Wednesday, July 28, 2021

மனிதன், எதிர்மறைகளின் சங்கமம்.

மனிதன், எதிர்மறைகளின் சங்கமம்.
 

."Wish you a happy birthday..''

"Thank you.
But you have not wished me happiness.
You have wished it to my birthday, which is no more now!"

: "என்ன தத்துவம் பேசற?"

"தத்துவம் பேசவில்லை. யதார்த்தமான உண்மையைத்தான் சொல்றேன்."

"Birthday, which is no more now! ன்னு சொல்றது எப்படி உண்மையாகும்?

இன்று தானே உனது பிறந்தநாள்?"

"நீ தமிழ் இலக்கணம் படிக்கலியா?"

"படித்திருக்கிறேன்.''..

"காலங்கள் எத்தனை வகைப்படும்?''

"இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்.

Past tense,  present tense, Future tense."

"இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது என்ன காலம்?"

"நிகழ்காலம்."

"நான் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தேன். 

இது என்ன காலம்?"

"இறந்த காலம்."

"அதாவது நான் பிறந்தது இறந்த காலம். சரியா?"

"என்னடா உளறுகிறாய்?"

"நான் உளரவில்லை. நீ தான் சொன்னாய் பிறந்தேன் என்பது இறந்த காலம் என்று.

அப்படியானால் நான் பிறந்தது இறந்த காலத்தில் தானே?"

." அது இலக்கணம்."

"அப்போ இலக்கணம் உண்மை இல்லையா?"

"உனக்கு என்னமோ ஆகிவிட்டது."

." ஒன்றும் ஆகவில்லை.

இப்போ ஒரு சின்ன கேள்வி.

குழந்தை பிறந்தபின் வளர ஆரம்பிக்கிறதா? தேய ஆரம்பிக்கிறதா?"

"பொடி வைத்து கேட்பதுபோல் இருக்கிறது!

வளர்வது  போல் தோன்றிக்கொண்டே தேய்கிறது."

"விளக்க முடியுமா?"

"குழந்தை உருவத்தில் வளர்கிறது.
வயதில்  தேய்கிறது,"

"வயதில் தேய்கிறது என்றால்?"

"அதன் மொத்த வயது 60 என்பது கடவுளின் திட்டம் என்று வைத்துக் கொண்டால்,

ஒவ்வொரு ஆண்டும் அதன் வாழ்நாள் ஒவ்வொரு ஆண்டாகக் குறையும். அது தேய்மானம்தானே."

"கரெக்ட். மனித வாழ்வின் அடிப்படை தத்துவமே

வளராமல் தேய முடியாது . தேயாமல் வளர முடியாது."

"அதாவது, எதிர்மறைகளின் சங்கமம்தான் மனிதன்."

"Yes. பார்க்க முடியாத ஆன்மா பார்க்க முடிகின்ற உடலோடு சங்கமிக்கும்போது மனிதன் தோன்றுகிறான்.

Man is a merger of Spirit and matter."

"ஆன்மாவும் உடலும்,
'
அதாவது,

ஆன்மீகமும், லௌகீகமும்

சேர்ந்துதான் பயணிக்க வேண்டும்.

ஆனால் பயணத்தில் ஆன்மீகம் வளரவேண்டும்,

லௌகீகம் தேய வேண்டும்.

அதுதான் ஆன்மீக வாழ்வின் வெற்றியின் அடிப்படைத்
தத்துவம்."

"அதாவது வாழ்வின் முடிவில் ஆன்மீகம் 100% ஆகவும்,
லௌகீகம் 0%ஆகவும் இருக்க வேண்டும்."

"Correct.

ஆன்மீகம் வளரவேண்டும் என்றால்  நம்மிடம் உள்ள கிறிஸ்தவத் தன்மை,

அதாவது

அன்பு,   இரக்கம்,    மன்னிப்பு,  பிறர் பணி, பணிவு போன்ற
கிறிஸ்தவ குணங்கள் வளர வேண்டும்.

"அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்."

என்ற  ஸ்நாபக அருளப்பரின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

நாமும் அப்படியே சொல்வோம்.

நம்முள் இயேசு வளர வேண்டும், நாம் தேய வேண்டும்."

"லௌகீகம் தேய வேண்டும் என்றால்?"

"இவ்வுலகைச் சார்ந்த ஆசைகள் குறைய வேண்டும்.
இவை உடல் சம்பந்தப் பட்டவை.

ஆன்மா விண்ணக வாழ்க்கைக்காக படைக்கப் பட்டது.

உடல் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு மணணிற்குத் திரும்புவதற்காகவே படைக்கப் பட்டது.  

ஆன்மா விண்ணக வாழ்விற்கான தயாரிப்பில் உடலை தனக்கு சாதகமாக பயன் படுத்த   முயற்சி செய்யும்.

உடல் இவ்வுலக இன்பத்தை அனுபவிக்க ஆன்மாவைப் பயன்படுத்த முயற்சி செய்யும்.

ஆன்மா வெற்றி அடைந்தால் ஆன்மீகம் வளரும்.

உடல் வெற்றி அடைந்தால் அடைந்தால் லௌகீகம் வளரும்.

ஆன்மாவின் வெற்றிக்குத் துணையாக இருப்பவர் நமது ஆண்டவரும் மீட்பவரும் ஆகிய இயேசு கிறிஸ்து.

அவர் நமக்கு முன் மாதிரிகை காட்டவே தனது உடலை நோன்பினாலும், தவத்தினாலும், பாடுகளினாலும், சிலுவை மரணத்தாலும்  ஒறுத்தார்.

நாமும் அவரது முன் மாதிரிகையைப் பின்பற்றி நமது உடலை  ஒறுக்க   வேண்டும்."

"இயேசு தனது மரணத்தின் மூலம் நமக்கு நித்திய வாழ்வைப் பெற்று தந்தார்.

இயேசுவின்  மரணம் நமக்கு நித்திய வாழ்வு தந்தது.

துன்பத்தின் வழி இன்பம் என்பதே நமது மீட்பின்  அடிப்படை தத்துவம்."

"அப்படியானால் இன்பத்தின் வழி?"

" துன்பம். இவ்வுலகில் இன்பத்தில் மூழ்க ஆசைப்படுவோர்  மறுவுலகில் துன்பத்தில் மூழ்க தயாராக இருக்க வேண்டும்."

"Correct. இன்னும் சில எதிர்மறைகள்.

பாவம் தேயத்தேய புண்ணியம் வளரும்.

சுயநலம் தேயத்தேய பொதுநலம் வளரும்.

இவ்வுலக  நாட்டம் தேயத்தேய மறுஉலக  நாட்டம் வளரும்.

பேரின்பம் வேண்டுமா? சிற்றின்பத்தை மறப்போம்.

பிறருக்காக வாழும்போது உண்மையில் நமக்காகத்தான் வாழ்கிறோம். 

ஏனெனில்

பிறருக்காக நாம் வாழும் காலம் முடியும்,

அதனால் நாம் பெறும் நிலைவாழ்வு என்றும் நீடிக்கும்.

இவ்வுலகிற்கு மரித்தால்தான் மறு உலகிற்குப் பிறப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment