Monday, July 19, 2021

" பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்." (மத்.12:15)

" பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்."
(மத்.12:15)

",ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல் தெரிகிறது!"

"ஆழ்ந்த சிந்தனைதான். ஆனால் இப்போது பயனில்லாத சிந்தனை."

", ஏன் பயனில்லாத சிந்தனை?"

"நடக்கக்கூடாத ஒன்றைப்பற்றி சிந்தித்தால் அதனால் நமக்கு என்ன பயன் இருக்கும்?"

", நடக்கமுடியாத எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாய்?"

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நாட்டில் பிறந்திருந்தால் நமக்கு நலமாக இருந்திருக்கும்.

இயேசுவின் பின்னால் போனாலே நமது நோய்களையெல்லாம் அவர்
குணமாக்கியிருப்பார்!

அதை இப்போது நினைத்து என்ன பயன்?

இனிமேல் எப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்மால் பிறக்க முடியும்?"

",இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நாட்டில் பிறந்திருந்தால் நமக்கு நலமாக இருந்திருக்கும் என்றுதானே நினைக்கிறாய்?

இப்போதும் நாம் இயேசு வாழ்கின்ற காலத்தில், வாழ்கின்ற நாட்டில்தானே பிறந்திருக்கிறோம்!"

"என்ன சொல்கின்றீர்கள்? இயேசு வாழ்ந்து 2021 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் சொல்வது புரியவில்லை."


"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20)

என்று 2021 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது யார்?"

"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.''

",இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா?"

"அவரது வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாவிட்டால் நான் எப்படி கிறிஸ்தவனாக இருக்க முடியும்?"

",நம்பிக்கை இருந்தால் நாம் இன்றும் கிறிஸ்து வாழ்கின்ற காலத்தில்தான் இருக்கிறோம் என்பதையும் நம்ப வேண்டுமே!

 ஏனெனில் இயேசு   சொன்னபடி நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்."

"இப்போது  புரிகிறது. இப்பொழுது இயேசு திவ்ய நற்கருணையில் உண்மையிலேயே நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பது புரிகிறது.

ஆனால் அன்று போல் இன்று புதுமைகள் செய்து கொண்டிருப்பதுபோல் தெரியவில்லையே?"

",அன்றும் தனது சொந்த ஊருக்குச் சென்றபோது அங்கு அதிகமாக புதுமைகள் செய்யவில்லையே, ஏன்?"

"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத்.13:58)

'',உங்கள் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள்.

இயேசு வாழ்ந்த அந்த காலத்திலும் விசுவாசம் உள்ளவர்களுக்கு  நோய்களைக் குணமாக்கினார்.

இயேசு வாழ்கின்ற இந்த காலத்திலும் விசுவாசம் உள்ளவர்களுக்கு 
நோய்களைக் குணமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

 வாளியில் தண்ணீர் இருக்கிறது.

அதைக் கோதி நம்மேல் ஊற்றினால்தான் நம் உடல் நனையும். தண்ணீரை பார்த்தவுடன் நம் உடல் நனையாது.

விசுவாசத்தோடு இயேசுவிடம் கேட்பது எல்லாம் கிடைக்கும்."

"எல்லாம் என்றால்?"

", எல்லாம்தான். நமது ஆன்மாவின் மீட்பிற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் கிடைக்கும்."

"உலக வாழ்விற்கு தேவையான எதையும் கேட்டால் கிடைக்காதோ?"

",நாம் எதற்காக உலகில் வாழ்கிறோம்?"

 " விண்ணகம் செல்ல நம்மை நாமே தயாரிப்பதற்காகத்தான்."

",அதன் பெயர்தான் மீட்புப் பெறுதல். மீட்பு பெற்ற ஆன்மா விண்ணகத்திற்குத்தான் செல்லும்."

"நான் கேட்ட கேள்விக்கு பதிலை என்னிடமிருந்தே வாங்குகிறீர்கள்.

விண்ணக வாழ்வுக்காக அன்றி இவ்வுலக வாழ்வுக்காக மட்டும் கேட்டது கிடைக்குமா?"

",அது ஆன்மீக வாழ்விற்கு  இடைஞ்சலாக இல்லாவிட்டால் அதுவும் கிடைக்கும். ஆனால் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

பைபிள் வாக்கியத்தை கவனியுங்கள்.

'பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்.

இந்த வாக்கியத்தில் இருந்து உனக்கு என்ன புரிகிறது?"


"இயேசுவை பின்தொடர்பவர்கள் அனைவரையும் குணமாக்குவார்."

", 'பின்தொடர' என்ற வார்த்தை உனக்கு ஏதாவது செய்தியை சொல்கிறதா?"

"மத்தேயு இதை எழுதும்போது இயேசுவின் பின்னால்  சென்றவர்கள் (many followed him,) என்ற பொருளில்தான் எழுதினார்.

அவர்கள் நடந்துதான் போயிருப்பார்கள்.

ஆனாலும் பைபிள் வார்த்தைகள் வாசிப்பவர்களுக்கு தேவையான பொருளை அவர்களுக்குள் தூண்டும். (Will inspire)


என்னது மனதில் தூண்டப்பட்டு எழும் பொருள்: இயேசுவை பின்பற்றுகிறவர்கள், அதாவது அவரது போதனைப் படி நடப்பவர்கள்.

இயேசுவிடம் நாம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் முதலில் நாம் அவரது  போதனையை பின்பற்றும் சீடர்களாக மாற வேண்டும்."

", very good. இயேசு அந்தக் காலத்திலும் உடல் நோய்களை குணமாகியது வெறுமனே நோயை குணமாக்குவதற்காக மட்டுமல்ல.

குணமாக்கப் படுகின்றவர்களிடத்தில் விசுவாசத்தை விதைப்பதற்காகத் தான்.

விசுவசித்தவர்கள் மட்டுமே குணமானார்கள்."


"அந்த இறை வாக்கை தியானித்தால்  இன்னொரு  இறைத் தூண்டுதலும் எழும். 


இயேசுவை பின்தொடர்பவர்கள், அதாவது அவரது  போதனைப்படி நடப்பவர்கள்

அவரிடம் எதை கேட்க வேண்டுமோ அதை மட்டுமே கேட்பார்கள்.

அவர்கள் தங்களது உடல் நோயைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

தங்களது பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும், விண்ணகத்தில் தங்களது பேரின்ப அளவை கூட்டவும் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஆசீர்வாதமாகவே உடல் நோயைக் கருதுவார்கள்.

ஆன்ம நோயாகிய பாவத்தில் விழாதிருக்கவும், புண்ணியத்தில் வளரவும்தான் வரம் கேட்பார்கள்.

அது அவர்களுக்கு உறுதியாக கொடுக்கப்படும்.''

 " கேட்டவரமெல்லாம் கிடைக்க வேண்டுமா?
இயேசுவைப் பின்பற்றுங்கள்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment