Friday, October 23, 2020

என்ன வேண்டும்?(தொடர்ச்சி).

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_23.html

என்ன வேண்டும்?
(தொடர்ச்சி)
??????????????????????????????!

பெலவேந்திரர்

இயேசு அழைக்காமலேயே அவரைப் பின் தொடர்ந்து,

அவருடன் அவர் வசித்த   இடத்திற்கு சென்று,

அவரோடு தங்கி,

அவர்தான் மெசியா என்பதை அறிந்து,

தன்னுடைய சகோதரர் சீமோனைச் சந்தித்து,

அவருக்கு தான் அறிந்ததை அறிவித்து,

அவரையும் அழைத்துக்கொண்டு

இயேசுவிடம் வந்தார்.

ஒரு நற்செய்தி
அறிவிப்பாளருடைய முழு பணியையும் இதைவிட சுருக்கமாக  சொல்ல முடியாது.

தேடல், அறிதல், அறிவித்தல், அழைத்து வருதல்.

நமக்கு பெலவேந்திரர் ஒரு எடுத்துக்காட்டு.

நாமும்

ஆண்டவரைத் தேட வேண்டும்,

அவரை அறிய வேண்டும்,

அவரை அறிவிக்க வேண்டும்,

மற்றவர்களை அவரிடம் அழைத்து வரவேண்டும்.

பெலவேந்திரர் ஆண்டவரை நேரடியாகப் பார்த்தார். பின்தொடர்ந்தார்.

இப்போது  இயேசு விண்ணகத்தில் இருக்கிறார்.

நாம் எப்படி அவரைத் தேடி கண்டு பிடித்து, அறிந்து அறிவிக்க இயலும்?

இப்படி எல்லாம் கேட்போம் என்று தெரிந்துதான் இயேசு விண்ணகம் எய்துமுன் சீடர்களிடம்,

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்.".
'
என்று சொன்னார்.

சும்மா ஒப்புக்காக, ஆறுதலுக்காக சொன்ன வார்த்தைகள் அல்ல இவை.

உண்மையான, உயிருள்ள வார்த்தைகள்.

பொருள் தெரிந்து சொன்ன வார்த்தைகள்.

He meant what He said.

இயேசு இப்போது நம்மோடு தான் இருக்கிறார்.

வெளியூரில் இருக்கும் நமது நண்பர்கள் நம் உள்ளத்தில் இருப்பதுபோல் அல்ல.

அவர்கள் நம் ஞாபகத்தில்தான் இருக்கிறார்கள்.

இயேசு உண்மையாவே நம்முடன் இருக்கிறார்.

நமது ஊனக் கண்களால் அல்ல, விசுவாசக் கண்களால் அவரைப்  பார்க்க முடியும்.

"விசுவசிப்பவனுக்கு எல்லாம் கூடும்"
(மாற்கு, 9:23)

அவர் இன்றும் உலகில் செயலாற்றிக் கொண்டிருப்பது

நமது உள்ளத்தில்,

திவ்ய நற்கருணையில்,

திருச்சபையில்.

நமது உள்ளம் ஆண்டவரின் ஆலயம்.

நாம் கையால் கட்டப்பட்ட ஆலயங்களுக்கு எப்போதாவதுதான் போக  முடியும்.

ஆனால் நம் உள்ளம் என்னும் ஆலயத்தில் ஆண்டவரோடு நாமும் இருக்கிறோம்.

நமது உடலில் உள்ள இருதயம் எப்போதும் இயங்சிக் கொண்டிருப்பது போல்,

நமது ஆன்மாவின் இதயமாகிய உள்ளம் எப்போதும் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஒரு வினாடி கூட நம்மால் எதையாவது நினைக்காமல் இருக்க முடியாது.

தூங்கும்போதுகூட நமது அடிமனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

உள்ளம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கும் நமது ஆண்டவர்

நாம் நினைப்பவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.

நமக்கு மிகவும் வேண்டியவர்கள் நம் அருகிலேயே இருந்தால் நாம்  அவர்களுக்கு பிடிக்காத எதையும் பேசுவோமா?

அவர்கள் விரும்புவதை மட்டும் பேசினால் தான் அவர்களுடன் நமக்குள்ள அன்பு அதிகமாகும்.

அதுபோல் நமது உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கிறார் என்ற உணர்ச்சியுடன் நாம் இருந்தால்

நமது நினைவுகள் எல்லாம் அவருக்கு பிடித்தமானவைகளாகத்தான் இருக்கும்.

அதுமட்டுமல்ல நமது நினைவுகள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்.

நமது ஆண்டவரும் நமது உள்ளத்தில் நம்மோடு பேசுவார்.

ஆக ஆண்டவரை எங்கும் தேடிப் போகாமலேயே

நமது உள்ளத்தில் காணலாம்.

அவரோடு பேசலாம்.

நமக்கு வேண்டியதைக் கேட்கலாம்.

நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கலாம்.

அவருக்கு நன்றி கூறலாம்.

நம் உள்ளத்தில் வாழும் நம் ஆண்டவர் நம்மை ஒவ்வொரு வினாடியும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

நமது வாழ்வின் கடந்த காலத்தை நாம் கொஞ்சம் உற்று நோக்கினால் நம் வாழ்வின் நிகழ்வுகளின் காரணகாரிய தொடர்பு நன்கு புரியும்.

சில நிகழ்ச்சிகள் தற்செயலாய் நடந்தன  போன்று தோன்றும் ஆனால் அதன் விளைவு (effect) நிகழ்ச்சியை உற்று நோக்கினால்  அதில் இறைவனின் கரம் இருப்பது புரியும்.

பெப்ரவரி மாதத்தில் ஒருநாள் நான் பாவூர்சத்திரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,

என்னுடைய old Students ல் ஒருவர் என்னை சந்திக்க நேர்ந்தது.

"வணக்கம் சார். நம்முடைய மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வரத் திட்டம் இட்டுள்ளோம்."

"அப்படியா,  என்ன விசேசம்?"

"96ஆம் ஆண்டு 10 C பழைய மாணவர்கள் ஒரு WhatsApp group வைத்திருக்கிறோம்.

மே 17 ல் ஒரு get together வைத்திருக்கிறோம். அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உங்களை அழைக்க வரப் போகிறோம்."

"ஆனால் அன்று நான் அமெரிக்காவில் அல்லவா இருப்பேன்!"

"சார், அப்போ....."

"சரி. அது இருக்கட்டும். உங்கள் group ல் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்."

"Sir, நாங்க சின்ன பிள்ளைகள் போல் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். நீங்கள் எங்களது ஆசிரியர்.

உங்களுக்கு நாங்கள் பேசுவது பிடிக்குமோ  என்னமோ!"

"அதெல்லாம் பிடிக்கும்! நானும் இப்போது சின்ன பிள்ளை தானே!"

"சரி, சார்;  சேர்த்துக் கொள்கிறோம்."

இது ஒரு சாதாரண விஷயம்.

ஆனால் இதில் இறைவனது திட்டம்  இருப்பது எனக்கு பின்னால் தான் தெரிந்தது.

நான்  மார்ச் ஆரம்பத்தில் என் மகன் குடும்பத்தோடு அமெரிக்கா சென்றேன்.

மே கடைசியில் ஊருக்குத் திரும்புவதாகத் திட்டம்.

ஆனால் உலகில்  கொரோனா ஆக்கிரமிப்பின் காரணமாக flight ticket Cancel ஆகிவிட்டது.

July 17ல் தான் rescue flight ல் பெங்களுருக்குத் திரும்பினோம்.

ஆனால் அங்கிருந்து ஊருக்கு வர E-pass பெறுவதில் பிரச்சனை.

ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போதும் rejected என்றே பதில் வந்து கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று புரியவில்லை.

அப்போது என்னுடைய பழைய மாணவர்கள் group ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு message கொடுத்துப் பார்ப்போமே என்று நினைத்து,

"அன்பு மாணவர்களே, நான் பெங்களூரில் இருந்து ஊருக்கு வர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். யாராவது உதவிக்கு வாருங்களேன்!"

என்று group ற்கு message கொடுத்தேன்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மகேஷ் என்ற மாணவன் பதில் Message கொடுத்திருந்தான்.

"Sir, உங்களுடைய ID proof ஐ உடனே என் நம்பருக்கு அனுப்புங்கள். e-pass எடுத்து உங்களை ஊருக்கு அழைத்துக் கொண்டு போவது என் பொறுப்பு!"

அவன் புங்கம்பட்டி பையன். பெங்களுரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

நான் ID proof ஐ  அனுப்பி வைத்தேன்.

அவனே E-pass எடுத்து, அவன் காரிலேயே என்னை பாவூர்சத்திரத்தில் என்னுடைய  வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்துவிட்டான்.

நான் மாணவர்கள் group ல் சேர்ந்தது தற்செயல் நிகழ்ச்சி அல்ல

என்னை ஊருக்கு அழைத்து வர இறைவன் போட்ட திட்டம் என்று அப்போதுதான் தெரிந்தது.

இறைவனுக்கு நன்றி!

ஒவ்வொருவர் வாழ்விலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடந்து கொண்டே இருக்கும்.

விசுவாச கண்ணால் பார்த்தால்தான் அவை நமக்குத் தெரியும்.

அடுத்து இயேசு திவ்ய நற்கருணைப் பேழையில்  நமக்காக இரவும் பகலும் காத்துக்கொண்டிருக்கிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

.

No comments:

Post a Comment