Sunday, October 18, 2020

சமாதானமா? அமைதியா

சமாதானமா? அமைதியா
""""""""""""""""""----------------'''''''''''''''''''''''''''''
வகுப்பிற்குள் நுழைய கால் எடுத்து வைத்தபோது, உள்ளே ஒரே கூச்சல்.

உட்கார்ந்து கொண்டே வாய்ச் சண்டையும் கைச் சண்டையும் போட்டுக்கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.

முன் டெஸ்கில் பிரம்பால் ஓங்கி ஒரு அடிகொடுத்துவிட்டு   உள்ளே நுழைந்தேன்.

கப்..சிப். 

ஒரு மாணவனது குரல் என் காதில் விழுந்தது.

"Recess போகும்போது வைத்துக் கொள்கிறேன்ல."

"Sit down. நீ வாடா இங்க." 

"Sir..." 

"என்ன சொன்ன?"

"ஒண்ணும் சொல்லல, சார்."

"நீ இங்கே வாடா. உன்னிட்ட என்ன சொன்னான்?"

"Recess போகும்போது வைத்துக் கொள்கிறேன்ல ன்னு சொன்னான், சார்."

" Recess போகும்போது என்ன வைக்கப்போற?"

"அவன் என்ன அடிச்சான், சார்"

"டேய், நீ இவன அடிச்சியா,"

"தெரியாம அடிச்சிட்டேன், சார். மன்னித்துக் கொள்ளுங்கள், சார்."

"தெரியாமன்னா? கண் தெரியாமலா?"

"நான் அடித்தது தப்புதான். மன்னித்துக் கொள்ளுங்கள், சார்."


"எங்கிட்ட மன்னிப்பு கேட்கிற. என்னையா அடிச்ச?"

"இல்லை. சார்."

"அவங்கிட்ட மன்னிப்பு கேளு."

"சாரிடா. மன்னிச்சிடுடா."

அவன் என்னைப் பார்த்தான்.

"என்னை ஏன் பார்க்கிறாய்? அவனைப் பாரு. மன்னிப்புக் கேட்டு விட்டான் மன்னித்துவிடு."

"அவன் திரும்பவும் அடிப்பான், சார்."    


"அடிக்க மாட்டேன்டா. மன்னிச்சிடுடா. கால்ல வேணும்னாலும் விழுகிறேன், டா."

"மன்னிப்பு கேட்டு விட்டான், அதற்கு மேல் விசாரணை கிடையாது.

 அவனை பார்த்து மன்னித்துவிட்டேன் சொல்லு."

"மன்னித்துவிட்டேன்."

"நன்றி, டா."

"இரண்டு பேரும் கைகுலுக்கிக் கொள்ளுங்க."

கைகுலுக்கிக் கொண்டார்கள்.

"இப்போ உங்கள் இரண்டு பேருக்கு இடையே என்ன ஆனது?"

"சமாதானம் ஆகி விட்டது, சார்."

"சரி அமைதியாகப் போய்   உட்காருங்கள்.

மாணவர்களே, இரண்டு பேருக்குள்ளும்     சமாதானம் ஆகி விட்டதாக கூறுகிறார்கள் சமாதானம் என்றால் என்ன?

மகேஷ் சொல்லு"

"சண்டையினால் உறவை இழந்த இருவர் ஒருவரையொருவர் மன்னித்துக் கொண்டதால்   ஏற்படும் உறவுதான் சமாதானம்."

"அமைதி என்றால்?"

"சத்தம் இல்லாமல் இருத்தல்."

"நான் வகுப்பிற்குள் வரும்போது கூச்சலோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தீர்கள்.

பிரம்பு சத்தத்தை கேட்டவுடன் அமைதி ஆகிவிட்டீர்கள். 

கூச்சலோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, உங்களிடையே ........ம் இல்லை,  ........இல்லை. பூர்த்தி செய், ராஜ்."



"கூச்சலோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, எங்களிடையே சமாதானமும் இல்லை, அமைதியும் இல்லை."

"பிரம்புச் சப்தத்தை கேட்டவுடனே?''

"அமைதி வந்தது, சமாதானம் இல்லாமலேயே."

"ஆகவே சமாதானமும் அமைதியும் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள் அல்ல.

வெர்செய்ல்ஸ் (Versailles) உடன்படிக்கை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?''

"ஆமா சார். முதல் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை."

"உண்மையிலேயே அது சமாதான உடன்படிக்கைதானா?"


"இல்லை சார். அது வெறும் அமைதி உடன்படிக்கை."

"தோற்ற நாடுகள் வென்ற நாடுகளை மன்னிக்கவில்லை.

 வென்ற நாடுகளும் தோற்ற நாடுகளை மன்னிக்கவில்லை. மன்னிக்காமல் எப்படி சமாதானம் வரும்?"

"எப்படி அமைதி உடன்படிக்கை?"

"உடன்படிக்கைஏற்பட்டு சில ஆண்டுகள் போர் ஏற்படாமல்   அமைதி நிலவியது.

ஆனால் அந்த அமைதி காலத்தில் நாடுகள் அடுத்த போர் ஆரம்பிப்பதற்காகத் தங்களை தயாரித்துக் கொண்டு இருந்தன.

தயாரித்து முடிந்தவுடன் இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்தன."

"இரண்டாம் உலகப்போரின் முதல் காரணம் என்ன?"

"முதல் உலகப் போரின் இறுதியில் ஏற்பட்ட சமாதான,  

Sorry, 

அமைதி ஒப்பந்தம் தான் இரண்டாம் உலகப்போரில் முதல் காரணம்."

"இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

 அமைதி நிலவுவதால் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம் அல்ல.

இப்போ சொல்லுங்கள்,

 உலகிற்கு  வேண்டியது சமாதானமா? அமைதியா?"

"இரண்டுமே வேண்டும், சார்."

"Correct. சமாதானம், அமைதி இரண்டும்  வெவ்வேறு வார்த்தைகள்,

வெவ்வேறு நிலைகளைக் குறிப்பவை.

ஒன்றோடொன்று தொடர்பு உடையவை.

சமாதானம் இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள மக்களின் சுமுகமான உறவை குறிக்கிறது.

அமைதி நமது மன நிலையை குறிக்கிறது.

Peace of mind.

ஒருவன் தன்னுடனேயே கொண்டுள்ள உறவு.

ஒருவன் தன்னுடனே சுமூகமான உறவைக் கொண்டிருந்தால்
 அவனது   மனம் அமைதியாக இருக்கும்.

பசிபிக் பெருங்கடல், அதாவது, அமைதிப் பெருங்கடல்.

உலகிலேயே மிக ஆழமான கடல்.

ஆசியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள கடல்.

அலைகளே இல்லாத கடல்.

விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், இறை அன்பிலும் ஆழமாக உள்ள மனதில் 

போராட்டங்களாகிய அலைகள் இருக்காது.

 மனம் எப்பொழுதும் அமைதியாக இருக்கும்.

 அமைதியை ஆண்டவர் இருப்பிடம் என்பார்கள்.

அமைதியில் தான் ஆண்டவர் பேசுவார். 

அமைதிதான் ஆன்மீக தியானத்திற்கு ஏற்ற மனநிலை.

இறைவனோடும் தனது அயலானோடும் சுமூகமாக இருக்கும் மனிதனின் மனது அமைதியாக இருக்கும்.

அதாவது சமாதானம் உள்ள மனதில்தான் அமைதி இருக்கும். 

இதுதான் சமாதானத்திற்கும் அமைதிக்கும் உள்ள தொடர்பு.

இறைவனோடு சமாதானமாக இல்லாத மனது பாவ நிலையில் உள்ளது.

பாவ நிலையில் உள்ள மனதில் அமைதி இருக்காது.

மன அமைதி வேண்டுமென்றால்

 முதலில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை சுமுகமாக்க வேண்டும்,

 அதாவது,

 நமது பாவங்களுக்காக மனம் வருந்தி,

 மன்னிப்பு கேட்டு,

 பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளவேண்டும்.

இறைவனோடு   சமாதானமாக இருக்கும் மனிதன் இயல்பாகவே அயலானோடும் சமாதானமாக இருப்பான்.

இறைவனோடும் அயலானோடும் சமாதானமாக இருக்கும் மனிதனின் மனதில் போராட்ட அலைகள் இருக்காது.

போராட்ட அலைகள்  இல்லாத மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கும்.

சமாதானமும், அமைதியும் நமது மனதின் இரண்டு நிலைகள்.

காரண, காரிய  (Cause and effect) தொடர்பு உள்ளவை.

சமாதானம்தான் அமைதிக்கு காரணம்.

இதை நமது அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

நமது மனதுக்கு பிடிக்காத ஒருவரை சந்திக்க நேரிட்டாலே நமது மன அமைதி பாதிக்கப்படும்.

எல்லோரும் நமக்கு பிடித்திருந்தால் 

அதாவது 

எல்லோரோடும் நமக்கு சமாதானமான உறவு இருந்தால்

 நமது மனது அமைதியாக இருக்கும்.


போராட்டங்கள் நிறைந்த உலகில் ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்றால்,

அவன் மனதில் யார் மீதும் வெறுப்பு இல்லை என்பது பொருள்.

அன்பு இருக்கும் இடத்தில் வெறுப்பு இருக்காது.

அன்பு இருக்கும் இடத்தில்
சமாதானம் இருக்கும்.

அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும்.

அன்பு இருக்கும் இடத்தில் உண்மையான மகிழச்சி இருக்கும்.

அன்பே கடவுள்.
God is Love.

ஆக,

இறைவன் இருக்கும் மனதில் 
சமாதானம் இருக்கும்.
அமைதி இருக்கும்.
மகிழ்ச்சி இருக்கும்.

ஆகவே, மாணவர்களே....."

"நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்ய வேண்டும்."

"Very good."

"சார், ஒரு சின்ன சந்தேகம்.

 பிரம்பு இருக்கும் இடத்தில் அன்பு இருக்குமா?"

"எனக்கு உங்கள் மேல் அன்பு இருப்பதால்தான் என் கையில் பிரம்பு இருக்கிறது.

கடவுள் கூட அப்பப்போ பிரம்பைப் பயன்படுத்துவார்,

நம்மைத் திருத்துவதற்காக.

இப்போ ஒரு கேள்வி.

சமாதானத்திற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உண்டு.

 ஆனால் அமைதிக்கு இரண்டு அர்த்தங்கள். எவையெல்லாம்? குமார், சொல்லு."

"ஒன்று மன அமைதி. 

அடுத்தது வாயைப் பொத்திக் கொண்டு இருக்கும்போது ஏற்படும் அமைதி."

"வகுப்பில் அமைதியாக இருக்க வேண்டுமா?"

"மன அமைதி எப்போதுமே வேண்டும்.

ஆனால் வகுப்பில் வாய் எப்போதும் அமைதியாய் இருந்தால்,

உங்களால் பாடம் நடத்தவும் முடியாது,

 எங்களால் உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாது.

 ஆகையினால் எப்போது அமைதியாய் இருக்க வேண்டுமோ அப்போது அமைதியாய் இருக்க வேண்டும்,

 எப்போது பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும்."

"ரெக்ஸ், எப்போது அமைதியாய் இருக்க வேண்டும்?

எப்போது பேச வேண்டும்?"

"சார், நீங்கள் பேசும் போது நாங்கள் அமைதியாய் இருக்க வேண்டும்.

அமைதியாய் இருந்து நீங்கள் சொல்வதை கவனிக்கவேண்டும்.

நாங்கள் பேசும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்." 

"அப்போ,...."

"சார், நான் இன்னும் சொல்லி முடிக்கல."

"சரி, சொல்லு."

"நீங்கள் பாடம் நடத்துவதை  நாங்கள் அமைதியாகக் கவனிக்க வேண்டும்.

பாடத்தில் ஏதாவது சந்தேகம் வந்தாலும் நீங்கள் கேள்வி கேட்கும் போதும் நாங்கள் பேச வேண்டும்."

"ஜெபம் சொல்லும்போது?"

"நாமே வளவள என்று பேசிக்கொண்டே இருக்கக்கூடாது.

கடவுள் பேசுவதையும் கேட்க வேண்டும்."

"கடவுள் சொல்வதை கேட்டால் தான் மனதில் சமாதானமும், அமைதியும் நிலைத்திருக்கும்." 
 
"உலகில் நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம். உண்டாகுக." (லூக்.2:14)

லூர்து செல்வம்.


''
.

No comments:

Post a Comment