Saturday, November 28, 2020

*எல்லாம் இயேசுவே,எனக்கு எல்லாம் இயேசுவே* (தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_97.html

*எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே*
(தொடர்ச்சி)


இயேசு துவக்கமும், முடிவும் இன்றி, எப்போதும் நிகழ்காலத்திலேயே (Ever present) வாழ்ந்து கொண்டிருக்கும்
சர்வ ஞானம் உள்ள கடவுள்.

அனுபவம் (Experience) மனிதருக்கு மட்டுமே உரியது.

நாம்தான் புதுப்புது அனுபவங்களிலிருந்து புதுப்புது பாடங்களைக் கற்கிறோம்.

கற்கும் பாடங்கள் நமது ஞானத்தை அதிகரிக்கின்றன.

சர்வ ஞானத்தோடு நித்தியமும் 
வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு அதிகரிப்பதற்கு எதுவும் இல்லை.

There is nothing to add to His wisdom.

புதுப்புது அனுபவங்களிலிருந்து புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கும் நாம் 

சில சமயங்களில் தவறான பாடங்களைக் கற்றுக் கொள்ள நேரிடுகிறது.

உதாரணத்திற்கு, சிலர் துன்பங்களிலிருந்து கடவுளை நெருங்க கற்றுக் கொள்கின்றனர். (சரி)

சிலர் கடவுளை விட்டு விலக கற்றுக் கொள்கின்றனர். (தவறு)

இறைவன் அவருக்கே உரிய நித்தியத்திலிருந்து கொண்டே,

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக 

நமக்கென்றே படைக்கப்பட்ட காலத்திற்குள் நுழைந்து,

அதாவது 

நம்மைப் போல் மனிதனாக பிறந்து,

 தன்னுடைய மனித அனுபவத்தின் மூலம் 

நாம் எப்படி நமது அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு போதித்தார்.

தேவ சுபாவத்தில் இயேசு நித்தியர்,

மனித சுபாவத்தில் நம்மைப்போலவே துவக்கமும் முடிவும் உள்ளவர்.

நமது கால கணக்குக்குப்படி முதலாம் ஆண்டு பிறந்து 33 ஆண்டுகள் நிறைவுற்ற போது மரித்தார்.

33 ஆண்டுகளும் தனது சாதனைகள் மூலம்,

 அதாவது அனுபவங்களின் மூலம் போதித்தார்.

 இவ்வுலக வாழ்நாளின் போது அவரது வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு பல்கலைக்கழகம்.

தான் போதித்தவற்றை நடந்து காட்டியதால்தான், அவரால்

 "நானே வழி" 

என்று கூற முடிந்தது.

 அவரது மனித அனுபவங்களை நமது அனுபவங்களாக மாற்றும் போது அவை நமக்கு "இறை அனுபவங்கள்."

நாம் ஏழையாக பிறந்து ஏழையாக வாழ்வது ஒரு மனித அனுபவம்.

ஆனால் "எளிய மனத்தோர் பேறுபெற்றோர்" என்ற அவரது சொற்படி 

நமது ஏழ்மையான வாழ்க்கையை நாமே தேர்ந்தெடுத்து 

இறைவனுக்காக ஏழையாக வாழ்வது நம்முடைய "இறை அனுபவம்."

துன்பங்களை வேறு வழியில்லாமல் அனுபவிப்பது மனித அனுபவம்.

ஆனால் அவர் எப்படி நமக்காக,

 நமது மீட்பிற்காக,

 துன்பங்களை அனுபவித்தாரோ,

 அதே போல அவருக்காகவே நமது துன்பங்களை நாம் ஏற்றுக் கொள்வது இறை அனுபவம்.

இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரமாக துன்பங்களை அவரே தேர்ந்தெடுத்தார்.

நமக்கு வரும் துன்பங்களை நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொள்ளும்போது,

அவை நமது மீட்பிற்கு உதவும் இறை அனுபவங்களாக மாறுகின்றன.

இத்தகைய இறை அனுபவங்கள் தான் நாம் இயேசுவைப் போல எப்படி நேசிப்பது, எப்படி வாழ்வது என்பதை செயல் மூலம் போதிக்கின்றன.

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
.அரு.15:13)

இது இயேசுவின் போதனை. 

அவர் போதித்தபடியே தனது உயிரை நமக்காக பலியாக ஒப்புக் கொடுத்தது அவருடைய சாதனை.

இதேபோன்ற சாதனைகளை உலகத்தை ஆள்கின்ற உலக அரசுகளால் காண்பிக்க முடியுமா?

மற்ற மனிதர்களின் அனுபவங்களைப் பார்த்து,

 மனிதர் பயப்படுகின்ற,

 வேதனை நிறைந்த, 

தாங்கள் விரும்பாத ஆனால் தவிர்க்கமுடியாத அனுபவம் மரணம்.

நாம் பிறந்தது எவ்வளவு உறுதியோ அவ்வளவு உறுதி நமது மரணமும்.

தனது மரண அனுபவத்தின் மூலம் 

தன்னை விசுவசிப்பவர்களின் மரண பயத்தை அறவே நீக்கி இருப்பவர் நமது அரசர் இயேசு.

விசுவசியாதவர்களுக்கு மரணம் இன்னும் பயப்படுவதற்கு உரியதுதான்.


ஆனால் விசுவசிப்பவர்களுக்கு மரணம் விண்ணக வீட்டின் நுழைவாயில்.

இவ்வுலக துன்பங்களின் முடிவு, நித்திய பேரின்பத்தின் ஆரம்பம்.

" சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?" (1 கொரிந்.15:55)


இயேசுவின் மரணமும், உயிர்ப்பும் நமது மரண பயத்தை நீக்கிவிட்டன.

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய்"
(லூக். 23:43)

இது மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த நல்ல கள்ளனுக்கு இயேசு கொடுத்த வாக்குறுதி.

அவன் பயப்படத் தேவையில்லை, எனெனில் மரித்த அன்றே அவன் இயேசுவுடன் விண்ணகத்தில் இருப்பான்.

நமது மரண பயத்தை நீக்கவே இயேசு இவ்வாறு கூறியிருக்கிறார்.

இயேசுவை விசுவசித்து விசுவாச வாழ்வில் ஒழுங்காக வாழ்பவன் மரணத்திற்கு அஞ்ச வேண்டியதில்லை.

ஏனெனில் அதன் வழியே விண்ணுலகம் சென்று விடுவான்.

" சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?"

 நமது சாவு அனுபவத்தையே, 
 தன் அனுபவம் ஆக்கி, 

 நமது நிலை வாழ்வுக்கு வழியாக இயேசு மாற்றி விட்டார். 

நமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் இறை அனுபவமாக மாற்றவும்,

அதன் மூலம் நம்மோடு
 நிலை வாழ்வையும், அன்பையும் 

நம்மோடு பகிர்ந்து கொள்ளவும் அவரால் முடியும்.

உணவு உண்பது ஒரு சாதாரண மனித அனுபவம்.

இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தந்து அதை இறை அனுபவமாக மாற்றி விட்டார்.


"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்"

  என்று இறைத் தந்தையிடம் நாம் வேண்டும் போது திவ்ய நற்கருணை உணவும் அதில் அடங்கி இருக்கிறது.

பட்டினி கிடப்பது ஒரு மனித அனுபவம்.

40 நாட்கள் இயேசு பட்டினி இருந்ததின் மூலம் 

நமது பாவங்களுக்கு பரிகாரமாக பட்டினி இருப்பதை இறை அனுபவமாக மாற்றிவிட்டார்.

மனித அனுபவத்தில் நாம் நமது நண்பர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு தனியே தத்தளிக்கும் அனுபவங்கள் உண்டு.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மோடு இயேசு இருக்கிறார் என்பதையே நமக்கு உணர்த்த அவரும் இத்தகைய அனுபவத்தில் பங்கேற்றிருக்கிறார்.

அவரது மூன்று வருட பொது வாழ்வின் போது அவரது நற்செய்தியை கேட்கவும் அவர் கையால் குணம் பெறவும் மக்கள் கூட்டம் அவரை சுற்றி எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது. அவர் சென்ற இடமெல்லாம் சென்றது.

ஆனால் பரிசேயர்களால் கைது செய்யப்பட்டு   

விசாரணை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டு கொண்டிருந்தபோது

  அவருடைய சீடர்களும் அவரோடு இல்லை.

 அவரது வாயிலிருந்து நற்செய்தியைக் கேட்டவர்களும் அவரோடு இல்லை.

 அவரால் சுகம் பெற்றவர்களும் அவரோடு இல்லை.

எல்லா அவமானங்களையும் தனியாகவே தாங்கிக் கொண்டார்.

எல்லாம் நமக்காகவே.

கிறிஸ்மஸ் கொண்டாட புது உடை வாங்க பணம் இல்லையே என்று கவலைப்படுகிறோம்.

இயேசு நமக்காக, நமது பாவங்களுக்கு பரிகாரமாக, சிலுவையில் தொங்கும்போது அவருடைய உடலில் துணி ஏதும் இல்லை. 

அதற்காக அவர் கவலைப்பட்டது இல்லை. 

நமக்கு dress வாங்க முடியாவிட்டால் அதையும் ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுத்து விடுவோம்.


உடை இல்லாத யாருக்காவது நாம் புது உடை வாங்கிக் கொடுத்தால் அதை இயேசு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்.

சிலுவையில் தொங்கி கொண்டிருந்தபோது நமது தாகத்திலும்கூட அவர் பங்கேற்று கொண்டார்.

இயேசு, "தாகமாயிருக்கிறது" என்றார்." (அரு. 19:28)

சுருக்கமாக சொல்லப்போனால் இயேசு நமக்காக மனிதனாக வாழ்ந்ததின் மூலம் 

இறைவனுக்காக வாழும் நமது வாழ்வையும் இறை அனுபவமாக மாற்றி விட்டார்.

இறைவனது மகிமைக்காக நாம் எதைச் செய்தாலும் அது இறை அனுபவம் தான்.

நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இயேசுவின் பங்கு இருக்கிறது.

இதை நாம் ஏற்றுக் கொண்டால்

 நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இயேசுவின் மகிமைக்காக ஏற்றுக்கொண்டு

 அவருக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம்.


நமது ஒவ்வொரு அனுபவத்தையும் இறை அனுபவமாக மாற்றி 

அதற்குரிய பரிசை இறையரசில் பெறுவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment