Sunday, June 21, 2020

"உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்."(மத்.10:34)

"உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்."
(மத்.10:34)
*********************************

"விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும்,

பூவுலகில் நல் மனதோற்குச் சமாதானமும் உண்டாகுக."

கிறிஸ்து பிறந்த அன்று, அவர் பிறந்ததின் நோக்கத்தை விண்ணகத் தூதர்கள் வாழ்த்தாகப் பாடினார்கள்.

வார்த்தையானவர் (இறைமகன்) மனுவுரு எடுத்திருக்கிறார்.

இறைவார்த்தை (The word of God) நல்ல மனது உள்ளவர்களிடம் இறங்கி சமாதானத்தை அளிக்கிறது.

அதாவது வார்த்தையானவர் தரும் நற்செய்தி நல்ல மனதிற்கு சமாதானம் கொடுக்கிறது.

இயேசு சொல்கிறார்,

"சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்."

தியானிப்போம்.


"தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்.".

இயேசு குறிப்பிட்டுள்ள குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள். 

தந்தை,
தாய்,
மகன்,
மகள்,
மருமகள்.

தந்தை, தாய், (மாமியார்)
மகன், மகள், மருமகள்

தந்தை X  மகன்
தாய்      X  மகள்
மாமி      X  மருமகள்

இதை ஆன்மீக ரீதியாகத் தியானித்தால்:

 ஒவ்வொரு  மனிதனிடமும்
(In each person)
ஆன்மீக ரீதியில் ஒரு குடும்பம் இருக்கிறது.

அதில் இறைவனால் படைக்கப் பட்ட உறுப்பினர்கள்:

உடல், ஆன்மா, மனது.

கடவுள் படைக்கும்போது மனித மனது பரிசுத்தமானதாக  இருந்ததால்

  மனிதனிடம் சமாதானம் நிலவியது.

ஆனால் நமது முதல் பெற்றோர் இறைவனது கட்டளைகளை மீறியதால்

மேலும் இரண்டு உறுப்பினர்கள் நமக்குள் நுழைந்து விட்டார்கள்:

பாவம், அவிசுவாசம்.

சென்மப்பாவத்தினால் இந்த நிலை.

 பாவத்தினால் மனிதனிடம் இருந்த சமாதானம் போய்விட்டது.

ஆனால் உடலும், பாவமும்


ஆன்மாவும் , அவிசுவாசமும்,

 மனதும் சிற்றின்பத்தில் குடும்பம் நடத்துகிறார்கள்.

பாவம் உடலைத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.

அவிசுவாசம் ஆன்மாவைத்
தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.

இந்த நிலையிலிருந்து மனிதனை மீட்க

வார்த்தையானவர் மனுவுரு எடுக்கிறார்.

அவரின் வார்த்தை மனிதனின் மனதில் வாளாக இறங்கு கிறது.


"கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது."
(எபி. 6:12)

மீட்பையே தலைச்சீராவாகத் தாங்கி,கடவுளின் சொல்லைத் தேவ ஆவி தரும் போர்வாளாக ஏந்திக்கொள்ளுங்கள்.
(எபே. 6:17)

இதுவரை சிற்றின்பத்தில் ஆன்மீகப் போராட்டம் எதுவுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தில்

மனதில் வாளாகிய இறங்கிய இறை வார்த்தை ஆன்மீகப் போரை ஆரம்பிக்கிறது.

இறை வார்த்தையால் மனம் மாறிக்கொண்டிருக்கும் மனது  ஆன்மாவையும், உடலையும் தொடுகிறது.

உடனே உடல் பாவத்தோடு போரிடுகிறது.

ஆன்மா அவிசுவாசத்தோடு போரிடுகிறது.

இறைவார்த்தையின் வல்லமையால்

உடல் பாவத்திலிருந்து 
பிரிகிறது, அதாவது, விடுதலை பெறுகிறது.


ஆன்மா அவிசுவாசத்திலிருந்து  விடுதலை பெறுகிறது.

இறைவார்த்தையை மனது ஏற்றுக் கொண்டதால்  மனிதன், 

ஞானஸ்நானம் பெற்று

சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறான்.


"தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்."

வசனத்தை இப்படிப் புரிந்து கொள்வோம்.


இயேசு
"பாவத்திற்கு எதிராக உடலையும்

, அவிசுவாசத்திற்கு  எதிராக ஆன்மாவையும், 

பிரிக்க வந்தார்.

அதாவது

மனிதனை பாவத்திலிருந்து மீட்கவந்தார்.


இறைவார்த்தையைத் தியானித்தால் மட்டும் போதாது.

அதை வாழ்வாக்க வேண்டும். 

கிறிஸ்துவின் வருகை நமது மனதை சமாதானத்தால் நிரப்பிவிட்டது.

கிறிஸ்து தரும் சமாதானம்

 பாவத்திலிருந்து நாம் விடுதலை பெற நடைபெறும் ஆன்மீகப் போரில் 

வெற்றி பெற உதவுவதால் அதை வாள் என்று இயேசு குறிப்படுகிறார்.

பாவத்திலிருந்து விடுதலை பெற்ற நம்மை

 உடல் சம்பந்தபட்ட பாவ நாட்டங்கள் எதுவும்  நெருங்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

போசனப் பிரியம், உடல் இச்சைகள், indecent dress போன்ற நாட்டங்கள் நம்மை நெருங்கக்கூடாது.

நமது ஆன்மாவை விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு, மற்றும் தாழ்ச்சி, பொறுமை போன்ற புண்ணியங்களால் வளப்படுத்த வேண்டும்.

நமது மனதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

 இயேசு தந்த சமாதானம் என்றும் நம்மோடு தங்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment