Friday, May 29, 2020

"அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"(அரு. 21:15)

"அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"
(அரு. 21:15)
_______________________________
இயேசு விண்ணகம் எய்துவதற்கு முன் இராயப்பரை நோக்கி

"இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா?"

என்று கேட்கிறாய்.

"இவர்களைவிட" மற்ற சீடர்களைக் குறிக்கிறது.

இராயப்பர் மறுமொழியாக 
 "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்."
என்கிறார்.

ஒரே கேள்வியை மூன்று முறைக் கேட்கிறார்.

இராயப்பரும் மூன்று முறையும் அதே பதிலைச் சொல்லுகிறார்.

முதல் பதில் வந்தவுடன் ஆண்டவர்,

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
(Feed my lambs.)  எனகிறார்.

இரண்டாவது பதில் வந்தவுடன் ஆண்டவர்,

"என் ஆடுகளைக் கண்காணி.'

மூன்றாவது பதில் வந்தவுடன் ஆண்டவர்,

"என் ஆடுகளை (Feed my sheep) மேய்.

முதலில் 
"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
என்கிறார்.


இரண்டாவது
"என் ஆடுகளைக் கண்காணி.''
என்கிறார்.

மூன்றாவது
"என் ஆடுகளை (Feed my sheep) மேய்." என்கிறார்.

இயேசு இராயப்பரைத் திருச்சபை முழுமைக்கும் .தலைவராக நியமித்தார் என்பதற்கு அவருடைய வார்த்தைகளே ஆதாரம்.

முதலாவது குறிப்பிட்டிருக்கிற.
ஆட்டுக்குட்டிகள் விசுவாசிகளையும்,

இரண்டாவது குறிப்பிட்டிருக்கிற ஆடுகள் குருக்களையும்,

மூன்றாவது குறிப்பிட்டிருக்கிற ஆடுகள் ஆயர்களையும்

குறிக்கும். 

பெந்தேகோஸ்தே அதாவது பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்த பின்புதான்

 போதனை செய்யும் அமைப்பு ரீதியான திருச்சபை ஆரம்பிக்கின்றது.

ஆண்டவர்

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"

என் ஆடுகளைக் கண்காணி.''

"என் ஆடுகளை  மேய்."

என்று கூறியதிலிருந்து

அவர் விண்ணகம் எய்து முன்பே 

விசுவாசிகள்,

 குருக்கள்,

ஆயர்கள் 

பாப்பரசர்

 என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என்று தெரிகிறது.

இராயப்பர் பாப்பரசர், இயேசுவின் பிரதிநிதி.

பாப்பரசர் தலைமையில் இயங்கும் திருச்சபைதான் இராயப்பர் என்ற பாறை மீது கட்டப்பட்ட ஒரே திருச்சபை.

பிரதிநிதியை ஏற்காதவர் அவரை அனுப்பியவரையும் ஏற்கவில்லை.


சகோதரர்களை அதாவது மற்ற சீடர்களை உறுதிப்படுத்தும் பொறுப்பை

ஆண்டவர் இராயப்பரிடம்தான்
கொடுக்கிறார்.


"சீமோனே, சீமோனே, இதோ! சாத்தான் உங்களைக் கோதுமைப்போலப் புடைக்க உத்தரவு பெற்றுகொண்டான்.

32 ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன். நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து'
(லூக். 22:31, 32)



பெந்தகோஸ்தே அன்று நற்செய்திப் பணியை ஆரம்பித்து வைத்தவர் முதல் பாம்பரசர் இராயப்பர்.

"அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று, மக்களை நோக்கி, உரத்த குரலில் பேசியதாவது: "யூதர்களே, மற்றும் யெருசலேம்வாழ் மக்களே, நான் சொல்வதை அறிந்துகொள்ளுங்கள்: என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.(அப். 2:14)


ஆதித்திருச்சபை சபைகளை விசாரித்து வந்தவர் இராயப்பர்.

"இராயப்பர் எல்லாச் சபைகளையும் விசாரித்து வருகையில் ஒருநாள், லித்தா நகரில் வாழ்ந்து வந்த இறை மக்களிடம் வந்து சேர்ந்தார்."
(அப்.9:32)


.நெடுநேரம் வாதாடிய பின் இராயப்பர் எழுந்து, "சகோதரரே, புறவினத்தார் என் வாய்மொழியால் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசம் கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலிருந்தே உங்களிடையில் என்னைத் தேர்ந்துகொண்டார். இது உங்களுக்குத் தெரிந்ததே.
(அப். 15:7)

இவ்வசனமே  இராயப்பரைக் கடவுள் தேர்ந்து கொண்டது புரியும்.


எதற்கெடுத்தாலும் பைபிளிலேயே ஆதாரம் தேடுபவர்கள் 

இத்தனை ஆதாரங்கள் தெளிவாக பைபிளில் இருந்தும் 

பாப்பரசரை தவறாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் 

அது அவர்களது அறியாமையால் அல்ல.

உண்மையிலேயே  கடவுளையே அறியாமல் இருக்கிற மக்களிடம் உணமையைச் சொன்னால் புரிந்துகொள்வார்கள்.

அறிந்தும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற மக்களிடம் சொன்னால் புரியும், ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்காக செபிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment