செய்தியை அறிவதிலும் தேடல்,
 அறிவிப்பதிலும்   தேடல்!
தேடிப்போய் நற்செய்தியை அறிந்து தேடிப்போய் அதை அறிவிக்கிறார்!
அறிவித்தது மட்டுமல்ல,
அவரை இயேசுவிடம் அழைத்து வரவும் செய்தார்.
இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 
 கேபா என்பதற்கு இராயப்பர், அதாவது, பாறை என்பது பொருள்.
இந்த தம்ளர் அளவு நற்செய்தி பகுதிக்குள் கடலளவு செய்தி இருக்கிறது, ஆல விதைக்குள் ஆலமரமே இருப்பது போல! 
செய்தியை வாசித்ததோடு நின்றுவிடாமல் நாமும் உள்ளே சென்று கொஞ்சம் தேடுவோம்,
சில நிமிட தியானத்தின் மூலம். 
பெலவேந்திரர்   
 இயேசுவின் சீடராக விரும்பினார்.
 அதற்காக அவரைப் பின்தொடர்ந்தார், 
அவர் தங்கிய   இடத்திற்குச்   சென்று   இயேசுவுடனே  தங்கினார்.
இயேசுவை அறிந்தார். 
பெலவேந்திரருக்கு அருளப்பர் இயேசுவைக் காண்பித்தார்.
நமக்கு இயேசுவே தனது திருச்சபையின் மூலம் தன்னைக்  காண்பிக்கிறார்.
நமது நண்பர்களில் சிலர்,
" இயேசுவை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?"
 என்று கேட்டால்,
" பைபிளில் இருந்து தெரிந்து கொண்டோம்."  என்பார்கள்.
நம்மிடம் யாராவது அதே கேள்வியை கேட்டால் 
நாம் திருச்சபையிலிருந்து இயேசுவை அறிந்து கொண்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் திருச்சபை தான் தன் வாய் மொழி மூலம் நமக்கு இயேசுவை அறிவித்துவிட்டு
 வாசிப்பதற்கு பைபிளையும் தந்தது.
இயேசுவை நமக்குத் தந்தது அதற்காகவே அவரால் நிறுவப்பட்ட திருச்சபை.
பள்ளிகூடத்தில் பாடம் நடத்துவது யார் என்று யாராவது கேட்டால் 
ஆசிரியர் என்று சொல்வோமா?
 புத்தகம் என்று சொல்வோமா?
உனக்கு உணவு தருவது யார் என்று யாராவது கேட்டால் அம்மா என்று சொல்வோமா?
Dining table என்று சொல்வோமா?
இயேசு நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொன்னது,
 தனது சீடர்களிடம் தான், பைபிளிடம் அல்ல.
இதனால்  நாம் பைபிளை குறைத்து   மதிப்பிடவில்லை.  
பைபிள் இறைவாக்கு.
இறைவாக்கு திருச்சபை மூலம் நமக்கு அறிவிக்கப்பட்டது.
உடனே ஒருவர் 
இறைவாக்கு இயேசு மூலம் அறிவிக்கப்பட்டது என்று என்பார்.
அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.
இயேசு யார்?
திருச்சபை என்ற ஞான சரீரத்தின் தலை இயேசு தான்.
நாம் இயேசுவின்  என்ற ஞான சரீரத்தின் உறுப்புகள்.
இயேசு தான் திருச்சபை.
 நாம் அவருக்குள்தான் இருக்கிறோம்.
இயேசு திராட்சை கொடி என்றால் நாம் அவரின் கிளைகள்.
சரி, விசயத்துக்கு வருவோம்.
திருச்சபை நமக்கு இயேசுவை காண்பித்தது.
காண்பித்தது மட்டுமல்ல, தந்தது.
இயேசுவை பெற்றவுடன் அவர் நம்மிடம் கேட்கிறார்,
" உனக்கு என்ன வேண்டும்?"
நமக்கும் பெலவேந்திரரைப் போல இயேசுவைப் பற்றி அதிகமதிகமாய் அறிய ஆசை இருக்கிறது.
அவரைப்போலவே
 நாமும் இயேசு இருக்கும் இடத்திற்குச் சென்று,
 அவரோடு  தங்கி,
 அவரோடு உரையாடி,
 அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோமா?
அது  எப்படி முடியும்?
பெலவேந்திரர் இயேசுவின் சம காலத்தவர்.
 ஆகவே அவரை நேருக்கு நேர் பார்க்கவும்,
 அவரோடு நேருக்கு நேர் பேசவும்,
 அவர் சென்ற இடமெல்லாம் கூடவே செல்லவும் 
வாய்ப்பு இருந்தது.
நமக்கு?
நமக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறதே!
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment