Sunday, November 22, 2020

*********பரலோகத் தாய்**********

http://lrdselvam.blogspot.com/2020/11/blog-post_22.html




*********பரலோகத் தாய்**********


"ஏன் சார், இயேசுவின் தாய் பரலோகத்தில் இருப்பதாக பைபிளில் வசன ஆதாரமும் இல்லை என்று சில பேர் சொல்கிறார்களே.

நீங்கள் எதை வைத்து மரியாளை விண்ணக , மண்ணக அரசி என்று கூறுகிறீர்கள்?"

"நான் வாய்மொழியாக பேசியதை எல்லாம் எழுதி பைபிளில் சேருங்கள், என்று இயேசு சொன்னதாக வசன ஆதாரம் இருக்கிறதா?"

"இல்லை. ஆனால் "போதியுங்கள்" என்று இருக்கிறதே.

வாய்வழியாக மட்டும் போதியுங்கள் என்று இயேசு சொல்லவில்லையே.

எப்படி வேண்டுமென்றாலும் போதிக்கலாமே!

எழுதக் கூடாது என்று இயேசு சொல்லவில்லையே!"

"Correct.

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். 

வானகத்திலுள்ள என் 
தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."
(மத். 7:21)

"தந்தையின் விருப்பப்படி நடப்பவனே விண்ணகம் சேருவான்"

என்று இயேசு சொல்லியிருக்கிறாரே.

அதற்கு என்ன அர்த்தம்?"

தந்தையின் விருப்பப்படி நடப்பவன் பரலோகம் சேருவான்"

என்றுதான் அர்த்தம்."

"மரியாள் தந்தையின் விருப்பப்படி நடந்தாளா?"


"நடந்தாள்."

"அப்படியானால் பரலோகத்திற்குப் போயிருப்பாளா?"

"இயேசுவின் வாக்குப்படி பார்த்தால் கட்டாயம் போயிருப்பாள்."
.
" கட்டாயம் போயிருப்பாள் என்பதற்கு வசன ஆதாரம்?" 


"அதற்கு தனியாக ஆதாரம் வேண்டுமா?

"தந்தையின் விருப்பப்படி நடப்பவனே விண்ணகம் சேருவான்"

 என்ற இயேசுவின் வாக்குதான் ஆதாரம்."
.
"நீங்கள் தந்தையின் விருப்பப்படி நடந்தால் பரலோகத்திற்கு போவீர்களா?"

"கட்டாயம் போவேன். "

"அப்போ புனிதர்கள்? அதாவது தந்தையின் விருப்பப்படி இவ்வுலகில் வாழ்ந்தவர்கள்? 

"கட்டாயம் போயிருப்பார்கள்."

"வசன ஆதாரம்?"

"என்ன சார், திரும்பத் திரும்ப அதையே கேட்கிறீர்கள் ஒரு முறை சொன்னால் போதாதா?"

"அப்போ நமது தாய் பரலோகத்தில் இருக்கிறார்.

ஏற்று கொள்கிறாய்."

"மரியா நமது தாய் என்பதற்கு என்ன ஆதாரம்?"

"விண்ணகத் தந்தையை ஏற்றுக் கொள்கிறாயா?"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"இயேசு தந்தையின் மகன் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"நமது தந்தையின் மகன் நமக்கு யார்?"

 "சகோதரன்."

  " மரியாள் யார்?"

" இயேசுவின் தாய்."

 "நமது சகோதரனின் தாய் நமக்கு யார்?"

 "தாய்."

 So, மரியாளை நமது தாய் என்று ஏற்றுக் கொள்கிறாய்!"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"வேறு ஆதாரம் வேண்டுமா?"

"இதுவே போதும், சார். ஆனால் மரியாளை மண்ணக விண்ணக அரசி என்று எப்படிக் கூறலாம்?"


" மண்ணக விண்ணக அரசர் யார்?"

"நம் ஆண்டவராகிய இயேசு."

"இயேசுவின் தாய் யார்?"


"மரியாள்."

"அரசரின் தாய் யார்?"

"அரசி."

"மண்ணக விண்ணக அரசர் இயேசு. அப்போ அவரது தாயாகிய மரியாள்?"


மண்ணக விண்ணக அரசி."

"அப்போ பதிலை தெரிந்து வைத்துக் கொண்டுதான் கேள்வி கேட்கிறீர்கள். 

நீங்கள் வாத்தியார் வேலைக்கு லாயக்கு."

"அப்போ, அடுத்த கேள்வி.

 இறைவன் நித்திய காலமாக இருக்கிறார்.

மரியாள் உலகில் பிறந்த மனுஷி.

 அவளை எப்படி இறைவனின் தாய் என்று சொல்லலாம்?"

" உங்கள் மகன் என்ன வேலை பார்க்கிறார்?''

"கலெக்டர்."

"உங்களை கலெக்டரின் அப்பா என்று சொல்லலாமா?"

 "தாராளமாக சொல்லலாம்.

 என் மகன் கலெக்டர்.
 நான் அவனுக்கு அப்பா தானே!"

"இயேசுவை இறைவன் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா."
.
 "ஏற்றுக்கொள்கிறேன்."

''இறைவன் இயேசுவின் தாயை இறைவனின் தாய் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?"

"தவறு இல்லை. மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தினாள் என்பதற்கு பைபிளில் ஆதாரம் இருக்கிறதா?''

"பைபிளுக்கு எது ஆதாரமோ அதுவே இதற்கும் ஆதாரம்?"

"புரியவில்லை."

"இயேசு பிறக்கும் போது பழைய ஏற்பாடு இருந்தது 

ஆனால் புதிய ஏற்பாடு எப்போது வந்தது?"

" இயேசு விண்ணகம் எய்திய பின் அவருடைய சீடர்களால் எழுதப்பட்டது."

" அதாவது சீடர்களால் எழுதப்படும் வரை புதிய ஏற்பாடு இல்லை.

 இயேசு மனிதனாக பிறந்ததிலிருந்து நற்செய்தியாளர்கள் புதிய ஏற்பாட்டை எழுதும் வரை திருச்சபை இருந்ததா? இல்லையா?"

"இருந்தது."

"எதை நம்பி இருந்தது?"

"இயேசுவின் வாய்மொழி போதனையையும், அவரது சீடர்களின் வாய்மொழி போதனையையும் நம்பி இருந்தது."

" இயேசுவின் வாய்மொழி போதனையை சீடர்கள் பின்பற்றினார்களா?"

"பின்பற்றினார்கள்."


"சீடர்களின் போதனையை ஆதி திருச்சபையினர் பின்பற்றினார்களா?

அல்லது உங்களது போதனைக்கு பைபிள் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டார்களா?"

"அப்பொழுது முழுமையாக பைபிள் இல்லையே!"

"அதாவது

 பைபிள் இல்லாத காலத்திலும் திருச்சபை இருந்தது.

 அதாவது 

திருச்சபை முற்றிலுமாக பைபிளை நம்பியிருக்கவில்லை.

 அதாவது

இயேசுவின் சீடர்களில் வாய்மொழி போதனையை நம்பி இருந்தது.

சீடர்கள்தான் தாங்கள் வாய்மொழியாக போதித்த போதனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்கள்.

இயேசு பிறந்ததிலிருந்து புதிய ஏற்பாடு பிறக்கும் வரை இருந்ததும்,

புதிய ஏற்பாட்டை எழுதியதும்,

 தொடர்ந்து இருக்கின்றதும்

திருச்சபையின் பாரம்பரியம்
 என்று அழைக்கப்படுகிறது.

திருச்சபையின் பாரம்பரியத்திலிருந்து பிறந்ததுதான் பைபிள்.

பைபிளில் இருந்து பாரம்பரியம் பிறக்கவில்லை.

பாரம்பரியத்தை நம்புகிறவர்கள் பைபிளையும் சேர்த்துதான் நம்புகிறார்கள்.

ஆகவே திருச்சபையின் போதனைகளுக்கு ஆதாரம் பாரம்பரியமும் அதற்குள் அடங்கிய பைபிளும்தான்.

 மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தியமைக்கு பாரம்பரியத்தில் முழுமையான ஆதாரம் இருக்கிறது.


பாரம்பரியத்தை நம்பாதவர்களிடம் அதைக் கூறி என்ன பயன்?"

"நான் பாரம்பரியத்தை நம்புகிறேன். என்னிடம் கூறலாம்."

"அப்போஸ்தலர்களுக்குத் தாயாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் அன்னைமரியாள்.

புனித அருளப்பரின் பாதுகாப்பில் இருந்தார்.

மரியாள் மரிக்கும் போது தோமையாரைத் தவிர மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் உடன் இருந்தார்கள்.


அடக்கம் முடிந்தபின்புதான் தோமையார் வந்து சேர்ந்தார்.

கல்லறையைத் திறந்து மாதாவைப் பார்த்தாக வேண்டும் என்பதில் தோமையார் பிடிவாதமாக இருந்தார்.

அவரைத் திருப்திப் படுத்துவதற்காகக் கல்லறையைத் திறந்தார்கள்.

மாதாவின் திருவுடலைக் காணவில்லை.

மாதாவின் திருவுடல் ஆன்மாவுடன் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை உணர்ந்தார்கள், நம்பினார்கள்.

அப்போஸ்தலர்கள் காலம் தொட்டே, 

அவர்களுடைய போதனையால்,

 மாதா பக்தி வளர ஆரம்பித்தது.

இது பாரம்பரியத்திலுள்ள உண்மை."

"இதை ஏன் அப்போஸ்தலர்கள் நற்செய்தி நூல்களிலோ, மடல்களிலோ ஏன் குறிப்பிடவில்லை?"

"புதிய ஏற்பாட்டு நூல்கள் இயேசுவின் போதனையை மையமாக வைத்து எழுதப்பட்டன.

நற்செய்தியை அறிவிப்பதுதான் அவற்றின் நோக்கம்.

அதைக்கூட முழுமையாக எழுத முடியவில்லை என்று அருளப்பரே கூறுகிறார்.

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."
(அரு. 21:25)

மாதா பக்தியும் சரி, புனிதர்கள் பக்தியும் சரியே இயேசுவின் நற்செய்திக்கு செயல்வடிவம் கொடுப்பவைதான்.

உன்னைப்போல் உன் அயலானையும் நேசி என்பது நற்செய்தி.

இறை அன்னையையும் புனிதர்களையும் நாம் நேசிப்பது இந்த கட்டளைப்படிதான்.

" உன் அயலானை உயிரோடு இருக்கும்போது நேசி இறந்தவுடன் மறந்துவிடு" என்று இயேசு எங்கும் சொல்லவில்லை.

உண்மையில் புனிதர்கள் இவ்வுலகிற்கு இறந்தாலும், இன்னும் விண்ணில் இறைவனோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆகவே அவர்களை நேசிப்பதும்

நேசத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதும் நற்செய்தி போதனைக்கு எதிரானவை அல்ல,

 மாறாக நற்செய்திக்கு செயல்வடிவம் கொடுப்பவை. 

 அதாவது நற்செய்தியை வாழ்வாக்குகிறோம்.

 வாழ்வதற்குத் தானே நற்செய்தி நமக்குப் போதிக்கப்பட்டது."

"இயேசுவின் தாய் பரலோகத்தில் இல்லை என்று ஒரு போதகர் சொல்லுகிறாரே, அதற்கு உங்கள் பதில் என்ன?"

 "அவர் கேட்கவில்லை, பதில் சொல்ல. 

அவரே சொல்லுகிறார், உறுதியாக சொல்கிறார்.

நாம் சொல்வது அவருக்குப் புரியாது. 

நாம் திருச்சபையின் பாரம்பரியத்தை நம்புகிறோம். அவர் நம்பவில்லை.

வாய்பாட்டை நம்பாதவர்களுக்கு கணக்கு எப்படி புரியும்?

நமது பாரம்பரியப்படி நமது அன்னை ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்தில் இருக்கிறார்.

அதை நாம் விசுவசிக்கிறோம். நமது விசுவாசப்படி நாம் வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment