Sunday, February 28, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 14 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 14
(தொடர்ச்சி)

"கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு விருத்தசேதனமும் பயனற்றது: விருத்தசேதனமின்மையும் பயனற்றது, ஒன்றும் செய்ய இயலாது. தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே." (கலா. 5:6)

''கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே."

"இந்த இறைவாக்கு உங்களுக்கு தரும் செய்தி என்ன?"

"கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை விசுவாசம்.

இறைவனை 
விசுவசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்மீது அன்பு ஏற்படும்.

இறையன்பு வழி நடந்தால் நமக்கு விண்ணகம் உறுதி."

,"விசுவாசத்தில் இறைவனை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல,

அவருக்காக நமது வாழ்வையே அர்ப்பணிப்பதும் அடங்கியிருக்கிறது.

அர்ப்பண வாழ்வுதான் விசுவாச வாழ்வு."

"ஆபிரகாமிடம் இறைவன் ஈசாக்கை பலி கொடுக்கக் சொன்னபோது அபிரகாமின் மனதில் ஏதாவது போராட்டம் இருந்திருக்குமா?" 

"விசுவாசம் இருக்குமிடத்தில் போராட்டத்திற்கு இடமே இல்லை. 

ஈசாக் பற்றி இறைவன் ஏற்கனவே கொடுத்த வாக்கை இறைவன் நிறைவேற்றுவார் என அபிரகாம் உறுதியாக விசுவசித்தார்.

"அதற்குக் கடவுள் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாறாள் உனக்கு ஒரு புதல்வனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக் என்று பெயரிடுவாய். 

நம் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிறுவுவோம்."
(ஆதி. 17:19)

இது இறைவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு.

இறைவன் கொடுத்த வாக்கை உறுதியாக நிறைவேற்றுவார்,

மீற மாட்டார் என்றுஆபிரகாம் உறுதியாக விசுவசித்தார்.

சந்தேகப் பட்டால் தான் போராட்டம் வரும்.

உறுதியாக விசுவசித்தவர் மனதில் எப்படி போராட்டம் வரும்?

நமது மனதில் ஏற்படும் போராட்டங்களுக்கு காரணமே நமது விசுவாசம் இன்மை தான்.

இறைவன் நமக்கு நன்மையே செய்வார் என்று உறுதியாக விசுவசிப்பவர்கள் 

தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அது நல்லதே என்பதில் உறுதியாக இருப்பார்கள்."


"ஆனால், சார், இறைவனை விசுவசிக்கிறவர்கள் மனதிலும் போராட்டம் இருக்கிறதே."

".உண்மைதான். ஆனால் முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கத்திற்காகவே தங்கள் தங்கள் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் வாழ்வில் போராட்டங்களுக்கு இடமே இல்லை.

ஏனென்றால் அவர்கள் என்ன நேர்ந்தாலும் இறைவன் சித்தம் என்று அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தமக்கு நேர்பவற்றை உலகியல் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு இறைவனின் செயலில் திருப்தி ஏற்படாததால்தான் போராட்டமே.

 தமக்கு நேர்பவற்றை ஆன்மீக கண்ணோடு பார்ப்பவர்களுக்கு அவை இறைவனின் சித்தத்தின் விளைவு என்பது தெரியும்.

இறைவன் மேல் உள்ள விசுவாசம் அவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்."

"உண்மைதான். 

கொரோனாக் காலத்தில் அசையாத நம்பிக்கை உள்ளவர்கள் என்று நாம் நம்பிய நமது தாய் திருச்சபையை சேர்ந்தவர்களே பயந்து கொண்டு தானே இருந்தார்கள்.

ஆறுமாத காலத்துக்கு மேலாக 

"கோவிலுக்கு வர வேண்டாம் வீட்டிலிருந்தே online ல் திருப்பலி காணுங்கள்." என்று நமக்கு ஆலோசனை சொன்னவர்கள் நமது வழிகாட்டிகள்தானே.

நமக்கு என்ன ஆகிவிடுமோ என்று பயந்து தானே அப்படி ஆலோசனை நல்கினார்கள்.

விசுவாசம் இருக்கும் இடத்தில் பயத்துக்கு இடமே இல்லையே!"

''. பரிசுத்த ஆவியானவர் நமக்கு கனியாகத் தந்த விசுவாசத்தை நமது ஆன்மீக வாழ்வுக்காக மட்டும் பயன்படுத்தியிருந்தால் 

எந்த உலக செயலாலும் நமது ஆன்மீக மகிழ்ச்சியை பறிக்க முடியாதே!

என்ன நடந்தாலும் நன்றி மட்டும் தானே கூறியிருப்போம்.

"ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்"
என்று அப்போஸ்தலர்களைப் போல் அல்லவா நாம் கத்திக் கொண்டிருக்கிறோம்.


"குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?"

என்று நமது ஆண்டவர் கூறுவது நமது காதில் விழவில்லையே!"


".அதற்கு காரணம் நம்மிடம் விசுவாசம் என்ற சத்துள்ள கனி இருந்தும், அதைச் சாப்பிடாமல் 'பசிக்கிறதே பசிக்கிறதே 'என்று நாம் கத்திக் கொண்டு இருப்பதுதான்."

"நம் மக்கள் தங்களது தேசப்பற்றை நின்று கொண்டு தேசிய கீதம் இசைப்பதில் மட்டும் காண்பிப்பது போல,

நாமும் நமது விசுவாசத்தை விசுவாசப் பிரமாணத்தை சொல்வதற்கு மட்டும் பயன்படுத்துகிறோம்.

ஒரு சிறிய உதாரணம்,

"நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்"

என்று சொல்கிறோம்.

ஆனால் அது நெருங்கி வரும்போது ஏன் பயப்படுகிறோம்?

ஏனென்றால் நமது விசுவாசம் வார்த்தைகளில் மட்டுமே இருக்கிறது. வாழ்க்கையில் இல்லை."

"கோவிலில் விசுவாசப்பிரமானம் பாடும்போது பாட்டின் tune க்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளுக்கு கொடுப்பது இல்லையே! 

சுவாமியார் 

'எப்படி பிரசங்கம் வைக்கிறார் என்பதற்கு'

 கொடுக்கும் முக்கியத்துவத்தை

'அவர் என்ன சொல்கிறார்' என்பதற்கு நாம் கொடுப்பது இல்லையே!"

". நமது விசுவாசம் நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிரதி பலிக்கவேண்டும்.

அயலான் ஒருவன் நம்மை அவமானப்படுத்தி விட்டான் என்று வைத்துக்கொள்வோம்.

"இயேசு எனது பாவங்களுக்காக பாடுகளின் போது பட்ட அவமானத்தை விட இது ஒன்றும் பெரியது அல்ல."

என்ற எண்ணம் நம்மைத் தேற்ற வேண்டும்.

நமது சம்பளம் கொஞ்சம் கூடிவிட்டால் மனைவிக்கு ஒரு சேலை எடுத்து கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வருகிறது அல்லவா?

அதோடு

உடுக்க உடை கிடைக்காத ஒரு ஏழையை பற்றிய  எண்ணமும் நினைவுக்கு வரவேண்டும்.

 ஏழைக்கு உடை கொடுப்பது இயேசுவுக்கு கொடுப்பதற்குச் சமம்."

"இப்போது ஒரு சிறு சந்தேகம் கேக்கலாமா?"

"எதைப்பற்றி?"

"உங்களைப் பற்றி."

"என் மீது உங்களுக்கு என்ன சந்தேகம்?"

"நீங்கள் விசுவசிக்கிறீர்களா? நம்புகிறீர்களா?"

"உங்கள் கேள்வியின் பொருள் புரிகிறது.

மற்றவர்கள் நம்பிக்கை என்பதை நீங்கள் விசுவாசம் என்கிறீர்களே, என்பதுதானே உங்களது சந்தேகம்?"

"Exactly."

"நான் பையனாக இருக்கும்போது

'விசுவாசம், நம்பிக்கை, 
தேவ சிநேகம்'

என்று படித்ததை,

இப்போது

'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்று படிக்கிறார்கள்.

அதைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். 

இப்பொழுது இறைவன் நமது தந்தை என்பதை விசுவசிப்போம்.

அவரது கட்டளைகளைப் பின்பற்றி நடந்தால் அவரோடு மோட்ச இன்பத்தில் பங்கு பெறுவோம் என்று உறுதியாக நம்புவோம்.

நமது தந்தையையும், அவரால் படைக்கப்பட்ட நம்முடைய சகோதர சகோதரிகளையும் நமது சிந்தனை, சொல், செயலால் நேசிப்போம்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

*திக்குத் தெரியாத காட்டில்* 13 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 13
(தொடர்ச்சி)

"ஏதோ கதை தெரியுமான்னு கேட்டீங்க."

"Brother Juniper கதைதானே."

"அதேதான்."

"அவர் ஒரு கப்புச்சின் சபை lay brother.

மிகவும் நல்லவர், பக்தி உள்ளவர்,
மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர், மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்."

"ஹலோ! எலலா துறவிகளும் அப்படித்தான் இருப்பார்கள். கதைக்கு வாங்க."

"ஒரு நாள் சுப்பிரியர் அவரைக் கூப்பிட்டு,

"Brother, இப்போது எந்த room freeயாக இருக்கிறது?"

"Room number 13."

"இன்று ஒரு guest வருகிறார்கள்.
சில நாட்கள் தங்குவதற்கு அந்த அறையை ஏற்பாடு செய்யுங்கள்."

Brother ம் மறு வார்த்தை பேசாமல் அப்படியே செய்துவிட்டார்.

அன்று பிற்பகல் வந்த guest ஐ அந்த அறையில் தங்க வைத்து விட்டார்.

அன்று இரவு சுமார் 10 மணி இருக்கும்.

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

சுப்பிரியர்க்கு தூக்கம் வரவில்லை.

கையில் ஜெப மாலையை 'எடுத்துக் கொண்டு வெராண்டாவிற்கு வந்தார்.


வெராண்டாவின் ஒரு ஓரத்தில் யாரோ படுத்திருந்தார்கள்.

சுப்பிரியர் அருகில் வந்து பார்த்தார்.

Brother Juniper!

ஏன் இவர் இங்கே படுத்திருக்கிறார்?

அவரை தட்டி எழுப்பி,

"Brother, அறையில் படுத்தால் என்ன? இங்கு பனியடித்துக் கொண்டு இருக்கிறதே!"

"அதை நீங்கள் சொன்னபடி guest தங்க கொடுத்துவிட்டேன்."

"உங்கள் அறையை கொடுக்கும்படி நான் சொல்லவில்லையே!"


"இப்போது எந்த room freeயாக இருக்கிறது? என்று நீங்கள் தானே கேட்டீர்கள்!"

"Room number 13 என்று நீங்கள் தானே சொன்னீர்கள்."

"ஆமா. அது என் அறை. நான் உங்கள் அறையில் உங்களோடு பேசிக் கொண்டிருந்ததால் எனது அறை free ஆக இருந்தது.

அதைத்தான் சொன்னேன்."

சுப்பிரியருக்கு கோபம் வந்தது

கோபமான குரலில்,

"கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்? 

என் அறையில் படுத்துக்கொள்ளுங்கள்."

"Father, நீங்கள்?"

"சொன்னதைச் செய்யுங்க போங்கள்."

Brother க்கு ஒன்றும் புரியவில்லை 

 "சொன்னதைத்தானே செய்தோம். அதற்கு ஏன் இவ்வளவு கோபம்?

Father க்கு ஏதோ ஆகிவிட்டது."
Brother க்கு கோபம் வரவில்லை. சுப்பீரியர் மீது இரக்கப்பட்டார்.

தான் கீழ்ப்படியாமல் இருந்திருந்தால் அவர் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது.

கீழ்ப்படிந்தவர் மீது கோபப்பட்டால்?

"சுவாமிக்கு சுகம் இல்லை என்று நினைக்கிறேன்."

இரவு முழுவதும் பிரதர் தூங்கவே இல்லை.

அதிகாலையில் எழுந்து சமையலறைக்குச் சென்று ஏதோ தயாரித்தார்.

சுப்பிரியர் எழு முன் அவர் அறைக்கு வந்து,

எழுந்தவுடன் அவரிடம் சென்று,

"சுவாமி, கோபத்தில் உங்கள் முகம் சரி இல்லை. உங்களுக்கு சுகமில்லை என்று நினைக்கிறேன். தயவுசெய்து இதை சாப்பிடுங்கள்.
நல்ல சுகம் கிடைக்கும்."

சுப்பிரியர் Brother ஐப் பார்த்தார். 
இப்படி அநியாயத்திற்கு அப்பாவியாய்இருக்கிறாரே!

எதுவும் சொல்லாமல் கொடுத்ததை வாங்கி குடித்து விட்டார்.

"சுவாமி இன்று பகலில் நன்கு ஓய்வு எடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்."

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனாலும், " சரி, brother." என்று கூறிவிட்டு சென்றார்.

Brother Juniper ஐப் பற்றி
 என்ன நினைக்கிறீர்கள்?"

"எனக்கு எதுவுமே தோன்றவில்லை.

கீழ்ப்படிதல் இருக்கிறது. 
பரிவு இருக்கிறது.
 உதவிசெய்யும் குணம் இருக்கிறது.
 நல்லவர் என தோன்றுகிறது. ஆனால் விவேகம் இல்லையே!"

"ஒரு குழந்தையிடம் இருக்கும் innocence இருப்பது தெரியவில்லை?"

"குழந்தையிடம் இருந்தால் அது innocence. வளர்ந்தவர்களிடம் இருந்தால் அதற்கு பெயர் குழந்தை தனம்."

"உண்மையிலேயே உலகத்தார் கண்களுக்கு நல்லவர்கள் பைத்தியக்காரர்கள் போல்தான் தோன்றுவார்கள்!

நல்லவர்களுக்கு பெயர் பிழைக்கத் தெரியாதவர்கள் என்ற பெயர் உண்டு!

  ஆனாலும் நன்மைத்தனம் (goodness) பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்று.

நல்லவர்கள் மனதில் நல்ல நல்ல எண்ணங்கள்தான் தோன்றும்.

எதை பார்த்தாலும் அதன் positive side மட்டும் தெரியும்.

Negative side தெரியாது.

நல்ல பையன், என்னவோ படிப்பு மட்டும் வரமாட்டேன் என்கிறது.

 வகுப்பில் ஆசிரியர் கேள்விக்கு தவறான அளித்ததற்காக கையில் பிரம்பால் ஒரு அடி கொடுத்தார்.

மதிய உணவு வேளையின் போது பையன் கையில் எதையோ வைத்துக்கொண்டு ஆசிரியரிடம் வந்தான்.

"என்னடே?"

 "வலது கையை கொஞ்சம் காட்டுங்கள்."

"என்ன விஷயம்?"

"காட்டுங்கள். சொல்கிறேன்."

ஆசிரியர் காட்டினார்.


"சார், பெருவிறல் பின்பக்கம் ஏன் வீங்கி இருக்கிறது? நீங்கள் அடிக்கும்போது பார்த்தேன்."

"ஏல, அடிபட்ட கையை பார்க்காமல் என் கையை ஏன் பார்த்தாய்?"

"சார், இந்த தைலத்தை கையில் தடவுங்கள். வீக்கம் வற்றிவிடும்."

"சரி உன் கையால் நீயே தடவி விடு."

தடவி விட்டான். இதமாக இருந்தது.

"தைலம் எங்கிருந்து வாங்கி வந்தாய்?"

"என்னிடம் எப்போதும் இருக்கும். பிரம்படி  பட்ட இடம் வீங்கினால் தடவிக்கொள்வேன்."

"பிறர் பணி செய்வதற்கு படிப்பே தேவை இல்லை!"

".என் பையன் என்னிடம் அடிபடும் போதெல்லாம், முணுமுணுத்துக் கொண்டே இருப்பான்,

வலியினால் முணுமுணுப்பான் என்று அதை நான் கண்டு கொள்வதே இல்லை.

ஆனால ஒரு நாள் அவன் முணுமுணுக்கும் போது எனக்கு கோபம் வந்தது

'என்னடா முணுமுணுக்கிறாய்?'
 கையை ஓங்கினேன்.

எனது மனைவி குறுக்கிட்டாள்.

"பொறுங்க. அவன் முணுமுணுக்கவில்லை. நீங்கள் அடிக்கும் போதெல்லாம் உங்களுக்காக அவன் ஒரு அருள்நிறை மந்திரம் சொல்லுகிறான்."

"அப்படியாடா?"

அவன் புன்சிரிப்பு சிரித்தான்."

"இப்படிப்பட்ட  பிள்ளையை பெற்ற நீ பாக்கியசாலி! உன் பிள்ளை பரிசுத்த ஆவியின் அருள் பெற்றவன்.

நன்னயம் பெற்றவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நாம் அவர்களுக்கு தீங்கு செய்தாலும் அதிலும் மகிழ்வதற்கு ஒரு நன்மையை காண்பார்கள்.

கிறிஸ்து அடிபடும்போதும், மிதிபடும் போதும், சிலுவையில் அறையப்படும் போதும் அந்த வேதனைகளில் நமது மீட்பை மட்டுமே கண்டிருப்பார்."

"அவர் மனிதனாக பிறந்ததே அதற்காகத்தானே!

நாம் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க விரும்பினால் 

நமது துன்பங்களிலும் சரி, 
உலகின் துன்பங்களிலும் சரி 

மீட்பிற்கான இறைவனின் செயல்களைத் தான் காண வேண்டும்.

துன்பமே படாமல் மீட்கப்பட ஆசைப்படுவதும்,

தண்ணீரே இல்லாமல் குளிக்க ஆசைப்படுவதும் ஒன்றுதான்."


"கடவுள் நல்லவர். ஆகவேதான் அவர் படைப்பில் நன்மையை மட்டும் கண்டார். 

"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."

  படைப்பில்

நன்மையை காண்பவர்கள் நல்லவர்கள், 

 தீமையை காண்பவர்கள் தீயவர்கள்.

கடவுள் படைத்தவற்றை நன்மை செய்ய பயன்படுத்துபவர்கள் நல்லவர்கள்.

தீமை செய்ய பயன்படுத்துபவர்கள் தீயவர்கள்.

பணத்தை காணிக்கை போடவும் பயன்படுத்தலாம்.

லஞ்சம் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

கத்தியை கொண்டு காய்கறியும் வெட்டலாம்,

கையையும் வெட்டலாம்.

இயற்கை பொருள்களை பயன்படுத்த கூடாத விதமாய் பயன்படுத்திவிட்டு இறைவனுடைய படைப்பு தவறு என்பது சரியல்ல.

தீமை உலகிற்குள் எப்படி நுழைந்தது?

ஆதி மனிதன் இறைவனது கட்டளையை மீறியதால் தீமை உலகிற்குள் எப்படி நுழைந்தது.

இறைவனது கட்டளைகள்படி வாழ்பவர்கள் நல்லவர்கள். மீறுபவர்கள் தீயவர்கள்.

இறைவனது கட்டளைகள்படி வாழ்வதற்கும் பரிசுத்த ஆவியின் அருள் வரம் வேண்டும்."

"பரிசுத்த ஆவியானவரின் நினைவோடு வாழ்பவர்களிடம் பாவம் நெருங்காது.

ஆவியானவரின் சேவைக்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்து விட்டவர்களின் வாழ்க்கைக்குள் அவருக்கு எதிரான எதுவும்  நுழைய முடியாது."

"அர்ப்பண வாழ்வுக்கு உயிர் எது தெரியுமா?"

"விசுவாசம். Faith."

(தொடரும்)

லூர்து செல்வம்

Friday, February 26, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 12 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 12
(தொடர்ச்சி)


"இன்னும் எவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க வேண்டும்?"

"தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க மாட்டானாம்!"

"பொறு என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.

மன்னித்துக்கொள், காத்திரு.
இரண்டு சொற்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?:"

"இருக்கும் என்றுதான் எண்ணுகிறேன்.

அப்படி என்றால் இரண்டு கனிகளை ஒன்றாக சாப்பிட்டு விட வேண்டியது தான்?"

"எந்த இரண்டு கனிகளையும்?"

" பொறுமை, பரிவு."

".தொடர்பைக் கண்டு பிடித்து விட்டீர்களோ?"

"எல்லா கனிகளும் பரிசுத்த ஆவியின் கனிகள்தான்.

 ஒரே மரத்தின் கனிகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாமல் இருக்குமா?

அன்பு உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

அன்பு உள்ளவர்கள் சமாதானமாக 
இருப்பார்கள்.


அன்பு உள்ளவர்களிடம் பரிவு இருக்கும். பரிவு உள்ளவர்கள் பிறர் குற்றங்களைப் பொறுப்பார்கள்.

அன்பு உள்ளவர்களிடம்தான் பொறுமை இருக்கும்."


"உண்மைதான். 

உலகத்தில் பாவங்கள் பெருகிக் கொண்டே போனாலும் 

கடவுள் அதை அழிக்காமல் பொறுமையாக இருப்பதற்கு

 அவருடைய அன்பு தானே காரணம்!"

".நமது குடும்பங்களில் மிகவும் பொறுமைசாலி யார்?"

"அம்மாதான்?" 

".ஏன்?"

"நாம் எத்தனை முறை தப்பு செய்தாலும் நம்மை அன்புடன் மன்னிப்பதினால்தான் பொறுமையாக இருக்கிறார்கள்.

 அவர்களது மன்னிக்கும் குணத்திற்குக் காரணம் அவர்களுடைய பரிவு அதாவது இரக்கம்."

".கரெக்ட். கடவுளுக்கும் நமது மேல் பரிவு இருப்பதால்தான் நாம் மனம் திரும்புவதற்கு கால அவகாசம் அளித்துக் கொண்டு பொறுமையாக இருக்கிறார்.

புனித அகுஸ்தினார் மனம் திரும்ப அவருக்கு 30 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது."

"நமது வாழ்வில் எப்பொழுதெல்லாம் பொறுமை என்ற கனியை ருசித்து பார்க்க வேண்டும்?"

"கடவுளிடம் ஏதாவது கேட்டு வேண்டும்போது வேண்டியதற்குப்பின் பொறுமை தேவை.

 உண்மையிலேயே நமக்கு என்ன வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.

எப்போது தர வேண்டும் என்பதுவும் தெரியும்.

சிலருக்கு கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும்.

கடவுளை அவசரப்படுத்தாமல் அவர் தரும்வரை விசுவாசத்துடன் பொறுமை காக்க வேண்டும்.

பரிசுத்த ஆவி நமக்கு பொறுமை என்ற கனியை தந்திருக்கிறார்.

தேவைப்படும் போதெல்லாம் அதை ருசித்து பார்க்க வேண்டும்.

நமது விருப்பத்தை எப்போது நிறைவேற்ற வேண்டுமென்று இறைவன் விரும்புகிறாரோ அப்போது நிறைவேற்றுவார்.

 அதுவரை பொறுமை என்ற கனியை ருசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இயேசு தனது பாடுகளை எவ்வளவு பொறுமையாக அனுபவித்தார் என்பது நமக்கு தெரியும்.

அவரது சிலுவையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் போது அவரது பொறுமையையும் நம்மோடு பகிர்ந்து கொள்வார்.

 இரண்டையுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சமூக வாழ்வில் தனியாக பயணிக்க முடியாது. நம்முடன் வருபவர்கள் எல்லோரும்  நமது விருப்பப்படியே செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

 குறைகள் இல்லாத மனிதர்கள் யாருமே உலகில் இல்லை.

நம்முடைய குறைகளோடு நம்மை நாமே ஏற்றுக்கொள்வது போல மற்றவர்களது குறைகளோடு அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 We must have the ability to bear the imperfections of other people, through a knowledge of our own imperfections. 

இதற்கு நம்மிடம் பொறுமை இருக்க வேண்டும்.

நமது அன்றாட வாழ்க்கையில் எப்போதெல்லாம் பொறுமையை இழக்க சோதனைகள் வருகின்றன என்பதை சிந்தித்துப் பார்த்து, 

அப்போதெல்லாம் பொறுமையாய் இருக்க கற்றுக் கொள்வோம். 

நமது உலகியல் வாழ்வில் 

நாம் கடைபிடிக்கும் பொறுமையை பரிசுத்த ஆவிக்கு ஒப்புக்கொடுத்து அவரது கனியாக மாற்றுவோம்.  

Bus stand க்கு சரியான நேரத்தில் போய் விட்டோம், ஆனால் பேருந்து சரியான நேரத்தில் வரவில்லை.

கையில் ஜெபமாலையை எடுப்போம்.

பிந்தும் நேரத்தை மாதா வழியாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போம்.


வீட்டில் சாப்பாடு வர பிந்துகிறது. மனவல்லப ஜெபத்தோடு பொறுமை காப்போம்.

சிலர் மணிக்கணக்காக டிவி முன் உட்கார்ந்து இருப்பார்கள்.

ஆனால் ஆனால் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் சிறிது நீண்டு விட்டால் பொறுமைக்கு சோதனை வந்துவிடும்.

சிலர் ஆற அமர ரசித்து கதை வாசிப்பதற்காக ஜெபத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடித்துவிடுவார்கள்.

ஆண்டவருக்கான காரியங்களில் அவசரமின்றி பொறுமையாக பக்தியுடன் செயல்படுவோம். அதற்காக பரிசுத்த ஆவியின் வரம் வேண்டுவோம்."

"திவ்ய நற்கருணை வாங்குபவர்கள் பூசை முடிந்து கால் மணி நேரமாவது கோவிலில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் அநேகர் குருவானவர் பூசையின் இறுதியில் "சென்று வாருங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தவுடன் எழுந்து புறப்பட்டு விடுகிறார்கள்.

10 மாதங்கள் தாயின் வயிற்றுக்குள் இருக்கவேண்டிய குழந்தை பொறுமையில்லாமல் அவசரப்பட்டு ஒன்பதாவது மாதமே வெளியே வந்தால் எப்படி இருக்கும்!"


"அவசரக் குடுக்கை!

சரி, பொறுமை, பரிவு இரண்டு கனிகளையும் சேர்த்து பார்ப்போம் என்கிறீர்களே பரிவை மறந்து விட்டீர்களா?''


".மறக்கவில்லை. நமது பொறுமை மற்றவர்களோடு சம்பந்தப்படும் போது பரிவு உள்ளே வருகிறது.

மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளிகளை எப்படி கவனிக்க வேண்டும்?"

"பொறுமையுடனும், பரிவுடனும்.'' 

" ஒரு மந்தமான மாணவனுக்கு ஆசிரியர் எப்படி பாடம் சொல்லித்தர வேண்டும்?"

"பொறுமையுடனும், பரிவுடனும்.'' 

". பரிவு என்றால் என்ன?"

"இரக்கம்."

."யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ அவர்களெல்லாம் இரக்கத்துக்கு உரியவர்கள். 

நாம் பாவிகள். இறைவனால் மட்டுமே மீட்கப்பட வேண்டியவர்கள். ஆகவேதான் இறைவன் நம்மோடு பொறுமையுடனும் பரிவுடனும் நடந்து கொள்கிறார்.

நமது உதவி யாருக்குத் தேவைப்பட்டாலும் நாம் அவர்கள் மீது இரக்கம் கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு உதவி செய்யும்போது பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் சாலையில் விழுந்து கிடக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்கு உதவ வருகிறவன் அவனைப் பார்த்து,

"நான் உனக்கு. உதவ வந்திருக்கிறேன். என் கையை பிடித்துக் கொண்டு எழுந்து நில்."

அவன் முயல்கிறான்.
முடியவில்லை.

உதவ வந்தவன்,

"சொல்வது காதில் விழவில்லை.
 நான் உன்னை காப்பாற்ற வேண்டுமென்றால் நீ என் கையை பிடித்துக்கொண்டு எழ வேண்டும்."

"முயல்கிறேன். முடியவில்லை."

"அப்போ அப்படியே கிட . எனக்கு அவசர வேலை இருக்கிறது."

என்று பொறுமை இல்லாமல் பேசினால் எப்படி இருக்கும்?

விழுந்து கிடப்பவன் மீது இவனுக்கு இரக்கம் இருந்தால் பொறுமையோடு குனிந்து கையை பிடித்து தூக்கிவிடுவான்.

இரக்கம் இல்லாதவரிடம் பொறுமையும் இருக்காது."

"அது உண்மைதான். நமக்கு இரக்க சுபாவம் வேண்டும்.

இரக்க சுபாவம் இருந்தால் உதவி தேவைப்படுபவர்களுக்கு பொறுமையுடன் உதவி செய்வோம்.

அன்பு உள்ளவர்களிடம் மட்டுமே பரிவு இருக்கும்.

பரிவு உள்ளவர்களிடம் மட்டுமே பொறுமை இருக்கும்.

கடவுள் அவருடைய அன்பையும், பரிவையும் நம்மிடம் தாராளமாகவே பகிர்ந்துள்ளார்.

இலவசமாக பெற்றோம், இலவசமாக கொடுப்போம்."

"யார் யாருக்கு இலவசமாக கொடுப்போம்?"


"கடவுள் தன்னால் படைக்கப்பட்ட அனைவர் மீதும் இரக்கமாயிருக்கிறார். 

நாமும் அனைவர் மீதும் நமது பரிவைப் பொழிய வேண்டும்."

"அனைவர் மீதும் என்றால்?

 ஏழைகள், தேவைப்படுபவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் போன்றவர்கள் மீது பரிவு காட்டவேண்டும். 

 வசதியுள்ள பணம் படைத்தவர்கள் மீது எதற்காக பரிவு காட்ட வேண்டும்.

 அவர்களுக்கு யார் மீதும் பரிவு கிடையாதே?"

."உண்மையில் பரிவு தேவைப்படுகின்ற பரிதாபத்திற்கு உரியவர்கள் அவர்கள்தான்.

தாங்கள் தேடுகின்ற,

 அளவுக்கு அதிகமாக சொத்துக்களை,

 இறுதிநாளில் தங்களோடு எடுத்துச் செல்ல முடியாது என்பதை தெரிந்திருந்தும்,

அவற்றைத் தேவைப்படுவோரோடு பகிர்ந்து கொள்ளாமல்,

தாங்களும் அனுபவிக்க முடியாமல் போக போகிறார்களே என்பதை நினைக்கும்போது அவர்கள்மேல் பாவமாக இருக்கிறது!

அவர்கள் மீதுதான் நாம் அதிக இரக்கப்படவேண்டும்.

அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்."

"உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மீது?" 

"பதவி நிரந்தரமற்றது என்பதை அறிந்திருந்தும், 

நிரந்தரமான விண்ணக வாழ்வை தேடாமல்,

நிரந்தரமற்ற பதவிக்காக தங்களது வாழ்நாள் முழுவதையும் வீணாக்குகிறார்களே,

அவர்களும் நமது இரக்கத்திற்கு உரியவர்கள்.

அவர்களுக்காகவும் இறைவனிடம் வேண்ட வேண்டும்."

"அதாவது உலக ரீதியாக வசதி உள்ளவர்கள் ஆன்மீக ரீதியாக ஏழைகள், நமது பரிவுக்கு உரியவர்கள்."

"கடவுள் மேலேயே இரக்கப்பட்ட ஒரு குழந்தையை பற்றி தெரியுமா?"

"தெரியாதே!"

"ஒரு சிறு குழந்தை சிலுவையில் தொங்கும் ஆண்டவரே பார்த்து அவர்மீது இரக்கப்பட்ட தாம்.

'ஆண்டவரே உங்களை நினைக்கும் போது எனக்கு உங்கள் மீது பாவமாக இருக்கிறது!

 மனிதர்களுக்காக நீங்கள் இவ்வளவு பாடுகள்பட்டு,

 இரத்தத்தை முழுவதும் சிந்தி,

 சிலுவையில் உங்களது உயிரையே அவர்களுக்காக பலி கொடுத்தீர்களே!

இவ்வளவு செய்தும் அநேகர் உங்களை ஏறிட்டுப் பார்க்க மறுக்கிறார்களே!

அதை நினைக்கும்போது உங்களை பார்க்க பாவமாக இருக்கிறது!'

என்றதாம்."

"மாசு மறுவற்ற குழந்தை!"

"தனது Superior ஐப் பார்த்து இரக்கப்பட்ட Brother Juniper கதை தெரியுமா?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, February 25, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 11 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 11
(தொடர்ச்சி)


"எல்லோரும் அமைதிக்கு வந்த பிற்பாடு நீங்கள் மட்டும் ஏன் சமாதானத்தையே பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?"
 
"அதிலுள்ள ஆன்மீகப் பொருள் நயத்துக்காக."


"அப்படி என்ன நயம் அதிலே இருக்கிறது?"


"சமம் + தானம் = சமாதானம்.

சம தானம் = சம இடம் (equal place)"


"நாம் இலக்கணமா பேசிக் கொண்டிருக்கிறோம்? வார்த்தையை பிரித்து பொருள் சொல்லுகிறீர்கள்?

இலக்கணத்தில்தான்

எழுத்து + எல்லாம் = எழுத்தெல்லாம்.

செம்மை + தமிழ் = செந்தமிழ் என்றெல்லாம் சொல்லுவோம்.

...........சார், பேசுங்க."


"நீங்கள் எங்கே பேச விடுகிறீர்கள்.

ஆரம்பத்திலேயே குறுக்கிடக் கூடாது. சொல்லி முடித்தபின் சந்தேகம் இருந்தால் கேட்கணும்."

"சரி, சொல்லுங்க."

"சம இடத்தில் இருப்பவர்களால்தான் உரையாட முடியும், உறவாடவும் முடியும்.

ஒருவர் மேடையிலிருந்து பேசினால் கீழே இருப்பவர் கேட்டுக் கொண்டுதான் இருக்க முடியும்.

கடவுள் அளவில்லாதவர். நாம் அளவுள்ளவர்கள்.

கடவுள் அளவில்லாதவர் என்று சொல்லலாமே தவிர,

அளவற்ற அவரை முழுவதுமாக நமது அளவு உள்ள மனதிற்குள் கொண்டு வரவே முடியாது.

கடல் முழுவதையும்  தம்ளருக்குள் கொண்டு வர முடியுமா?
 
நமது மனதின் அளவு எவ்வளவோ அவ்வளவு தான் கொண்டு வர முடியும்.

கடவுள் நம்மை அளவுகடந்த விதமாக நேசிக்கிறார். 

அவரது அளவுகடந்த அன்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசிக்கிறார். .

ஆனாலும் அளவுகடந்த அவரை அளவு உள்ள நாம் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியாது என்று அவருக்குத் தெரியும்.

சம இடத்திலுள்ள இரண்டு பேரால்தான் ஒருவரை ஒருவர் முற்றிலும் புரிந்து கொள்ள முடியும். 

ஆகவே நம்முடன் சம இடத்திற்கு இறங்கிவரத் தீர்மானித்தார்.

நம்மை ஏற்ற அவர் இறங்கிவரத் தீர்மானித்தார்.

He came down to lift us up!

சம அளவுள்ள பொருட்கள்தான் சம இடத்தில் இருக்க முடியும்.

எலியும் யானையும் சம இடத்தில் இருக்க முடியுமா?

ஆகவேதான் துவக்கமும் முடிவும் இல்லாத அவர்,

நம்மோடு சம இடத்தில் இருப்பதற்காக,

 துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாக உருவெடுக்க தீர்மானித்தார்.

துவக்கமும் முடிவும் இல்லாத தேவ சுபாவத்தை வைத்துக்கொண்டே 

துவக்கமும் முடிவும் உள்ள மனித சுபாவத்தையும் ஏற்றுக்கொண்டார்.

நித்தியரான அவர் நமது காலத்திற்குள் வந்தார்.

துவக்கமே இல்லாத அவர் 
மரியாளின் வயிற்றில் தனது மனித வாழ்வைத் தொடங்கினார்.

வளரவே முடியாத அவர் குழந்தையாய் இருந்து

 பையனாக வளர்ந்து, இளைஞனாக வளர்ந்து, முழுமையான ஆளாக வளர்ந்தார்.

கஷ்டப்படவே முடியாத அவர் நமக்காக கஷ்டங்களை ஏற்றுக்கொண்டார்.

மரிக்கவே முடியாத அவர் சிலுவையில் நமக்காக மரித்தார்.

இவ்வளவும் எதற்காக?"

"நம்முடன் சம தானத்திற்கு,

 சமாதானத்திற்கு, 

வருவதற்காக."

"அதனால் தான் அவரை சமாதானத்தின் தேவன் என்கிறோம். 

*சமாதானத்தின்* *தேவன்* என்பதன் பொருள் நயம்

 *அமைதியின்* *தேவன்* என்பதில் இருக்கிறதா?"


"சத்தியமாக இல்லை." 

"அப்படியானால் சமாதானத்தையே பிடித்துக் கொண்டு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?"

"தவறு இல்லை."

"இயேசு முழுக்க முழுக்க அளவற்ற கடவுள்.

Jesus is fully God.

இயேசு முழுக்க முழுக்க அளவுள்ள மனிதன்.

Jesus is fully Man.

இயேசு சிலுவையில் மரித்து 1,988 ஆண்டுகள் ஆகிவிட்டாலும்.

இன்றும் அவரை நமது மனித கண்களால் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் தான் பாடுகள் படுவதற்கு முந்திய இரவு திவ்விய நற்கருணையை ஏற்படுத்தினார்.

இன்று நற்கருணையை உருவம் உள்ள நாம் பார்க்கும்போது

 அளவுள்ள நமது கண்களால் உருவமற்ற, அளவற்ற கடவுளையே அளவுள்ள உருவத்தில் பார்க்கிறோம்.


நமது கைகளால் அவரைத் தொடும்போது அளவுள்ள நமது கைகளால் அளவற்ற கடவுளையே தொடுகிறோம்.


நமது நாவினால் அவரை ருசித்து பார்க்கும்போது அளவுள்ள நமது நாவினால் அளவற்ற கடவுளையே
ருசித்துப் பார்க்கிறோம்.

உருவம் உள்ள நாம் உருவமற்ற கடவுளையே நற்கருணை உருவில் பார்க்கிறோம்.

நற்கருணையை விழுங்கும்போது இயேசுவின் உருவமும் நமது உருவமும் ஒன்றாக இணைகின்றன.  

உருவமுள்ள கண்களால் நாம் பார்ப்பது உருவமுள்ள இயேசுவை.

அதுவும் நமது கண்களால் பார்க்கக்கூடிய அளவுக்கு உருவமுள்ள இயேசுவை.

இயேசுவை மட்டும் அல்ல, உருவமற்ற  அவரது தந்தையையும் பார்க்கிறோம்.

"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்."
(அரு. 14:9)


இப்போது நாம் துணிந்து சொல்லலாம், "கடவுளுக்கு நம்மைப்போல் உருவம் உண்டு!"

இயேசு அளவு இல்லாதவர், (as God)

 அதேசமயம் நமது கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்கு

 அளவு உள்ள உருவத்தைக் கொண்டவர்.(as Man)

 ஆனாலும் உருவமுள்ள இயேசுதான் உருவமற்ற கடவுள்.

உருவமற்ற கடவுள்தான் உருவமுள்ள இயேசு!

இதெல்லாம் எதனால் சாத்தியமாயிற்று?"

"இயேசு நம்மோடு சம தானத்தில் இருப்பதால்.

 நாம் உருவத்தோடு வாழும் இதே உலகில்தான் இயேசு அன்றும் வாழ்ந்தார், 

 இன்றும் உருவத்தோடு நற்கருணை வடிவில் வாழ்கிறார்.

ஆகவேதான் அமைதியை விட சமாதானம் எனக்கு பிடித்திருக்கிறது."

"சமாதானத்திற்கும், அமைதிக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லையா?"

"தொடர்பு இருக்கிறது, பொருளில் அல்ல, உறவில் ."

"கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்கள்."

"சமாதானம் இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். 

அமைதியை சமாதானத்தின் குழந்தை என்று கூட சொல்லலாம்.

 இன்று உலகில் அமைதி இல்லை.
ஏன்? 

சமாதானம் இல்லை.
 ஆகவே அமைதியும் இல்லை.

நாடுகளை ஆள்பவர்கள் சமாதான உறவோடு இருந்தால்

 நாடுகளுக்கு இடையே அமைதி நிலவும்.

சமாதான உறவு இல்லாமல் ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டிருப்பதால்தான்

 நாடுகளுக்கிடையே போர்கள் மூழ்கின்றன, அமைதி கெடுகிறது."

"மன அமைதி, (peace of mind) என்று கூறுகிறார்களே அதற்கும் சமாதானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?"


"மன அமைதியைக் கெடுப்பது பாவம்.

மன அமைதியைக் கொடுப்பது சமாதானம்.

நாம் பாவம் செய்யும்போது இறைவனோடு நமக்குள்ள உறவை முறித்துக் கொள்கிறோம்.

இந்த உறவு முறிவினால் நமது மன அமைதி கெடுகிறது.

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து முறிந்த உறவை சரிசெய்து கொண்டால் இழந்த மன அமைதி திரும்பும்.

மனதில் அமைதி இருக்க வேண்டும் என்றால் நாம் இறைவனோடு சமாதானமாக இருக்க வேண்டும்.

சமாதானம் இருக்கும் இடத்தில் அமைதி உறுதியாக இருக்கும்."

"நாம் பாவமில்லாமல் இறைவனோடு சமாதான உறவோடு இருப்பதுதான் பரிசுத்த ஆவியின் கனி, சரிதானே"

"Super சரி. பரிசுத்த ஆவிக்கும் பாவமற்ற மனதுக்கும் உள்ள இன்னொரு தொடர்பு தெரிகிறதா?"

"கொஞ்சம் பொறுங்கள். சொல்லி விடுகிறேன்.

பரிசுத்த ஆவி, பரிசுத்த மனது.

பரிசுத்தராகிய கடவுள் 
பாவமற்ற பரிசுத்தமான மனதை
விரும்புகிறார்.   

பரிசுத்தமான மனது பரிசுத்த ஆவியின் கனிகள் இருந்து செயலாக்க பொருத்தமான இடம்.

சரியா?"

"சரி. பரிசுத்த ஆவியின் கனிகளை பெற வேண்டுமென்றால் நமது உள்ளமும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

 பரிசுத்தமான மனதில்தான் சமாதானமும் இருக்கும், அமைதியும் இருக்கும்.


இப்போ சொல்லுங்கள், உங்களுக்கு சமாதானம் வேண்டுமா?
 அமைதி வேண்டுமா?"

"உறவில் சமாதானம் வேண்டும்.
 உள்ளத்தில் அமைதி வேண்டும்."


"யார் யார் இறைவனோடு சமாதான உறவில் இருக்கிறார்களோ அவர்கள் உள்ளத்தில் அமைதி இருக்கும்."

"அடுத்த கனி எது?"

"கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.
அதது வரக்கூடிய நேரத்தில் வரும்."

(பொறுமை வரும்)

லூர்து செல்வம்.

Wednesday, February 24, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 10 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 10
(தொடர்ச்சி)


"பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் கனிகளுக்கும் என்ன வித்தியாசம்?"

"தாய்க்கும், பிள்ளைகளுக்கும் உள்ள வித்தியாசம்."

"ஒப்புமை புரியவில்லை."

"கொடைகள் இறைவனிடமிருந்து வருவதால், அவை நமது ஆன்மீக வாழ்வில் இறைவனுக்கு உகந்த காரியங்களைச் செய்கின்றன.

செய்யப்படுகின்ற இறைவனுக்கு உகந்த காரியங்கள்தான் அவை பெற்றெடுக்கும் கனிகள்.

The gifts of the Holy Spirit are like virtues, 

the fruits of the Holy Spirit are the actions that those virtues produce."

"அதாவது பரிசுத்த ஆவி தனது கொடைகள் மூலமாக. நற்செயல்களை செய்விக்கிறார்.

சரியா?"

"சரி. பரிசுத்த ஆவியின் உதவியால்தான் (கொடை)

நற்செயல்களாகிய (moral actions)
கனிகளைச் செய்கிறோம்.

பரிசுத்த ஆவியின் கனிகள்தான் அவர் நம்மில் செயலாற்றுகிறார் என்பதற்கு அத்தாட்சி.

ஒரு இடத்திலிருந்து நறுமணம் வந்தால் அங்கே மலர்கள் இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்.
'
அதேபோன்று ஒருவரிடம் பரிசுத்த ஆவியின் கனிகள் செயல்பட்டுக்கொண்டு  இருந்தால்

 அவர் பரிசுத்த ஆவியால் இயக்கப்பட்டு வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்."

"நமது ஒத்துழைப்பு இல்லாமல் பரிசுத்த ஆவி செயலாற்றுவாரா?"

" நமது ஒத்துழைப்பைக் கொடுக்கவும், கொடுக்காதிருக்கவும் கடவுள் நமக்குப் பரிபூரண சுதந்திரத்தைத் தந்திருக்கிறார்.

நமது ஒத்துழைப்பைக் கடவுள் எதிர் பார்க்கிறார்.

ஒத்துழைப்பைக் கொடுத்தால் பயனடைய போவதும் நாம்தான்.

 கொடுக்காவிட்டால் இழக்கப் போவதும் நாம்தான்.

 கடவுளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கடவுள் கொடைகளை இலவசமாகத் தருகிறார். நாம் அவற்றைப் பயன்படுத்தினால்தான் அவை கனிகளைக் கொடுக்கும்."


"பரிசுத்த ஆவியின் கனிகள் எவை?"

"1.அன்பு, (charity) 
2.மகிழ்ச்சி,( joy)
3. சமாதானம், (peace)
4.பொறுமை, (patience)
5.பரிவு,( kindness)
6.நன்னயம், (goodness)
7.நம்பிக்கை,faith
 8.கனிவு,( mildness)
9.தன்னடக்கம் (modesty)
10.பணிவு நயம் (self-control)
11.தாராள குணம் (generosity)
12.நிறை கற்பு (chastity)"

, " கொடைகள் ஏழு, கனிகள் 12.

எந்த கொடை பெற்றது எந்த கனி என்று கூற முடியுமா?"

"7 கொடைகளும் இணைந்து செயல் புரிந்து கிடைத்ததுதான் 12 கனிகளும்."


"கனிகளின் பெயர்களைப் பார்க்கும்போது அவை ஞானஸ்நானமே பெறாத நபர்களிடம் கூட காணப்படுகின்ற குணங்கள் போலவே தோன்றுகின்றன. ஏதாவது வித்தியாசம் உண்டா?"

"விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் உள்ள வேறுபாடுதான்.

 ஞானஸ்நானம்பெற்றவர்களுக்கு பரிசுத்த ஆவி கொடுக்கும் கனிகள் விண்ணகத்திற்கு உரியவை

 ஞானஸ்நானம் பெறாதவர்களிடம் உள்ள அதே பெயருடைய குணங்கள் மண்ணகத்திற்கு உரியவை.

உதாரணத்துக்கு,

இறைவன் தனது படைப்பின் போது எல்லா மனிதர்களுக்கும் தனது அன்பை பகிர்ந்து அளித்திருக்கிறார்.

அன்பு எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட கொடை,

கையில் பணம் இருந்தால் அதைக்கொண்டு எதை வேண்டுமென்றாலும் வாங்கலாம்.

ஆனால் பயன்படுவதை வாங்குபவன் மட்டுமே புத்திசாலி.

அதேபோன்றுதான் இறைவன் தந்த அன்பை இறையுலகம் செல்லவும் பயன்படுத்தலாம், பூவுலகிற்காக மட்டுமே வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.

கிறிஸ்தவ அன்பு, 

அதாவது,

 பரிசுத்த ஆவியின் கொடையாகிய அன்பு, விண்ணக , நித்திய, பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.

சாதாரண அன்பு இவ்வுலகில் வாழ வைக்கும்.

டாலரும் நோட்டு தான்.
ரூபாயும் நோட்டு தான்.

ஆனால் டாலர் அமெரிக்காவில் செல்லும் இந்தியாவில் செல்லாது.

ரூபாய் இந்தியாவில் செல்லும்,அமெரிக்காவில் செல்லாது.

இறையன்பு விண்ணகத்தில் செல்லுபடியாகும் நோட்டு.

மனித அன்பு மண்ணகத்தில் மட்டும் செல்லுபடியாகும் நோட்டு.

இப்பொழுதெல்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் "மனிதம்" பற்றி பேசுகிறார்கள்.

இவர்கள் பேசும் மனிதமும் மனிதத்தை சார்ந்த நல்ல செயல்களும் உலகத்தில் வாழ வைக்கும்.

ஆனால் இறையன்பு சேர்ந்த மனிதம் தான் விண்ணகத்திற்கு இட்டுச்செல்லும்.

*இறைவன் பெயரால்* ஒரு சிறுவனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் அதற்கு விண்ணகத்தில் சன்மானம் உண்டு.


ஆனால் ஒருவன் '*தன் பெயரால்*'

 பத்து கோடி ரூபாய் தானம் செய்தாலும்,

அதை கோவில் கட்டவே கொடுத்தாலும்,

காணிக்கையாக உண்டியலில் போட்டாலும்,

 அதற்குரிய பலனாகிய புகழ் உலகத்தில் மட்டும்தான் இருக்கும்.
'
புரிகிறதா மேலும் விளக்கம் வேண்டுமா?"


"மனிதனுக்கு மனிதனுக்காக உதவினால் கிடைக்கும் புகழ் உலகு உள்ளளவும் இருக்கும்.


அதே மனிதனுக்கு இறைவன் பெயரால் உதவினால் கிடைக்கும் சன்மானம் நித்திய காலமும் நீடிக்கும்.

இரண்டுமே உதவிதான். ஆனா பலன் வெவ்வேறு.

எனக்கு புரிந்திருக்கிறதா?'

"புரிந்திருக்கிறது.''

"இப்போது ஒவ்வொரு கனியாக சாப்பிடலாமா?''

"அதற்காகத்தான். காத்துக்கொண்டிருக்கிறேன்"

"முதலில் அன்பு என்னும் கனியை எடுப்போம்.

இறையன்பு பிறர் அன்பும் சேர்ந்ததுதான் பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு. (Charity)

நம்மைப் படைத்த இறைவனையும் இறைவனில் நமது சகோதரர்களையும்  

பிரதிபலன் எதிர்பார்க்காது நேசிப்பதே உண்மையான அன்பு.

இறைவன் நம்மை பிரதிபலன் எதிர்பார்க்காது நேசிக்கிறார்.

 நம்மை நேசிப்பதால் அவருக்கு எந்தவிதமான பலனும் கிடையாது, ஏனெனில் நாம் இல்லாமலேயே அவர் நிறைவானவர்.

 நாம் நேசிக்கும் போது பயனடையப் போவது நாம்தான்.

நாமும் நாம் அடையப்போகும் பலனுக்காக அல்ல, இறைவனை இறைவன் என்பதற்காகவே நேசிக்க வேண்டும்.

நமது அயலானையும் இறைவனுக்காக நேசிக்க வேண்டும். நமது நேசம் நமது செயல்களில் பிரதிபலிக்க வேண்டும்.

செயல் இல்லாத அன்பு செத்த அன்பு."

" இறைவனை இறைவன் என்பதற்காகவே நேசிக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன?"

"உணவை உண்பவர்களில் இருவகையினர் உண்டு.

ஒரு வகையினர் அது உணவு என்பதற்காகவே உண்பார்கள்.

இன்னொரு வகையினர் உணவிலுள்ள ருசிக்காக உண்பார்கள்.

உணவு என்பதற்காகவே உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

ருசிக்காக உண்பவர்கள்தான் நோய் நொடிகளுக்கு ஆளாகிறார்கள்.

இறைவன் நம்மை படைத்தவர் என்பதற்காகவே அவரை நேசிக்க வேண்டும்.

நம்மை எதற்காக படைத்தாரோ அதை அவர் நிறைவேற்றுவார்.

இவ்வுலகில் நமக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை இறைவன் தருவார் என்பதற்காக நேசிக்கக் கூடாது.

அவற்றை எதிர்பார்த்து இறைவனை நேசிப்பவர்கள்தான் தாங்கள் எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் வாழ்வில் ஏமாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

கடவுள் நாம் எதிர்பார்ப்பவற்றை அல்ல, நமது ஆன்மீக நித்திய பேரின்ப வாழ்வுக்கு உதவியாக இருப்பவற்றை மட்டுமே தருவார்.

அவர் தருவதும் தராததும் நமது ஆன்மீக நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்தால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

எதிர்பாராது நேசிப்பவர்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்."

"அதாவது முதல் கனியை ருசித்து உண்பவர்கள் 

இரண்டாவது கனியாக மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பார்கள்.

பரிசுத்த ஆவி தரும் மகிழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?"


"நம்மில் அநேகர் மகிழ்ச்சியைப் பற்றி தவறான கருத்து வைத்திருக்கிறார்கள்.

 வேண்டியதெல்லாம் கிடைக்கும்போது உணர்ச்சி பொங்க அனுபவிப்பதையே மகிழ்ச்சி என்று எண்ணுகிறார்கள்.

உதாரணத்திற்கு, திருவிழா சமயங்களில் கிடைக்கும் ருசியான மட்டன் பிரியாணி உணவு அப்படிப்பட்டவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை 'அளிக்கும்.'

சாதாரண உணவு மகிழ்ச்சியை 'அழிக்கும்.'

எதிர்பார்த்ததைவிட அதிகமான சம்பள உயர்வு கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி பொங்கும்.

எதிர்பார்த்தது கூட கிடைக்காவிட்டால் மகிழ்ச்சி வரவே வராது.

இப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசுத்த ஆவி தரும் மகிழ்ச்சி அல்ல.

எது கிடைக்கிறதோ அதில் திருப்தி காணும் மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி.

எதிர்மறை நிகழ்வுகளால் இம் மகிழ்ச்சியை பாதிக்க முடியாது.

உண்மையில் உண்மையான மகிழ்ச்சிக்கு எதிர்மறை நிகழ்வு, தடை போன்றவை கிடையாது.


நாற்சந்தி ரோட்டில் போலீஸ் நின்று கொண்டு Stop காண்பித்தால், தடை என்று சொல்வோமா?

வகுப்பில் ஆசிரியர், "கூச்சல் போடாதீர்கள்" என்று சொன்னால் அதை எதிர்மறை உத்தரவாக கருதுவோமா?

ஆன்மீக வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளும் நமது ஆன்மாவை விண்ணத்திற்கு வழிகாட்டும் கைகாட்டிகளே!

என்ன நடந்தாலும் நமது மகிழ்ச்சியைக் கூட்டுமேயொழிய குறைக்காது.

"அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."
(லூக். 2:10)

வானவர் கொண்டுவந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி என்ன?

1.உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்.

2.உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை.

3. மண்ணுலகில் நல்மனதோற்கு சமாதானம்.

மரியாயின் வயிற்றின் கனி சமாதானத்தின் வேந்தன்."

"இப்படியும் சொல்லலாமே :

அன்பு மயமான இறைமகன் மனுமகன் ஆனதால்

 நாம் பெற்றது மகிழ்ச்சியும், சமாதானமும்."

(சமாதானம் தொடரும்)

லூர்து செல்வம்

Tuesday, February 23, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 9(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 9
(தொடர்ச்சி)


"காதலர்கள் காலை பத்து மணிக்கு பூங்காவில் சந்திக்க வேண்டுமென்று தொலைபேசி மூலம் முடிவு செய்திருந்தார்கள்.


ஆனால் காதலன் ஒன்பதரை மணிக்கே வந்து காத்துக் கொண்டிருந்தான்.

காதலி சரியாக பத்து மணிக்கு வந்தாள்.

"ஏங்க, சீக்கிரமே வந்து விட்டீர்களோ?"

"ஆமாடி. ஒன்பதரை மணிக்கே வந்து காத்துக்கிடக்கிறேன்."

"ஏங்க, பத்து மணிக்குதான சந்திப்பதாக பேசிக்கிட்டோம். ஏன் ஒன்பதரை மணிக்கே வந்து காத்துக்கிடக்கிறீர்கள்?"

"ஒரு பயம்தான்."

"பயமா? எதுக்குங்க? யாரிடம் பயம்?"

"சரியான நேரத்திற்குப் புறப்பட்டு, எதிர்பாராத காரணத்தினால் பிந்திவிட்டால் நீ வருத்தப்படுவாயோ என்ற பயம்தான்."

"நாம் அன்பர்களுங்க. அன்பு இருக்கும் இடத்தில் பயம் எதற்கு?"

"அன்பு இருக்கும் இடத்தில்தானடி பயம் இருக்கும்.

எங்கே வேண்டாததைச் செய்து காதலியின் மனதை நோகச் செய்து விடுவோமோ என்ற பயம்.

அன்பு இல்லாதவர்களை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லையே!"


"சார் நாம் பேசிக்கொண்டிருப்பது பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றி.

 இறைவனோடு நமக்குள்ள ஆன்மீக உறவைப் பற்றி.

 இப்பொழுது எதற்கு காதல் கதை?"

"நமது ஆன்மீக வாழ்வே இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே உள்ள காதல் வாழ்வு தானே!

தமிழில் காதல் என்றால் அன்பு என்றுதான் அர்த்தம்.

இறைவன் அன்பு மயமானவர்.

நாம் இறைவனாகிய அன்பின் பிள்ளைகள்.

தாயை போல பிள்ளைகள்.

 நம்மிடமுள்ள அன்புதான் நம்மை இறைவனின் பிள்ளைகளாக ஆக்குகிறது.

அன்பின் தலையாய குணமே தனது நேசருக்காக தன்னையே தியாகம் செய்வதுதான்.

நமக்காக இயேசு தன்னையே சிலுவையில் தியாகம் செய்ததை நம்மால் மறக்க முடியாது.

நாமும் அவருக்காக நம்மையே தியாகம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

கிறிஸ்தவ வாழ்வு ஒரு தியாக வாழ்வு.

அன்பரின் விருப்பத்தையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்வதுதான் தியாக வாழ்வு.

அன்பரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அவரின் மனம் நோகுமோ எங்கு பயந்து வாழ்வது அன்பின் சுபாவம்.

இந்த பயம் உள்ளவர்கள் அன்பரின் மனதை நோகச் செய்ய மாட்டார்கள்.

நமது அன்பர் கடவுள்.

நமக்கு தெய்வ பயம் இருந்தால்தான் நாம் தெய்வத்தை நோகச் செய்யாமல் அவரது விருப்பம் நிறைவேறும் படி வாழ்வோம்.

பாவம் இறைவனின் மனதை நோகச் செய்யும் என்பதால் உண்மையான இறை அன்பு உள்ளவன் பாவம் செய்ய பயப்படுவான்.

தெய்வ பயம் இல்லாதவன் தெய்வத்தின் மனம் நோவதைப் பற்றி கவலைப்பட மாட்டான்,

அதாவது பாவம் செய்வதைப்பற்றி கவலைப்பட மாட்டான்.

தெய்வ பயம் இல்லாதவர்களால் இறைவனை முழுமையாக அன்பு செய்ய முடியாது.

ஆகவே தெய்வ பயத்தையும் அன்பையும் பிரிக்க முடியாது.

இறைவன் மீதும், புனிதர்கள் மீதும் நமக்கு உள்ள அன்பையே பக்தி என்கிறோம்.

இறைவன்மீது நமக்கு இருக்க வேண்டியது பயபக்தி, அதாவது பயம் கலந்த பக்தி.'

"பயபக்தி என்று சொல்வதற்கா இவ்வளவு முன்னுரை?"

"ஆமா. உலகில் தெய்வ பயம் குறைந்துவிட்ட காரணத்தினால்தான் பாவங்கள் பெருகிவிட்டன.

ஆகவேதான் அன்பின் தெய்வமாகிய பரிசுத்த ஆவி நம்முள் இறங்கும்போது முதலில் தெய்வ பயம் என்ற கொடையை நமக்கு தருகிறார்.

தெய்வ பயத்திலிருந்து ஞானம் பிறக்கிறது.

ஞானம் நமது புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி ஆகியவற்றை வழிநடத்துகிறது.

தெய்வ பயத்திலிருந்து தான் மற்ற எல்லா கொடைகளும் பிறக்கின்றன என்று கூட சொல்லலாம்."

" மனிதன் - தெய்வ பயம் = மிருகம்.
சரியா?"

"Super சரி. புத்தி தான் ஒருவனே மனிதனாக்குகிறது.

தெய்வ பயம் இல்லாதவனுடைய புத்தி மிருகத்தனமாகவே செயல்படும்.

தெய்வத்துக்குப் பயப்படாதவன் வேறு எதற்குப் பயப்படுவான்?

 இன்று மனிதர்கள் மிருகங்களைப் போல் ஒருவரோடொருவர் சண்டை போடுவதற்கும், 

பயப்படாமல் கொலைகள் கூட செய்வதற்கும்,

ஆறாம், ஒன்பதாம் கட்டளைகளை வெட்கப்படாமல் மீறி நடப்பதற்கும் காரணம் 

தெய்வ பயம் இல்லாமைதானே!

தெய்வ பயம் இல்லாதவன் மனிதன் என்று அழைக்கப்பட அருகதை அற்றவன்."

"பரிசுத்த ஆவியின் கொடைகள்
தான் நம்மை முழுமையான மனிதர்களாக மாற்றுகின்றன.

ஏழு கொடைகளையும் வரிசைப் படுத்தும்போது ஏன் தெய்வ பயத்தை முதலில் போடவில்லை?"

" குழந்தை முதலில் அம்மா என்று சொல்ல கற்கிறது.

அதற்காக அப்பா முக்கியமில்லை என்று ஆகிவிடுமா?

வேண்டுமென்றால் தெய்வ பயத்தை முதலில் போட்டுக்கொள். ஞானத்துக்கு கோபம் வராது."

."தூய ஆவியின் கனிகள் என்கிறார்களே. அவற்றைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, February 22, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 8(தொடர்ச்சி

*திக்குத் தெரியாத காட்டில்* 8
(தொடர்ச்சி


"ஒரு அம்மாவிற்கு ஒரு குழந்தை பிறந்தது.

சுற்றிலும் பார்த்தது. அதுக்கு எல்லாம் புதியதாய் இருந்தது.

அதனால் அதிகமாக அசைய முடியவில்லை. அதனால் முடிந்ததெல்லாம் அசைய முயன்றது தான்.

 அதற்கு மிகவும் பசியாக இருந்தது. ஆனால் பசியை எப்படி அமர்த்துவது என்று தெரியவில்லை.

 ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் அதனால் நன்றாக செய்ய முடிந்தது.

அதனால் அழ மட்டுமே முடிந்தது.

நன்றாக அழுதது. ஓங்கி ஓங்கி அழுதது. அங்கும் இங்கும் பார்த்து பார்த்து அழுதது. அந்த வேலையை செம்மையாக செய்தது.


ஆனால் அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 

அது அழுவதை பார்த்து 

அதனை பெற்றவள் உட்பட 

அனைவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

ஆனாலும் அது அழுவதை பார்த்தபின் அருகில் இருந்தவர்கள் அதை கையால் எடுத்தார்கள்.

  தாயிடம் கொடுத்தார்கள்.

அவள் அதற்கு பாலூட்டினாள்.

அதிலிருந்து அந்த குழந்தை ஒரு பாடம் கற்றுக் கொண்டது.

 அதுதான் அதன் வாழ்வில் கற்றுக் கொண்ட முதல் பாடம்.

என்ன பாடம்?

அழுதால்தான் பால் கிடைக்கும்.

அடுத்து அது கற்றுக்கொண்ட பாடங்கள்:

அழுதால்தான் மற்றவர்கள் தன்னை பார்க்க வருவார்கள்.

அழுதால்தான் தன்னை எடுப்பார்கள். 

அழுதால்தான் என்ன வேண்டும் என்று கேட்பார்கள்.

அழுதால் தான் தனக்கு வேண்டியதை தருவார்கள்.

காரியங்களை சாதிக்க அழுகை ஒன்றுதான் வழி என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டது."


"இப்போ எதற்கு திடீரென்று இந்த குழந்தை புராணம்?"

"இது திடீரென்று கூறப்படும் புராணம் அல்ல.

நமது ஆன்மீகத்தின் அடிப்படையே இந்த உண்மைதான்.

நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டவர்கள்.

 குழந்தை அழுவதன் அடிப்படை தத்துவம் என்ன?

 சுயமாக குழந்தைக்கு அழுவதைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது.

அது அழுவதனால் தான் தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்கிறது.

நாமும் குழந்தைகளாக இருந்தவர்கள் தானே.

உலகில் நாம் கற்றுக் கொண்ட முதல் பாடம் இதுதானே.

முதல் பாடம் மட்டுமல்ல இறுதி வரை கடைபிடிக்க வேண்டிய பாடம்.

இப்போதும் நம்மிடம் இல்லாத ஒன்று நமக்கு வேண்டுமென்றால் நம்மை பெற்றவரை நோக்கி அழுவதைத் தவிர வேறு ஒன்றும் நமக்கு தெரியாது.

ஆன்மீகத்தில் நம்மை பெற்றவர் கடவுள் மட்டுமே.

ஆன்மீக ரீதியாக நமக்கு எது வேண்டும் என்றாலும் இறைவனை நோக்கி அழுதால் மட்டுமே கிடைக்கும்."

"இறைவனை நோக்கி அழுவதைத்தான் நாம் ஜெபம், மன்றாட்டு, பிரார்த்தனை என்று பல பெயர்களால் அழைக்கிறோம். சரியா?"


"அழுகின்ற குழந்தை தனக்கு எது வேண்டுமோ அதை நினைத்துதான் அழும்.

முதல் தடவை அது அழும் போது அம்மா அதை எடுத்து பால் கொடுத்து விட்டால் அப்புறம் அது அம்மாவை நினைத்துதான் அழும்.

நாமும் கடவுளை நோக்கி ஒழுங்காக அழ கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் ஜெபம் சொல்லும் போது, கடவுளை நினைத்துதான் சொல்ல வேண்டும்.

மனதில் வேறு எதையாவது நினைத்துக்கொண்டு வார்த்தைகளை மட்டும் வாயினால் சொன்னால் அதன் பெயர் ஜெபம் அல்ல."

"நாம் பரிசுத்த ஆவியின் வரங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது அழுவதைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?"

"இது கூடவா புரியவில்லை?  நமக்கு வேண்டிய வரங்களைக் கேட்டு பரிசுத்த ஆவியிடம் நாம் அழுது அழுது பெற்றுக்கொள்ள வேண்டும்.

'எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் திவ்விய ஸ்பிரீத்து சாந்துவே,

அடியோர் உள்ளத்தில் எழுந்து வாரும் இனிய சிநேக தேவனே.'"

"பரிசுத்த ஆவியை நம் உள்ளத்தில் வரவேற்று நமக்கு வேண்டிய வரங்களை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள்.

 ஆனால் நாம் உறுதிப்பூசுதல் பெற்றவுடனே பரிசுத்த ஆவி நம்மிடம் வந்து நமது உள்ளத்தில் தங்கி ஏழு வகை கொடைகளையும் தந்துவிட்டாரே.

தந்ததையே திரும்பத் திரும்ப கேட்க வேண்டுமா?"

"கேட்க வேண்டும்.

கடவுள் நமக்கு வேண்டியதை தந்துவிட்டு ஓய்வு எடுக்க போக மாட்டார். 

அவரால் ஓய்வு எடுக்க முடியாது.

அவர் நம்முள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.

நாமும் அவரோடு இணைந்து இயங்க வேண்டும்.

அதுவே ஆன்மீகம்.

ஒவ்வொரு வினாடியும் ஆன்மீகத்தில் நாம் இயங்க ஆண்டவரின் அருள் வேண்டும்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஆண்டவனின் அருளை அதிகம் வேண்டுகின்றோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு அவர் நமக்கு அதிகமான அருளை தருவார்.

நமது உடலியல் வாழ்வில் எவ்வளவுக்கு எவ்வளவு சத்துள்ள உணவை உண்கிறோமோ

எவ்வளவுக்கு எவ்வளவு பயிற்சி செய்கிறோமோ,

அவ்வளவுக்கு அவ்வளவு நமது உடல் திடகாத்திரமாக இருக்கும்.

நமது ஆன்மா திடமாக இருக்க வேண்டுமென்றால் நாம் நமது ஆன்மாவுக்கு இறை அருளாகிய உணவை ஊட்டிக்கொண்டு இருக்க வேண்டும்.

ஆன்மீகத்தில் பயிற்சி என்றால் 
அருள் வாழ்வாக மாறுவது.

அருள் நல்ல செயல்களாக மாறுவது."

''நமது ஆன்மா திடகாத்திரமாக உள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?"

"எவ்வளவு சோதனைகள் வந்தாலும், எத்தனை கஷ்டங்கள் நேரிடினும் 

முகமலர்ச்சியுடன் அருள் வாழ்வில் இயங்க முடியும் என்றால் நம்முடைய ஆன்மா திடகாத்திரமாக உள்ளது என்பது பொருள்,


ஒரு சிறு சோதனை வந்தால்கூட நாம் துவண்டு விடுவோமானால் நம்மிடம் திடமில்லை.

நமது ஆன்மாவை திடப்படுத்தும்படி பரிசுத்த ஆவியை நோக்கி மன்றாடவேண்டும்.

உண்மையில் சோதனைகளும், கஷ்டங்களும் வருவதே நமது ஆன்மாவை திடப் படுத்துவதற்காகத்தான்.

சோதனைகளும், கஷ்டங்களும்
இறைவனை நோக்கி நம்மை அழ வைக்கின்றன.

The more we suffer, the more we pray.

அவை வராவிட்டால் இறைவனை நினைப்பதையே மறந்து விடுவோம்.

அவை வந்தால்தான் சோதனைகளை வெல்லவும், கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளவும்    பயிற்சி கிடைக்கும்.

இறைவனுக்காக மரித்த வேத சாட்சிகள் எல்லாம் சோதனைகளை வென்று கஷ்டங்களை தாங்கி வாழ்ந்தவர்கள் தான்.

சிலுவை இல்லாவிட்டால் மகிமை இல்லை.

உண்மையான ஆன்மீகவாதிகள் துன்பங்களில் இருந்து விடுதலை பெற ஜெபிக்க மாட்டார்கள்.

 துன்பங்களைப் பொறுமையோடு இறைவனுக்காக தாங்கிக் கொள்ள வேண்டிய திடனையும், உறுதியையும் தரவே இறைவனிடம் ஜெபிப்பார்கள்."

"ஞானம் எவ்வாறு திடனுக்கு உதவுகிறது?"

"சிலுவையின் பலனை ஆன்மாவிற்கு உணர வைப்பது ஞானம்தான். 

ஞானம் இல்லாதவன் துன்பங்களை பாவங்களுக்கான தண்டனை என்று நினைப்பான்.

 ஞானம் உள்ளவனுக்கு தான் தெரியும் துன்பங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய உதவும் ஆசீர்வாதங்கள் என்று. 


இயேசுவே துன்பங்களை அனுபவித்து தான் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்தார்.

துன்பப்படும் போது நாம் இயேசுவைப் பிரதிபலிக்கிறோம் .

நம்மை இயேசுவைப்போல் மாற்றும் எதுவும் நமக்கு ஆசீர்வாதம்தான்.


ஞானம் உள்ளவர்களுடைய புத்தி இயேசுவை மையமாக வைத்தே சிந்திக்கும்.

ஞானம் உள்ளவர்களுடைய அறிவு இயேசுவையே மையமாகக் கொண்டிருக்கும்.

ஞானம் உள்ளவர்களுடைய செயல்களும் இயேசுவையே மையமாகக் கொண்டிருக்கும்.

ஞானம் உள்ளவர்கள் இயேசுவுக்காகவே திடமாக வாழ்வார்கள்.

ஞானம் உள்ளவர்கள் தெய்வ பயத்தோடு பக்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்."

"பக்தி என்றால் Love.
பயம் என்றால் Fear. 

இரண்டும் எப்படி நண்பர்களாக இருக்கும்?

(தொடரும்)

லூர்து செல்வம்.

*திக்குத் தெரியாத காட்டில்* 7(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 7
(தொடர்ச்சி)

 

"ஒரு ஒண்ணாங்கிளாஸ் டீச்சர்ட்ட வசதியுள்ள வீட்டைச் சேர்ந்த ஒரு பையன் படித்தான்.

ஒருநாள் அந்தப் பையனிடம் டீச்சர் ஒரு கணக்கு போட்டார்கள்.

"இரண்டும் இரண்டும் எத்தனை?"

"22"

"தம்பி, இந்த கையில இரண்டு மாம்பழங்கள் உள்ளன.

 இந்த கையில 2 மாம்பழங்கள் உள்ளன. மொத்தம் எத்தனை மாம்பழங்கள்"

"22 மாம்பழங்கள்"

"தம்பி, இரண்டும் இரண்டும் 4, சொல்லு" 

" டீச்சர், நீங்கள் சொல்வது தப்பு. இரண்டும் இரண்டும் 22.''

மறுநாள் காலையில் பையனுடைய அப்பா பள்ளிக்கூட principal ஐப் பார்க்க வந்தார்.

"சார், உங்களுடைய ஒண்ணாங்கிளாஸ் டீச்சருக்கு கணக்கு சொல்லிக்கொடுக்க தெரியல.

கொஞ்சம் விசாரியுங்கள்."

principal டீச்சர கூப்பிட்டு விட்டார்கள். 

"டீச்சர், உங்களைப் பற்றி உங்கள் வகுப்புப் பையன் ஏதோ complaint கொண்டு வந்திருக்கிறான். நீ சொல்லு தம்பி."

"டீச்சருக்கு கணக்கு தெரியல. இரண்டும் இரண்டும் நான்கு என்கிறார்கள். 

22 என்று நான் சொல்லியும் நம்ப மறுக்கிறார்கள்."

"டீச்சர், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"நீங்கள் விசாரிக்கிறீர்கள். நீங்கள்தான் சொல்ல வேண்டும்."

பையனின் அப்பா: சார் இதுல விசாரிக்க என்ன இருக்கு?
 பையன் சொன்னதை டீச்சர் மறுக்கவில்லை.

ஒண்ணு டீச்சர வேலையை விட்டு போக சொல்லுங்க அல்லது என் பையனுக்கு T.Cகொடுங்க."


பையனின் அப்பா பள்ளிக்கூடத்திற்கு நிறைய நன்கொடை கொடுத்திருக்கிறார். இன்னும் கொடுப்பார். ஆகவே பையனை விட principalக்கு மனது இல்லை.

"அதுல ஒரு பிரச்சனை இருக்கிறது. டீச்சரை உடனே போக சொல்ல வேண்டுமென்றால் இரண்டு மாத சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து தான் போகச் சொல்ல முடியும். அதுக்கு நிர்வாகம் சம்மதிக்காது."

"சம்பளம் என்ன சார் சம்பளம். நான் கொடுக்கிறேன். சம்பளம் எவ்வளவு?"

"மாதத்திற்கு 4000 ரூபாய்."

"பூ! இவ்வளவுதானா! இரண்டு மாதத்திற்கு 4 ஆயிரமும் 4 ஆயிரமும் 8000 இப்பவே கொடுத்து விடுகிறேன்." என்று சொல்லிக்கொண்டே பணத்தை எடுத்து விட்டார்.

"டீச்சர் பணத்தை பிடியுங்கள், இடத்தை காலி பண்ணுங்கள்."

"பணம் எவ்வளவு என்று உங்கள் பையனையே சொல்ல சொல்லுங்கள். வாங்கிக்கொண்டு போய் விடுகிறேன்."

"ஏல, நாலாயிரமும் நாலாயிரமும் எவ்வளவு?"

"நாற்பத்தி நான்காயிரம்."

"சார், பையன் சொல்லிவிட்டான். தந்தால் போய்விடுகிறேன்"

"ஏல, நல்லா யோசித்து சொல்லு. நாலாயிரமும் நாலாயிரமும் எவ்வளவு?"

"ஒரு முறை சொன்னால் போதாதா? 44000."

"ஏல,இங்க பாரு. நாலும் நாலும் எட்டு."

"ஏம்பா, உங்களுக்கும் டீச்சரைப் போலவே புத்தி இல்லை."

"சார் T.C வேண்டாம் பையனுக்கு படிப்பு வராது." என்று சொல்லிவிட்டு பையனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்.

"டீச்சர் நீங்க ஏன் மறுத்து எதுவும் சொல்லவில்லை."

"சார், இப்படிப்பட்டவர்களிடம் நியாயத்தை பேசினால் பிரச்சனை வளருமே தவிர தீராது.

அவர்களாகவே திரும்பி வருவார்கள். அப்படி வரும்போது பேசக்கூடிய விதமாய் பேசி நியாயத்தை எடுத்துச் சொல்லலாம்.

வகுப்புக்கு போகலாமா?"

"போங்கள்."

"இந்தக் கதையை நான் எங்கோ வாசித்து இருக்கிறேன்."

"கட்டாயம் வாசித்திருப்பீர்கள். இப்போவெல்லாம் WhatsApp ல் நிறைய கதைகள் வருகின்றனவே."

"நாம் பேசிக்கொண்டிருப்பது பரிசுத்த ஆவியின் கொடைகளை பற்றி. இப்போது எதற்காக இந்த கதையை சொல்லுகிறீர்கள்?"

"எதற்காக ஒண்ணாம் கிளாஸ்ல காகம் வடை திருடிய கதையை சொல்கிறார்கள்? காகத்தின் குணங்களைப் பற்றி போதிக்கவா?"

"இல்லை.கதையிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடத்திற்காக. (moral)"

"அதேபோல்தான் இந்த கதையிலிருந்தும் நாம் ஒரு பாடத்தை. கற்றுக்கொள்ள வேண்டும்.

யார் யாரிடமெல்லாம் எப்படி எப்படி பேச வேண்டுமோ அப்படி அப்படி பேசினால் தான் காரியம் நடக்கும்.
சில சமயங்களில் மௌனம் கூட காரியங்களை சாதிக்கும்."

"அது புரிகிறது. பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"


"ஏனெனில், அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்." (லூக்.12:12)

  என்று யார் யாரிடம் எந்த சந்தர்ப்பத்தில் கூறினார்கள்?"


"செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, எப்படிப் பதில் சொல்வது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்."

வேத விரோதிகள் சீடர்களை பிடித்துக் கொண்டுபோய் விசாரிக்கும் போது என்ன பேச வேண்டும் என்பதை பரிசுத்த ஆவியே அவர்களுக்கு அறியப் படுத்துவார் என்று இயேசு சொல்கிறார். 

அதே பரிசுத்த ஆவிதான் இப்போதும் நம்முடனே இருந்து நம்மை ஆன்மீக காரியங்களில் வழி  நடத்துகிறார்.

நமது ஆன்மீக நடவடிக்கைகளில்  

நாம் யார் யாரோடு எப்படி எப்படி பழக வேண்டும்,

 யார் யாருடன் என்ன என்ன பேச வேண்டும்,

ஆன்மீக பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன அணுகுமுறைகளை கையாளவேண்டும்

 என்பன போன்ற இன்னும் அநேக காரியங்களிலும் 

பரிசுத்த ஆவியே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார்.

சில சமயங்களில் நாமாகவே சில பிரச்சனைகளை நமது விருப்பம்போல் அணுகி, நமக்கு விருப்பமான வார்த்தைகளை பேசினால் நமது அணுகுமுறையும் வார்த்தைகளும் புது பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

சில பங்குகளில் வேண்டாத பிரச்சினைகள் உருவாவதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களுடைய சரியில்லாத அணுகுமுறையும் வார்த்தைகளும்தான்.

ஒரு சிறு பொரி ஊரே கொழுந்து விட்டு எரிய காரணம் ஆகி விடுவது போல 

வேண்டாத ஒரு வார்த்தை தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு காரணம் ஆகிவிடும்.

ஆன்மீக சம்பந்தமான காரியங்களில் இறங்கும் பொழுது முதலில் பரிசுத்த ஆவியிடம் வேண்ட வேண்டும்.

எப்படி அணுக வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று அவரே கற்பிப்பார்.

சில சமயங்களில் மலை போன்ற பிரச்சனைகளே ஒரே வார்த்தையால் பனிபோல் காணாமல் போய்விடும்.


ஒரு மாணவன் டிஸ்மிஸ் செய்யப்படும் அளவிற்கு ஒரு தப்பு செய்துவிட்டான். 

அதற்காக வருந்தினான்.

 ஆனால் எப்படி தன்னிலை விளக்கம் கொடுப்பது என்று தெரியவில்லை. என்ன விளக்கம் கொடுத்தாலும் பொருத்தமாக இருக்காது. 

 தலைமை ஆசிரியர் சுவாமியிடம் அனுப்பப்பட்டான்.

 சுவாமியை பார்த்தவுடன்

" extremely sorry father. ஒரு முறை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் இப்படி நடக்காது."

 தலைமை ஆசிரியர் சுவாமி எதுவுமே சொல்ல இல்லை.

" இனிமேல் கவனமாக. இரு"


ஒரே sorryயில் எல்லாம் சரியாகிவிட்டது!

ஒரு உண்மையான sorry சர்வ வல்லவ கடவுளையே நமது இதயத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறது! அவ்வளவு சக்தி அந்த வார்த்தைக்கு!

வார்த்தைகளை பயன்படுத்துவதில் இயேசுவே கவனமாக இருந்திருக்கிறார்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயர்கள் அவரிடம் கூட்டி வந்தபோது அவர் அதிகமாக வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.


"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்"

என்று மட்டுமே சொன்னார்.

பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுவிட்டது.

நாமும் ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி பொதுவில் விவாதிக்கும்போது வார்த்தைகளை கவனித்து போடவேண்டும்.

விமரிசை என்ற கொடை நாம் விவேகமுடன் பேச, செயல்பட உதவுகிறது.

நாம் இருக்கும் சூழ்நிலையின் தன்மையை புரிந்து அதற்கு ஏற்ற படி செயல்பட விமரிசை உதவுகிறது. 

இயேசு மூன்று ஆண்டுகள் போதித்த நற்செய்தியை போலவே தன்னுடைய பாடுகளின் போது காத்த மௌனமும் மிகவும் சக்திவாய்ந்த நற்செய்தியே.

  நாமும் எப்போது பேச வேண்டும் எப்போது மௌனம் காக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியே நமக்கு வழிகாட்டுவார்."

"ஞானத்துக்கும் விமரிசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?"

"எல்லா கொடைகளுமே ஒன்றோடொன்று தொடர்ப்பு உடையவை.

ஞானத்தோடு சிந்திப்பது புத்தி,  

ஞானத்தோடு சிந்தனைகளை சேர்த்து வைப்பது அறிவு.

 ஞானத்தோடு சிந்தனைகளையும், அறிவையும் செயல்படுத்துவது விமரிசை.

நமது செயல்பாட்டில் இருக்கும் உறுதிதான் அடுத்த கொடையான திடம்."

"ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் தெய்வபயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே.

எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் திவ்விய ஸ்பிரீத்து சாந்துவே."


"ஹலோ என்ன பாட ஆரம்பிச்சிட்டிங்க!"

"என்னை அறியாமலேயே பழைய பாட்டு ஞாபகத்திற்கு வந்தது."

"பாட்டில் மட்டும் அல்ல, நீங்கள் பாடுவதிலும் திடம் இருக்கிறது."

(தொடரும்)

 லூர்து செல்வம்

Sunday, February 21, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 6(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 6
(தொடர்ச்சி)



"ஒரு கதை சொல்லலாமா."

 
"சொல்லுங்க. கரும்பு தின்ன கூலியா?"

"ஒரு ஊர்ல ஒரு அப்பா இருந்தாரு. அவருக்கு இரண்டு பிள்ளைகள்.அவர் பெரிய பணக்காரர். தன்னுடைய காலத்திற்கு பிறகு தன்னுடைய சொத்துக்களை நல்லா நிர்வாகம் பண்ணத் கூடியவனுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.  

அந்த இரண்டு பேரில் யாருக்கு திறமை அதிகம் என்பதை சோதிக்க விரும்பினார்.

ஆளுக்கு பத்து ரூபாய் கையில் கொடுத்தார்.

வீட்டில் உள்ள இரண்டு அறைகளை காண்பித்தார்.

"இங்கே பாருங்கள்.  
ஆளுக்கு ஒரு அறை.

 ஒவ்வொருவரிடமும் பத்து ரூபாய் இருக்கிறது. 

நான் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியே போய் விடுவேன்.

 மாலையில் திரும்பி வீட்டுக்கு வரும்போது இந்த பத்து ரூபாயையும் கொண்டு வாங்கிய பொருளால் அவரவர் அறையை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

 யாருடைய அறை திருப்தியாக நிறைந்து இருக்கிறதோ அவனுக்கு ஒரு பரிசு"

என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார்.

இரவில் 8 மணி அளவில் வீடு திரும்பினார்.

மூத்தவனுடைய அறைக்குச் சென்றார். உள்ளே ஒரே இருட்டு.

அவன் பத்து ரூபாய்க்கு வைக்கோல் வாங்கி உள்ளே வைத்திருந்தான். அதுவும் அறையை நிறப்பவில்லை.

"அப்பா நீங்கள் கொடுத்தது வெறும் 10 ரூபாய் மட்டுமே. அதைக் கொண்டு மிக அதிகமாக வாங்க கூடிய பொருள் வைக்கோல் மட்டுமே.

உங்களுக்கு திருப்தி ஏற்படாவிட்டால் தப்பு என்னுடையது அல்ல.

பத்து ரூபாவுடையதுதான்."


அடுத்து இளையவன் அறைக்குச் சென்றார். அறை பூட்டியிருந்தது.

மகன் வெளியே நின்றான்.

அப்பா வந்தவுடன் கதவைத் திறந்தான்.

அறையின் நடுவில் மேஜையின் மேல் ஒரு மெழுகுவர்த்தியும், பத்தியும் எரிந்து கொண்டிருந்ததன.

அறை நிறைய பிரகாசம்!

"அப்பா ஐந்து ரூபாய்க்கு மெழுகுவர்த்தி. ஐந்து ரூபாய்க்கு பத்தி. அறை நிறைய வெளிச்சமும் பத்தி வாசமும் நிறைந்திருக்கிறது.''

அப்பாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மூத்தவனைப் பார்த்து,

"ஆளுக்கு பத்து ரூபாய்தான் கொடுத்தேன்.

 உன் அறையை வைக்கோலால் கூட நிரப்ப முடியவில்லை.

 உனது தம்பி அறை முழுவதும் ஒளியாலும் நறுமணத்தாலும் நிரப்பி வைத்திருக்கிறான்."

"சரி. சரி. பரிசை அவனிடமே கொடுங்கள்."

."எதற்காக இந்த கதை என்பது புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது. இருந்தால் மட்டும் போதாது. இருப்பதை ஒழுங்காக பயன்படுத்த தெரிய வேண்டும். சரியா?"

"பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் இந்த கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறது மாதிரியாவது தெரிகிறதா?"

"மாதிரியாவதா? முதல் கொடையாகிய ஞானம் பற்றி விளக்குவதற்காக தானே இந்த கதை! 

விளக்குங்கள்."


"முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விட வேண்டும்.

 ஏழு கொடைகளும் ஒன்றோடொன்று தொடர்பு உடையவை.

 எப்படி உடல் உறுப்புகள் வெவ்வேறாக இருந்தாலும்,   அவை ஒரே உடலில் தொடர்பு உடையவையாய் இருப்பதுபோல

 பரிசுத்த ஆவியின் கொடைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை.

முதல் கொடை ஞானம் ஏழாவது கொடை தெய்வ பயம்.

தெய்வ பயம்தான் ஞானத்தின் ஆரம்பம் என்பார்கள்.

Fear of God is the beginning of wisdom.

இறை பயம் உள்ளவனிடம் தான் ஆன்மீக ஞானம் இருக்கும்.

இறை பயம் இறைவனுக்கு எதிராக பாவம் செய்ய பயப்படுவான்.

பாவம் என்பது வெறும் செயல் அல்ல. எதிரான செயல்.

இறைவன் அளித்த கொடையாகிய புத்தியையும், அதன் மூலமாக பெற்ற அறிவையும் இறைவனுக்காக பயன்படுத்துவது புண்ணியம். இறைவனை எதிர்த்து பயன்படுத்துவது பாவம்.

விலங்குகளுக்கு புத்தியும் இல்லை அறிவும் இல்லை ஆகவே அவற்றால் பாவம் செய்ய முடியாது.

மனிதர்களிடம் புத்தி இருக்கிறது.

 அதை பயன்படுத்தும்போது அறிவு கிடைக்கிறது

 அந்த அறிவை மனிதன் இறை சேவையில் பயன்படுத்த வேண்டும்.

மனிதன் தனது புத்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் அவனுக்கு சரியான அறிவு கிடைக்கும்.

சரியான அறிவு தவறான பாதைக்கு போகாது.

தெய்வ பயம் உள்ளவன்தான் பாவத்திற்கு இட்டுச் செல்லும் படி தன்னுடைய புத்தியை பயன்படுத்த மாட்டான்.

புத்தியினால் பெற்ற அறிவை புண்ணிய வழியில் பயன்படுத்த உதவியாக இருப்பதுதான் ஞானம்.

இப்போது ஏழு கொடைகளில் நான்கை முடிச்சு போட்டிருக்கிறோம். எந்த நான்கையும் சொல்லுங்கள்."   

"தெய்வ பயம், ஞானம், புத்தி, அறிவு.

இப்போ ஒரு சந்தேகம் தெய்வ பயம் இல்லாதவர்களிடமும் புத்தியும் அறிவும் இருக்கிறதே."

"எல்லா மனிதர்களிடமும் புத்தியும் அறிவும் இருக்கிறது.

புத்தி உள்ளவன்தான் மனிதன்.

இறை நம்பிக்கை இல்லாதவர்களும் மனிதர்கள்தானே. 

ஆகவே புத்தியும் அறிவும் இருக்கிறது.

சில விஞ்ஞான அறிவு பெற்ற புத்திசாலிகளிடம் இறை நம்பிக்கை இல்லை.

அவர்களுடைய புத்தியும் அறிவும் இவ்வுலகை சார்ந்தவை.

இறைநம்பிக்கை இல்லாதவர்களிடம் ஆன்மீகம் இல்லை.

ஆன்மீகம் இல்லாதவர்களுக்கும் பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது ஆன்மீகம் பற்றி.

பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே புத்தியையும் அறிவையும் பயன்படுத்தும் மனிதர்களை பற்றி அல்ல.

சரி. விஷயத்துக்கு வருவோம்.

முதல் கொடையாகிய ஞானம் எதற்கு பயன்படுகிறது?"


"நாம் நம்மிடம் உள்ள புத்தியைக் கொண்டு ஈட்டிய அறிவை இறை ஊழியத்திற்கு பயன்படுத்த நமக்கு உதவியாக இருப்பதற்காக பயன்படுகிறது."

"கரெக்ட். தினமும் பைபிள் வாசிக்கிறோம். வாசித்ததை புத்தியைக் கொண்டு யோசிக்கிறோம். யோசிக்கும்போது பெறும் அறிவு இறைவாக்கை பற்றிய அறிவு.

இப்போது ஒரு சிறு கேள்வி.

பைபிள் வாசிப்பவர்களில் பாவம் செய்பவர்கள் இருக்கிறார்களா?"

"இருக்கிறார்கள்."

"பைபிள் வாசிப்பது ஒரு நல்ல செயல்.

நல்ல செயலைச் செய்பவர்கள் எப்படி பாவம் செய்ய முடியும்?"

"வாசித்தபடி வாழ்ந்தால் பாவம் உள்ளே நுழைய முடியாது.

இறைவன் தரும் நன்கொடையாகிய ஞானத்தைப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் பைபிளில் படித்த அறிவை தங்களது வாழ்க்கையில் பயன்படுத்துவார்கள்.

இங்கேயும் ஒரு பிரச்சனையை இருக்கிறது.

பைபிள் வாசிக்கும்போது இறைவன் வாசிப்பவர்களுக்கு என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்.


ஆனால் அநேகர் தாங்கள் வாசிக்கும்போது பைபிள் வசனங்களுக்கு இஷ்டம்போல் அர்த்தம் கொடுத்துக்கொண்டு தாங்கள் கொடுத்த அர்த்தத்தின் படி வாழ்கின்றார்களே!"


"நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை,

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஏறத்தாழ 40,000 சபைகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

 காரணம் வயது 40,000 விதமாகப் புரிந்து கொண்டதுதான்!

பைபிள் வாசகங்களை சரியாக புரிந்து கொள்வதற்கும் பரிசுத்த ஆவி தரும் ஞானம் வேண்டும்.

புத்தியும் சரி, கத்தியும் சரி பயன்படுத்த தெரியாவிட்டால் ஆபத்தில் முடியும்.

ஒரு ஆசிரியர் ஒரு நாள் வகுப்பிற்கு ஒரு தம்ளரில் சாராயத்தை எடுத்து வந்தார்.

தம்ளரை மேஜையின் மேல் வைத்துவிட்டு, ஒரு புழுவை எடுத்து சாராயத்துக்குள் போட்டார்.

மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே போடப்பட்ட குழு துடிதுடித்து செத்தது.

"மாணவர்களே நீங்கள் இப்பொழுது பார்த்த காட்சியில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?"

ஆசிரியர் சாராயத்தின் தீமையை விளக்குவதற்காக செய்த பரிசோதனை இது.

ஆனால் ஒரு மாணவன் எழுந்து சொன்னான்:

"சாராயம் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன், சார்."

ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது

"டேய் சாராயத்துக்கு போடப்பட்ட செத்துப் போனதையும் நீ பார்க்கவில்லையா?"

"அதை பார்த்து தான் அந்த பாடத்தை கற்றுக் கொண்டேன்.

எனது வயிற்றுக்குள் நிறைய புழுக்கள் இருப்பதாக டாக்டர் சொன்னார்.

அதனால்தான் நான் மெலிந்து கொண்டே போகிறேனாம்.

நான் சாராயம் சாப்பிட்டால் அந்த புழுக்கள் எல்லாம் இறந்து விடும்.

சாராயம் என் உடம்பிற்கு நல்லது என்று இன்று கற்றுக்கொண்டேன்."

இப்படி புரிந்து கொள்பவர்களும் பைபிள் வாசிப்பவர்களில் இருக்கிறார்கள்.

பைபிளை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியின் ஞானம் நம்முள் இருக்க வேண்டும். நாம் அதை பயன்படுத்த வேண்டும்."

"உறுதிப்பூசுதல் பெற்றுவிட்டால் பைபிள் வாசகங்கள் அனைத்திற்கும் சரிவர பொருள் நமக்கு தெரிந்து விடுமா?"

"முன்னபின்ன பார்த்திராத ஒரு வசனத்தை வாசிக்க நேர்ந்தால் புத்தி பொருள் காண முயற்சிக்கும்.

அதன் சரியான பொருள் புத்திக்கு எட்டாவிட்டால் ஞானம் உதவிக்கு வரும்.

"தம்பி உன்னை வழி நடத்துவதற்கு என்றே இயேசு தனது குருக்களை நியமித்திருக்கிறார்.

உன்னுடைய பங்குத்தந்தையை உன்னை வழி நடத்துவதற்கு என்றே இயேசு தந்திருக்கிறார். 

புரியாதவற்றை அவரிடம் கேட்டு புரிந்துகொள்."  என்று வழிகாட்டும்.

"பைபிளை புரிந்து கொள்வதற்கு மட்டுமா நமக்கு ஞானம் கொடையாகத் தரப்பட்டிருக்கிறது?"

"இல்லை. நமது உலக அனுபவங்களை கூட ஆன்மீக அனுபவங்களாக மாற்றம் உதவியாக இருக்கும்.

பணத்தினால் சாதித்துவிட முடியும் என்று ஒரு காரியத்தில் இறங்கி இருப்போம்.

ஆனால் தோல்வியை சந்திப்போம்.

அப்போது ஞானம் வழிகாட்டும்:

"பணம் உன்னை படைக்கவில்லை.

உன்னைப் படைத்த இறைவனை நம்பி, ஜெபத்தின் உதவியுடன் காரியத்தில் இறங்கு. 

ஜெபத்தின் உதவியுடன் இறங்கும் பொழுது எது கிடைக்கிறதோ அதுவே உனக்கு கிடைக்க வேண்டியது.

உனக்கு வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது உன்னை படைத்த இறைவனே.

இந்த விசுவாச உணர்வோடு செயலில் இறங்கும்போது எது கிடைக்கிறதோ அதுவே உனக்கு வெற்றி."
இது ஞானம் காட்டும் வழி.


பிரச்சனையே நாம் விரும்புவது எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதே.

இறைவன் தருவதை தான் நாம் விரும்ப வேண்டும் எனவே நிலையை நோக்கி ஞானம் வழிகாட்டும்.

"நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்."

அதாவது நம்பிக்கையோடு இறைவனிடம் ஜெபித்தால் என்ன நடந்தாலும் அது நமது நன்மைக்கே.

இந்த மனநிலை உள்ளவன்

 மரணமே வந்தாலும் 

"இறைவா உமக்கு நன்றி"

 என்று சொல்லிக் கொண்டே அவரிடம் செல்வான்."

(தொடரும்)  

லூர்து செல்வம்

Friday, February 19, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 5(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 5
(தொடர்ச்சி)


"திருமுழுக்கு பெற்று விட்டோம். பரிசுத்த ஆவி நம்மோடு தான் இருக்கிறார். நாமும் அவருடனேயே இருக்கிறோம்.

 கடைசிவரை அதே பரிசுத்த ஆவி தான். அதே நாம்தான்.

அவர்தான் நம்மை வழி நடத்திக் கொண்டிருப்பார்.

 பிறகு எதுக்குங்க வேறு திருவருட்சாதனங்கள்?"

"ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் குழந்தையாய் இருக்கும்போது இருந்த அதே உடல் தான். இப்பொழுதும் உங்களிடம் இருக்கிறது....."


"போதும் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது தெரிகிறது.

 ஆனால் அதே உடல் அப்படியே இல்லையே. வளர்ந்துவிட்டதே."


"உடலுக்கு மட்டும் இல்லீங்க, ஆன்மாவுக்கும் வளர்ச்சி உண்டு."

"உடல் சடப்பொருள். அது உருவத்தில் வளர்கிறது. ஆன்மா ஆவி ஆயிற்றே, அது எப்படி வளரும்?"


"ஆன்மா பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும். அந்த வளர்ச்சியில் பல படிகள் இருக்கின்றன.

 ஒவ்வொரு படியிலும் ஆன்மா வித்தியாசமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்.

   சில சூழ்நிலைகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும். சில எதிராக இருக்கும். 

எப்படி உடல் வளர வளர வித்தியாசமான உணவு வகைகள் தேவைப் படுகின்றனவோ,

 அதேபோல ஆன்மாவின் வளர்ச்சியிலும் பரிசுத்த ஆவியின் வித்தியாச வித்தியாசமான அருள் உதவிகள் தேவைப்படும்.

 அதற்காகத்தான் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு திருவருள் சாதனம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் உடல் பயிற்சி செய்கிறீர்களே. எதற்காக?"

"உடல் உறுதி பெறுவதற்காக."

"ஆன்மாவும் அதனுடைய பரிசுத்த தனத்தின் வளர்ச்சியில் உறுதியாக இருக்க வேண்டாமா?

ஆன்மா வளர முயலும்போது சாத்தான் அதன் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகளை போடும்.

 அவற்றை முறியடிக்க ஆன்மா உறுதியாக, திடமாக இருக்க வேண்டாமா? 

 அதற்கான அருள் வரங்களை அள்ளித் தருவதற்காகத்தான் உறுதிபூசுதல் என்னும் அருள் அடையாளத்தை இயேசு ஏற்படுத்தினார்.

அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றாலும் 

 ஆண்டவரின் பாடுகளின் பயந்து போது அவரைவிட்டு ஓடிவிட்டது நமக்கு தெரியும்.

உடனிருந்த இராயப்பரும் ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தார்.

அருளப்பர் எப்படியோ சிலுவை அடிவாரத்திற்கு வந்துவிட்டார்.

ஆண்டவர் உயிர்த்த பின்பும் கூட அதை நம்ப தயங்கினார்கள்.

அப்போஸ்தலர்களின் செயல்கள் அவர்களது உறுதி இன்மையை காட்டுகின்றன.


அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்காகவே பெந்தேகோஸ்தே திருநாளன்று பரிசுத்த ஆவியே அவர்கள் மேல் இறங்கினார்.

அதாவது பரிசுத்த ஆவி அவர்களை திடப் படுத்தினார்.

திடப் படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் பயமில்லாமல் நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

அதே திடத்தை நமக்கு அளிப்பதற்காகவே உறுதிப்பூசுதலின்போது பரிசுத்த ஆவியே நம் மேல் இறங்கி வருகிறார்.

அதாவது நாம் பரிசுத்த ஆவியின் அருள் கொடைகளை பெறுகிறோம்."

"இப்பொழுது எனக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வருகிறது.

 இயேசு கடவுள். பரிசுத்த ஆவி கடவுள். அதே கடவுள்

 பெந்தேகோஸ்தே அன்று பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்களைத் திடப் படுத்தினார் அல்லவா, 

அதே திடப்படுத்துதலை சர்வ வல்லப கடவுளாகிய இயேசு மூன்று ஆண்டுகளில் ஏன் செய்யவில்லை.

 செய்திருந்தால் அப்போஸ்தலர்கள் ஆண்டவர் பாடுபடும்போது அவரை விட்டு ஓடியிருக்க மாட்டார்களே!"

"நீங்கள் கேட்பது எப்படி இருக்கிறது தெரியுமா?

 குழந்தையாய் பிறந்து கஷ்டப்பட்டு தானே வளரவேண்டியிருக்கிறது,

 பிறக்கும்போதே பெரிய ஆளாய் பிறக்க வைத்திருக்கலாமே,

 கடவுளுக்கு அதற்குரிய சக்தி இருக்கிறதே.

அதை ஏன் செய்யவில்லை?"

என்று கேட்பதுபோல் இருக்கிறது.

இதே மாதிரிதான் இன்னொரு நண்பரும் கேட்டார். 

கடவுள் நம்மை உலகத்தில் படைத்து, பல ஆண்டுகள் வாழவிட்டு, விண்ணகத்திற்கு வழிநடத்தி செல்வதற்குப் பதிலாக நம் எல்லோரையும் முதலிலேயே விண்ணகத்திலேயே 
படைத்திருக்கலாமே!

அவரும் மனிதனாய் பிறந்து பாடுபட்டு மரித்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே!

இதுவும் நியாயமான கேள்வி தானே!"

"அது எப்படிங்க நியாயமாகும்?
கடவுள் மட்டும்தான் மாறாதவர், மாற முடியாதவர், ஏனெனில் நிறைவானவர்.

படைக்கப்பட்ட பொருள்கள் எப்படி அவரைப் போல் நிறைவானவையாய் இருக்க முடியும்?

நாம்தான் வளர வேண்டும். நமது வளர்ச்சி இயல்பானதாய் இருக்க வேண்டும், கடவுள் நமது வளர்ச்சிக்கான உதவிகள் மட்டுமே செய்வார். வளர வேண்டியது நாம் தானே! அதில்தானே ஒரு thrill இருக்கிறது.''

"அப்போ பதிலை வைத்துக்கொண்டே கேட்டிருக்கிறீர்கள்.
முழுவதையும் சொல்லிவிடுங்கள்."

"அப்போஸ்தலர்களுக்கு ஆண்டவர் பயிற்சி கொடுத்தார்.

 பயிற்சி இயல்பானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தவரும், பெந்தகோஸ்தே திருநாள் என்று அவர்களுக்கு திடத்தைக் கொடுத்தவரும் ஒரே கடவுள் தான்.

கடவுள் அவரது திட்டப்படி செயல்படுகிறார். 

அவரது திட்டத்தைப் பற்றி கேட்க வேண்டுமென்றால் அவரிடம்தான் கேட்க வேண்டும். உங்களிடம் கேட்டது தப்பு தான்.

விண்ணகம் செல்லும்போது எனக்கு இதை ஞாபகப்படுத்துங்கள்.

கடவுளிடமே கேட்டுக்கொள்கிறேன்.

இப்போ நமக்குத் தெரிந்ததை பற்றி பேசுவோம்.

திருமுழுக்கிற்கு தண்ணீர் வெளி அடையாளமாக இருப்பதுபோல உறுதிபூசுதலின் வெளி
 அடையாளம் எது?"

"ஆயர் உறுதிப்பூசுதல் பெற வேண்டியவரின் மேல் கைகளை வைத்து புனித தைலத்தைப்பூசி,

“Be sealed with the Gift of the Holy Spirit"

என்று சொல்லுவார்.

(The matter is the imposition of hands and anointing with chrism. 

The form is “Be sealed with the Gift of the Holy Spirit.”)

இந்த வெளி அடையாளங்கள் நிகழும்போது நமது ஆன்மாவில் பரிசுத்த ஆவி நமக்கு ஆன்மீக திடத்திற்கான வரங்களை கொடுத்துக் கொண்டிருப்பார். 

ஆன்மாவின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்."


"உறுதிபூசுதலின் போது நமக்குள் ஏற்படும் ஆன்மீக மாற்றம் என்ன?"

" உறுதிபூசுதலின்போது திருமுழுக்கில் நாம் பெற்ற விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது.


சாத்தானை எதிர்த்து வீரமுடன் போராடும் போர் வீரர்களாக நாம் மாறுகிறோம்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போரில் நாம் நன்மையின் பக்கம் நின்று தீமையை எதிர்த்து போராடும் சக்தியை பெறுகிறோம்.

ஒளிக்கும், இருளுக்கும் நடக்கும் போரில் நாம் ஒளியின் பக்கம் நின்று இருளை எதிர்த்து போராடும் சக்தியை பெறுகிறோம்.


உறுதிபூசுதலின்போது நமது விசுவாசத்தை பாதுகாப்பதற்கான மற்றும் நமது இறுதி முடிவை நோக்கி பயணிப்பதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறோம்.
Confirmation means accepting responsibility for our faith and destiny.

நமது பொறுப்பை சரிவர நிறைவேற்ற பரிசுத்த ஆவி நமக்கு அவருடைய அருள் கொடைகளை தருவார்.

குழந்தையாய் இருக்கும்போது நமது  பெற்றோரின் வழி நடத்தும்படி அப்படியே நடப்போம்.

ஆனால் வயது ஆக ஆக நாம் நாமாகவே பொறுப்புடன் செயல்பட வேண்டியிருக்கும்.

எது சரியோ அதை தெரிவு செய்து செயல்படுத்த வேண்டி இருக்கும்.

அதற்கு பரிசுத்த ஆவியின் அருள் வரங்கள் நமக்கு உதவியாக இருக்கும்,

உறுதிப்பூசுதல் பெற்றபின் நாம் ஒவ்வொரு விநாடியும் பரிசுத்த ஆவியினாலே வழிநடத்தப்படுவோம்.

அன்று அப்போஸ்தலர்களுக்கு ஆன்மீக திடத்தை கொடுத்து அவர்களை வழிநடத்தியது போல நம்மையும் அவரே வழிநடத்துவார்.

அவர் காட்டும் வழியே நடப்பதற்கான போதுமான அருள் வரங்களை தந்து கொண்டே இருப்பார்.

அதற்காக நம்மை முழுவதுமாக அவரிடமே ஒப்படைத்து விட வேண்டும்."

"உறுதிப்பூசுதலின்போது பரிசுத்த ஆவியானவர் நமக்கு தரும் கொடைகள் எவை?"

"தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை:

ஞானம், புத்தி, விமரிசை,. அறிவு 
திடம், பக்தி, தெய்வ பயம்

wisdom, understanding, counsel, , knowledge,fortitude , piety, and fear of the Lord.

ஒவ்வொரு கொடையையும் பற்றி பேசும்போது, பரிசுத்த ஆவி நம்மிடம் எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது புரியும்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, February 18, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 4(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 4
(தொடர்ச்சி)

"குழந்தை ஞானஸ்நானம் பெறுவதை விழாவாக கொண்டாடுவது தவறு என்கிறீர்களா?"
 
"விழாவாக கொண்டாடுவது தவறு என்று சொல்லவில்லை, கொண்டாடும் விதம்தான் தவறு.

 மனிதன் வெறும் சமூக பிராணி (social being) மட்டும் அல்ல,

 திருமறை சார்ந்த (religious being) பிராணியும் கூட.

சமூக பிராணி தான் வாழும் மனித சமூகத்தோடு உறவு தொடர்பு உள்ளவன்.

திருமறை சார்ந்த பிராணி இறை உறவு தொடர்பு உள்ளவன்.

முதலில் அவன் இறைவனை சார்ந்தவன், ஏனென்றால் அவரால்தான் படைக்கப்பட்டான்.

அடுத்துதான் அவன் பிறந்த சமூகத்தை சார்ந்தவன்.

ஞானஸ்நானம் மனிதனை இறைவனோடு உறவு தொடர்பு கொள்ள செய்யும் ஒரு ஆன்மீக நிகழ்வு.

சமூக முக்கியத்துவத்தை விட ஆன்மீக முக்கியத்துவத்துக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். 

இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சமூகத்துக்கும் உணர்த்துவதாக விழா இருந்தால் அது ஏற்றுகொள்ள படத் தக்கது.

ஞானஸ்நான விழாவிற்கு வருவோர் அதைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். 

 ஏனெனில் அவர்களும் கிறிஸ்தவ மறையை சார்ந்தவர்கள்.

விழா அவர்கள் பெற்ற ஞானஸ்நானத்தை நினைவுபடுத்துவதாக இருக்க வேண்டும். 

 குருவானவர் குழந்தையிடம் சில உறுதிமொழிகள் கேட்பார்.

 அதன் சார்பாக அதனுடைய ஞானப்பெற்றோர் உறுதிமொழிகள் கொடுப்பர்.

விழாவில் கலந்து கொள்வோர் தாங்கள் கொடுத்த உறுதி மொழிகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

 அதற்கு ஏற்ப தங்களது வாழ்க்கை இருந்ததா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

 இல்லாவிட்டால் அதை சரி செய்ய வேண்டும்.

 இதைச் செய்யாவிட்டால் விழாவில் கலந்து கொண்டும் பயனில்லை,

 விருந்துக்குப் போய் சாப்பிடாமல் வந்ததற்கு சமம்."


"அதாவது விழாவிற்கு வரும் ஒவ்வொருவரும் தங்களது ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதிப்பிக்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?" 

"அப்படியேதான். சாப்பிடப் போகும் மட்டன் பிரியாணியை நினைத்துக்கொண்டு விழாவில் கலந்துகொண்டால் அந்தக் விழாவினால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை."

"விழாவிற்கு வருவோரை விடுங்கள், குழந்தையை பெற்றவர்களாவது நினைத்து பார்ப்பார்கள் என்பது சந்தேகமே."

"ஏன் முதலாவது அருள் அடையாளத்தை திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் என்று அழைக்கிறோம்? பெயரிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறதா?"

ஸ்நானம், அல்லது முழுக்கு என்றால் குளிப்பது.

உடல் ரீதியாக குளிப்பதற்கு, அதாவது உடலிலுள்ள அழுக்கை நீக்க, தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். 

ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு என்றால், ஆன்மீகக் குளிப்பு அதாவது ஆன்மாவில் உள்ள அழுக்கை போக்க பயன்படுத்தப்படும் குளிப்பு.

ஸ்நானம், அல்லது முழுக்கு திருமுழுக்கு என்ற அருள் அடையாளத்தில்

ஆன்மா பரிசுத்தம் ஆவதை குறிக்கும் அடையாள வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது.

It is used figuratively, to denote washing.

பரிசுத்தமாக்குவது தண்ணீர் அல்ல 

 பரிசுத்த ஆவியானவரே ஆன்மாவை பரிசுத்தம் ஆக்குகிறார். 

தண்ணீர் ஊற்றுதல் ஆவியானவரின் செயலுக்கான  உருவகம் "

"புரியவில்லை"

"இலக்கணம் படித்தவர்களுக்கு உருவகம் என்ற வார்த்தையில் பொருள். நன்கு புரியும்.

"பெண் எப்படி?"

"பசு."

"மாப்பிள்ளை?"

"சிங்கம்."

மனிதர்களை அவர்களுடைய குணங்கள் உள்ள மிருகங்களாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

பெண் சாந்த குணத்தில் பசு போன்றவள்.

மாப்பிள்ளை வீரத்தில் சிங்கத்தை போன்றவர்.


பெண்ணை பசுவாகவும் மாப்பிள்ளையை சிங்கமாகவும் உருவகப் படுத்தியுள்ளார்கள்.

இயேசு தன்னையே எப்பொழுதும் நல்ல ஆயனாக உருவகப்படுத்தி பேசுவார்.

ஸ்நாபக அருளப்பர், "இதோ! கடவுளுடைய செம்மறி' இன்று கூறும்போது இயேசுவை பலி ஆகப்போகும் செம்மறியாக உருவகப்படுத்துகிறார். 

இயேசு,

"அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்: நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்" . (அப்.1:5) என்று சொல்லும்போது 

ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியால் 
நமது ஆன்மா பாவம் நீங்கி பரிசுத்தம் ஆவதற்கு உருவகமாக செயல்படுகிறது.

(The term baptize is employed in a metaphorical sense in Acts, i, 5, where the abundance of the grace of the Holy Ghost is signified,)

வெளி அடையாளமாக தண்ணீர் குழந்தையின் தலையின் மேல் ஊற்றப்படும்போது

பரிசுத்த ஆவி ஆன்மாவை ஜென்ம பாவ கறை நீங்க கழுவுகிறார்,

அதாவது பரிசுத்தம் ஆக்குகிறார்.

இதைத்தான் திருமுழுக்கு பெறும்போது நமக்குள் பரிசுத்த ஆவி இறங்குகிறார் என்று கூறுகிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு இறையியல் உண்மையையும் ஞாபகப்படுத்த வேண்டும்.

தந்தை படைத்தார் 
மகன் மீட்டார் 
பரிசுத்த ஆவி பரிசுத்தமாக்கினார்
 என்று வழக்கமாக சொல்லுவோம்.

ஆனாலும் படைப்பு, மீட்பு, பரிசுத்தமாக்கும் ஆகியவற்றை செய்வது பரிசுத்த தமதிரித்துவம் ஆகிய ஒரே கடவுள்.

மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரித்தது இரண்டாம் ஆளாகிய மகன் தேவன்தான்.

தந்தை மனிதனாக பிறக்க வில்லை. 

பரிசுத்த ஆவி மனிதனாக பிறக்க வில்லை.

அதில் மாற்றம் இல்லை.

ஆனாலும் படைப்பு,.மீட்பு, பரிசுத்தம் ஆக்குதல் ஆகிய மூன்றையும் செய்வது திரிஏக கடவுள்தான், அதாவது மூன்று ஆட்களாக இருக்கிற ஒரே கடவுள் தான்.

கடவுளை மூன்று பங்கு வைக்க முடியாது.

ஆகவே 

கடவுள் படைக்கிறார்

கடவுள் மீட்கிறார்  

கடவுள் பரிசுத்தமாக்குகிறார்..

ஆகவே 

திருமுழுக்கின் போது பாவத்தை நீக்கி நம்மை பரிசுத்தம் ஆக்குவதும் மூவொரு கடவுள்தான்.


"நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்."
(லூக்.12:50)

இங்கு இயேசு தனது பாடுகளை ஞானஸ்நானமாக உருவகப்படுத்துகிறார்.

நாமும் நாம் பெற்ற ஞானஸ்நானத்தை இயேசுவுக்காக நாம் படவிருக்கும் சிலுவைக்கு உருவகமாக எடுத்துக்கொண்டால்

நமது சிறந்த ஆன்மீகத்திற்கு அது ஒரு காரணமாக அமையும்.

அதாவது நாம் ஞானஸ்நானம் பெறும்போதே,

"நான் இயேசுவின் சிலுவையில் பங்கெடுக்கப் போகிறேன்"

என்று நம்பினால் 

வாழ்நாளில் நமக்கு வரும் துன்பங்களை துன்பங்களாகவே பார்க்க மாட்டோம்.

நாம் சுமக்க வேண்டிய சிலுவையாகவே பார்ப்போம்.

இயேசுவைப் போலவே சிலுவையை சுமந்து

 இயேசுவைப் போலவே மரித்து

 இயேசுவைப் போலவே உயிர்த்து

 இயேசுவைப் போலவே விண்ணகத்திற்கு செல்வோம்

 என்ற உண்மையை நாம் பெற்ற ஞானஸ்நானம் நினைவு படுத்துக் கொண்டே இருக்கும்."


"நாம் பெற்ற திருமுழுக்கில் நமது வாழ்நாளே அடங்கியிருக்கிறது என்பது இப்பொழுது புரிகிறது.

இன்னும் ஒரு சிறிய சந்தேகம்

 அருளப்பர் கொடுத்த ஞானஸ்நானமும்,

இப்பொழுது நமக்கு கொடுக்கப்படும் ஞானஸ்நானமும் ஒன்றா?"

"அருளப்பர் மெசியா அல்ல.
ஆகவே அவர் கொடுத்த ஞானஸ்நானம் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட ஞானஸ்நானம் அல்ல.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்டு நாம் பெற்றுக் கொண்டிருக்கும் ஞானஸ்நானம் பாவ மன்னிப்பிற்கான ஞானஸ்நானம்.

ஆனால் அருளப்பர் கொடுத்து வந்தது பாவ மன்னிப்பிற்கான ஞானஸ்நானம் அல்ல,


"அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம்.
. அதைக் கொடுத்தபோது, தமக்குப்பின் வருபவர் மீது விசுவாசம்கொள்ள வேண்டுமென மக்களுக்குச் சொன்னார்: அவர் அப்படிக் குறிப்பிட்டது இயேசுவைத்தான்" என்றார். (அப்.19:4)

 புனித சின்னப்பர்   கூறுகிறபடி,

அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம்.
"Indeed, I baptize you with water for repentance,"

"நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்."
(மத். 3:11)

அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மனம் திரும்பி பாவத்திற்கு பரிகாரமாக தவச் செயல்கள் செய்ய வேண்டும்.

தவச் செயல்கள் மூலம் பாவங்கள்
மன்னிக்கப்படும்.


 ஆனால் இயேசுவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் பாவங்கள் உடனே மன்னிக்கப்படும்.

ஆதி திருச்சபையில் அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியபோது

 கிறிஸ்து ஏற்படுத்திய ஞானஸ்நானத்தை பெற்று பரிசுத்த ஆவியினால் பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டார்கள்."

"திருமுழுக்கு பெறும்போது பரிசுத்த ஆவியானவர் பாவங்களை நீக்கி நமது ஆன்மாவை பரிசுத்த
மாக்குகிறார்.

அதற்குப்பின்?"


"அதென்ன அதற்குப்பின்? கேள்வியை முழுமையாக சொல்லு."


"அதற்குப்பின் எந்த அருள் அடையாளத்தின் போது பரிசுத்த ஆவி திரும்ப வருவார்?"

"ஏங்க, பரிசுத்த ஆவி அப்பப்போ வந்து visit போட்டுவிட்டு போய்விட அவர் என்ன விருந்தாளியா!

அவர் கடவுள், நம்மை படைத்தவர், நம்முடன் எப்போதுமே இருப்பவர்.

 நாம் பாவ நிலையில் இருந்தாலும், பரிசுத்த நிலையில் இருந்தாலும் கடவுள் எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.


 ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

 அவர் நமது வாழ்வின் காரணர். 

 கடவுள் நம்மை விட்டு நீங்கி விட்டால் நாம் ஒன்றும் இல்லாமைக்கு திரும்பி விடுவோம்."


"அப்போ திருமுழுக்கின் போது பரிசுத்த ஆவி இறங்கி வருகிறார் என்று சொல்கிறோம்?"


"ரயில் பயணத்தின்போது எப்போதாவது 'மதுரை வந்தாச்சா' என்று கேட்டிருக்கிறீர்களா?"

"கேட்டிருக்கிறேன்."


"மதுரை எப்படி வரும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?"


"நாம் மதுரைக்கு வந்து விட்டோமா என்று புரிந்து கொள்ள வேண்டும்!"

"Correct. அப்படித்தான் ஆன்மீகத்திலும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பாவ நிலையில் இருக்கும்போது நமக்குள் இருக்கும் இறைவனை நம்மால் உணர முடியாது.

பாவங்களுக்காக வருந்தும்போது இறைவன் பாவங்களை மன்னிக்கிறார்.

பாவங்கள் மன்னிக்கப்பட்ட உடன் நாம் அவர் இருப்பதை உணர்கிறோம்."

"இப்போ புரிகிறது. கேள்வியை சிறிது மாற்றி கேட்கிறேன்.

  அடுத்து எந்த அருள் அடையாளத்தில் நாம் பரிசுத்த ஆவியின் அருள் வரங்களை அதிகமாக பெற்றுக் கொள்கிறோம்?"

(தொடரும்)

லூர்து செல்வம்.