Tuesday, November 24, 2020

* இனிமையான வேலை.*

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_24.html


     *இனிமையான வேலை.*


"Sir, தினமும் School க்கு எப்படிப் போறீங்க?"

"சைக்கிளில்."

"எப்போ புறப்படுவிங்க?"

"காலை 7.30க்கு."

"எத்தனை மணிக்கு School ல இருப்பீங்க?"

"8 மணிக்கு."


" சார் , திருநெல்வேலிக்கு ஒரு டிக்கட்."

"25 ரூபாய்."

"எத்தனை மணிக்கு திருநெல்வேலிக்குப் போய்ச் சேர்வோம்?"

"இப்போ மணி என்ன?"

"10."

" 11.30க்குப் போயிடுவோம்."


"ஹலோ! இந்த bus ல போகவேண்டாம்."

"ஏன்?"

"இதுல போனா ஒன்றரை மணி நேரம் ஆகும். அடுத்து Express வருகிறது. அது one hour ல போயிடும்."

"சரி, அப்போ அதிலேயே போவோம்."


எந்த பயணத்தை ஆரம்பித்தாலும்

எத்தனை மணிக்கு புறப்படுவோம்?

எவ்வளவு நேரம் பிரயாணம்?

 எப்போ இறங்குவோம்?

என்ற மூன்று கேள்விகளுக்கும் விலை தெரிஞ்சுதான் ஆரம்பிப்போம்.

 பேருந்தோ, புகை வண்டியோ, ஆகாய விமானமோ 

ஏறிய பின் பிரயாண நேரம் அதிகமானால்,

" தெரியாத்தனமா இதிலே ஏறி விட்டோமே,

 நன்றாக விசாரித்துவிட்டு ஏறியிருக்கலாம்"

 என்று நமக்கு நாமே புத்திமதி சொல்லிக் கொள்வோம்.

இது மண்ணக வாழ்வில் பிரயாணம்.

நமது விண்ணகப் பயணம் பற்றிய அணுகுமுறை எதிர்மாறானது.   

நமது பிறப்பின்போது நமது விண்ணகப் பயணம் ஆரம்பிக்கின்றது.

குழந்தை பிறந்தவுடன் அதைப் பார்க்கச் செல்லும் ஒருவர் அதன் தந்தையிடம்,

"குழந்தை எப்போது போய்ச் சேரும்?"

 என்று கேட்டால் அடிபடாமல் திரும்ப மாட்டார்!

அமெரிக்காவில் flight ஏறும் ஒருவர்,

"எப்போது இந்தியாவுக்கு போய் சேருவோம்?"

என்று கேட்டால் பதில் கூறுவார்கள்.

உலகத்தில் பயணத்தை ஆரம்பித்த ஒருவரிடம் போய்,

"விண்ணகத்திற்கு எப்போது போய்ச் சேருவீர்கள்?"

 என்று கேட்டால் அவருக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது?

இறை ஞானம் உள்ளவர்க்குக் கோபம் வராது, ஆனால், பதிலும் தெரியாது.

நாம் உலகில் பிறந்திருப்பது விண்ணை நோக்கி பயணிப்பதற்காகத்தான் என்பதை அறிந்த பிறகு

  நமது முழு கவனமும் விண்ணக பயணத்தில் தான் இருக்க வேண்டும்

 அதாவது

 நமது ஆன்மீக வாழ்க்கையில் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அநேகருக்கு ஆன்மீகம் ஒரு side business!

அவர்களது main business உலக வாழ்க்கை.

"உலகில் வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம்.

 நீண்ட நாள் வாழவேண்டும்.

 வாழ்க்கையை வளமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும்.

நிம்மதியாக வாழ இரண்டு காரியங்கள் தேவை. 

பொருள், அருள்.


பொருள் main business. லிருந்து கிடைக்கிறது. அதாவது உலக வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது.

அருள் side businessலிருந்து கிடைக்கிறது. அதாவது ஆன்மீக வாழ்க்கையிலிருந்து கிடைக்கிறது.

பொருளோடும் அருளோடும் நீண்டநாள் வாழ்ந்து விட்டு ஒருநாள் உலகைவிட்டு போய்விடுவோம்."

இவ்வளவுதான் அவர்களது நம்பிக்கை.

உலக வாழ்க்கையை செழிப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு 

ஆன்மீக வாழ்க்கை உதவியாக இருக்க வேண்டும் 

என்பது அவர்களது கொள்கை.

அதாவது அவருடைய ஆன்மா உடலுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

உடல் தனது வசதியான வாழ்க்கைக்காக உலகை ஆன்மாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மாவுக்கு தான் உதவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆன்மா உடலில் இருந்தால்தான் உலக வாழ்க்கை வாழ முடியும். 

ஆன்மா உடலில் இருக்க வேண்டும், ஆனால் ஆன்மீக வாழ்க்கை தேவை இல்லை.

 ஆகவே அவர்கள் ஆன்மீகம் உலக வாழ்த்கைக்கு இடைஞ்சலாக இருப்பதாக நினைத்தால் 

அதை தியாகம் செய்துவிட்டு உலக வாழ்க்கையை மட்டும் வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

மறு உலகைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

அப்படியே கொஞ்சம் கவலை இருந்தாலும் 

அதை இவ்வுலகை விட்டு போகும் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணம்.

யாரும் தங்களை வாழ்த்தினால் கூட 

"நீண்ட நாள் வாழ்க" என்றுதான் வாழ்த்த வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.

ஆகவேதான் அப்படிப்பட்டவர்கள் மரணத்தை நினைத்தாலே பயப்படுகிறார்கள்.

ஒருவர் இந்தியாவிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவிற்குப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

 அவர் புறப்படும் போது அவரை எப்படி வாழ்த்துவோம்?

" பத்திரமாக பயணித்து, அமெரிக்காவில் பத்திரமாக இறங்க வாழ்த்துகிறேன்."

 என்றுதானே வாழ்த்துவோம். 

"நீண்ட நாள் Flight லேயே இருங்கள்"
 என்றா வாழ்த்துவோம்?

ஆக பிரயாணத்தை விட அதன் முடிவுதான் முக்கியமானது.

வாழ்க்கையைவிட மரணமே முக்கியமானது.

பிரயாணத்தில் ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும் நாம் பத்திரமாக ஊருக்கு போய் சேர்வதே முக்கியம்.

அதேபோல்தான் வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும்

 மரிக்கும்போது அமைதியாக, விண்ணகத்திற்குள் நுழையப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு மரிக்க வேண்டும்.

இறைவன் உலகத்தை மனிதனுக்காகப் படைத்தார்.

 மனிதனை உலகத்திற்காக படைக்கவில்லை.


 மனிதனை விண்ணக வாழ்விற்காக மட்டுமே மண்ணகத்தில் படைத்தார்.

ஆன்மா விண்ணிற்கு உரியது, உடல் மண்ணிற்கு உரியது.

இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை விண்ணை நோக்கிய ஆன்மீகப் பயணம்.

நமது ஆன்மாவின் பயணத்திற்கு வாகனமாக செயல்படுவது மட்டும்தான் உடலின் வேலை. 


நான் ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக மட்டுமே உலகில் இறைவனால் படைக்கப் பட்டிருக்கிறோம்.

உலகில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல.

நமது ஆன்மீக வாழ்வை எவ்வாறு வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் ஆன்மாவிற்காக மட்டுமே வாழ்கிறோம்.


ஆன்மீக வாழ்வு என்றாலே இறைவனுக்காக வாழும் வாழ்வு.

உலக வாழ்வு வாழ்வோர் வசதிகளோடு வாழ்வதற்கு உதவியான பொருளை ஈட்டுவதிலேயே குறியாக இருப்பது போல,

ஆன்மீக வாழ்வு வாழ்வோர் சமாதானத்தோடு வாழத் தேவையான இறையருளை ஈட்டுவதிலேயே குறியாக இருக்க வேண்டும்.

உலக வாழ்வு வாழ்வோர் தேடும் பொருளை உலகம் தருகிறது.

ஆன்மீக வாழ்வு வாழ்வோர் தேடும் அருளை இறைவன் தருகிறார்.

உலக வாழ்வு நிரந்தரமற்றதாகையால் நாம் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் நிரந்தரமாக அனுபவிக்க முடியாது.

உலகை விட்டுப் போகும்போது அதை இழந்துவிட்டுதான் போக வேண்டும்.


ஆனால் ஆன்மீக வாழ்வு நிரந்தரமானது. ஆகவே நாம் ஈட்டும் அருளும் நிரந்தரமானது.

இவ்வுலகை விட்டுப் போகும்போதும் நாம் ஈட்டிய அருள் நம்முடன் தான் வரும்.

அது மட்டுமல்ல, இவ்வுலகில் இருக்கும்போதுதான் நமது நிரந்தரமாக அனுபவிப்பதற்குத் தேவையான அருளை ஈட்ட முடியும்.

விண்ணகம் சென்றபின் நாம் உலகில் ஈட்டிய அருளைத்தான் நிரந்தரமாக அனுபவிக்க முடியும்.

விண்ணுலகில் நாம் அதிகப்படியான அருளை ஈட்டவும் முடியாது, ஈட்டிய அருளை இழக்கவும் முடியாது.

எவ்வளவு ஈட்டினோமோ அவ்வளவையும் முழுமையாக நித்திய காலம் அனுபவிக்க முடியும்.

ஆகவே இவ்வுலகில் நமது ஆன்மீக வாழ்வின் குறிக்கோள் எவ்வளவு அதிகமான அருளை ஈட்ட முடியுமோ, அவ்வளவு அருளை ஈட்ட வேண்டும்.

உண்மையில் உலகப் பொருளை ஈட்டுவதை விட இறையருளை ஈட்டுவது மிக மிக எளிது.

சர்க்கஸ் விளையாட்டில் 

"கரணம் தப்பினால் மரணம் "
என்பார்கள்.

மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு, பொய், களவு, ஏமாற்று வேலைகள் தெரிந்தோர் தான் மிகுதியான பொருள் ஈட்ட முடியும்.


நமது ஏமாற்று வேலையில் கொஞ்சம் அசந்தால் கூட ஈட்டிய பொருளை இழந்து, பிச்சை எடுக்க வரவேண்டியிருக்கும்.

இது மற்றவர்கள் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

ஆனால் அருளை ஈட்டுவது மிக எளிதானது மட்டுமல்ல, மிகவும் இனிமையானதும் கூட.

உலகிலேயே மிக இனிமையான வேலை எது?

நேசிப்பது, அன்பு செய்வது.

பிறந்தவுடன் நாம் செய்த முதல் வேலை அது தானே!

அம்மாதான் நமது உலகம், அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.


ஆன்மீக வாழ்வில் இறைவன் மட்டுமே நமது உலகம்.

 அவரை அன்பு செய்வது மட்டுமே நமது வேலை.

"சொன்னதைச் செய்வேன்,
செய்ததைச் சொல்வேன், 
வேரொன்றும் தெரியாது"

என்ற பாடல் வரிகள் ஆன்மீக வாழ்விற்கு முற்றிலும் பொருந்தும்,

"இறைவா நீர் சொன்னதைச் செய்வேன்,

நான் செய்வதை உம்மிடம் சொல்வேன்,

 வேறொன்று தெரியாது,

அன்பு செய்யச் சொன்னீர்.
அதை மட்டுமே செய்கிறேன்.

இவ்வுலகில் எனக்கு வேறு எதுவுமே தெரியாது."

இதுதான் முழுமையாக ஆன்மீக வாழ்வு.

இறைவன் என்ன சொன்னார்?

"என்னை நேசி,
 உன் அயலானையும் நேசி."

நமது சிந்தனை சொல் செயல் அனைத்திலும் அன்பு மட்டும் இருந்தாலே போதும். அருள்வளம் நம்மீது பொழியும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment