Tuesday, October 20, 2020

சமம் + தானம்

http://lrdselvam.blogspot.com/2020/10/blog-post_20.html


              சமம் + தானம்
""""""""""""""""""----------------'''''''''''''''''''''''''''''

தூய தமிழ்ப் பிரியர்களுக்கு  "சமாதானம்" என்ற வார்த்தை பிடிப்பதில்லை,

ஏனெனில்,

அது வடமொழிச்சொல்.

பல இன மக்கள் சேர்ந்து வாழும் போது 

அவர்கள் பேசும் மொழிச்
சொற்களும் ஒன்றோடு ஒன்று  கலந்து விடுகின்றன.

 இது வரலாற்று அனுபவம்.

ஆங்கிலேயர்கள் நம்மை நீண்ட நாள் ஆண்ட காரணத்தினால்

 நம்மிடையே சில ஆங்கிலச் சொற்கள்

 தமிழ் சொற்கள் போலவே பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணத்திற்கு:

சட்டை      = Shirt.
சாப்பாடு = Supper
தின்னு    = dine
போடு        = put

சட்டையைப் போடு  = put on your shirt.

அதே போல சமாதானம் என்ற சொல்லும் வட மொழியிலிருந்து வந்ததுதான்.

ஆனால்,

எப்படி அமெரிக்காவில் வாழும் தமிழன் அமெரிக்க உணவை உண்ணும் போது அது தமிழ் உடலாக மாறிவிடுகிறதோ

அதேபோல்தான் சமாதானம் என்ற வடமொழி தமிழாகவே மாறிவிட்டது. 

அதுமட்டுமல்ல அந்த வார்த்தை நமது மறை வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது.

சமம் + தானம் = சமாதானம் =equal place = equal status.

நமது மறை வாழ்வின் மையம் எது?

இறைமகன் மனு உரு எடுத்தது.

இறைமகன் எதற்காக மனுமகன் ஆனார்?

மனிதனை பாவக் குழியிலிருந்து மீட்டு,  விண்ணை நோக்கி எழுப்ப,

God came 'down' to the world to lift us 'up'  to Heaven.

விழுந்தவனைத் தூக்க வேண்டுமென்றால் 

தூக்குகிறவன்  குனிந்துதான் ஆக வேண்டும்.

  கிணற்றுக்குள் விழுந்தவனை தூக்க வேண்டும் என்றால் 

கிணற்றுக்குள் குதித்துதான்,

அதாவது விழுந்தவன் இருக்கிற இடத்திற்கு சமமாக இறங்கிதான்

 அவனை மேலே தூக்க முடியும்.

இது உலகியல் உண்மை மட்டுமல்ல,    

 மறையியல் உண்மையும் இதுதான்.

நாம் செய்த பாவத்தினால் இறைவனுக்கும் நமக்கும் இருந்த உறவு முறிந்து விட்டது.

முறிந்த உறவை திரும்பவும் ஏற்படுத்தவே,

அதாவது பாவத்தில் இருந்து மீட்டு  நம்மை தூக்கி விடவே

இறைமகன் நமக்கு சமமாக மனிதனாய் பிறந்தார்.


இறைவன் மனிதரைப் பாவத்திலிருந்து   மீட்க 

தன்னை மனித நிலைக்கு தாழ்த்தி

 அவன்செய்த பாவங்களை தானே சுமந்தார், அவற்றிற்கு பரிகாரம் செய்வதற்காக.

அதாவது
 மனிதனின் சம தானத்திற்கு இறங்கி,

அவனை சமாதானத்திற்கு   அழைத்தார்.

"தம்மையே வெறுமையாக்கி,

 அடிமையின் தன்மை பூண்டு

. மனிதருக்கு ஒப்பானார். 


மனித உருவில் தோன்றி,

தம்மைத் தாழ்த்திச் 

சாவை ஏற்கும் அளவுக்கு, 

அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.
(பிலிப். 2:7,8)

ஆக, இறைமகன் நம்மை மீட்க நம்மோடு சமாதானம்

(நம்மேல் சம தானத்திற்கு வந்து)

 செய்து கொண்டார்.

 அவர் தந்த சமாதானத்தை நாம் ஏற்றால்தான் நாம் மீட்பு பெற இயலும். 

சமாதானம் என்ற வார்த்தையில் அடங்கியுள்ள 

மறையியல்   தத்துவம் புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். 

 பொருளில் அதற்குச் சமமான வேறு வார்த்தை தமிழில் இல்லை. 

அது எந்த மொழியிலிருந்து   வந்தால் என்ன?

 பொருள் தரக்கூடியதாய் இருந்தால் போதும்,

 இந்தியர் சுகம் இல்லாமல் இருக்கும் போது அமெரிக்க மருந்தை எடுக்க மாட்டாரா?

 பசிக்கும்போது தமிழர் வட இந்திய கோதுமை உணவை உண்ண மாட்டாரா?

திருவள்ளுவர்   எழுதிய  முதல் குறள். 

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."

இதில்,

 "பகவன்"
 ( Sanskrit: भगवान्, Bhagavān)
என்ற வடமொழிச் சொல்லால்தான் 
கடவுளைக் குறிப்பிடுகிறார்.

அவரை யாராவது குறை
 சொல்லுகிறோமா?

நாமும் சமாதானம் என்ற சொல்லை பயன்படுத்துவதில்   
தவறு ஒன்றும் இல்லை என்பது அடியேனின் கருத்து.

ஆசிரியர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம்:

மிகவும் குறைந்த மதிப் பெண் பெற்ற பையனை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டுமானால்

 அவனோடு சம நிலையில் அமர்ந்து, 

அவனுக்குப் புரியக்கூடிய விதமாய் நம்முடைய போதனா முறையை மாற்றி 

அவனுக்கு பாடத்தை விளக்க வேண்டும்.

தாயினால் எப்படி மகனுக்குக் கடினமான பாடத்தையும் புரியும்படி சொல்லி கொடுக்க முடிகிறது?

மகனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு 

முகத்தோடு முகம் வைத்து சொல்லிக் கொடுப்பாள்.

  நீச்சல் சொல்லிக் கொடுப்பவர்கள் படிப்பவர்களோடு தண்ணீருக்குள் இறங்கி விடுவார்கள்.

ஏழ்மையின்  மகத்துவத்தை நமக்கு போதிப்பதற்காக

சர்வ வல்லப தேவன் ஏழையாகப் பிறந்தார்.

கீழ்ப்படிதலின் அவசியத்தை போதிப்பதற்காக 
.
இறைமகன் மனுமகன் ஆகி 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து வளர்ந்தார்.

நமக்கு வருகின்ற துன்பங்களை ஆண்டவருக்காக பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போதிப்பதற்காக

 இயேசு நமக்காக துன்பங்களை தாங்கிக் கொண்டார்,

நமக்கு வரும் அவமானங்களால் நாம் நிலைகுலைந்து போக கூடாது என்பதை போதிப்பதற்காக

 இயேசு யூதர்கள் செய்த   அவமானங்களைத் தாங்கிக் கொண்டார்.

அன்பர்களுக்காக உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்பதை போதிப்பதற்காக

 இயேசு சிலுவை மரத்தில் தன் உயிரையே நமக்காகத் தியாகம் செய்தார்.


நமக்கு தீமை செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும் என்று நமக்கு போதிப்பதற்காக 

தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார். 

இவ்வாறு போதனைகளை   நம் நிலைக்கு இறங்கி வந்து முன்மாதிரியாக வாழ்ந்து நமக்கு போதித்தார்.

*நம் நிலைக்கு அவர் இறங்கி வந்ததன் நோக்கம் நம்மை அவர் நிலைக்கு  உயர்த்த.*


இயேசு சமாதானத்தின் தேவன்.

மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் சமாதான உறவை ஏற்படுத்திய கடவுள்.

இயேசு காட்டிய வழியில் நடந்தால் தான் உலகில் சமாதானம் நிலவும்.

"நானே 

வானினின்று 

இறங்கிவந்த 

உயிருள்ள உணவு"
(அரு. 6:51)

நாம் ஏற்றம் பெற
இறங்கி வந்தவர் இயேசு.

வாழ்வோம் இயேசு தந்த சமாதானத்தோடு, இங்கும், விண்ணிலும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment