Saturday, May 31, 2025

"பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்."(திருத்தூதர் பணிகள் 7:60)



"பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்."
(திருத்தூதர் பணிகள் 7:60)

முதல் வேத சாட்சியான புனித முடியப்பர் தன்னைக் கொல்வதற்காக கற்களை எறிந்தவர்களுக்காக வேண்டிய செபம்.

இயேசு சிலுவையில் தொங்கும் போது தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக வேண்டிய செபத்தை முடியப்பரும் சொல்கிறார்.

இயேசுவை அவர் பின் பற்றியது போல நாமும் பின் பற்ற வேண்டும் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரிகை.

நற் செய்தியை அறிவித்த இயேசுவை பரிசேயர்களும், மறை நூல் அறிஞர்களும் வெறுத்தார் கள்.

அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

அவர் சிலுவையில் தொங்கும் போது அவர்களை மன்னித்தார்.

இயேசுவைப் பின்பற்றி நற் செய்தியை அறிவித்த முடியப்பரையும் பரிசேயர்கள் வெறுத்தார்கள்.

அவரைக் கல்லால் எறிந்து கொன்றார்கள்.

அவரும் சாகுமுன் தன்னைக் கல்லால் எறிந்தவர்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டினார்.

இயேசுவின் போதனைப்படி முடியப்பர் தன்னைப் பகைத்தவர்களை நேசித்தார், அவர்களுக்காக செபித்தார்.

அவரைக் கல்லால் எறிந்தவர்களுள் சவுலும் ஒருவர்.

சவுல் மனம் திரும்பியதற்குக் முடியப்பரின் செபமும் காரணமாக இருந்திருக்கலாம்.

அவரது செபத்தைத் கேட்டு அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இறைவன் சவுலைப் பவுலாக மாற்றியிருக்கலாம்.

செபத்திற்கு வல்லமையைக் கொடுப்பது இறைவன் தான்.

முடியப்பரைப் போலவே நாமும் இயேசுவின் சீடர்கள்.

நாமும் நற் செய்தியை அறிவிக்கிறோம்.

முடியப்பருக்கு நேர்ந்தது நமக்கும் நேரலாம்.

ஆகவே முடியப்பரின் மனப்பக்குவத்தை நாமும் கொண்டிருப்போம்.

இயேசுவைப் பகைப்பவர்களை நாம் நேசிப்போம்.

அவர்களுக்காக இயேசுவிடம் செபிப்போம்.

நமது செபம் கேட்கப்படும்.

இன்று இயேசுவை வெறுப்பவர்கள் நமது செபத்தினால் மனம் திரும்பி இயேசுவிடம் வருவார்கள்.

பவுலைப் போலவே செயல்படுவார்கள்.

அதற்கு நமது மன்னிப்பும், செபமும் காரணமாக இருக்கட்டுமே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment