Saturday, October 24, 2020

என்ன வேண்டும்?(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_24.html


என்ன வேண்டும்?
(தொடர்ச்சி)
??????????????????????????????!

நமது உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு,

 அங்கு நிரந்தரமாகத் தங்கி,

 நம்மை வழிநடத்துபவரும்,

 
நமது ஆலயங்களில் 24 மணி நேரமும் தங்கி,
 
நம்மோடு உரையாட நமது வருகைக்காகக் காத்துக் கொண்டிருபப்பவரும்,

கன்னி மரியாளின் வயிற்றில் மனு உரு எடுத்து,

நமக்காக வாழ்ந்து,

 நமக்காக மரித்த அதே இயேசு தானே!

மரியாளின் வயிற்றில் உருவான அதே உடலோடும் இரத்தத்தோடும் தானே 

திவ்ய நற்கருணை பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்!

ஆலயத்திற்கு சென்று அமர்ந்து திவ்ய நற்கருணை நாதரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே

 அபரிமிதமாக அருள் வரங்களை அள்ளிக் குவிக்கலாம்!

 நாம் பேச வேண்டியதில்லை.

மனதை மட்டும் அவரில் ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

ஒரு ஏழை விபசாயி ஒவ்வொரு நாளும் வயலுக்கு வேலைக்குப் போகும்போதும், கோவிலுக்குள் நுழைந்து,

நின்றுகொண்டே ஐந்து நிமிடங்கள்   நற்கருணை  நாதரைப் பார்த்துவிட்டுப் போவான்.

இதை கவனித்துக் கொண்டிருந்த பங்குத்தந்தை ஒருநாள் அவனிடம்,

"ஐந்து நிமிடத்தில் என்ன ஜெபம் சொல்வீர்கள்?"  என்று கேட்டார்.

"சுவாமி,  எனக்கு வார்த்தைகளைக் கொண்டு ஜெபம் சொல்லத் தெரியாது.

ஐந்து  நிமிடங்கள் நான் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

 அவர் என்னை பார்த்துக் கொண்டிருப்பார்.

 அவ்வளவுதான் என் ஜெபம்."

இதைவிட சக்திவாய்ந்த ஜெபம் வேறு இருக்க முடியாது.

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கோவிலுக்குச் சென்று திவ்ய நற்கருணையைச் சந்திக்க வேண்டும்.

திவ்விய நற்கருணையை சந்திக்கச் செல்வது நமது ஆண்டவராகிய இயேசுவை ஆராதிப்பதற்காக. 

நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது அவர்களுக்குள் உள்ள அன்பினை பரிமாறிக் கொள்வதற்காகத் தான்.

நட்பின் அடிப்படை அன்பு ஒன்றுதான்.

 நட்பின் உயிரும் அதுதான். 

நாம் வங்கிக்குச் செல்வது பணப் பரிவர்த்தனைக்கு மட்டுமே, 

வங்கி ஊழியர்களுக்கு நமது அன்பை தெரிவிப்பதற்காக அல்ல.


நாம் கடைக்குச் செல்வது பொருள்கள் வாங்குவதற்காக மட்டுமே,

 கடைக்காரருக்கு நமது அன்பை தெரிவிப்பதற்காக அல்ல.

நாம் குளத்தை தேடிச் செல்வது அங்கு குளிப்பதற்காக மட்டுமே,

 குளத்திற்கு நமது அன்பை தெரிவிப்பதற்காக அல்ல.

ஆனால் நண்பர்களைப் பார்க்க விரும்புவது தமது அன்பை பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமே.


ஒருவருக்கொருவர் உதவி செய்வது இயல்பாக வரக்கூடியது.

உதவி பெறுவதற்காக மட்டும் நட்பை வைத்திருப்பவன் உதவி கிடைக்காவிட்டால் நட்பை விட்டு விடுவான்.

நாம் திவ்ய நற்கருணை நாதரை தேடிச் செல்வது அவரை ஆராதிப்பதற்காகவும்  நமது அன்பை தெரிவித்துக் கொள்வதற்காகவும் மட்டும்தான்.

நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

நாம் கேட்டு அவர் நம்மை படைக்கவில்லை.

தான் படைத்ததை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அவருக்கு தெரியும்.

கடவுளுக்கு நாம் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

நமது வாழ்வின் ஒரே நோக்கம் விண்ணக வாழ்வு.

விண்ணக வாழ்வை அடைவதற்கு நம்மிடம் இருக்க வேண்டியது ஆண்டவருடைய அருள்.

ஆண்டவரை ஆராதிக்கும் போது அவர் நம்மை தனது அருளால் நிரப்புவார்.

ஆராதிப்பதற்கு வார்த்தைகள்  தேவை இல்லை.

  ஆண்டவரை நமது எல்லாமாக ஏற்றுக்கொண்டு  நாம் அவர் முன் முற்றிலுமாக சரண் அடைவதே ஆராதனை.

கடவுளை நமது எல்லாமாக ஏற்றுக் கொள்ளும் போது அவரை நம்மை காப்பாற்றுகிறவராகவும் ஏற்றுக் கொள்கிறோம்.

நம்மைப் பற்றி நாம் கவலை பட்டுக் கொண்டிராமல் இறைவனை அடுத்த காரியங்களிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துவோம்.

 நம்மை அவர் கவனித்துக்கொள்வார். 


அடுத்து நம் ஆண்டவர் தான் நிறுவிய திருச்சபையில்இருக்கிறார்.

திருச்சபையில் இருந்து அதை வழி நடத்திக் கொண்டிருப்பவர் அவரே.

 தமது பிரதிநிதிகளான  பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் மூலமாக திருச்சபையை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

 தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றுவது குருக்களாக இருந்தாலும் அவற்றில் செயலாற்றுவது இயேசுவே.

ஞானஸ்நானத்தில்

"நான் உன்னைக் கழுவுகிறேன்" என்றும்,


பாவசங்கீர்த்தனத்தில் 

"நான் உன் பாவங்களை மன்னிக்கிறேன்."

"I absolve you from your sins in the name of the Father, and of the Son, + and of the Holy Spirit.'

என்றும்,

திருப்பலியின் போது

"இது என் சரீரம்".
"இது என் இரத்தம்"

என்றும் 

குருவின் வாயிலாகச்  சொல்வது இயேசு கிறிஸ்துவே.

நமது ஆன்மீக வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்தால்

 நாம் இயேசுவின் பிரதிநிதியான குருவானவரைத்தான் அணுக வேண்டும்.

அவர் நமது ஆன்மீக வழிகாட்டியாக (Spiritual Director) சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் 
இயேசுவின் வார்த்தையே.

அதற்கு அப்படியே கீழ்படிந்தால் நாம் இயேசுவிற்கு தான் கீழ்ப்படிகிறோம்.

நமது ஆன்மீக வழிகாட்டிக்கு கண்ணை மூடிக்கொண்டு
 கீழ்ப்படியலாம்.

பைபிள் வாசிக்கும்போது நமக்கு விளக்கம் தேவைப்பட்டால் நாம் அணுக வேண்டியது நமது ஆன்மீக வழிகாட்டியான பங்குக்குருவைத்தான்.

நமது யாத்திரையின் முடிவில் நமக்கு அவஸ்தை பூசுதல் கொடுத்து, நம்மை விண்ணகத்திற்கு அனுப்பி வைப்பது நமது ஆன்மீக வழிகாட்டிதான்.


ஞானஸ்நானம் முதல் அவஸ்தைப்பூசல் முடிய 

அதாவது நமது வாழ்நாள் முழுவதும்

 நம்முடைய ஆன்மீக பயணத்தில் குருவானவரின் உருவில் நம்முடன் வருவது இயேசுகிறிஸ்துவே.

இதை  உணர்ந்து செயல்படுபவர்கள் அடிபிறழாமல் ஆன்மீகத்தில்   நடந்து ஆண்டவரை அடைவார்கள்.

நம்மில் அநேகர் பங்குக் குருவானவரை  ஒழுங்காக தங்கள் வாழ்வில் பயன்படுத்துவது இல்லை.

இவர்கள் கையில் தண்ணீரை வைத்துக் கொண்டே தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காதவர்களுக்குச் சமம்.

நாம் இயேசுவோடு இருந்து அவரை அறிந்தபின் அவரை அறியாதவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இது நமது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.

நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது அவரை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்கள் பாடு.

ஆனால் நாம் அறிவிக்காவிட்டால் நமது கடமையில் தவறுகிறோம்.

முதலாவது நமது வாழ்க்கையின் மூலம் அறிவிக்க வேண்டும்.

அடுத்து நமது வார்த்தையின் மூலம் அறிவிக்க வேண்டும்.


ஆனால் ஆளுக்கொரு  பைபிளை எடுத்துக்கொண்டு, 

திருச்சபையின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறி, 

இஷ்டம்போல் இறை வாக்கிற்கு விளக்கம் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

எதைச் செய்தாலும்

 தாய்த் திருச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து

 திருச்சபையோடு இணைந்து செயலாற்ற வேண்டும்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.

 தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,

 அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்: 

நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.


22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல்

 அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, 

நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.

23 இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், 

அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக."
(அரு17:21-23)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment