Tuesday, May 20, 2025

"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." (அரு.15:7)



"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்." (அரு.15:7)


"நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்."

சொல்வது நமது ஆண்டவர்.

கேட்பது எல்லாம் நடக்குமா?
எல்லாம்?

எல்லாம் நடக்கும்,
நாம் இயேசுவுக்குள்ளும்,
அவர் வார்த்தைகள் நமக்குள்ளும்
நிலைத்திருந்தால்.

புனித அகுஸ்தீன் சொல்வார்,

Love and do as you like.

அன்பு செய், விருப்பப்படி நட.

உண்மையாக அன்பு செய்பவன் நல்லதை மட்டுமே விரும்புவான்.

அன்பு இருக்கும் இடத்தில் பாவம் இருக்காது.

அன்பும் பாவமும் சேர்ந்து வாழ முடியாது.

ஆகவே அன்பு செய்கிறவனைப் பார்த்து துணிந்து சொல்லலாம், 
"உன் விருப்பப்படி நட."

அதேபோல் தான்,

இயேசுவுக்குள் இருப்பவனை பார்த்து துணிந்து சொல்லலாம், 

"நீ விருப்பப்பட்டதைக் கேள் கிடைக்கும்."

இயேசுவுக்குள் இருப்பவன் அவருக்கு விரோதமாக எதுவும் கேட்க மாட்டான்.

இயேசுவின் வார்த்தைகளை சுமந்து செல்பவனும் அந்த  வார்த்தைகளுக்கு எதிராக எதுவும் கேட்க மாட்டான்.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்." (லூக்.9:23)
என்ற வசனம் ஒருவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால்,

''நான் சிலுவையாய் சுமக்க துன்பங்களை தாரும் ஆண்டவரே." என்று கேட்பான். 

துன்பங்கள் வரும்போது மகிழ்ச்சியாக இருப்பான். 

"உன் பகைவரை தேசி. தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்."
என்ற இறைவாக்கு ஒருவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒருவனைப் பார்த்து 

இயேசு "உனக்கு வேண்டியதை கேள்'' என்று சொன்னால், அவன்

"இயேசுவே, எனக்கு தீமை செய்தவர்களை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றும். 

அவர்களுக்கு உதவ எனக்கு உதவும்.".  என்றுதான் வேண்டுவான்.

"ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்."
(கொலோசையர் 3:13)

என்ற‌ இறைவாக்கை எப்போதும் மனதில் வைத்திருப்பனைப் பார்த்து 

இறைவனிடம்  உனக்கு வேண்டியதைக் கேள் என்று சொன்னால்,

"ஆண்டவரே, எனக்குத் தீமை செய்தவர்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன்.

நீர் தயவுசெய்து அவர்களையும் மன்னியும், உமக்கு விரோதமாக பாவம் செய்த என்னையும் மன்னியும்."

என்று தான் கேட்பான்.

ஆக முதலில் நாம் இயேசுவுக்குள் இருப்போம்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்குள் இருக்கட்டும் .

நாம் கேட்பதை எல்லாம் ஆண்டவர் உறுதியாகத் தருவார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment