Friday, May 22, 2020

கத்தோலிக்க திருச்சபை முதலில் பைபிள் படிப்பதைத் தடை செய்ததா?


கத்தோலிக்க திருச்சபை முதலில்  பைபிள்  படிப்பதைத் தடை செய்ததா?
**  **  **   ** ** **   ** ** ** **

"செல்வம், வா போன வேலை முடிஞ்சதா?"

"நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு வந்துவிட்டேன்'. 

"வேறு என்னமோ சொன்னதா சொன்னிய.''

"கத்தோலிக்க சமயம் ஒரு காலத்தில மக்கள பைபிள் வாசிக்கக் கூடாதுன்னு தடை செய்ததாம்."

"இது முழுப்பொய். நற்செய்தி யாளர்கள் நற்செய்தியை எழுதியது மக்கள் வாசிப்பதற்காகத்தான்.  

அன்று அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலம். 

எழுதுவதற்கு கூட இந்தக் காலத்தில்  உள்ளது போல பேப்பர் வசதி இல்லை.

பழைய ஏற்பாட்டு நூல்கள் தோலில் எழுதப்பட்டன. 

புதிய ஏற்பாட்டு நூல்கள் பேப்பிரஸ் (Papyrus) எனப்படும் ஒரு வகைப் சுருள்களில் (scrolls) எழுதப்பட்டன.

அப்போஸ்தலர்களுடைய கடிதங்கள் மக்கள் வழிபாட்டிற்காக ஒன்று கூடும் போது அவர்களுக்கு வாசித்து காட்டப்பட்டன.

கோவில்களில் திருப்பலி நேரத்தில் பைபிளிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன.

இதற்காக பைபிள் முழுவதும் 
கையினால்தான் பிரதிகள் (Copies) எடுக்கப்பட்டன.  .

பிரதிகளை கையினால் எழுதும் வேலையை சந்நியாச மடங்களிலுள்ள சந்நியாசிகளே (Monks) செய்தார்கள்.

அதற்காகவே சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார்கள்.

இது எவ்வளவு கடினமான வேலை என்பதைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன்.

மிகவும் பிரமிப்பாக இருந்தது.

பைபிள் முழுவதையும் ஒரு பிரதி எழுத 10 மாதம் ஆகும்.

இன்றைய செலவு விகிதபடி ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர் படி 10 மாத வேலைக்கு
16,640 டாலர் ஆகுமாம். 

அதை வரிவரியாக வாசித்து சரிபார்க்கிற ஆளுக்கும் மேற்படி விகிதப்படி சம்பளம் போட்டு மொத்தச் செலவைப் பார்த்தால் ஒரு பிரதிக்கு
30,000 டாலர். (எழுத மட்டும்) ஆகுமாம்.

நான் கதை எழுதவில்லை. நான் வாசித்த கட்டுரையின் பகுதி இதோ:

Until some time after the invention of the printing press,

 the Bible, was an extremely costly book. 

At today’s minimum wages of $8/hr and only counting the time for one monk to write the whole Bible, it would take 10 months at a cost of $16,640!!!

 But that doesn’t count the second monk who checked every single page for accuracy,

 which would raise the cost of one Bible in today’s US Dollars to $30,000 +

 And that still does not include the cost of materials, or for the time for another monk to Illuminate (decorate) the pages

 and for someone else to bind the pages together and put on a cover. 

At these prices it is easy to see why every person could not have their own personal Bible for study and devotions.

இந்தச் செலவுக் கணக்கில் நாட்டிலுள்ள அனைவருக்கும் வீட்டுக்கொரு பைபிள் வாங்க முடியுமா?

கோவிலில் கூட பாதுகாப்பிற்காக பைபிளைச் சங்கிலியால் கட்டிவைத்திருப்பார்கள். 

கோவிலில் சென்று யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். 

மக்களை பைபிள் வாசிக்கக் கூடாது என்று தடுத்ததாகக் கூறுவது சுத்தப் பொய்.

எல்லோராலும் பைபிள் வாங்க இயலாது என்பதனால்  

மூன்று ஆண்டு சுழற்சி முறையில் தினமும் பலி பூசையில் பைபிள் வாசகங்கள் வாசிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டன.

ஒழுங்காகத் தினமும் பூசைக்குச் செல்வோர் முழு பைபிளையும் மூன்று ஆண்டிற்குள் கேட்டு விடுவர்.

அன்றைய பழக்கம் இன்றும் தொடர்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் சாதாரண மக்களிடையே இன்றைய அளவிற்குப் படிப்பறிவு இல்லை.

அவர்களுக்காக கோவிலிலுள்ள சன்னல் கண்ணாடிக் கதவுகளில் பைபிள் நிகழ்ச்சிகள்  வண்ணப் படங்களாகத் தீட்டப் பட்டிருந்தன.

பைபிள் கையினாலேயே எழுதப் பட்டதால் மக்களிடம் அதைத் தாராளமாகக் கொடுக்க முடியவில்லையே தவிர

 குருக்கள் நற்செய்தியை அறிவிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை.

நற்செய்தி நூல்கள் எழுதப்படாத  காலத்தில் அப்போஸ்தலர்கள் எவ்வளவு உற்சாகத்துடன் அச்செய்தியை போதித்தார்களோ,

 அதைவிட கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் 

அவர்களுக்குப் பின் வந்தவர்களும்

கையினால் எழுதப்பட்ட நற்செய்தி நூல்களின் பிரதிகளை பத்திரமாக வைத்திருந்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்.


அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பைபிள் குறைந்த செலவில் ஏராளமாக அச்சடிக்கபட்டன.

புதிய மொழி பெயர்ப்புகளும் பயன்பாட்டிற்கு வந்தன.

எந்தக் காலத்திலும் திருச்சபை தன் பிள்ளைகளப் பைபிள் வாசிக்கக் கூடாது என்று தடுத்ததே இல்லை.

பைபிள் அச்சிடப்பட முடியாத காலத்திலும் வாசிப்பின் மூலமும், கோவில் சித்திரங்கள் மூலமும் பைபிள் போதனை மக்களுக்குத் தரப்பட்டது.

இப்போது கல்வி அறிவு பெருகிவிட்டது. 

பைபிளும் விலை குறைந்து விட்டது.  

எல்லோருடைய கையிலும் பைபிள் இருக்கிறது.

பைபிள் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கையும் கூடிவிட்டது.

பைபிள் அறிவும் அதிகரித்து விட்டது.

இப்போ ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

பைபிள் வாசிப்பதற்கா?
வாழ்வதற்கா? 

இயேசு சமாதானத்தின் தேவன்.

அவர் பிறக்கும் போது உலகிற்குக் கொண்டு வந்த முதல் நற்செய்தியே

"நன்மனதோற்கு சமாதானம்" என்பதுதான்.

நம் அனைவருக்கும் தந்தை ஒருவரே. 

விண்ணகத்திலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும்,
மண்ணகத்திலும் வாழும் கிறிஸ்தவர்கள்  அனைவருக்கும் தலைவர் ஒருவரே-இயேசு.

மண்ணகத்தில் வாழும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் தலைவராக இயேசுவால் நியமிக்கப்பட்டவர் ஒருவரே-

எந்தப் பாறை மீது இயேசுவின் திருச்சபை கட்டப்பட்டதோ 
அந்தப் பாறையின் வாரிசான பாப்பரசர்.

என்று ஒரே தலைவரின் கீழ் அனைத்துக் கிறிஸ்தவர்களும் சமாதானமானமாகி ஒன்று சேர்கிறார்களோ, அன்று தான்  


"நாங்கள் பைபிளை வாழ்கிறோம்"

என்று சொல்லலாம்."

"உண்மைதாங்க. பைபிள் கையிலும், வாயிலும் இருந்தால் மட்டும் போதாது.

அது நம் வாழ்க்கையில் இறங்க வேண்டும்.

இறைவார்த்தை மறுவுரு எடுத்ததே நம்மை வாழ வைக்கவே.

அவரது வார்த்தையும் நம்மை வாழ வைக்கவே.

வார்த்தையை வாழ்ந்தால் தான் வார்த்தையானவரோடு நித்தியத்துக்கும் வாழ முடியும்.

வார்த்தையானவருக்கு  நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பது மட்டுமல்லாம்,

அவரது வார்த்தையை நமக்கு உணவாக ஊட்டிக் கொண்டிருக்கும்

நமது ஞானத் தந்தையர்களுக்கும் நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க  வேண்டும்.

இன்று அச்சு இயந்திரம் இருப்பதால் நாம் ஆளுக்கு ஒரு பைபிள் வைத்திருக்கிறோம்.

Electronic media வந்த பிறகு நமது ஒவ்வொரு cell phoneலும் 

எண்ணற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட எண்ணற்ற பைபிள்களை வைத்திருக்கிறோம்.

ஒரு Click ல் நினைத்த நற்செய்தி நூல், நினைத்த அதிகாரம், நினைத்த வசனம் கண்முன் வந்து நிற்கிறது.

இது எதனால் சாத்தியம் ஆயிற்று?

அச்சு இயந்திரம்  இல்லாத காலத்தில் மாதக்கணக்கில் மட்டுமல்ல.
வருடக்கணக்கில் எழாமல் உட்கார்ந்து பைபிளை கைப்பட எழுதி காப்பாற்றித் தந்தார்களே சந்நியாசிகள்,

அவர்களால் சாத்தியம் ஆயிற்று.

வீட்டிற்கு வீடு பைபிள் பிரதிகளை கொடுக்க முடியாவிட்டாலும்,

ஒவ்வொரு ஆலயத்திலும் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து, தங்களது போதனையால் இறைவார்த்தை உணவை மக்களுக்கு ஊட்டி, வாழவைத்தார்களே

அந்த ஞானத் தந்தையர்களால்
சாத்தியம் ஆயிற்று.

காலங்காலமாக இறைவார்த்தை என்னும் தீபத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து, இன்றும் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறதே

அன்னையாம் கத்தோலிக்க திருச்சபை,

அதனால் சாத்தியம் ஆயிற்று.

எல்லோருக்கும், எப்போதும் நன்றி உணர்வோடு இருப்போம்.

 என் friend க்கிட்ட இதை எல்லாம் பொறுமையாக சொல்லுகிறேன்.

புரிந்து கொள்வாள்.

அடுத்து

"நமக்கும் கடவுளுக்கும் இடையில் இயேசு மட்டுமே  உள்ளார் என்று வேதம் கூறுகிறது.'' என்ற என் நண்பியின்  கூற்றுக்கு பதில் தயாரித்து வையுங்கள்."


"இப்போ உனக்குதான் நன்றி கூற வேண்டும்."

"எதற்கு?"

"எனக்கு மட்டுமல்ல, என் எழுத்துக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறாயே, அதற்கு."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment