Thursday, November 26, 2020

*கசப்பான மருந்து.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_26.html




        *கசப்பான மருந்து.*



" என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் எங்கு திருப் பாடல் ஆசிரியர் கூறுகின்றாரே

அதன் பொருள் என்னவென்று எனக்கு விளங்கவே இல்லை.

யாருக்காவது நன்றி கூற வேண்டும் அவர் நமக்கு ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும்.


நன்று என்று சொல்லிலிருந்து பிறந்ததுதான் நன்றி.

நடப்பது நன்றானால் தானாகவே நன்றி வரும்."


"கரெக்ட்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்.

அதாவது 

என்ன நேர்ந்தாலும் நன்றுதான்.

அதாவது

நமக்கு தீயது எதுவும் நடக்க முடியாது.

நல்லது மட்டும்தான் நடக்க முடியும்.

நல்லது நடந்தால் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

என்ன நேர்ந்தாலும் அது நன்மையாகவே இருக்குமாகையால்

 நாம் என்ன நேர்ந்தாலும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்."


"எதை வைத்து என்ன நேர்ந்தாலும் அது நன்மையாகவே இருக்கும் என்று கூறுகிறீர்கள்?"

"கடவுள்தான் உலகைப் படைத்தார்.

அவரே தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கியபோது  
 அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன. 
( ஆதி.1:31)

"அப்போ பாவமும் நல்லதா?"

"பாவத்தைக் கடவுள் படைக்கவில்லை.

அது மனிதனுடைய product.


இறைவனால் நேர்வது எல்லாம் நல்லதே. ஆக இறைவனால் நமக்கு என்ன நேர்ந்தாலும் நாம் அவருக்கு நன்றி கூற வேண்டும்."

"அப்போ கொரோனா வைரஸ் வந்து உயிர்களை அள்ளிக் கொண்டு போகிறதே, அதற்கும் நன்றி கூற வேண்டுமா?"

"ஆமா."

"தெருவில் நின்று இதை 
சப்தமாகச் சொன்னால் அடிபடாமல் திரும்ப மாட்டீர்கள்.

என்னிடத்தில் சொல்வதுபோல் வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள்."

" அதுதான் திருப்பாடல் ஆசிரியர் ஏற்கனவே சொல்லிவிட்டாரே."

"அவர் 'கொரோனா வந்தாலும்' என்றா சொன்னார்?"

"என்ன நேர்ந்தாலும் என்பதில் அதுவும் அடக்கம்தானே!"

"நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள?"

" கொரோனா நம்மைப் போல் சுதந்திரமாக சிந்தித்து செயல்படும் ஒரு பிராணி அல்ல.

உண்மையில் அது ஒரு உயிரில்லாத வைரஸ்.

இறைவன் அனுமதியின்றி உலகிற்குள் அதுவாக வராது.

தன்னுடைய படைப்புகளுக்கு ஏதாவது நன்மைக்காக அன்றி இறைவன் எதையும் அனுமதிக்க மாட்டார்.

நாம் இறைவன் மீது வைத்திருக்கும் அசையாத விசுவாசத்தின் அடிப்படையில் தான் அவரது செயல்பாடுகளை நோக்க வேண்டும்.

அவரது நோக்கம் நமது நன்மைக்காகத்தான் என்பதை நாம் முழுமையாக விசுவாசித்தால் அவரது செயல்பாடுகளை எதிர்க்கேள்வி இன்றி ஏற்றுக் கொள்வோம்.

உங்களுக்கு விவசாயம் தெரியும் தானே?"

" தெரியுமா? நான் முழுநேர விவசாயி."

"கலப்பை, மண்வெட்டி, அரிவாள், களை கொத்தி ஆகியவற்றை பார்த்திருக்கிறீர்களா?"

"அவை இன்றி விவசாயமே செய்ய முடியாதே!

 ஆசிரியருக்கு புத்தகங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
இவை எனக்கு!"

"பூமித்தாயின் உடம்பில் கிணறு தோண்டுவீர். அது விடும் கண்ணீரைக் கொண்டு விபசாயம் செய்வீர்.

கலப்பை, மண்வெட்டி, அரிவாள், களை கொத்தி ஆகியவை பூமித்தாயின் உடம்பைக் காயப்படுத்தும் கருவிகள்....."


"சார் பொறுங்க. அவற்றைப் பயன்படுத்தி ஒன்றுக்கு நூறு உணவுப் பொருள் உற்பத்தி செய்வேன். அதைக் கொண்டுதான் மனுக்குலம்
 வாழ்கிறது"

"அதே மனுக்குலத்தின் நன்மைக்காகத்தான்  

 வைரஸ் உட்பட எல்லா எல்லா துன்பங்களையும் இறைவன் அனுமதிக்கிறார்.

டாக்டர் ஊசி குத்தும்போது வலிக்கத்தான் செய்யும்.

காய்ச்சல் குணமான உடனே மகிழ்ச்சி ஏற்படுமே!"

" நாம் அனுபவத்திலிருந்து பாடம் எதுவும் கற்றுக் கொள்கிறோம்.

காய்ச்சல் வரும்போது டாக்டரிடம் போகிறோம். அவர் ஊசி போடுகிறார்.

வலிக்கிறது. வலியைத் தாங்கிக்கொள்கிறோம்.

காய்ச்சல் சுகமாகிறது. ஆகவே காய்ச்சல் வந்தால் ஊசி போட்டால் சுகமாகும் என்ற அனுபவம் கிடைக்கிறது.

ஆனால் துன்பம் வருவது என்ன நன்மைக்கு என்று நமக்குத் தெரிவதில்லை.

ஆகவே அனுபவம் எதுவும் கிடைப்பதில்லை. நாமும் பாடம் எதுவும் கற்றுக் கொள்வதில்லை.

இப்போ உலகிற்குள் கொரோனா வந்தது என்ன நன்மைக்காக என்று நமக்குத் தெரிந்தால்தானே நாம் நன்றி கூறமுடியும்!"

"கடவுள் நம்மைப் படைத்து ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருகிறார்.

அவர் நம் பொருட்டு செய்கின்ற அல்லது அனுமதிக்கின்ற ஒவ்வொரு காரியமும் நம்மைப் பராமரிப்பதின் ஒரு பகுதிதான்.

அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்கு நமது முக்காலமும் தெரியும். ஏனெனில எல்லாம் அவர் திட்டப்படிதான் நடக்கின்றது."

"பாவம் கூடவா?"

"அவர் அனுமதிக்காவிட்டால் நம்மால் பாவம் கூட செய்ய முடியாது. அதனால்தான் அவரை ஆதிகாரணர் (Primary causy) என்கிறோம்."

"நீங்கள் சொல்வது புரியவில்லை. ஆசிரியர் மாணவனுக்கு வீட்டிற்குச் செல்ல அனுமதி கொடுத்த பின்,

அவன் வீட்டிற்குச் சென்றதை எப்படி தப்பு என்று சொல்லலாம்?"

"Gate ல watchman நிற்கிறான். அவனது அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது.

ஆனால் நீங்கள் அவன் முன்னாலேயே, அவனிடம் கேட்காமலேயே உள்ளே போகிறீர்கள். அவன் உங்களைத் தடுக்கவில்லை. 

He has not given you active permission, by saying "Go.''

But he has given you passive
permission by not stopping you from going.

கடவுள் மனிதனுக்கு பரிபூரண சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

நாம் நமது பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.

நமது பரிபூரண சுதந்திரத்தைப் 
 பயன்படுத்தி பாவம் செய்யும்போது அவர் தடுப்பதில்லை.  

செய்யவிடாமல் தடுத்திருந்தால் சுதந்தரம் என்ற வார்த்தைக்கே பொருள் இல்லையே!

நாம் நமது பரிபூரண சுதந்திரத்தைச் 

சுதந்திரத்தோடு

 அதைத் தந்த இறைவனிடமே ஒப்படைத்துவிட்டு அவரது அடிமையாக மாறி விட வேண்டும்.

இதைத்தான் அன்னை மரியாள் செய்தாள்.

அப்பா நம்மிடம் மாதத் துவக்கத்தில் செலவிற்காக 10000 ரூபாய் தருவதாக வைத்துக் கொள்வோம்.

 ரூபாயை வாங்கிக்கொண்டு இஸ்டம் போல் செலவழிக்கவும் செய்யலாம்.

அல்லது ரூபாயை அப்பாவிடமே கொடுத்துவிட்டு,

"எனக்காக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது நீங்களே.
எனக்காக செலவழியுங்கள்."
என்று சொல்லவும் செய்யலாம்.

நமது முதல் பெற்றோர் தங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 

இறைவனது கட்டளையை மீறினார்கள்.

 இறைவன் அதை தடுக்கவில்லை.

இதைத்தான் "அவர் அனுமதிக்காவிட்டால் நம்மால் பாவம் கூட செய்ய முடியாது" என்று சொன்னேன்."

''எதற்கு இந்த வேண்டாத வேலை. 

பாவமே செய்யமுடியாத அளவிற்கு நம்மை படைத்திருந்தால்

 அவர் நமக்காக நம்மைப் போல் பிறந்து, பாடுகள் பட்டிருக்க வேண்டாமே!"

"உன்னைப் படைக்கும்போது இதை அவரிடம் சொல்லியிருக்கலாமே!"

"அப்போதுதான் நானே இல்லையே!"

"அப்போ பேசாம வாயைப் பொத்து. 

எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருக்கும்போது திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.

நாம் பேச ஆரம்பித்தது 

இறைவனுக்கு நன்றி கூறவேண்டிய அவசியத்தையும் இறை பராமரிப்பையும் பற்றி."


"சரி, சரி. நான் இனிமேல் குறிக்கிட மாட்டேன். சொல்ல வந்ததை மட்டும் சொல்லவும்."

"கொரோனா போன்ற துன்பங்கள் வருவதற்கும் ஏன் நன்றி கூற வேண்டும் என்று கேட்டீர்கள்.

நாம் நன்றி கூற வேண்டியது இறைவன் நம்மையே படைத்து பராமரித்து வருவதற்காகத்தான்.

நாம் படைக்கப்பட்டது படைக்கப்பட்ட பின் தான் நமக்குத் தெரியும்.

படைக்கப்பட்டதன் நோக்கமும் 
கடவுள் நமக்கு இலவச அன்பளிப்பாகத் தந்த விசுவாசத்தின் மூலம் அவரே நமக்கு தெரியப்படுத்திய பின்தான் தெரியும். 

நமது நோக்கத்தை எப்படி அடைவது என்று நமக்குத் தெரியாது.

அதையும் விசுவாசத்தில் அடிப்படையில்தான் ஆண்டவர் நமக்கு தெரிவித்திருக்கிறார்.

விண்ணக ராஜ்யமாகிய நமது நோக்கத்தை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நமது ஆண்டவராகிய இயேசு நமக்கு அறிவித்திருக்கிறார்.

நாம் ஒரு புதிய ஊருக்குப் போகும்போது நமக்கு வழி தெரிந்தால் மட்டும் போதாது.

நம்மோடு இடத்தை நன்கு அறிந்த ஒரு வழிகாட்டியும் (Guide) வர வேண்டும்.

வழிகாட்டியாகவும் இயேசுவே நம்மோடு வருகிறார்.

அவர் நமது ஆன்மீக வழிகாட்டி, ஆகையால் நமது விசுவாச கண்ணால் மட்டுமே அவரை உணர முடியும்.

நமது வழிகாட்டியாக இருந்து நம்மை வழி நடத்தி செல்வதையே நாம் இறை பராமரிப்பு என்கிறோம்.

இறைவன் எப்போதும் 
நம்முடனேயே இருப்பதால், நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவரே நம்மை மராமரித்து வழிநடத்துகிறார்.

நாம் தற்செயல்கள் நிகழ்ச்சிகள் என்று நினைப்பவை கூட 
நம்மை பராமரிப்பதற்காக இறைவன் திட்டத்தினால் நடப்பவைதான். 

நமக்கு வரும் நோய் நொடிகளும், நாம் விரும்பாத நிகழ்வுகளும், நாம் சந்திக்கும் தோல்விகளும்கூட நமது பராமரிப்பை சார்ந்த நிகழ்வுகளே.

எல்லாம் நன்மைக்கே என்ற விசுவாச உணர்வோடு நடப்பவற்றை எல்லாம் 

நாம் இறைவனுக்காக ஏற்றுக்கொள்வதுதான் அவரது பராமரிப்பை ஏற்றுக் கொள்வதாகும்.

 மனுக்குலம் தவறான பாதையில் செல்லும் போது அதை திருத்தி நல்வழி படுத்துவதற்காக இறைவன் பேரிடர்களை அனுமதிக்கிறார்.

மனுக்குலம் தன் தவறுகளை ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்து அவைகளைத் திருத்த வேண்டுமே தவிர பேரிடர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது.

வைரஸினால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம்,

 ஆனால் போர்களினால் பாதிக்கப்பட்டோர் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

அரசுகள் விஞ்ஞானத்தை அழிவுப்பாதைக்கு பயன்படுத்துவதை விட்டுவிட்டு

 ஆக்கபூர்வமான செயல்களுக்காகப் பயன்படுத்தினால் மனுக்குலம் வளமாக வாழும்.

நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை விட்டு விட்டு, ஒற்றுமையாக வாழ ஆரம்பித்தால் கொரோனா காணாமல் போய்விடும்.    

நாம் குணம் அடைவதற்காக மருந்து தரும் மருத்துவருக்கு நாம் நன்றி கூற வேண்டாமா?

மனுக்குலத்திற்கு வரும் இடர்கள், அது திருந்துவதற்காக இறைவன் தரும் மருந்துதான்.

அதற்காக இறைவனுக்கு நன்றி கூற வேண்டாமா?"


"இப்போ புரிந்துகொண்டேன்.

 கசப்பான மருந்து தான். இருந்தாலும் மருத்துவருக்கு நன்றி கூற வேண்டியது நமது கடமை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment