Wednesday, May 27, 2020

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.
.....................................................  பழைய திரைப்பட நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரே ஒரு தம்பிக்கு ஒரே ஒரு அண்ணன். நிறைந்த சொத்து. ஒரு நாள் தம்பி தன் மாமனாருடைய துற்புத்தி கேட்டு அண்ணனிடம் சொத்தில் பங்கு கேட்கிறான். அண்ணனும் சம்மதிக்கிறான்.
சொத்து பிரிக்கிற அன்று  அண்ணன் சொத்து முழுவதையும் மொத்தமாக வைத்து விட்டு அவன் ஒரு புறம் உட்கார்ந்து கொண்டு,
"உனக்குப் பிரியமான பங்கை எடுத்துக்கொள்"  என்கிறான். தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. சொத்தை இரண்டாகப் பிரிக்காமலேயே
"உனக்குப் பிரியமான பங்கை எடுத்துக்கொள்" என்றால் எப்படி? திடீரென்று ஞானம் உதயமாகிறது. "அண்ணா, உன்னை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்" எனது கூறிவிட்டு, அண்ணனை இறுக்க பற்றிக் கொள்கிறான்.  இது இவ்வுலக நிலை.

ஆன்மீக நிலையில், இறைவன் இவ்வுலக செல்வங்களை எல்லாம் நம் முன் வைத்துவிட்டு,

" உனக்கு முன்னால் இருக்கும்

இவ்வுலக அனைத்து சொத்துக்கள்,

நான்,

இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உனக்குப் பரிபூரண சுதந்திரம் தருகிறேன்"

என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்?

நாம் என்ன வேண்டும்?

"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"

இயேசு கொடுத்த இரண்டு அன்பு கட்டளைகளுள்

"உன்மீது நீ அன்புகாட்டுவாயாக" என்ற கட்டளை இல்லை.

ஆனாலும், இயேசு,
" உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல்"

என்று கூறினார்.

ஏன்?

நம் மீது நாம் அன்பு காட்டுவது இயல்பு,

Self love is inherent in us,

நம்மிடம் இருப்பதைத்தானே. மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்?

ஆகவேதான் அன்புமயமான கடவுள் நம்முள் அன்பை வைத்துப் படைத்தார்.

இப்போ இறைவன்  அழியக்கூடிய  உலகை ஒருபுறம் வைத்து,

நித்தியராகிய தான் ஒரு  புறமும் இருந்து கொண்டு

"தேர்ந்தெடு" என்றால்

நாம் அழியக்கூடிய செல்வத்தைத்
தேர்ந்தெடுக்க வேண்டுமா?

அழியாத செல்வத்தைத்
தேர்ந்தெடுக்க வேண்டுமா?

அழியக்கூடிய செல்வத்தைத்
தேர்ந்தெடுத்தால், நாம் அன்பு என்னும் கண் இருந்தும் குருடர்கள்தான்!

நாம் கண்ணை மூடிக் கொண்டு சாக்கடைக்குள்   விழுவதற்குச் சமம்.

நாம் இறைவனை தேர்ந்தெடுத்தால்தான் நமக்குள் இறைவன் வைத்த அன்பிற்கு அர்த்தம் இருக்கிறது.

இறைவன் நித்தியர்,

அவரைத் தேர்ந்தெடுத்தால் தான் நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும்.

அவரை விட்டுவிட்டு உலகத்தை மட்டும் தேர்ந்தெடுத்தால்  நித்திய மரணம்தான்.

ஆக,   நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். 

அதுதான்  இறைவனோடு நாம் வாழப்போகும் நித்திய பேரின்ப வாழ்வு.

அப்படியானால் கடவுள் ஏன் ஒரு உலகைப் படைத்து, அதில் பல செல்வங்களையும் வைத்து அதன் மத்தியில் நம்மையும் வாழ விட்டிருக்கிறார்?

நேராக விண்ணகத்திலேயே நம்மை படைத்திருக்கலாமே! எதற்காக இந்த உலகம்?

இது பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன்,

" எதற்காக இந்த தேர்வுகள் எல்லாம்?

தேர்வே வைக்காமல் சான்றிதழ் தந்திருக்கலாமே!" என்று சொல்வதுபோல் இருக்கிறது.

பள்ளிக்கூடமே போகாத ஒரு பையன் சொன்னானாம்:

"எதற்கு பள்ளிக்கூடம்?

பேசாம 14 வயசுல 8வது வகுப்பு சர்ட்டிபிகட்,

16வயசுல S.S.L.C சர்ட்டிபிகட்,.

18வயசுல +2 சர்ட்டிபிகட்,.

22 வயசுல B.E சர்ட்டிபிகட், கொடுத்துவிட்டுப் போகலாமே! என்றானாம்.

அவனுக்கு என்ன பதில் சொல்வோம்?

"நமது தகுதியை நிரூபித்து சர்ட்டிபிகட் பெற்றால் தானே நமக்கு மரியாதை?"

விண்ணுலக நிலை வாழ்வை நாம் நமது இவ்வுலக வாழ்க்கையில் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

நாம் இவ்வுலகில் வாழ்வது இவ்வுலக வாழ்வுக்காத அல்ல. 

நமது ஒரே வாழ்வான நித்திய வாழ்வை ஈட்டுவதற்காக. (to earn)

அமெரிக்காவில் flight ஏறி,

பிரயாணம் சுகமாக  இருக்கிறது என்பதற்காக

பாவூர்சத்திரத்தையும், வீட்டையும் மறந்தால் எப்படி?

நாம் இவ்வுலகில் வாழ்வது நிலை வாழ்வை நோக்கிய பயணம்தான்.

நிலை வாழ்வில் நித்திய காலமாக நாம் அனுபவிக்க பேரின்பம் காத்திருக்கிறது.

நாம் அனுபவிக்க இருக்கும் பேரின்பத்தின் அளவை அதிகரிக்க இவ்வுலகில் வாய்ப்புகள் தரப்பட்டிருகின்றன.

இவ்வுலகில் சிற்றின்ப வசதிகள் நிறைய உள்ளன.

சிற்றின்பத்தை அனுபவிக்கும் போது இன்பம் இருக்கும்.

அனுபவித்து முடிந்தவுடன் அது காணாமற்போய்விடும்.

ஆனால் விண்ணுலக. நிலைவாழ்விற்காக இவ்வுலக சிற்றின்பத்தைத் தியாகம் செய்தால்,

அதற்குப் பிரதிபலனாக நிலைவாழ்வில் நிலையான பேரின்பத்தின் அளவு அதிகம் ஆகும்.

உதாரணத்திற்கு,

மட்டன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைப்பது சிற்றின்பம்.

கடவுளோடு நாம் வாழ இருக்கும் நிலை வாழ்வுக்காக
இந்த சிற்றின்பத்தை தியாகம் செய்தால்

நமது பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்,

சிற்றின்பம் முடிவுக்கு வரும்,
  பேரின்பம்  என்றென்றும் நிலைத்திருக்கும்.

நமது ருசியான உணவை தியாகம் செய்து

சாப்பாடு கிடைக்காத ஒரு ஏழைக்குக் கொடுத்து உதவினால்

பேரின்பத்தின் அளவு இரு மடங்கு அதிகரிக்கும்.

கிறிஸ்மஸ் போன்ற விழாக் காலங்களில்

நாம் செய்யும் ஆடம்பரங்களைத் தியாகம் செய்து

அதில் மிச்சமாகும் பணத்தை ஏழைகளுக்காகச் செலவு செய்தால்

இறைவன் நமது நிலைவாழ்வின் பேரின்பத்தை பன்மடங்கு அதிகரிப்பார்.

இவ்வுலக வாழ்வின் போது சிற்றின்பம் மட்டுமல்ல

துன்பங்களும் நிறைய வரும்.

சிற்றின்பத்தை தியாகம் செய்துவிட்டு

துன்பங்களை இறைவனுக்காக நாம் ஏற்றுக்கொண்டாலும்

நமது நிலை வாழ்வின் பேரின்பம் அதிகரிக்கும்.

ஆகவேதான் புனித வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்

வாழ்நாளில் துன்பங்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு முன்மாதிரிகையாகத்தான்

இயேசுவே, விண்ணுலகிலிருந்து துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் தேடியே
இவ்வுலகத்திற்கு வந்தார்.

இவ்வுலகில் தனக்காக வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்பவனும் விண்ணுலகில் பேரின்பத்தை சம்பாதிக்கிறான்.

புனித கல்கத்தா தெரசா தன் வாழ்நாழ் முழுமையும் நோயாளிகளின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்தாள்.

நாம் அழியா வாழ்வுடைய ஆன்மாவையும் அழியக்கூடிய உடலையும் கொண்டவர்கள்.

நமது உடல் மண்ணிலிருந்து வந்தது.

மண்ணிற்குத் திரும்பு முன்   தன்னை இயக்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து விடவேண்டும்.

நம் உடல் எந்த அளவுக்கு தன்னை ஒறுக்கிறதோ,

அந்த அளவிற்கு ஆன்மாவிற்கு விண்ணுலகில்  பேரின்பம் அதிகமாகும்.

ஆன்மாவிற்கு உதவிகரமாக இருக்கும் உடலுக்கும் சன்மானம் கிடைக்காமல் போகாது.

உலக முடிவில் உயிர்ப்பு நாளன்று மண்ணாலான நமது உடல் ஆன்மீக உடலாக (Spiritual body) மாறி,

ஆனமாவோடு இணைந்து, விண்ணக வாழ்வில் பங்கு பெறும்.

The Bible tells us

that when Jesus returns to earth,

he will physically raise all those who have died,

giving them back the bodies they lost at death.

These will be the same bodies people had in earthly life—

but our resurrection bodies will not die and, for the righteous, they will be transformed into a glorified state,

freed from suffering and pain,

and enabled to do many of the amazing things

Jesus could do with his glorified body (see 1 Cor. 15:35–44, 1 John 3:2).

ஏற்கனவே இயேசுவும், அன்னை மரியாளும் ஆன்ம சரீரத்தோடு விண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.

அது பூமியில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அல்ல.

விண்ணுலகில்

இறைவனோடும், புனிதர்களோடும்
வாழவிருக்கும்

நிலையான விண்ணுலக வாழ்க்கை.

அதற்காக இப்பொழுதே இறைவன் உதவியோடு. நம்மை நாமே தயாரிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment