Thursday, July 15, 2021

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

"அண்ணாச்சி. ஒரு சின்ன சந்தேகம்."

", கேள்."

"இயேசுவை நேசிக்க வேண்டும், ஏனென்றால் அவர் கடவுள், நம்மைப் படைத்தவர் , 

நமது அயலானை நேசிக்க வேண்டும் ஏனென்றால் அவன் இறைவனில் நமது சகோதரன்.

நேசிக்க வேண்டும். சரி.

 ஏன் இயேசுவை  மற்ற எல்லாரையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்"

",நீ பள்ளிக் கூடத்திற்கு போகிறாய்.
எதற்காகப் போகிறாய்?"

"கல்வி கற்க."

",கல்வி கற்பதற்காக மட்டும்தானா? வேறு எதற்காகவுமா?"

"பள்ளிக்கூடத்தில் 
 வேறு எத்தனையோ காரியங்களை செய்கிறோம். 

நண்பர்களோடு பேசுகிறோம். சாப்பிடுகிறோம். விளையாடுகிறோம்.

ஆனால் இதற்காகவெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு போகவில்லை.

கல்வி கற்பது மட்டும்தான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதன் நோக்கம்."

", very good. வகுப்பறையில் பாடம் கற்கிறாய். மத்தியானம் ஓய்வு நேரத்தில் சாப்பிடுகிறாய். நேரம் கிடைக்கும்போது நண்பர்களோடு பேசுகிறாய்.

படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாயா? மற்ற காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாயா?"

"படிக்கத்தானே போகிறேன்! ஆகவே படிப்பிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்."

",படிப்பைவிட  சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால்,

அதாவது வகுப்பில் இருக்கும்போது கூட சாப்பாட்டை அள்ளி வைத்துக் கொண்டிருந்தால், 

ஆசிரியர் என்ன சொல்லுவார்?"

"படிப்பைவிட சாப்பாடு தான் முக்கியம் என்றால் வீட்டிலிருந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கலாம் அல்லவா? எதற்காக பள்ளிக்கூட வந்தாய்? என்று கேட்பார்."

", Correct.  உனது வயது என்ன?"

"15."

",17 ஆண்டுகளுக்கு முன்னே நீ எங்கே இருந்தாய்?"

"நானே இல்லை."

", ஒன்றுமே இல்லாதிருந்த நீ எப்படி உலகிற்குள் வந்தாய்?"

"விஞ்ஞான ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் அம்மா என்னை பெற்றபோது உலகிற்குள் வந்தேன்.

ஆன்மீக ரீதியாக சொல்ல வேண்டுமென்றால் இறைவன் என்னை படைத்ததால் உலகிற்குள் வந்தேன்."


",ஆன்மீக ரீதியாக இறைவன் உன்னை எதற்காகப் படைத்தார்? அதாவது,

 எந்த நோக்கத்திற்காக படைத்தார்?"

"இறைவனை அறிந்து,

 அவரை நேசித்து,

 அவருக்கு சேவை செய்து,

 அவரோடு நித்திய வாழ்வு  வாழ்வதற்காக என்னைப் படைத்தார்."

",அதில் எந்தவித சந்தேகமும் இல்லையே?"

"இல்லை, அதுதான் எனது விசுவாசம்"

",இறைவனை அறிய வேண்டும், அவரை நேசிக்க வேண்டும், அவருக்கு சேவை செய்ய வேண்டும், அவரோடு நித்திய வாழ்வு வாழ வேண்டும். வாழ வேண்டும். 

இறைவன் நம்மை   படைத்ததற்கு, இதைத் தவிர வேறு ஏதாவது நோக்கம் இருக்கிறதா?''

"நமது விசுவாச அடிப்படையில் வேறு நோக்கம் எதுவும் இல்லை."

",இது மட்டும் நோக்கம் என்றால், நாம் இந்த உலகில் வாழ்கின்றோமே.   அது எதற்காக?" 

"நான் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்வதற்குப் பதிலாக நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே வருகிறீர்கள்.

 நான்தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்."

",உனக்கு தெரியாததைத்தான் நான் சொல்ல வேண்டும். தெரிந்ததை நீ தான் சொல்ல வேண்டும். இப்போ சொல்லு, நாம் எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம்?

அதாவது இறைவனை அறிவதையும், நேசிப்பதையும் தவிர வேறு எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம்?"

"அவருக்கு சேவை செய்வதற்காக என்று நினைக்கிறேன்."
 
", நீ நினைப்பது முற்றிலும் சரி.
இறைவனுக்கு சேவை செய்வது எதில் அடங்கியிருக்கிறது?"

" இறைவனுக்கு சேவை செய்வதற்காகத்தான் அவர் நமக்கு இந்த உலகையும் அதில் உயிர் வாழ்வன அனைத்தையும் நமக்கு தந்திருக்கிறார்.

தந்தையால் படைக்கப்பட்ட அனைத்தையும் சிந்தனையாலும், சொல்லாலும் ,செயலாலும் நேசிப்பதில்தான் இறைவனுக்கு நாம் செய்யும் சேவை அடங்கியிருக்கிறது."

",அப்போ நீ என்னிடம் சந்தேகம் கேட்கவில்லை."

"சந்தேகம்தான் கேட்டேன்.

 ஆனால் நீங்கள் ஆசிரியர் வேலை பார்ப்பவர் ஆயிற்றே.

 மாணவர்களிடம் கேள்வி கேட்டு பதில் வரவழைப்பதும் ஒரு போதனா முறைதானே. 

சரி, தொடர்ந்து கேளுங்கள்.

 நான் முடிந்தவரை பதில் சொல்கிறேன்.

 முடியாதபோது நீங்கள் சொல்லுங்கள்."

",படைக்கப்பட்ட  அனைத்தையும் எப்படி நேசிப்பது?"

"முதலில் இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையை நேசிக்க வேண்டும்."

",  இயற்கையை   நேசிக்க வேண்டும் என்று இயேசு சொன்னதாக தெரியவில்லையே? அது அவர் அளித்த இரண்டு கட்டளைகளில் அது இல்லையே?"

"உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி என்று இயேசு சொல்லி இருக்கிறார் அல்லவா ?"

", ஆமா."

"நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?"

",வீட்டில் வசிக்கிறேன்."

"உங்கள் வீட்டை யாராவது இடித்து நொறுக்கி விட்டால் நீங்கள் சந்தோஷப் படுவீர்களா? வருத்தப்படுவீர்களா?"

",கட்டாயம் வருத்தப்படுவேன்" 

"உங்கள் வீடு இயற்கை பொருள்களால் ஆனது தானே!

இயற்கையை நேசிக்காதவன்தான்  இயற்கையில் ஆன பொருள்களுக்கு சேதம் விளைவிப்பான். 

நாம் இயற்கை பொருள்களை அழிப்பது உண்மையில் அதில் வாழும் மக்களை நேசிக்காததிற்கு சமம்.

உதாரணத்திற்கு சென்னையில் ஏரிகளை அழித்து வீடுகள் கட்டியதால் தானே ஆயிரக்கணக்கானோர் மழை நேரத்தில் வீடு இல்லாமல் தவிக்கிறார்கள்?

அணு ஒரு இயற்கைப் பொருள்.

 அதை மனிதன் நேசிக்காததினால்தான் அதைக்கொண்டு அழிவுக்குரிய ஆயுதங்கள் செய்து 

உலகப் போர்களின்போது கோடிக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்தான்.

" அவர்களை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பி அதனைக் கீழ்ப்படுத்துங்கள்: 

கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியின் மீது அசைந்து உலாவும் உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டு கொள்ளுங்கள் என்றார்."
(ஆதி. 1:28)


இறைவன் இயற்கையை ஆளும்படி உத்தரவிட்டார். ஆனால் மனிதன் அதை அழித்துக் கொண்டிருக்கிறான்.

இயற்கையை அளிப்பதன் மூலம் அதில் வாழும் இறைவனின் பிள்ளைகளையும் அழிக்கிறான்."

",ஒரு மிக முக்கியமான கேள்வி. இயற்கையை எதற்காக நேசிக்க வேண்டும்?" 

''அது மனிதர்களுக்கு உதவியாக இருப்பதால்."

",தவறு.

முதன் முதல் நீ கேட்க கேள்வி எது?"

"ஏன் இயேசுவை  மற்ற எல்லாரையும் விட அதிகமாக நேசிக்க வேண்டும்"

",இப்பொழுது நீ செய்த 
தவறினால்தான் அந்தக் கேள்விக்கு உனக்குப் பதில் தெரியவில்லை.

இயற்கையை நீ நேசிக்க வேண்டியது மனிதனுக்காக அல்ல.

இயற்கையை மட்டுமல்ல நீ நேசிக்க வேண்டிய எதையும் நேசிக்க வேண்டியது மனிதனுக்காக அல்ல,

 இறைவன் ஒருவருக்காக மட்டுமே நேசிக்க வேண்டும்.

உன் தந்தையாக இருந்தாலும் சரி, 

 தாயாக இருந்தாலும் சரி, 

 சகோதர, சகோதரிகளாக இருந்தாலும் சரி,

 நண்பர்களாக இருந்தாலும் சரி,

 யாராக இருந்தாலும் சரி அவர்களை நேசிக்க வேண்டியது இறைவனுக்காக மட்டுமே.


இறைவனுக்காக செய்யப்படும் அன்பே உண்மையான அன்பு."

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment