Wednesday, May 7, 2025

"உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்"(அரு. 6:49)



"உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்"
(அரு. 6:49)

"இஸ்ரேல் மக்கள் எகிப்திலிருந்து கானான் நாட்டுக்குப் பயணித்த போது பாலைவனப் பிரதேசத்தில் கடவுள் மன்னா என்னும் அதிசய அப்பத்தை அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார்
.
அதைச் சாப்பிட்டவர்களில் யாரும் இப்போது உயிரோடு இல்லை.

உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திpலிருந்து இறங்கிவந்த   நானே."


அதாவது"என்னை உணவாக உண்பவர்கள் ஒருபோதும் இறக்க மாட்டார்கள்." என்கிறார் இயேசு.

திவ்ய நற்கருணையை உணவாக 
உண்பவர்கள் ஒருபோதும் சாக மாட்டார்களா?

சாக மாட்டார்கள்.

எப்படி?

இஸ்ரேல் மக்கள் பாலைவனத்தில் சாப்பிட்ட மன்னா உடல் ரீதியான உணவு.

எந்த உடல் ரீதியான உணவைச் சாப்பிட்டாலும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும்.

ஆனால் திவ்ய நற்கருணை ஆன்மீக உணவு.

இதை உண்பவர்கள் ஆன்மீக ரீதியாக மரணம் அடைய மாட்டார்கள்.

இதயம் இயங்குவதை நிறுத்தி விட்டால் அதை உடல் ரீதியான மரணம் என்கிறோம்.

மரணம் அடைந்தால் அடைந்ததுதான், மீள முடியாது.

நமது ஆன்மா தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருந்தால் நாம் இறைவனோடு உறவு நிலையில் இருக்கிறோம்.

அதாவது நமது ஆன்மா உயிரோடு இருக்கிறது.

அதாவது பரிசுத்த நிலையில் உள்ள ஆன்மா உயிரோடு இருக்கிறது, உயிரோடு உள்ள ஆன்மாவினால் ஆன்மீகத்தில் வளர முடியும்.

ஆன்மா சாவான் பாவத்தில் விழ நேரிட்டால் அது இஸ்டப்பிரசாத நிலையை இழக்கிறது.

இறை உறவையும் இழக்கிறது.

இதுதான் ஆன்மீக மரணம்.

நமது முதல் பெற்றோர் விலக்கப் பட்ட கனியைத் நின்றதால் ஆன்மீக மரணம் அடைந்தார்கள்.

நாம் சாவான பாவம் செய்ய நேரிட்டால் நமது முதல் பெற்றோருக்கு நேர்ந்த கதிதான் நமக்கும்.

ஆனாலும் நமது ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தின் பயனால்

நமது பாவத்துக்கு மனத்தாபப் பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது நமது சாவான பாவம் மன்னிக்கப் படுகிறது, நமது ஆன்மா உயிர் பெறுகிறது.

நமது ஆன்மா பரிசுத்த நிலையில் இருக்கும் போது நாம் ஆண்டவரின் உடலை உணவாக உட்கொள்ளலாம்.

ஆண்டவர் உணவாக நம்முள் வரும்போது அவர் தரும் அருளால் நாம் மீண்டும் பாவத்தில் விழாமல் வாழ்வதற்கான ஆன்மீக சக்தியைப் பெறுகிறோம்.

நாம் அடிக்கடி திவ்ய நற்கருணை வாங்கும் போது நமது ஆன்மா பரிசுத்தத் தனத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்.

இறைவன் தரும் அருளைப் பயன்படுத்தி நாம் பாவத்தில் விழாமல் இருந்தால் நமக்கு 
ஆன்மீக மரணம் ஏற்படாது.

ஆகவே தான் ஆண்டவர் சொல்கிறார்,

"உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே."
(அரு.6:50)

பாவ சங்கீர்த்தனம் மூலம் பாவ மன்னிப்புப் பெறுவோம்.

பரிசுத்த இதயத்தோடு திவ்ய நற்கருணை உட்கொள்ளுவோம்.

புண்ணியத்தில் வளர்வோம்.

நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment