Friday, June 19, 2020

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."(மத்.11:28

சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."
(மத்.11:28)
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-



இயேசு நம் மீது அவருடைய மாறாத அன்பு, பரிவு, இரக்கத்தின் காரணமாகத்தான் அவர் சொல்லுகிறார்,


"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்."


உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
 ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.

ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."

ஆறுதல் அளிக்கும் இயேசுவின் வார்த்தைகளில்

ஆறுதல் மட்டுமல்ல ஒரு வாழ்க்கைப் பாடமும் இருக்கிறது.

பலருக்கு வாழ்க்கையே பெரிய சுமைதான்.

வாழ்க்கை வெறுமனே உயிரோடு வாழ்வது மட்டுமல்ல,

வசதியாக வாழ்வதற்காக பணம் ஈட்டுவதற்காக நாம் பார்க்கும் வேலை, அதில் உள்ள கஷ்டங்கள், களைப்பு, படும் அவமானங்கள் போன்றவை நாம் சுமக்கும் சுமை.

நமது இன்றைய சுமைகளில் ஆறுதல் பெற

 வேலை முடிந்தவுடன்

 தாயின் மடியிலோ,

 மனைவியின் மடியிலோ,

 கணவர் மடியிலோ

 தலை வைத்து அவர்களின் அன்பு முகத்தையே பாத்துக் கொண்டிருந்தால் சுமை இறங்கி ஆறுதல் கிடைக்கும்.

இயேசு "வாழ்க்கைச் சுமையால் கஷ்டப்படுகிறவர்களே, என்னிடம். வாருங்கள். 

நான் உங்களுக்கு ஆறுதல் தருவேன்.

என் அன்பு முகத்தைப் பார்த்தாலே உங்கள் கஷ்டங்கள் எல்லாம் பறந்து விடும்.

உங்களுக்காகக் கஷ்டப்பட்ட என் அன்பு முகத்தைப் பாருங்கள்.

உங்கள் கஷ்டங்களை என்னிடம் ஒப்புக் கொடுத்து விட்டு ஆறுதல் அடையுங்கள்."

மனதில் சுமை வைத்திருந்து,

 திவ்ய நற்கருணை நாதர் முன் அமர்ந்து தியானிப்பவர்கட்கு 

இந்த ஆறுதல் அனுபவம் புரியும்.

மேலும் சொல்கிறார்,

"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்."

நுகம் என்பது வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகளின் கழுத்தில் வைக்கப் பட்டிருக்கும் வண்டி நோக்கால்.

வண்டியில் உள்ள பாரத்தை அனுசரித்து நோக்காலின் சுமை இலேசாகமாகவோ, கனமானதாகவோ இருக்கும்.

வண்டியிலுள்ள சுமை வாழ்க்கை நாமாகவே ஏற்றுக் கொண்ட பாரத்தைக் குறிக்கும்.

ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டு, கோடிக்கணக்கில் சம்பாதித்து, அம்பானி மாதிரி அரண்மணை கட்டி, சகல வித வசதிகளையும் வைத்து வாழ்ந்தால்,

அவனது வசதிகளைப் பராமரிப்பது மிகக் கஷ்டம்.

 ஒரு நாள் AC ரிப்பேர் ஆகிவிட்டால் அன்று அவனது வாழ்க்கை நரகம்தான்.

ஆனால் குறைவாக சம்பாதித்து குடிசையில் வாழ்பவனுக்கு அம்பானி வசதி யெல்லாம் தேவை இல்லை.

குடிசைக்கு வெளியே நார்க் கட்டில் போட்டு படுத்தால் AC இல்லாமலே  இனிய தூக்கம் வரும்.

பணக்கார வாழ்வின் 'நுகம்' கனமானது.

ஏனெனில் வாழ்க்கைச் சுமை மிகப் பாரமானது.

ஏழை வாழ்வின் 'நுகம்' இலேசானது.

ஏனெனில் வாழ்க்கைச் சுமையும் இலேசானது.

ஆண்டவர் அவரிடமிருந்து சுற்றுக் கொள்ளச் சொல்கிறார் 


"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்,

என் நுகம் இனியது, 

ஏனென்றால் என் சுமை எளிது."

ஆண்டவரின் வாழ்க்கைச் சுமையைப் பாருங்கள்.

ஆண்டவர் மிக எளிமையாக வாழ்ந்தார். 

அவர்  பயன்படுத்திய வாழ்க்கை வசதிகள் மிகக்குறைவு. 

நற்செய்தி போதித்தபோது அவர் தங்க ஒரு வீடு கூட இல்லை. 

மனுமகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை.


பகலில் போதித்து விட்டு, இரவில் மலைமேல் ஏறி தனிமையில் செபிப்பார்.

உணவு கிடைக்கிற இடத்தில்
கிடைக்கிற உணவைச் சாப்பிடுவார்.

கையில் பணம் கிடையாது.

(ஒரு முறை வரி கட்டுவதற்கு இராயப்பரிடம் சொல்லி மீனின் உடலில் இருந்து பணம் எடுத்து வரச்சொன்னார்.)

எளிமையாக மட்டுமல்ல ஏழையாகவும் வாழ்ந்ததால் 

அவரது வாழ்க்கைச் 'சுமை'

மிகக் குறைவு.

ஆகவே 'நுகமும்' இனியது.


இத்தகைய வாழ்க்கை 
முறையைத்தான்

இத்தகைய வாழ்க்கை நடத்துபவர்கள் மிகவும் சாந்தமும், தாழ்ச்சியும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

"என்னிடமிருந்து கற்றுத் கொள்ளுங்கள்" என்றார்.

இயேசுவிடம் சென்றால் நமக்கு மன ஆறுதலும் கிடைக்கும்.

வாழ்க்கைப் பாடமும் கிடைக்கும்


"உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
 ஏனெனில்,

நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்."

இயேசுவின் வாழ்க்கையை  அப்படியேபின்பற்றினால் நமது துகம் மிக லேசாக இருக்கும்,

என்றால் அது இழுக்கவேண்டிய வாழ்க்கைச் சுமை குறைவு.

நாம் இயேசுவிடமிருந்து கற்கவேண்டிய மற்றொரு பாடம்

 பகலில் கடினமான வேலை முடிந்து இரவில் இறைவனோடு ஒன்றிப்பது.

வேலையின் போது  நாம் பட்ட கஷ்டங்களை எல்லாம் இறைவன் முன் இறக்கி வைத்துவிட்டு

 நாம் நிம்மதியாகத் தூங்க வேண்டும்.

 அப்போதுதான் மறுநாள் வேலைக்கு தயார் ஆக முடியும்.

இயேசு முக்கியத்துவம் கொடுத்தது மக்களுக்கு.

 அதிலே அவர் செல்வந்தர்,

அவர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அவர் பின்னாலேயே சென்றது. அவர் பேசியதை கேட்டது.

 பணத்தை பொருத்தமட்டில் அவர் ஏழை.

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்தவுடன் இயேசுவிடம் சென்று,

  அவர் மடியில் தலைசாய்த்து,

 அவர் முகத்தை நோக்குவோம்.


 அவர் நமக்குத் தரும் ஆறுதலை ஏற்று, , வாழ்க்கை பாடத்தைக் கற்போம்.

 என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

நமக்கு மகிழ்ச்சி தரும் ஒரே செல்வமும் 

நித்திய பேரின்பம் தரும் ஒரே பாக்கியமும் 

இயேசுவே. 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment