Monday, May 25, 2020

God's love letter.(தொடர்ச்சி.)

.God's love letter.

(தொடர்ச்சி.)
**  **  **   ** ** **   ** ** ** **

அள்ள அள்ளக் குறையாத அன்பே!

உண்மையான அன்பே!

இறைவா, உம்மை அடிபணிந்து ஆராதிக்கின்றேன்.

நான்  மனம் திறந்து எழுதும் இந்த கடிதத்தில்

 ஏதாவது தவறு இருக்குமானால், 

அன்பே, அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.

இப்போதெல்லாம் உம் மக்களுக்கு எதையும fashion னுக்காகச்  செய்வதே fashion ஆகிவிட்து.

எதை எதற்காகச் செய்ய வேண்டுமோ அதை அதற்காக செய்யாமல்

 fashion க்காகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

உடையிலே fashion, விளைவு indecency,

உணவிலே fashion, விளைவு
வியாதிகள்.

 வாழ்க்கையே fashion ஆக மாறிவிட்டதால் எதிர் விளைவுகள் மலிந்து விட்டன.

உலகியல் வாழ்வில் எப்படியும் இருக்கட்டும்.

ஆன்மீக வாழ்வில்!

கோவிலுக்குப் போகும்போது பைபிளைக் கையில் எடுத்துக் கொண்டு போவது மிகவும் நல்ல வழக்கம்.

அன்றைய வாசகம் வாழ்வாக மாறுமானால் பைபிளைக் கொண்டு போவது உண்மை யிலேயே பக்தி முயற்சி.

வாழ்க்கைக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாவிட்டால், அது fashion தானே?

ஆற்றில் இறங்கி குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.
ஆனால் அழுக்கே போகாமல் குளிப்பதால் என்ன பயன்?

நாங்கள் எல்லோருமே பாவிகள்தான். அதை மறுக்கக் கூடாது.

பைபிள் வாசிக்க ஆரம்பிக்கும் போது உள்ள பாவ உணர்வு வாசிக்கும்போது மறைய வேண்டும், குளிக்கும்போது அழுக்குப் போவது போல.

வாசிக்க ஆரம்பிக்கும்போது இருந்த நிலை முடித்த பின்பும் அப்படியே இருந்தால், வாசிப்பது  fashion தானே!

இயேசுவே,

பைபிள் வாசித்தபின்பும் எங்களில் எந்த நல்ல 'மாற்றமும் ஏற்படாமைக்கு இன்னுமொரு காரணம் இருக்கிறது.

உண்மையான வயிற்றுப்பசி உள்ளவனுக்கு, "சாப்பிடு" என்று உத்தரவு போட வேண்டிய அவசியமில்லை.

அவனாகவே சாப்பாட்டை வாங்கி வேண்டிய அளவு சாப்பிடுவான்.

ஆனால் பசியே இல்லாமல் சாப்பிட வேண்டுமே என்பதற்காகச் சாப்பிடுபவன் கடமைக்காகச் சாப்பிடுவான்.

ஆண்டவரே,

 நீங்கள் எங்களை நேசிக்க வேண்டுமே என்பதற்காகவா நேசிக்கிறீர்கள்?

 இல்லை.

 அன்பு உங்கள் இயல்பு.

 நீங்களே அன்புதான்,

 உங்களால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

 வெறுக்க முடியாது.

 அதேபோல  நாங்களும் இயல்பாக இருக்க வேண்டும்.


 பைபிள் வாசிக்க வேண்டுமே என்பதற்காக வாசிப்பதும்,

 ஞாயிற்றுக் கிழமை கோவிலுக்குப் போகவேண்டுமே என்பதற்காக போவதும்,


 திருவிழா கொண்டாட வேண்டுமே என்பதற்காகக், கொண்டாடுவதும்,

 சாமியாரைப் பார்க்க வேண்டுமே என்பதற்காக பார்க்கப் போவதும்,

 மற்றவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டுமே என்பதற்காக போடுவதும்,

 கடமைக்காகச் செய்யக்கூடிய காரியங்கள்,

 இவற்றை ஆசையோடு இயல்பாகச்  செய்வதற்கான அருள் வரங்களை  அனைவருக்கும் தந்தருளும், அப்பா, தந்தையே.

எப்போவோ ஞான வாசகத்தில் (Spiritual reading) வாசித்ததாக ஞாபகம்.

ஒரு புனிதர், 

பெயர் ஞாபகம் இல்லை, 

 உம்மை நோக்கி,

" தந்தையே, நான் உம்மை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கிறேன்.

 உம்மை நேசிக்க வேண்டும் என்று நீர் கட்டளை  இட்டதற்காகவோ,

 எங்களுக்கு சன்மானமாக மோட்சத்தை தருவீர்கள் என்பதற்காகவோ 
 நேசிக்கவில்லை. 

நித்திய காலத்திற்கும் எனக்கு உம்மைப் பார்க்கும் வரம் கிடைக்காவிட்டாலும்

 நான் உம்மை நேசித்துக் கொண்டே இருப்பேன்.

 நீர் அன்பு மயமானவர்.

 என்னை நீர் உமது அன்பால் நிறைத்திருக்கிறீர்.

 உமது அன்பை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்.

  அன்பு அன்பை கைமாறு எதிர்பாராமல் நேசிக்கும்.

 ஆகவே அன்பே, உம்மை அன்பு செய்கிறேன்."

என்று சொன்னார் என்று வாசித்திருக்கிறேன்.

கடமைக்காக உங்கள் கடிதத்தை வாசித்தால்  வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

  உமது வார்த்தையின் மேல் இயல்பான அன்புகொண்டு வாசித்தால்

 மக்களது வாழ்க்கை முற்றிலுமாக எப்போதோ மாறி இருக்கும்.

 ஆகவே, அன்பு தந்தையே, நீர் அனுப்பியுள்ள கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை எம் எல்லோரிடமும்  எழுப்பும்.

ஊற்றுத் தண்ணீர் தானாகவே வருவது போல உம் கடிதத்தை வாசிக்க ஆவலும் தானாக வரவேண்டும்.

என் உறவினர் ஒருவர் என்ன காரணமோ தெரியவில்லை, கத்தோலிக்க சமயத்திலிருந்து பெந்தேகோஸ்தே  சபைக்குப் போய்விட்டார்.

சில மாதங்களுக்குப் பின் எங்கள் வீட்டுக்கு வந்தவர் என்னைப் பார்த்து,

"அத்தான், நீங்கள் சாத்தானின் பிள்ளை!"

எனக்கு அதிர்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை.

ஏனெனில் அவர் போயிருக்கும் இடம் அப்படி.

நான் ரொம்ப அமைதியாக,

"நான் என்ன செய்ய வேண்டும்?"

"நீங்கள் இரட்சிக்கப்பட  வேண்டும்."

"ரொம்ப நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க?"

"என்னை பரிசுத்த ஆவி வழி நடத்துகிறார். இரட்சிக்கப் பட்டு விட்டேன்" என்றார்.

பரிசுத்த ஆவியானவரே,

 அன்பின் தேவனே,

 உமது பெயரைச் சொல்லிக்கொண்டு 

உமது திருச்சபைக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்

 உமது பிள்ளைகள் மீது இரக்கமாயிரும்,

 அவர்கள் மனம் திரும்பி,

 நீர் வழிநடத்திக் கொண்டிருக்கும் கத்தோலிக்க திருச்சபைக்குள் வந்து சேர அவர்களுக்கு உதவும்.

 எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே மந்தைக்குள்  வரவேண்டும்.

ஒரே தலைவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்பின் ஆவியானவரே, நீரும், , தந்தையும், மகனும

ஒருவருக்குள் ஒருவராய் ஒரே கடவுளாய் இருப்பதுபோல,

ஒரே பைபிளை வாசிக்கும் அனைவரும் ஒரே குடைக்குள் வர அருள் புரியும்.


இயேசுவே, நீர் சிந்திய இரத்தத்தில் ஒரு துளி கூட வீணாகி விடக்கூடாது.

நீர்  படைத்து மண்ணகத்தில் வாழவிட்ட மனுக்குலம் முழுவதும்

 உமது இரட்சண்யத்தைப் பெற்று

 விண்ணகத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதே 
 எங்கள் ஆசை.

இந்த ஒரு ஆசையை மட்டும் கட்டாயம் நிறைவேற்றியருள உமது பாதம் பணிந்து வேண்டுகிறோம்.

எங்கள் தந்தையே, உமது சித்தம் தான் விண்ணிலும்,
மண்ணிலும் நிறைவேறும்.

திரியேக தேவனை அடிபணிந்து, ஆராதிக்கும்,

அன்பு மக்கள்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment