Friday, February 12, 2021

முழு கிறிஸ்தவனாக வாழ்வோம்.

*முழு கிறிஸ்தவனாக வாழ்வோம்*


"ஹலோ, சார். Good morning!"

"Very good morning. முகமெல்லாம் புன்சிரிப்பாக தெரிகிறது!"

"அகத்தில் உள்ள எண்ணம் முகத்தில் பிரதிபலிக்கும் என்பார்களே, என் முகத்தில் ஏதாவது எண்ணம் தெரிகிறதா?"


"முகத்தில் எண்ணெய் தெரிகிறது, எண்ணம் எதுவும் என் கண்ணில் படவில்லை.

வினோதமான எண்ணமோ?" 

"ரகசியமான எண்ணம்! சொன்னால் வெளியே சொல்லக்கூடாது!"

"அப்போ சொல்ல வேண்டாம்.

பகிர்ந்து கொள்ள அனுமதி இருந்தால் சொல்லலாம். அல்லது வேண்டாம்."

"Permission granted. இன்றிலிருந்து இயேசுவின் வருகையை ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க தீர்மானித்துவிட்டேன்."

"ஹலோ இயேசு ஏற்கனவே வந்துவிட்டார். இப்பொழுது நம்முடன்தானே இருக்கிறார்!"

"அது முதல் வருகை. ."

"உலக முடிவையா?" 

"இல்லை. எனது முடிவை."

"நினையாத நேரத்தில் மனுமகன் வருவார் என்றுதானே ஆண்டவர் சொல்லியிருக்கிறார்."

"அதனால் தான் நான் தினமும் நினைத்துக்கொண்டிருக்க தீர்மானித்து விட்டேன்!" 

"அதாவது அவர் வராமலே இருப்பதற்காக. அப்படித்தானே!''

"அப்படியேதான்."

"அதாவது சாவிலிருந்து தப்பிப்பதற்காக!"

"எப்படி எனது idea!"

"பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று சொன்னதாம்! அதைப்போல் தான் இருக்கிறது உனது எண்ணமும்!"

"அது வேறு. இது வேறு."

"ஆமா, அது பூனை. இது ஆள். வேறு வித்தியாசம் இல்லை.

நினையாத நேரத்தில் வருவேன் என்றுதானே இயேசு சொல்லியிருக்கிறார்."

"ஆமா. ஆனால் நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேனே!"

"அவர் வரமாட்டார் என்று தானே!"

"இல்லை, வருவார் என்று."

"வருவார் என்று எண்ணிக் கொண்டிருந்தால் வரமாட்டார் என்பது தானே உனது எண்ணம்."

"ஆமா."

"வரமாட்டார் என்று தானே உனது எண்ணம்."

"ஆமா என்று சொல்லிவிட்டேனே."

"வரமாட்டார் என்று நீ நினைத்தாலே நீ அவரை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் பொருள்.

எதிர்பார்க்காது இருக்கும்போது வருவேன் என்று தான் இயேசு சொல்லியிருக்கிறார்.

கவலைப்படாதே,

 எப்போது வேண்டுமானாலும் வருவார்!

 இப்போது வேண்டுமானாலும் வருவார்!

 இந்த விநாடியே வேண்டுமானாலும் வருவார்!"


"ஏன் பயம் காட்டுகிறீர்கள்?"

"நாம் வாழ்வதே அவரிடம் போவதற்காகத்தானே! அவர் வருவார் என்பது மகிழ்ச்சிகரமான செய்திதானே!"

"தினமும் எதிர்பார்ப்பதில் தப்பு ஒன்றும் இல்லையே?"

"வருவார் என்று எதிர்பார்ப்பதில் தப்பு ஒன்றும் இல்லை.

 வருவார் என்று நினைத்தால் வரமாட்டார் என்று நினைப்பது தான் தப்பு.

அதாவது இயேசுவின் வார்த்தைகளை அவருக்கு எதிராக பயன்படுத்துவதுதான் தப்பு.

இப்போது அநேகர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவின் வார்த்தைகளுக்கு அவர்கள் இஷ்டம் போல் பொருள் கொடுத்து அவற்றை இயேசுவிற்கு விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்."


"நான் பயன்படுத்துவது மாதிரி.''

"ஆமா.

"யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,


49 தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

50 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிற
வன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்."
( மத். 12:48-50)

என்ற இறைவசனங்களை மாதா பக்திக்கு எதிராகப் பயன்படுத்துபவர்கள் பைபிள் வாசிப்பவர்கள் தான்.

அவர்கள் ஒரு உண்மையை மறந்து விடுகிறார்கள்.

ஏதாவது ஒன்றை பெருமையாக ஒப்பிட விரும்புகிறவர்கள்

 அதைவிட பெருமை வாய்ந்த ஒன்றோடு தான் ஒப்பிடுவார்கள்.

ஏதாவது ஒரு நல்ல அரசியல்வாதியை 

"அவர் காமராஜரைப் போல் நாட்டு பற்று உள்ளவர்"

 என்று சொன்னால் அது காமராஜருக்குத்தான் பெருமை.

இயேசு தன் தாயின் மீது மட்டற்ற பற்று வைத்திருந்ததால்தான் 
.
தன் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவர்களை தனது தாயோடு ஒப்பிட்டு பேசுகின்றார்.

தங்கள் மனதிற்குள் ஏதாவது ஒரு கருத்தை வைத்துக்கொண்டு (Preconceived idea) 

பிறகு அதற்கு பைபிளில் ஆதாரம் தேடுகிறவர்கள் 

ஏதாவது ஒரு வசனத்தைப் பிடித்துக்கொண்டு 

அதை தங்களுடைய கருத்துக்கு பொருந்துமாறு அதன் பொருளை மாற்றி கொள்கிறார்கள்.

இயேசுவின் பெயரையும் பைபிளையும் எடுத்துக்கொண்டு வெளியே சென்ற அவர்களுக்கு

 என்ன காரணமோ தெரியவில்லை அன்னை மரியாளைப் பிடிக்கவில்லை.

இயேசுவின் பெயரை என்று சொன்னேன். 

கத்தோலிக்க திருச்சபையை ஏற்படுத்திய உண்மையான இயேசுவை எப்படி திருச்சபையை விட்டு பிரித்துச் செல்ல முடியும்?

பிரிந்து சென்ற அவர்களுடைய பேச்சை கவனித்தால்

ஏதோ ரயிலில் பயணம் செய்தவர்கள் ரயிலை விட்டு இறங்கும்போது அதன் உறவையும் விட்டுவிட்டு இறங்குவது போல

இயேசு பத்து மாதமும் தன்னை சுமப்பதற்கும்,

 30 வருடங்கள் தன்னை வளர்ப்பதற்கும், மரியாளைத் தாயாக பயன்படுத்திவிட்டு

 பொதுவாழ்வில் நுழைந்தவுடன் அவளை விட்டு பிரிந்து சென்றது போல் தெரியும்.

அதனால்தான் அவருடைய தாய் அவரைப் பார்க்க வரும் போது 

"யார் என் தாய்? வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிற என்னுடைய சீடர்கள் தான் என் தாய்"

 என்று சொல்வதுபோல அவரது வார்த்தைகளுக்குப் பொருள் கொள்கிறார்கள்.

அதாவது இயேசு மரியாளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லையாம். ஆகையினால் அவர்களும் கொடுக்க மாட்டார்களாம்.

ஆனால் நமக்குத் தெரியும் மரியாள் இயேசுவை கருவில் தாங்கிய நொடி முதல் அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது வரை மட்டுமல்ல,

அவர் விண்ணகம் எய்திய பின்னும் அவர் சார்பாக அப்போஸ்தலர்கள் கூடவே இருந்து 

தனது ஆலோசனையால் அவர்களை வழி நடத்தி வந்ததின் மூலம் தன் மகனுக்காகவே வாழ்ந்தாள் என்று.

இறைவனை ஏற்றுக்கொள்ளும் அவர்கள் இறைவனை பெற்ற அன்னையை ஏற்றுக்கொள்ள மறுப்பதில் உள்ள ரகசியம் நமக்கு புரியவில்லை!

அது மட்டுமல்ல 

"இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்."

என்ற வசனத்தை எடுத்துக்கொண்டு இயேசு பிறந்த பிறகும் மரியாளுக்கு குழந்தைகள் பிறந்ததாகச் சொல்லி மாதா முக்காலமும் கன்னி என்ற உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.

இங்கு இயேசுவின் சகோதரர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள். அன்னை மரியாளின் தங்கை மக்கள்.

இயேசுவுக்கு சித்தி மக்கள்.

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் 'சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், 

மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்."
(அரு. 19:25)

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது சிலுவையின் அருகே நின்றுகொண்டிருந்த பெண்கள் மூவர். 

1. அன்னை மரியாள்.

2. மரியாளின் சகோதரி, அவள் பெயரும் மரியாள்தான்.

(இருவரும் புனித அன்னம்மாளின்
 பிள்ளைகள்தான்.)

3.மதலேன் மரியாளும்

அன்னை மரியாளின் கணவர் புனித சூசையப்பர்.


அவளுடைய சகோதரியின் கணவர் கிலோப்பா. இவர் சூசையப்பரின் சகோதார்.

கிலோப்பாவின் மனைவியான மரியாளின் மக்கள்தான் சின்ன யாகப்பர், சீமோன், யூதா, சூசை.

Alphaeus. ம் Clopasம் ஒரே ஆள்தான்.

(James, Simon, Jude, and Joses or Joseph were children of Mary of Clopas,)

இயேசுவின் சித்தி மக்களாகிய இவர்களைத்தான் நற்செய்தி ஆசிரியர் இயேசுவின் சகோதரர்களாக குறிப்பிடுகிறார்.

அன்னை மரியாள் முக்காலமும் கன்னி.  



"மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா."

இவ்வளவு தெளிவாக ஆண்டவர் கூறிய வார்த்தைகளுக்குக் கூட

 தங்கள் இஷ்டம் போல் பொருளை மாற்றி கூறிக்கொண்டு

 இராயப்பரை திருச்சபையின் தலைவராக ஏற்க மறுப்பவர்களை பற்றி என்ன சொல்ல!

இயேசுவின் அப்போஸ்தலர்கள் இராயப்பரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

அப்போஸ்தலிக்க திருச்சபையும் ஏற்றுக்கொண்டது.

பிரிந்து சென்றவர்களும் பிரிந்து செல்லு முன்னால் ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்கள். 


குடும்பத்தை விட்டு பிரிந்து போகின்றவர்கள் தகப்பனின் அதிகாரத்தை மட்டும்தான் விட்டு போவார்கள். தகப்பனை குடும்பத் தலைவன் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால் அப்போஸ்தலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்கள் தலைவரின் அதிகாரத்தை உதறித்தள்ளியதோடு 

அவரை தலைவரே இல்லை என்று கூறி விட்டு சென்றார்கள்.

இயேசுவால் நியமிக்கப்பட்ட தலைவரை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இயேசுவையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்தான்.

 கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெயரளவுக்கு ஏற்றுக்கொள்பவன் கிறிஸ்தவன் அல்ல.

 கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவரது போதனைகளை ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவன் அல்ல.

போதனைகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவன் அல்ல.

போதனைகளை கிறிஸ்து கொடுக்கும் பொருளோடு ஏற்றுக் கொள்ளாதவன் கிறிஸ்தவன் அல்ல.


போதனைகளை பொருளோடு ஏற்றுக்கொண்டாலும் அதன்படி வாழ்க்கையை நடத்தாதவன் கிறிஸ்தவன் அல்ல.

கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதோடு அவரது போதனையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன்படியே முழுமையாக வாழ்பவன் மட்டுமே கிறிஸ்தவன்.

முழு கிறிஸ்தவனாக வாழ்வோம்.

முழுமையாக பயன் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment